பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!

Posted on Friday, October 3, 2008 by நல்லதந்தி



ரசியல் செய்வதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஜனங்களைக் கவர நிஜமாகவே அவர்களுக்கு நன்மை செய்து, அவர்களைக் கவர்வது மற்றொன்று வெறும் ஸ்டண்ட் அடித்து அவர்களைக் கவர்வது.

இதில் இரண்டாவது வகை அரசியல் செய்கிறார். நேரு பரம்பரையின் அடுத்த இளவரசர் ராகுல் காந்தி. இந்த ஸ்டைல் நேரு குடும்பத்தின் காப்பிரைட் ஸ்டைல் என்றாலும், நேரு,இந்திராவிற்க்குப் பின் வந்த ராஜீவ் காந்தி இந்த ஸ்டைலை ஜனங்களைக் கவர பயன் படுத்தி தோல்வியே கண்டார்.

தந்தையைப் போலவே தனயனும் தங்களது இந்த குடும்ப காப்பிரைட் ஸ்டைலைப் பயன் படுத்தினாலும்,தந்தையை விட மிக மட்டமான தோல்வியே இவருக்கு இது வரை மிஞ்சியிருக்கிறது.

பீகாரில் முயற்சி செய்தார் தோல்வி.பிறகு உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நேரத்தில் இதைப் பிரமாதமாகப் பயன் படுத்தினார்.அதில் படு தோல்வி!.போதாக் குறைக்கு மாயாவதி வேறு, ராகுல்காந்தி, தலித் மற்றும் ஏழைகளைத் தொட்ட கைகளின் அழுக்கு நீங்க அவர் ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிக்கிறார் என்று குண்டைத் தூக்கிப் போட்டு ராகுல் காந்தியின் மொத்த விளையாட்டுக்கும் ஆப்பு வைத்தார்.

அடுத்து கர்நாடகத் தேர்தலின் போதும் இதே ஸ்டண்ட் செய்தார் மக்கள் அவருக்குப் போட்டது பட்டை நாமம்.இப்போது இராஜஸ்தானில் தேர்தல் நெருங்குவதால் இந்த ஸ்டண்டைக் கையில எடுத்துள்ளார்.மக்கள் மீண்டும் பட்டை நாமம் போடுவது உறுதி என்று நம் எல்லோருக்கும் தெரியும்.அது நெத்தியில் மட்டும்தானா? அல்லது உடல் முழுக்கப் போட்டு டெல்லிக்கு அனுப்புவார்களா?. என்பதை கவனித்து இருந்துப் பார்ப்போம். ராகுல் காந்தியின் ராசி அப்படி!

வந்த செய்தி!

அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பாரன் மாவட்டம் அம்ரோலி கிராமத்துக்கு சென்றார். அந்த கிராமம் மலைப்பகுதியில் இருக்கிறது. அங்கு ஏழை மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்குள்ள ஏரியில், கிராம புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, கிராம மக்கள், மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். உடனே ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பணியை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளையும் கேட்டார்.

பின்னர் அவர், ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளி போல சிறிது நேரம் மண் சுமந்தார். அவருடன் சேர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் 40 பேரும் மண் சுமந்தார்கள். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ஏழை ஒருவரின் வீட்டுக்கு, இரவில் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டார். கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இரவில் கயிற்று கட்டிலில் தூங்கினார்.

பின்னர் அவர் காலையில் எழுந்து தன்னுடைய காரில் ஏறி, கோடா நகருக்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நல்லதந்திக்கு உதவியது தினத்தந்தி!

50 Responses to "பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!":

Sanjai Gandhi says:

என்ன பன்றது தல? கொடநாடுல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டு மாசக் கணக்குல ஓய்வெடுத்துட்டு போனாப் போகுதுனு தலைநகரம் வந்து அவர் தலைமையில் போராட்டம் இவர் தலைமையில் போராட்டம் என்று அறிவுப்பு மட்டும் செய்துவிட்டு சிறுதாவூர் பங்களாவில் ஏசி அறையில் மறுபடியும் ஓய்வெடுக்கும் வித்தை ராகுலுக்கு தெரியலையே... நாம ஒரு மெயில் அனுப்பி சொல்லி குடுத்துடலாமா? :))

ஏன்யா அவரை பார்த்தாலே உங்களுக்கு எரியுது?.. ஹய்யோ.. ஹய்யோ..

உங்கள் தலைவர்களால் ஒரே ஒரு நிமிடம் வெயிலிலாவது நிற்க முடியுமா?.. பிறகு மண் சுமப்பதை விமர்சிக்கலாம்.. :)

வால்பையன் says:

ராகுல் இதையெல்லாம் விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்,
இப்போதைக்கு தலைவனாகும் தகுதியுடைய ஒரே இளைஞர் ராகுல் மட்டுமே, கட்சி பாரபட்சமின்றி ராகுலினால் ஏதேனும் இந்தியாவுக்கு கிடைத்து விடாதா என்று ஆவலில் உள்ளேன்

வால்பையன் says:

நடக்கவே முடியாதவர்கள் கையில் ஆட்சியை கொடுப்பதை விட ராகுல் எவ்வளவோ மேல்

நல்லதந்தி says:

போலியாக நடிக்கும் அரசியல் வாதிகளைவிட போலியாக நடிக்கத்தெரியாத அரசியல்வாதிகள் பரவாயில்லை,என்பது எனது கருத்து! :)

நல்லதந்தி says:

//ராகுல் இதையெல்லாம் விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்,
இப்போதைக்கு தலைவனாகும் தகுதியுடைய ஒரே இளைஞர் ராகுல் மட்டுமே, கட்சி பாரபட்சமின்றி ராகுலினால் ஏதேனும் இந்தியாவுக்கு கிடைத்து விடாதா என்று ஆவலில் உள்ளேன்//
வாரிசு என்பதைத் தகுதி என்று வைத்துக்கொண்டால்(?) அந்தத் தகுதியை விட வேறு என்னத் தகுதி ராகுலுக்கு இருக்கிறது?.இந்தியாவை ஆளத் தகுதி வாய்ந்தவர்கள் வேறு யாரும் காங்கிரஸில் இல்லையா?.சரி இப்போது எல்லோரும் ஃபாரின் கொலாப்பரேஷனைத்தான் விரும்புகிறார்களா?...கார் உட்பட... :)

நல்லதந்தி says:

//ராகுலினால் ஏதேனும் இந்தியாவுக்கு கிடைத்து விடாதா என்று ஆவலில் உள்ளேன்//
ராகுல்காந்தியால் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடியது,அடுத்த தலைமுறைக்கு ஒரு கொலம்பியா அன்னை! :))

Bleachingpowder says:

Now i am really worried about Karunanidhi. After seeing this pic, he also should not try doing this to get vote for next election :))

Sorry for typing in English, my pc got screwed by virus :((

Anonymous says:

//ஏன்யா அவரை பார்த்தாலே உங்களுக்கு எரியுது?.. ஹய்யோ.. ஹய்யோ..//

அண்ணன் மவன் மேல அம்புட்டு பாசமா?

Anonymous says:

//இப்போதைக்கு தலைவனாகும் தகுதியுடைய ஒரே இளைஞர் ராகுல் மட்டுமே, //

எப்படின்னு சொல்ல முடியுமா?

Anonymous says:

//நடக்கவே முடியாதவர்கள் கையில் ஆட்சியை கொடுப்பதை விட ராகுல் எவ்வளவோ மேல்//

அப்ப ராகுலை விடத் தகுதி வாய்ந்த சிந்தியா, ஜிண்டால், பைலட், தியொரா போன்ற இளைஞர்களை அன்னை பிரதமர் ஆக்குவாரா?

Anonymous says:

/////நடக்கவே முடியாதவர்கள் கையில் ஆட்சியை கொடுப்பதை விட ராகுல் எவ்வளவோ மேல்////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!

நான் தினமும் சிறப்பாக பார்க்கில் ஜாக்கிங் செய்கிறேன்...ஐ மீன்...ஓடுகிறேன்...

என்னுடைய கையில் தயவு செய்து ஆச்சியை கொடுக்கவும்...

Anonymous says:

///கட்சி பாரபட்சமின்றி ராகுலினால் ஏதேனும் இந்தியாவுக்கு கிடைத்து விடாதா என்று ஆவலில் உள்ளேன்///

அவர் ஓட்டிக்கொண்டிருக்கும் ஐரோப்பிய பிகர் இந்தியாவுக்கு கிடைக்கும் வால் பையன்.

யூர்கன் க்ருகியர் says:

அரசியல் வாதிகளுக்கு ஸ்டண்டு பண்ண சொல்லிகுடுக்கனுமா?

எப்பொழுதும் ஆக்க பூர்வமான சிந்தனைகள்/செயல்பாடுகளே ஏழைகளின் துயர் துடைப்பவை.இந்த மாதிரி "ஷோகேஸ்" வேலையெல்லாம் ஓட்டுக்காகவே தவிர கூலி ஏழை மக்களின் வாழ்கை தரத்தினை மேம்படுத்துவதற்கு என்று சொல்லவியலாது.

நல்லதந்தி says:

பரவாயில்லை! ப்ளீச்சிங் பௌடர்!.கஷ்டப்பட்டு புரிஞ்சிக்கிட்டேன்! :))

நல்லதந்தி says:

//அப்ப ராகுலை விடத் தகுதி வாய்ந்த சிந்தியா, ஜிண்டால், பைலட், தியொரா போன்ற இளைஞர்களை அன்னை பிரதமர் ஆக்குவாரா?//

அடிமடியிலேயே கையை வைக்கிறீங்களே! நியாயமா? :)

நல்லதந்தி says:

//என்னுடைய கையில் தயவு செய்து ஆச்சியை கொடுக்கவும்...//

வயசான மனோரமா ஆச்சியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள் செந்தழல் சார்? :))

நல்லதந்தி says:

//எப்பொழுதும் ஆக்க பூர்வமான சிந்தனைகள்/செயல்பாடுகளே ஏழைகளின் துயர் துடைப்பவை.இந்த மாதிரி "ஷோகேஸ்" வேலையெல்லாம் ஓட்டுக்காகவே தவிர கூலி ஏழை மக்களின் வாழ்கை தரத்தினை மேம்படுத்துவதற்கு என்று சொல்லவியலாது.//

சத்தியமான வார்த்தை!.நம் அரசியல்வாதிகளிடம் இல்லாதது!

Bleachingpowder says:

//பரவாயில்லை! ப்ளீச்சிங் பௌடர்!.கஷ்டப்பட்டு புரிஞ்சிக்கிட்டேன்! :)) //

:(( Avvvvvvvvvv.....
en english avalavu mosamavaa iruku??

நல்லதந்தி says:

// Avvvvvvvvvv.....
en english avalavu mosamavaa iruku?//
illai! en engnkish avvalavu mosam! :))

Anonymous says:

///வயசான மனோரமா ஆச்சியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள் செந்தழல் சார்? :))
//

காரைக்குடி பக்கம் சென்று நல்ல இளசாக பிடித்து கொடுக்கவும்...

Sanjai Gandhi says:

மிஸ்டர் அனானி.. உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் போடுங்க.. ஆரோக்கியமான விவாததிற்கு நான் எப்போதும் தயார்.. தரம் கெட்ட பின்னூட்டம் எதற்கு?.. இவைகளை வெளியிடுவதன் மூலம் நல்லத்தந்தி மாற்றுக் கருத்து சொல்பவரை எச்சரிப்பதாக எடுத்துக் கொள்ளவா?
அண்ணன் மகன் என்பதும் ஃபாரின் கொலாப்ரேஷன், கொலம்பியா ஃபிகர் என்பதெல்லாம் இங்கு எதற்கு?..

உங்கத் தலைவியின் அந்த கால புகைப் படங்களையும் இப்போதும் பொதுக் கூட்டத்திற்கு போகும் போது ஜெ அவர்கள் நடுவழியில் காரை நிறுத்தி மேக்கப் போடும் படங்களையும் வெளியிட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் அதில் என்ன நாம் சாதிக்க முடியும்?

அனானி பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்காமலே வெளி வந்திருந்தாலும் குறைந்த பட்ச நாகரிகம் கருதி அவற்றை நீக்கி இருக்கலாம். அதுசரி.. நீங்களே ஃபாரின் கொலாப்ரேஷன் என்று கொசையாகத் தானே சொல்லி இருக்கிங்க?

நல்லது.. இதுவும் கருத்து சுதந்திரம் தான்.. பிறகு உங்க இஷ்டம்..

Sanjai Gandhi says:

//அப்ப ராகுலை விடத் தகுதி வாய்ந்த சிந்தியா, ஜிண்டால், பைலட், தியொரா போன்ற இளைஞர்களை அன்னை பிரதமர் ஆக்குவாரா?//

சிந்தியா இப்போது மத்திய அமைச்சர்.. ராகும் எம்பி மட்டும் தான்..

Sanjai Gandhi says:

// நல்லதந்தி said...

போலியாக நடிக்கும் அரசியல் வாதிகளைவிட போலியாக நடிக்கத்தெரியாத அரசியல்வாதிகள் பரவாயில்லை,என்பது எனது கருத்து! :)//

MGR கிராமத்து மூதாட்டிகளை கட்டி பிடித்து முத்தமிட்டது போலியா .. போலியான நடிப்பா? :)
... எதை சொல்வதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே நல்ல தந்தி... என்ன குறைந்துவிடப் போகிறது? :))

Sanjai Gandhi says:

// Anonymous said...

//ஏன்யா அவரை பார்த்தாலே உங்களுக்கு எரியுது?.. ஹய்யோ.. ஹய்யோ..//

அண்ணன் மவன் மேல அம்புட்டு பாசமா?//

தம்பி வீர ஆண்மகனே.. உன் அப்பாவின் தம்பி பெயரை வைதிருக்கும் எல்லோருக்கும் உனக்கு சித்தப்பாவா?

( உன் அப்பாவின் பெயரை வைத்திருப்பவர் எல்லம் உன் தந்தையா என்று கேட்டிருப்பேன்.. ஆனால் உன் தவறுக்கு உன் தாயை கொச்சை படுத்த விரும்பவில்லை.. இப்படி அடைப்புக் குறியிட்டு சொல்வதற்கு கூட மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்)

Sanjai Gandhi says:

அடுத்த தேர்தலிலும் மன்மோகன் சிங் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்ட பின்பும் எதற்கு ராகுலை குடைகிறீர்கள்?

பமரனின் கஷ்டம் புரிய வேண்டும் என்றால் அவன் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று எதர்கு சிலர் கூப்பாடு போடுகிறார்கள்.. அப்படி குடிசையில் தங்கினாலோ.. தலையில் மண் சுமந்தாலோ.. மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து உரையாடினாலோ ஏன் குய்யோ முறையோ என்று கத்த வேண்டும்? எல்லாம் பயம் தானே.. :)).. நல்லா இருங்க.. இது போதும் எங்களுக்கு.. :)

நல்லதந்தி says:

// ஃபாரின் கொலாப்ரேஷன், கொலம்பியா ஃபிகர் என்பதெல்லாம் இங்கு எதற்கு?..//

என்ன பொடியன் சார் இம்ம்புட்டுக் கோவம்?.நான் சொன்ன இரண்டும் நிஜமா?இல்லையா?.தலைவர்களின் உண்மை வாழ்க்கையைத் தொடும் போது தலைவர்களை விட உங்களுக்குக் கோவம் வருவதேன்?.இந்த மாதிரித் தொண்டர்களை நம்பித்தான் தலைவர்கள் பிழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்! :)

நல்லதந்தி says:

//அண்ணன் மவன் மேல அம்புட்டு பாசமா?//

இந்த வார்த்தையில் ஏதாவது கோபமூட்டும் வாசகங்கள் இருக்கா?.பின்னால நீங்கள் இட்ட பின்னூட்டத்தில்தான் கோபமும்,அசிங்கமும் தெரிகிறது என்பது நீங்கள் யோசித்துப் பார்த்தால் உங்களுக்குத்தெரியும்.

உங்கள் பின்னூட்டம் கீழே!~


//தம்பி வீர ஆண்மகனே.. உன் அப்பாவின் தம்பி பெயரை வைதிருக்கும் எல்லோருக்கும் உனக்கு சித்தப்பாவா?

( உன் அப்பாவின் பெயரை வைத்திருப்பவர் எல்லம் உன் தந்தையா என்று கேட்டிருப்பேன்.//

Sanjai Gandhi says:

நன்றி நல்லத்தந்தி.. ஆரோக்கியமாக எதையும் விமர்சிக்க முடியும் என்பது என் எண்ணம்.. உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் எபப்டி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.. அனானியாய் வந்தும் ஆபாசப் பின்னூட்டம் போடலாம்.. என்னாலும் அது முடியும்.. ஆனால் இது வரை அனானியாய் ஒரு கமெண்ட் கூட யாருக்கும் நான் போட்டதில்லை.. வியாபார மீட்டிங் இருக்கு.. வருகிறேன் நண்பா..ஆல் தி பெஸ்ட்..

//இந்த மாதிரித் தொண்டர்களை நம்பித்தான் தலைவர்கள் பிழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்! :)//

தலைவர்கள் பிழைக்கிறார்களா? :)).. இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் தானே.. நாங்க எல்லாம் சும்மா ரோஷமும் பாசமும் படுவதோடு சரி.. புரட்சித் தலைவிக்கு தான் தொண்டர்கள் கட்டை விரல், நாக்கு எல்லாம் அறுத்துக் கொள்கிறார்கள். :))

நல்லதந்தி says:

//உங்கத் தலைவியின் அந்த கால புகைப் படங்களையும் இப்போதும் பொதுக் கூட்டத்திற்கு போகும் போது ஜெ அவர்கள் நடுவழியில் காரை நிறுத்தி மேக்கப் போடும் படங்களையும் வெளியிட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் அதில் என்ன நாம் சாதிக்க முடியும்?//

நீங்க திமுகான்னுத் தெரியுது!.நம்மோட அன்பான அண்ணா காந்தியையும்,நேருவையும்,இப்போ உங்க த்லைவர் இந்திரா காந்தியையும் விமர்சித்து எழுதியதை இப்போ ஒத்துக்கொள்வீர்களா?

Sanjai Gandhi says:

ஹலோ தந்தி.. FYKI .. நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. திமுக அல்ல.. :))


காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை.. :))


அட அப்புறம் பேசலாம்.. விடுங்க.. எனக்கு டைம் ஆய்டிச்சி.. என் டீலர்ஸ் வெய்ட்டிங்.. :)

நல்லதந்தி says:

அன்புள்ள நண்பர் பொடியன் சஞ்சைக்கு,
தலைவர்களே அவர்களின் பற்றிய விமர்சனத்தைத் தாங்கிக் கொண்டுதான் அரசியல் நடத்துகிறார்கள்.நாமெல்லாம் இதை ஒரு கதைக்குப் பேச வேண்டுமேத் தவிர எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உணர்ச்சி வசப்படக்கூடாது என்பதே என்னுடைய அவா!.எனென்றால் அவர்கள் எல்லாம் இதையே பிழைப்பாகக் கொண்டவர்கள்.நமக்கு நாமாகப் பிழைத்தால்தான் உண்டு!.எனவே இம்மாதிரி விஷயங்களில் தயைக் கூர்ந்து உணர்ச்சி வசப்படாதீர்கள்,ஒரு இணைய நண்பன் என்கின்ற முறையில் தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள்! :)

நல்லதந்தி says:

// உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் எபப்டி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.. அனானியாய் வந்தும் ஆபாசப் பின்னூட்டம் போடலாம்.. என்னாலும் அது முடியும்..//

இந்த உங்களின் கூற்றிற்க்கு கண்டமும்,மறுப்பும் வன்மையாகத் தெரிவிக்கிறேன்.

நல்லதந்தி says:

முதலில் சொன்ன பின்னூட்டத்தில் கண்டமும் என்பதைக் கண்டனம் என்றுத் திருத்திக்கொள்ளவும்! :)

Anonymous says:

///இந்த உங்களின் கூற்றிற்க்கு கண்டமும்,மறுப்பும் வன்மையாகத் தெரிவிக்கிறேன்.///

ஆமாம் பொடியன், நானும் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறேன். ஏன்னா அது நான் போட்ட பின்னூட்டம். இந்தாளு நல்ல தந்தி

///என்ன பொடியன் சார் இம்ம்புட்டுக் கோவம்?.நான் சொன்ன இரண்டும் நிஜமா?இல்லையா?.///

இப்படி சொன்னதை நினைத்து நீங்க டென்சனாயிட்டீங்கன்னு நினைக்கிறேன். ஆனா அவரு எதையோ சொல்றார்.

ஐரோப்பிய கொலாபரேஷன் முற்றிலும் எமது ஐடியாவாக்கும்.

-ஐதராபாத் அனானி-

Madhu Ramanujam says:

//Now i am really worried about Karunanidhi. After seeing this pic, he also should not try doing this to get vote for next election//
அதெல்லாம் நீங்க ஒண்ணும் கவலை பட வேண்டாம். அவர் ஏதோ அவர் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறது.. நாயே பேயேன்னு திட்டி கவிதை எழுதுறது அதோட சரி. இவர் போய் மண்ணு தூக்கினா அப்புறம் இவரை தூக்க ஆள் தேடணும்.

*********
//இப்போதைக்கு தலைவனாகும் தகுதியுடைய ஒரே இளைஞர் ராகுல் மட்டுமே, //
எப்படின்னு சொல்ல முடியுமா?

நான் தினமும் சிறப்பாக பார்க்கில் ஜாக்கிங் செய்கிறேன்...ஐ மீன்...ஓடுகிறேன்...
என்னுடைய கையில் தயவு செய்து ஆச்சியை கொடுக்கவும்...
*********
என்ன செந்தழல்... விளையாடறீங்களா. உங்கப்பா என்ன முன்னாள் பிரதமரா இல்லை உங்கம்ம இத்தாலியரா. அதெல்லாம் எதுவும் கிடையாது. நம்ம பெத்தவங்க ஏதோ அங்க இங்க அலைஞ்சி திரிஞ்சி கஷ்டபட்டு வேலை பார்த்து நம்ம இன்னைக்கு இங்க உட்கார்ந்து கதை அடிக்கிற அளவுக்கு வளத்து விட்டுருக்காங்க. அது வரைக்கும் சந்தோஷப் படுவீங்களா.. அதை விட்டு.. ஆட்சிய குடுக்கணுமாம்ல....

//நாங்க எல்லாம் சும்மா ரோஷமும் பாசமும் படுவதோடு சரி.. புரட்சித் தலைவிக்கு தான் தொண்டர்கள் கட்டை விரல், நாக்கு எல்லாம் அறுத்துக் கொள்கிறார்கள்.//
அது சரி... இந்த மூக்கு நாக்கு அறுக்கிறதெல்லாம் இந்த ரோஷத்துல தாங்க ஆரமிக்கும்.

//காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை.. //
நல்ல வேளை, காமராஜர் உயிரோட இல்லை. இல்லைன்னா இன்னைக்கு காங்கிரஸ் வளர்ந்து இருக்கிறதை பார்த்து புல்லரிச்சு போய்டுவார்.

Anonymous says:

அரசியல்னா இது தானா?
அரசியல்னா இது தானா? நடிகன் அரசியல்வாதி ஆகலாம் அரசியல்வாதி நடிக்க கூடாதா ? என்னங்க நியாயம்

Krish says:

காங்கரஸ் is a corporate company managed by Gandhi family.No wonder if Rahul and his son, grandson etc. follow him and his family to take over the CEO post. I don't why the "Gandhi" tag is attached to Nehru family.
டெல்லி ல இருந்து தமிழ்நாடு வரை இருக்கற எல்லா படிச்ச, படிக்காத, அறிவான, அறிவில்லாத காங்கரஸ்அடிமைகளும் காந்தி ( அவங்களா பேர் வைச்சிகிட்ட) குடும்பத்துக்கு விசுவாசமான வேலைக்கறன இருக்கவே விருப்ப படறாங்க. திரு. நரஷிம்மராவ் மட்டும் தான் விதி விலக்கு.

Sanjai Gandhi says:

//உங்கள் பின்னூட்டம் கீழே!~


//தம்பி வீர ஆண்மகனே.. உன் அப்பாவின் தம்பி பெயரை வைதிருக்கும் எல்லோருக்கும் உனக்கு சித்தப்பாவா?

( உன் அப்பாவின் பெயரை வைத்திருப்பவர் எல்லம் உன் தந்தையா என்று கேட்டிருப்பேன்.////

ஹாஹா.. நல்ல தந்தி. உங்க வசதிக்கு வெட்டிட்டிங்களே நண்பா.. :))

அந்த வரிகளின் முழுமை இதோ..
((( உன் அப்பாவின் பெயரை வைத்திருப்பவர் எல்லம் உன் தந்தையா என்று கேட்டிருப்பேன்.. ஆனால் உன் தவறுக்கு உன் தாயை கொச்சை படுத்த விரும்பவில்லை.. இப்படி அடைப்புக் குறியிட்டு சொல்வதற்கு கூட மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்)))

ஹிஹி.. அப்படி கேட்க முடியும் என்று அடைப்புக் குரியிட்டு சொன்னதற்கு கூட மன்ன்னிப்பு கேட்டிருக்கேனே.. :)) அதை விட்டுட்டா எபப்டி? :))

Sanjai Gandhi says:

//டெல்லி ல இருந்து தமிழ்நாடு வரை இருக்கற எல்லா படிச்ச, படிக்காத, அறிவான, அறிவில்லாத காங்கரஸ்அடிமைகளும் காந்தி ( அவங்களா பேர் வைச்சிகிட்ட) குடும்பத்துக்கு விசுவாசமான வேலைக்கறன இருக்கவே விருப்ப படறாங்க.//

டெல்லி ல இருந்து தமிழ்நாடு வரை இருக்கற எல்லா படிச்ச, படிக்காத, அறிவான, அறிவில்லாத பிஜேபி அடிமைகளும் ஜனசங்கம் தொடங்கப் பட்ட காலத்தில் இருந்து அத்வானி& வாஜ்பாய்க்கு விசுவாசமான வேலைக்காரனுங்களாவே இருக்கும் போது.. மத்தவங்க இருக்கக் கூடாதா கிருஷ் :))))

காங்கிரஸ் கார்பரேட் கம்பனியாம்.. செம கமெடிபா... வாய்ப்பு இருந்தும் பதவியை மறுத்து நிற்கிறார்கள் எங்கள் தலைவர்கள்... எப்படியாவது பிரதமர் ஆகியே தீர வேண்டும் என்று அவசர அவசரமாக அறிவித்துக் கொள்கிறார் அத்வானி..

யார் யாரை விமர்சிப்பது.. கொடுமையய்யா.. :))

நல்லதந்தி says:

//காங்கிரஸ் கார்பரேட் கம்பனியாம்.. செம கமெடிபா... வாய்ப்பு இருந்தும் பதவியை மறுத்து நிற்கிறார்கள் எங்கள் தலைவர்கள்...//

சென்ற முறை பி.ஜே.பி ஆட்சி கவிழ்ந்த போது இல்லாத எம்.பிக்களின் லிஸ்டை எடுத்துக்கொண்டு ஜனதிபதியைப் பார்த்து ஆட்சியமைக்கக் கோரி மூக்கறு பட்டுத் திரும்பிய சோனியாவா !பதவியை மறுத்து நிற்கும் தலைவர்.இந்த முறை காங்கிரஸ் ஆட்சியமைக்கக் கோரி அன்றைய ஜனாதிபதி தமிழர்த் தலைவர் திரு.அப்துல்காலாம் அவர்களைப் பார்த்து, சோனியா பிரதமர் ஆக முயற்சி செய்த போது வெளிநாட்டவர் பிரதமர் ஆகமுடியாது என சோனியாவின் ஆசையில் மண்ணள்ளிப்போட்டு மறுத்து, நாட்டின் மானத்தைக் காப்பாற்றியது நம் கலாம் அல்லவா?.அதையே தாம் செய்த தியாகமாகச் சொல்லி தியாகிப் பட்டத்தை இலவசமாகப் பெற்றவரா பதவியை மறுத்தவர்.இதன் காரணமாகவே இன்னொரு முறை ஜனாதிபதியாக திரு கலாமுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தர முன்வந்த போதும்,அவர் மீது கோபம் கொண்ட சோனியா காங்கிரஸ் ஆதரவு தர மறுத்தது தங்களுக்குத் தெரியாததா?.இந்த விஷயத்திலும் தமிழன் தமிழன் என்று கதை விட்டுக் கொண்டே தமிழனின் கழுத்தை அறுத்தவர் கலைஞர் என்பதும் உங்களுக்குத் தெரியாததா? :))

Anonymous says:

//காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை.. :))
//

அட இந்தக்காலத்தில் காங்கிரஸுக்கு இப்படி ஒரு முரட்டு பக்தரா?
2011ல காமராசர் ஆட்சி வந்திரும்போல இருக்கே!

அப்புறம் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, அடுத்த வாரிசு கொலம்பியா நாட்டின் கூட்டுத் தயாரிப்பாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

பொடியன், சொன்ன கருத்தை பர்ஸனலாக எடுத்து கொண்டதற்காக வருந்துகிறேன். ஆனால் நான் சொல்ல வந்த பொருள் தலைவரின் பெயரை தன் பெயராகத் தாங்கி இருப்பவர் கட்சித் தலைமையின் வாரிசு மீது வைத்திருக்கும் பாசம். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இது போன்ற பக்தியை நான் திராவிடக் கட்சிகளின் தொண்டர்களிடமே இதுவரை கண்டிருக்கிறேன். எனவேதான் எனது கமெண்ட் அவ்வாறு அமைந்திருந்தது. எனது கருத்து மாற்றுப் பொருளை உருவாக்கியதற்காக மீண்டும் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லதந்தி says:

//காந்தி ( அவங்களா பேர் வைச்சிகிட்ட//
இவங்க என்னமோ காந்திக் குடும்பத்தில பிறந்த மாதிரி! :)
பெரோஸ்கான் என்பதில் உள்ள கான் என்ற முஸ்லீம் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக காந்திஜி, பெரொஸ்கானின் தாயார் வழியில் உள்ள பெயரான காந்தி என்பதை எடுத்து பெரோஸ்கானில் ஒட்டவைத்து பெரோஸ்காந்தி என்று பெயர் மாற்றம் செய்தார்.இதற்கும் காந்திஜியில் உள்ள காந்திக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் கிடையாது.முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போட்டு வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க கிருஷ்! :))

Sanjai Gandhi says:

//எனவேதான் எனது கமெண்ட் அவ்வாறு அமைந்திருந்தது. எனது கருத்து மாற்றுப் பொருளை உருவாக்கியதற்காக மீண்டும் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். //

எச்சுச்மீ பிரதர்... உங்க பெயருடனேயே இந்த கருத்தை சொல்லலாமே... யாரென்றே தெரியாமல் பதில் சொல்வது கொஞ்சம் நெருடலா இருக்கு... என் பெயர் மட்டுமே பாசத்திற்கு காரணம் இல்லை நண்பா.. எல்லா கட்சி தொண்டனுக்கும் இருக்கும் உணர்வு தான் இது..

Anonymous says:

ஒரு தமாஷுக்குச் சொல்றேன் யாரும் கோவிச்சிக்கப் படாது.
ராஜிவ் காந்தி: இந்திய ஈரானியக் கூட்டுத் தயாரிப்பு.
ராகுல்காந்தி: இந்திய ஈரானிய இத்தாலிய கூட்டுத் தயாரிப்பு.
ராகுல்காந்தியின் மகன்: இந்திய ஈரானிய இத்தாலிய கொலம்பிய கூட்டுத் தயாரிப்பு.

விக்டோரியா மகாராணியை ஐரோப்பாவின் பாட்டி அப்படின்னு
சொல்லுவாங்களாம்.

நம்ம ராகுல்காந்தி மகன் பிரதமரானா உலக நாடுகளின் பேரன் அப்படின்னு பெயர் வாங்குவாரா?. சும்மா ஒரு தமாஷுக்கு.

Anonymous says:

Rahul's girlfriend Juanita - ஹுவானிட்டா

Outlook article

நல்லதந்தி says:

// anonymous said...
Rahul's girlfriend Juanita - ஹுவானிட்டா//

கவலைப் படாதீங்க. இந்திராகாந்தி எப்படி அண்டோனியா மொய்னோவை சோனியான்னு பெயரை மாத்தினாங்களோ.அதை போல சோனியா காந்தி ஹுவானிட்டாவை ஒரு நல்ல இந்தியப் பெயரா மாத்தி வைப்பாங்க.குறிப்பா காந்தியை இணைச்சா பளிச்சன்னு தெரியறமாதிரி!.அப்புறம் பிறக்கிற குழந்தைக்கு வழக்கம் போல் இந்துப் பெயரா வைப்பாங்க!.ஓட்டுக்காக! :)

Anonymous says:

Sachin Pilot - MBA from the Wharton School, University of Pennsylvania , U.S.A.

Naveen Jindal - (M.B.A) from University of Texas at Dallas U.S.A.

Milind Deora - BBA from Boston, USA

Bhupinder Singh Hooda - B.Tech., M.B.A. Kelley School of Business, Indiana University, Bloomington, IN

Jyotiraditya Scindia - Studied at The Doon School, India, and Harvard University and Stanford University, U.S. and went on to work as an investment banker for Merrill Lynch and Morgan Stanley.

Finally Raul! oops... Rahul.

His admission to St Stephen's College was controversial as he was believed to have been admitted on the basis of his abilities as a competitive pistol shooter, which was disputed. He left the school in 1990, after one year of education.

It is reported that Harvard alumni records list him as attending between 1990 and 1993 but not as completing a degree. He transferred, reportedly due to security concerns following his father's assassination, to Rollins College in Florida where he completed a B.A. in 1994. During the parliamentary elections in 2004, Gandhi claimed that he had received an MPhil in Development Economics after attending Trinity College, Cambridge. Media enquiries report that he attended under the alias "Raul Vinci".

Krish says:

வாஜ்பாய்க்கு பிறகு அத்வானி, அதற்கு பிறகு இன்னொருவர். வாஜ்பாயின் குடும்பமோ, அத்வானியின் குடும்பமோ தீடீரெண்டு உள்ள புகுந்து தலைவராக முடியாது. எங்கோ பிறந்து வளர்ந்தவர், எந்த ஒரு தகுதியும் இல்லாமல் தலைவராகும் தகுதி காங்கிரஸ் கம்பெனியில் மட்டுமே நடக்கும்.
நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்து விட்டு, இட்டலி பிரதமர் பொண்ணை திருமணம் செய்தால், அடுத்த பிரதமர் பதவியை என்னகு கொடுப்ப்பர்களா? எங்கு சென்றாலும் எனது நாட்டு பற்று இந்தியாவில் மேல் தான் இருக்கும். ஒரு நாட்டை ஆள முதலில் குடிமகனாக இருக்க வேண்டும்.

//// வாய்ப்பு இருந்தும் பதவியை மறுத்து நிற்கிறார்கள் எங்கள் தலைவர்கள். ////

தகுதி இருந்தும் பதவி மறுக்கப் படுகிறது உங்கள் தலைவர்களுக்கு. தகுதி இல்லாதவர்களுக்கு தன் பதவி. உதாரணம் : தலைவர் ராகுல்

Anonymous says:

இந்தப் பதிவை இங்கே இணைத்துள்ளேன்

http://www.thamilbest.com/

Anonymous says:

RAHUL GANDHI INVOLVED IN GANG RAPE - सर्वे सन्तु निरामया: | Google Groups
Message from discussion RAHUL GANDHI INVOLVED IN GANG RAPE. View parsed - Show only message text ... Hindu Unity RAHUL GANDHI INVOLVED IN GANG RAPE At the ...
groups.google.co.in/group/arogya_charcha/msg/...?dmode=source - Cached