அமாவாசை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் கையாலாகாத்தனமும்,காவாலித்தனமும்!

Posted on Saturday, August 30, 2008 by நல்லதந்தி

வருங்காலத்தில் மின்சார சேமிப்பு!


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் போவதைப் பார்த்திருப்பீர்கள்.அல்லது சில சமயங்களில்,மிகுந்த மின்பற்றாக் குறையின் காரணமாக சில நாட்களில் இரண்டுமணிநேரம்,மூன்று மணி நேரம் மின்வெட்டை அனுபவித்திருப்போம்.ஆனால் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்க்கும் மேல் மின் வெட்டு ஏற்படுவதை வாரக் கணக்காக அனுபவித்து இருக்கிறீர்களா?.




சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிக அளவில் மின்வெட்டு இருந்து வருகிறது!.அதன் உச்ச பட்சமாக கடந்த 6 தினங்களாக நடந்து வரும் மின்வெட்டுக் கூத்தின் காட்சி நேரம் கீழே!



அதிகாலை 12 முதல் 2 வரை (2 மணி நேரம்)

அதிகாலை 4 முதல் 5 வரை (1 மணி நேரம்)
காலை 7 முதல் 8 வரை (1 மணி நேரம்)

காலை 9 முதல் 10 வரை(1 மணி நேரம்)

காலை 10 முதல் 12 வரை (சில இடங்களில்)

மதியம் 2 முதல் 5 வரை(3 மணி நேரம்)

மாலை 6 முதல் 9 வரை(3 மணி நேரம்)

இரவு 10 முதல் 11 வரை (1 மணி நேரம்)


குறிப்பு: இந்த பட்டியல் மிகைப் படுத்தி எழுதப் பட்டதல்ல!.100% அக்மார்க் உண்மை!


ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்வெட்டை அமுலுக்கு கொண்டு வந்த அற்புத ஆட்சியை எந்த மாநிலத்திலாவது பார்க்கமுடியுமா?.

அமாவாசை ஆற்காடு வீராசாமி இப்போது தன் மனைவியை எந்த மாநிலத்திற்கு அனுப்பி,அந்த மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மின் வெட்டு அதிகம் என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லுவார் என்று தெரியவில்லை!.

இந்த பக்கம் கலைஞர் கருணாநிதி பல்லுகுத்திக் கொண்டே இன்னிக்கு எந்த டான்ஸ் பாக்கலாம்,எந்த சினிமா விழாவுக்குப் போனால் கவர்ச்சி டான்ஸ்
காட்டுவார்கள்.அடடா இன்னிக்கு எந்த விழாவும் இல்லையா?.அப்போ மானாட மயிலாட தான் பாக்கணுமா?.என்று மக்களைப் பற்றிய இந்த ஒரே கவலையில் இருக்கிறார்.


தமிழ் நாட்டின் சிறு தொழில்களும்,குறுந்தொழில்களும் இந்த 9 மாதங்களாக மின் வெட்டால் நசிந்து விட்டன. கலைஞர் சென்னைக்கும் அதைச் சுற்றியுள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கும்,ஐ.டி கம்பனிகளுக்கும் மின்சாரம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

தமிழக மக்களின் தொழில்களை அழித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளைச் செழிக்க வைப்பதுதான்,தமிழர் நலன் காக்கும் அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின்
வேலையா? .

அமாவாசை அமைச்சரின் பொன்மொழி:
ஒரு மணிநேர மின்சாரச்சிக்கனம்,இரண்டு மணிநேர மின் உற்பத்திக்குச் சமம்!
இப்படித்தான் மின் உற்பத்தியைப் பெருக்குகிறார் போலிருக்கிறது.நாம் நிஜமாகவே உற்பத்தியைப் பெருக்குவார்கள் என்று நினைத்தோம்!.


அமாவாசை ஆற்காடுவீராசாமியின் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய உளறல்கள்!


மே 06,2008

செங்கோட்டையன் -புதிய தொழிற்சாலைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுத்து விட்டு ஏற்கனவே இருக்கிற தொழிற்சாலைகளுக்கு மின்சார சப்ளையை நிறுத்தியதால், அந்த தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது தொகுதியில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விஸ்கோஸ் தொழிற்சாலை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை என வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நீங்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆற்காடு வீராசாமி: விசைத்தறிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு ஆயிரம் மெகாவாட்டில் இருந்து ஆயிரத்து 400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் வாங்கும் 600 மெகாவாட் மின்சாரத்தில் 200 மெகாவாட்டை குறைத்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மின்தடை என்ற பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

செங்கோட்டையன் - அ.தி.மு.க: மின்வெட்டு இல்லையென்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுமாறு மின்வாரியம் சர்க்குலர் வெளியிட்டுள்ளது அமைச்சருக்கு தெரியுமா? அது தவிர பழுது பார்ப்பு என்ற பெயரில் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஆற்காடு வீராசாமி: இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களும் மின்சாரத்தை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், விசைத்தறிகளுக்கு இவற்றில் இருந்து விலக்கு தரப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகின்றன. உங்கள் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்களை பார்த்து இதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

மே மாதம்
""வரும் 15ம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கான மின்சார விடுமுறை ரத்தாகிறது. அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடே இருக்காது,'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். திருச்சியில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.

ஜூலை 19,2008

"சென்னை மாநகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தென்மேற்கு பருவமழை பெய்து, நீர் நிலைகளில் போதுமான அளவு இருப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும்' என்று மின்துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நிதித்துறைச் செயலர், தொழில் துறைச் செயலர், எரிசக்தித்துறைச் செயலர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. நாம் எதிர் பார்த்த அளவுக்கு காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை.காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.

மழை பெய்யாததால் நீர் மின் சாரம் அதிகமாக கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரத்தில் 60 சதவீதம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.அண்டை மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. கேரளா நம்மிடம் நான்கு டி.எம்.சி., தண்ணீர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வாரம் ஒரு நாள் விடுமுறை திட் டம் பற்றி விவாதிக்கப் பட்டது.

இதன்படி, தமிழகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்து, வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே 15 வரை இந்த திட்டத்தை அமல்படுத்திய போது அளிக்கப் பட்ட வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கேட்டனர். அந்த வரி விலக்கு மேலும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இது தவிர, பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்கப் படும்.மேலும், டீசலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை வைத்தனர்.

இது பற்றி விவாதித்து இறுதியில், இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பை, 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை தொழிற்சாலைகளும் ஈடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும். தமிழகத்தில் அறிவிக் கப்படாத மின் வெட்டு இருக்காது.

வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தின் மூலம் 375 முதல் 400 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறிப் பிட்ட நேரம் மட்டும் மின் தடை செய்வதன் மூலம் 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். சென்னையை எட்டு பகுதிகளாகப் பிரித்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை இருக்கும்.

கிராமப்புறங்களில் ஏற்படும் அதிக மின் தடையை சரி செய்யத் தான் இந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதிகபட்சம் வாரத் துக்கு நான்கு நாட்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரமும், இரண்டு நாட்கள் மட்டும் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப் படும்.தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்து, நீர்த்தேக்கங்களில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு வரும் வரை இந்த நிலைமை இருக்கும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக மின் தடை கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அதற்கான மின் வெட்டு இருக்காது. மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால் உற் பத்திப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஐந்தாயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தீட்டி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடைந்து நான்காயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆகஸ்ட் 11

சென்னையில் ஒரு மணி நேரமும், வெளிமாவட்டங்களில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுத் தப்பட்டது.இதற்கு எதிர்ப்பு கிளம் பியதும் அது ரத்து செய்யப் பட்டுவிட்டது.
டில்லியில் எட்டு மணிநேரம் மின்வெட்டும், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாடு முழுவதும் மின்பற்றாக்குறை இருக்கிறது. விவசாயிகள், சிறு தொழிற்சாலைகள் என தமிழகத்தில் ஆறு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு நாள் விடுமுறை விடப்படுகிறது. காற்று வீசி, மழைப் பெய்தால் கூடுதல் மின்சாரம் கிடைத்தும் அதுவும் ரத்து செய்யப்படும். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கிவிடும்.

சோதனை!----சோதனை மேல் சோதனை மற்றவர்களுக்கு!

Posted on by நல்லதந்தி



என்னுடைய பதிவுகளில் மறு மொழியே வருவதில்லை.வந்ததாலும் அது மிகக் குறைவாகவே இருக்கும் இருந்தாலும் என்னுடைய சில பதிவுகள் சூடான இடுகையில் ஆச்சரியமாக வந்தன!.அது எப்படித் தெரியவில்லை.மக்கள் வாழ்க!.




இருந்தாலும் மறுமொழி வராதது கண்டு, வலைப்பூ பாலிடிக்ஸ்(?) எதாவது இருக்கும் போலிருக்கிறது என்று, அசிரத்தையாக அதைப் பற்றி அலட்டிக்காமல் இருந்தாலும் மனதில் சிறு குறை இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!.




மறுமொழி அதிகம் வராத குறையை, நானே மறு மொழி போட்டுக் கொள்வது போன்ற "டகால்டி" வேலைகளால் தீர்த்துக் கொண்டேன்!....அடப்பாவின்னு சொல்லாதீங்க!.எம் பேரில் தான் போடுவேன்!..வேறு யாராவது தப்பித்தவறி மறுமொழி போட்டிருந்தால் அவர்களுக்கு பதில் சொல்லற சாக்கில் பிரித்துப் பிரித்து நாலு மறுமொழி போடுவேன்!.




அப்போதான் வால் பையன் சொன்னாரு,



வால்பையன்
document.write(tamilize('August 27, 2008 1:08 PM'))
நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே
நல்லதந்தி
document.write(tamilize('August 27, 2008 1:23 PM'))
//வால்பையன் said... நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே//அப்பா... இன்னிக்குத்தான் வால்பையனாரின் கருணை என் மேல் விழுந்து இருக்கு!
வால்பையன்
document.write(tamilize('August 27, 2008 1:27 PM'))
எப்போதுமே இருக்கு!ஆனால் சில நேரங்களில் உங்கள் பின்னூட்ட பெட்டி திறக்க மறுக்கிறது!உங்களுடைய பதிவுகள் தான் எப்போதுமே சூடான இடுக்கையில் வருகிறதே!பிறகு ஏன் பின்னூட்டங்கள் சரியாக வருவதில்லை என்று யோசிக்கவும்!


இதைப் பத்தி யோசிச்சேன்.அப்போ நண்பர் செந்தழல் ரவி சொன்னாரு,


செந்தழல் ரவி
document.write(tamilize('August 27, 2008 6:14 PM'))
உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்
நல்லதந்தி
document.write(tamilize('August 27, 2008 6:32 PM'))
// செந்தழல் ரவி said... உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்//நன்றி நண்பர் செந்தழல் ரவி.உங்க புண்ணியத்தில சைட்டு கொஞ்சம் சூட்டாச்ச்சு!.பின்னூட்டப் பெட்டியை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.டெம்ளேட் மாற்றினால் சரியாகிவிடுமா?.டெம்ளேட் மாற்றினால் ஏதாவது பிரச்சனை வருமா?.... முயற்சி செய்கிறேன்.மீண்டும் உங்களுக்கு நன்றி!

செந்தழல் ரவி
document.write(tamilize('August 28, 2008 9:43 AM'))
எப்படியோஇடுகை சூடானா சரி...!!!டெம்ப்ளேட்டை மாற்றுவதால் எந்த பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்...பின்னூட்ட பெட்டிக்கான கமெண்ட் செட்டிங்ஸையாவது மாற்றவும்...எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, லக்கிலூக்காரிடமே ஐடியா கேட்கலாம் ))




அதனால, மறுமொழி பெட்டியைச் சரிசெய்யத் தெரியாமல் மொத்த டெம்ப்ளெட்டையே மாத்திட்டேன்.


இப்ப பின்னூட்டம் வருதான்னு பார்க்கலாம்!


நன்றிகள் நண்பர் வால்பையனுக்கும்,நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கும்!


மற்றும் ஹி...ஹி....லட்சக்கணக்கான ரசிகப் பெருமக்களுக்கும்!

ஜெயலலிதா இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லையா?

Posted on Wednesday, August 27, 2008 by நல்லதந்தி


அ.தி.மு.க வை அழிப்பதற்கு கலைஞர் சிறு துரும்பையும் கிள்ளிப் போடத்தேவையில்லை,என்கிற அளவிற்கு அதை அழிப்பதற்கு,கலைஞரிடம் காசு வாங்காத அடியாளாய், அரும்பாடு பட்டு வருகிறார் செல்வி ஜெயலலிதா!.


எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரைத்தவிர,நெடுஞ்செழியன்,ராசாராம்,கே.வி.கிருஷ்ணசாமி,முத்துசாமி,சேலம் கண்ணன்,பொன்னையன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,விஜயலட்சுமி,சாமிநாதன் போன்ற, பொது மக்களுக்குப் பரிச்சயமான பல புள்ளிகள் அ.தி.மு.க வில் இருந்தார்கள்.ஏன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தலைவரான முசிறி புத்தனைக் கூட பொது மக்களுக்குத் தெரியும்.


ஆனால் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க வில் ஜெயலலிதாவைத் தவிர,மற்றவர்கள் யாரையும் அ.தி.மு.க வினருக்கேக் கூடத் தெரியாது.

தெரிந்த சிலரில் செல்வகணபதியும் ஒருவர்.1991-ம் ஆட்சியின் போது அ.தி.மு.க வின் ஆதி முதல் அந்தம் வரை ஊழல் புகார்களில் சிக்குண்ட போது செல்வகணபதியும் சுடுகாட்டு கொட்டகைப் போன்ற புகார்களில் மாட்டினார்.


அதன் பின் கட்சிப் பணியிலிருந்து ஓரம் கட்டப் பட்ட அவர்,பிறகு நாடாளுமன்றத் தேர்தலின் போது வாழப்பாடி இராமமூர்த்தி சேலம் தொகுதியில் நிற்க, அவரை வெற்றிபெறவைக்க,வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிரடி அரசியலுக்கு தக்க பதிலடி கொடுக்க தகுந்தவர் செல்வகணபதிதான் என்று மீண்டும் செல்வி ஜெயலலிதாவால் அரசியல் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.அவர் நினைத்தது போலவே,வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிரடிக்குத் தக்க பதிலடி கொடுத்து, வாழப்பாடியை செல்வகணபதி வெற்றி பெறச் செய்தார்.பிறகு மீண்டும் செல்வி ஜெயலலிதாவால் ஓரம் கட்டப் பட்டார்.


காட்சிகள் மாறின கட்சிகளும் இடம் மாறின.அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாழப்பாடி சேலம் தொகுதியில் போட்டியிட்ட போது தன் எதிரியாகிப் போன வாழப்பாடியைத் தோற்கடிக்க முடிவு செய்து செல்வி ஜெயலலிதா மீண்டும் ஒரங்கட்டப்பட்டிருந்தசெல்வகணபதியை,வாழப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க வேட்ப்பாளராகவே நிறுத்தினார்.


அந்த தேர்தலில் தன் தனித்திறமைக் காட்டி செல்வகணபதி வெற்றி பெற்றார்.அதோடு அவ்வளவுதான் மீண்டும் கட்சியில் ஓரம் கட்டப் பட்டார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராஇருந்தும்எல்லா நிகழ்ச்சிகளிலும் புறக்கணிக்கப் பட்டார்.காலம் ஓடியது.

மீண்டும் சேலம்கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப் பட்டார்.இப்போது அடுத்த ஓரம் கட்டல் நடந்துள்ளது.அவர் கட்சியைவிட்டே நீக்கப் பட்டுள்ளார்.இந்த முறை செல்வகணபதி பொறுமையாக இருப்பாரா? அல்லது தி.மு.க.வில் சேருவாரா என்று தெரியவில்லை!.


அவர் தி.மு.க.வில் இணைவதை வீரபாண்டி ஆறுமுகம் ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை?.தன் குகையில் இன்னொரு சிங்கத்தை இருக்கவிடுமா, மற்றொன்று?


இப்படி துடிப்பும் செல்வாக்குமுள்ள ஒவ்வொரு,திறமைசாலிகளையும் நீக்கிவிட்டு அ.தி.மு.க தேர்தலில் கரையேறுமா?.செல்வி ஜெயலலிதாவிற்கே வெளிச்சம்!


வந்தசெய்தி!


அ.தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் செல்வகணபதியை, கட்சியின் அடிப் படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டதால் அ.தி. மு.க., வில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமை யில் அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.


அந்த தேர்தலின்போது கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலராக இருந்த செல்கணபதி, திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று, கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவரானார். அவருக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.ஒரு சில ஆண்டுகளில், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. 1996க்கு பின் தமிழகத்தில் தி.மு.க., தலைமை யிலான அரசு பொறுப்புக்கு வந்தது. அ.தி.மு.க., ஆட்சியின் போது நடந்த ஊழல் களை தூசு தட்டத் துவங்கியது.


அதில் முதல்கட்டமாக, செல்வகணபதி மீது சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு பதிவு செய் யப்பட்டது.கடந்த 1999-2000 நாடாளுமன்ற தேர்தலில் காங்., கட்சி சார்பில் வாழப்பாடி ராம மூர்த்திக்கு சேலம் எம்.பி., சீட் வழங்கப்பட்டது. அவருக்கு சரியான போட்டியை ஏற்படுத்த, செல்வகணபதியை அ.தி.மு.க., தலைமை வேட்பாளராக அறிவித்தது. செல்வகணபதி வெற்றி பெற்றார். எம்.பி.,யாக இருந்தபோதும், அவரை கட்சித் தலைமை ஒதுக்கியே வைத்திருந்தது. கடந்த 2001ல் அ.தி.மு.க., ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோதும், செல்வ கணபதிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
13 ஆண்டு இடைவெளிக்கு பின் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது செல்வகணபதி யை, சேலம் கிழக்கு மாவட்டச்செயலராக கட்சித்தலைமை அறிவித்தது.அப்படியிருந்தும், அவரது பொறுப்பில் இருந்த சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் கூட அ.தி.மு.க., வெற்றி பெற முடியவில்லை. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல் களிலும், அதே நிலை தான் ஏற்பட்டது.இந்நிலையில்,செல்வகணபதியின் எதிர்கோஷ்டியாக செயல்பட்ட அ.தி. மு.க., வினர், பல்வேறு புகார் மனுக்களை தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜாதி அடிப்படையில் கட்சியினரை நடத்துவது, எதிர் கோஷ்டியினரை பழிவாங்கும் வகை யில் செயல்படுவது,போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தில் தி.மு.க., ஆதரவாளர்களை நியமனம் செய்தது என புகார்கள் தெரிவிக்கப்பட்டன.மேலும், "சுடுகாட்டு கூரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்தால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைவேன்' என செல்வகணபதி, தி.மு.க., முக்கிய பிரமுகருக்கு உறுதியளித்ததாகவும், தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார்களை பெற்றுக்கொண்ட கட்சி தலைமை, வழக்கம்போல், எந்த விதமான நேரடி விசாரணையும் நடத்தாமல், செல்வகணபதியை கட்சியில் இருந்து நீக்கி விட்டது.


அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த நீக்கத்தை எதிர் கோஷ்டியினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஏனெனில், சேலம் மாவட்டத்தில் வேறு எந்த அ.தி.மு.க., பிரமுகரை விடவும், செல்வகணபதிக்கு செல்வாக்கு அதிகம்."தங்களை விட செல்வாக்கான ஒருவர் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் புகார் மனு அனுப்பியவர்களின் நோக்கத்துக்கு கட்சி தலைமை பலியாகி விட்டது' என்கின்றனர் செல்வகணபதி ஆதரவாளர்கள்.

பச்சப் புள்ளைங்கப் படிக்கக் கூடாத ஜோக்குகள்!

Posted on Tuesday, August 26, 2008 by நல்லதந்தி






இரண்டு கோலிவுட் பையன்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உன் அப்பாவைக் காட்டிலும் என் அப்பா உசத்தி!"

"இல்லை"

"உன் அம்மாவை விட என் அம்மா உசத்தி."

மற்றவன் தயங்கினான்:


"இருக்கலாம்......ஏன்னா என் அப்பா கூட அதேதான் சொல்கிறார்."








ஜேம்ஸ் புதிதாய் ஒரு அலுவலகம் ஆரம்பித்தான்.மூன்று அழகான இளம் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.

வந்து பார்த்த ஒரு நண்பன்,"மூன்று பெண்களா!. எப்படி வேலை நடக்கும்?". என்று ஆச்சரியப் பட்டான்.

"ஏன், என்ன கஷ்டம்?. இரண்டு பேருக்கு லீவு கொடுத்து அனுப்பிவிடுவேன்"










அடுத்த வீட்டில் இருந்த பெண் நல்ல அழகி.லில்லியின் கணவன் ஏதாவது ஒரு சாக்கில் அங்கே போவான்.திரும்பி வர ரொம்ப நேரமாகும்.

ஒரு முறை அங்கே சென்றவன் லேசில் திரும்பவில்லை.லில்லி அங்கே போய்க் கதவைத் தட்டினாள்."ஜான்! எத்தனை நேரம் நீ வர!"

உள்ளே இருந்து பெண்ணின் பதில் வந்தது. "இதோ பார்,இப்படி அடிக்கடி குறுக்கிட்டிருந்தேயானால் இன்னும் நேரமாகும்".









அது ஒரு தினுசான இடம்.

அவனருகே ஓர் அழகி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சினாள்.

"உன் வயசு என்ன?"

"பதிமூன்று," என்றாள்.

"ஆ!" என்று துள்ளியெழுந்தான் அவன்."மடியை விட்டு கீழே இறங்கு!"

"சே!... மூட நம்பிக்கை!" என்று அவள் சிணுங்கினாள்.









மேனேஜரின் மேஜை மீதிருந்த டம்ளரைக் கைத் தவறுதலாய்த் தள்ளிவிட்டாள் அந்த அழகிய ஸ்டெனோ.

கண்ணில் நீர் தளும்ப, " இன்று காலையில் இருந்து நான் எது செய்தாலும் தப்பாகவே போகிறது," என்றாள்.

மேனேஜர் ஆர்வத்துடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"அப்படியா! ராத்திரிக்கு நாம் சினிமாவுக்குப் போகலாமா?"







லிஸ்ஸி மரணப் படுக்கையில் இருந்தாள்.கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு,"என்னை மன்னியுங்கள்.உங்களுக்கு நான் பல முறை துரோகம் செய்திருக்கிறேன்.எனக்கு மன்னிப்பே கிடையாது," என்று விம்மினாள்.




"அலட்டிக்காதே லிஸ்ஸி,உனக்கு விஷம் வைத்தது நான் தான் " என்றான் அவன்.





செருப்பால் அடித்து குடைபிடிப்பது எப்படி? or விரட்டிவிடப் பட்ட பிச்சைக்காரன் தட்டிலிருந்து சோறு பிடுங்குவது எப்படி-விளக்கம் தருபவர் கலைஞர்!

Posted on Monday, August 25, 2008 by நல்லதந்தி


















இந்த கூத்தப் பாத்த சிரிப்பை அடக்கமுடியலே!



அடக்கருமமே ஏன்யா இந்த ஆளு இப்படி இருக்காரு?


டிரவுசர் கிழியுற மாதிரி இருக்கு ... அதான் :(



கலைஞர் கருணாநிதிக்கு எப்போதுமே.வெட்கம்,மானம்,சூட்டு சொரணை,லஜ்ஜை,கூச்சக் கருமாந்திரங்கள் கிடையேவே கிடையாது,என்று அவர்களே கூப்பாடு போட்டுச் சொன்னாலும்,மட்டி,மடையர்களாலான எங்களைப் போன்ற சொற்ப சிலர் 'அவருக்கு இதில ஏதாவது ஒன்றாவது இருக்கும் அப்படி இல்லையன்னா அவரு மனுஷனாவே இருக்க முடியாது' என்று விவரம் புரியாமல் தெரியாத்தனமா பேசி வந்தோம்.



கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னிக்குத் தானே எனக்கு எதுவும் கிடையாதப்பான்னு சொல்லிட்டாரு!..வயசுக்கும் அறிவுக்கும்,சம்மந்தமில்லைங்கறத கலைஞரப் பாத்து ஜனங்க கத்துக்கணும்.இன்னொன்னையும் கத்துக்கலாம்!.. மனிதனோட சுயநலங்கறது எப்பவுமே முடியாததுன்னு,அதுக்காக எந்த வயசிலேயும் மானத்தை இழக்கலாம்ங்கிறதை!.




எப்பவுமே சுணங்கி சுணங்கி வேலை செய்யும் கலைஞர்,எந்த முடிவு எடுக்கவும், (தம் சொந்த பந்தங்களை பதவியில் அமர்த்துவது தவிர) காலத்தை ஒத்திப் போடும் கலைஞர்,இந்த பா.ம.க விஷயத்தில அவர்களின் காலில் இவ்வளவு வேகமா விழுவுறது நமக்கு ஆச்சரியமா இருந்தாலும், கலைஞரோட அரசியலை அன்றாடம் பாத்துட்டு இருக்கறவங்களுக்கு,இதெல்லாம் ஒரு அதிர்ச்சியையும் கொடுக்காது!.கலைஞர் இதவிட ஜெகஜ்ஜால வித்தையை எல்லாம் முன்னெயே காட்டி இருக்காருன்னுதான் நினைச்சிக்குவாங்க!.


ஏன்னா பாஜக வோட ஆட்சியில பங்கு வகிச்சப்போ கலைஞருக்கு ஆட்சி முடிய கடைசி இரண்டு மாசத்துக்கு முன்னே தானே அது மதவாத கட்சின்னு தெரிஞ்சது!.(இதுல முரசொலிமாறன் கருமாதிக்கு அத்வானி வரலேங்கிற அல்பகாரணம் வேற.அன்னிக்கு பிரதமரா இருந்த வாஜ்பாஜ்யே கருமாதிக்கு வந்த போதும்,ப.ஜ.க வை கழட்டிவிட்டு, காங்கிரஸோட சேரக் காரணம் தேடிய லட்சணம் இது!).



இப்ப பா.ம.க.வ ஏன் கழட்டிவிடாங்கன்னு ஜனங்களுக்குத் தெரியும்.ஆனா கலைஞர், மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு பா.ம.க. தடையா இருக்குதுன்னு கழட்டிவிட்டமாதிரி பில்டப் கொடுத்தாரு நம்ம கலைஞரு.



அப்படியே வெச்சிக்கிட்டாலும் இப்ப அவங்க மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு முன்ன சொன்ன எதிர்ப்புகளைக் கை விட்டுட்டாங்களா?... கலைஞருக்கே வெளிச்சம்!.



செருப்படி வாங்கிக்கிட்டு தியாகத் திலகம் பா.ம.க. கலைஞரோட வீட்டு வாசலில காத்திருக்கப் போகுதா?.அல்லது அடுத்த செருப்படி வாங்க அ.தி.மு.க வாசலுக்குப் போகப் போகுதா?. ஆனா பா.ம.கவுக்கு இந்த ரெண்டு வூட்டத் தவிர எங்க போனாலும்,அடுத்தது காட்டைத்தான் தேடிப் போகோணும்.


வந்த செய்திகள் கீழே!





ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.




ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது.




இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது.




இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது.இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.





அடுத்த செய்தி!





"பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' என முதல்வர் கருணாநிதி கருத்தை தெரிவித்துள் ளார். "தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., மீண்டும் இடம் பெறுவதால் வலுவாக இருக்கும்' என்ற கருத்தை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.



மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் எல் அண்ட் டி நிறுவன தலைவர் நாயக், செயல் தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் சிவராமன் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். அரை மணி நேரம் இச்சந்திப்பு நடந்தது.




முதல்வரை சந்தித்துப் பேசிய பின் மத்திய அமைச்சர் சிதம்பரம், பா.ம.க., மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதைப் போன்ற சாதகமான பதிலை தெரிவித்துள்ளது, தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் அளித்த பேட்டியிலும் பா.ம.க., தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்."தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறியது அவர்களாக ஏற்படுத்திய நிர்பந்தம். நாங்களாக அவர்களை வெளியேற்றவில்லை.ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' (இது எப்படி இருக்கு?)என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.






கடந்த ஜூனில், பா.ம.க.,வை வெளியேற்றிய போது தி.மு.க., காட்டிய வேகமும், கோபமும் தற்போது குறைந்துள்ளதையே முதல்வரின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. அதற்கேற்ப "நாளையே மீண்டும் பா.ம.க., சேரலாம்' என்று அவர் கூறியிருப்பது, இக்கூட்டணி பிளவு ஏதுமின்றி இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியல் கூட்டணிக் கட்சிகள் இடையே பெரிய அளவில் திருப்பமும், பரபரப்பும் கொண்டதாக இக்கருத்து அமையும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனந்தவிகடனுக்கு பதிலடி---அன்னக்கிளி குமுதம் விமரிசனம்!

Posted on Saturday, August 23, 2008 by நல்லதந்தி


ஹி..ஹி... சினிமா ஸ்டில் கிடைக்கலை அதான்!

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம்; அதற்கு ஒரே ஒரு வாத்தியார்.(பாடம் கீடம் நடத்தியதாகத் தெரியவைல்லை) அவர் காதலிப்பது அன்னக்கிளியை.கைப் பிடிக்க நேர்வது சொர்ணக்கிளியை.இன்னும் கொஞ்சம் துணிவு இருந்திருந்தால் கதையைக் கவிதையாகப் பண்ணி இருக்கலாம். கை நழுவ விட்டுவிட்டார்கள். கதையே டல் அடிக்கிறது.


முழுக்க முழுக்க கிராமத்துச் சூழ்நிலையை வைத்துத் தரமான பிளாக் அண்ட் வொய்ட் படம் வந்து ரொம்பக் காலம் ஆகிவிட்டது என்று ஏங்குபவர்களுக்கு அன்னக்கிளி ஆறுதல் தரும்.


ஊஞ்சலாட்டம் முதல் நீச்சலோட்டம் வரை வாத்தியாரைய்யாவுக்கு வாத்தியாரம்மாவாக விளங்குகிறார் சுஜாதா.


சிவகுமாரின் வயிற்றை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு, 'ஊம்.....இப்ப கால் ...இப்ப கை...' என்று நீச்சல் சொல்லிக் கொடுத்து விட்டு பிறகு அவரது இடுப்புத் துண்டைக் காணோம் என்று தெரிந்ததும் கூச்சத்துடன் ஓட்டம் பிடிப்பது கிளுகிளுப்பான -- அதே சமயம் அசிங்கமான -- குட்டிக் கதை.


அதென்னவோ தெரியவில்லை,படாபட் வந்த பிறகு தான் பழைய காதல் கதையில் சூடு பிடிக்கிறது.


முழங்காலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஆடிக்கொண்டே,"உங்களுக்கு எப்படி இந்தக் கிராமத்தில் பொழுது போகிறது?" என்று சிவகுமாரிடம் பேச்சுக் கொடுக்கும் சரளம்; 'என்னங்க,அன்னத்துக்கு ரெண்டு ரூபாய் கொடுங்க', என்று--கணவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப் பற்றி அறியாமலே----சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகும் லாவகம்---படே பட்தான் இந்த படாபட்.


அங்கே திரையில்,கண்ணகியின் போராட்டம்; இங்கே தியேட்டர் முதலாளியின் படுக்கை அறையில் அன்னக்கிளியின் போரட்டம்.டைரக்டர்களின் சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்.


தன்னை நேசித்து,சமயத்தில் தனக்கு ஆயிரம் ரூபாய்ப் பணத்தை-குருவி சேர்ப்பதுபோலச் சேர்த்து--அனாயாசமாக எடுத்துக் கொடுத்த பேதைப் பெண்ணை ஏமாற்றி விட்டோமே என்று சிவகுமார் ஏக்கப் பட்டவராக இருக்க, அவரைப் பிரிந்து விட்டோமே என்று சுஜாதா ஏங்க இருவரும் சந்திக்கும் போது,உணர்ச்சி வசப் பட்டுத் தங்களை ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு விடுவதும்,சுஜாதா உடனே பிரக்ஞை வரப் பெற்றவராக,'போயிடுங்க வாத்தியாரையா, போயிடுங்க..' என்று பதறுவதும் நல்ல கட்டம்.


ஸ்ரீகாந்த், சோக காந்த்.


சில ரே ரக கிராமிய அழகுகள்; சில ஆழ்ந்த வசனங்கள்; சில புத்திக் கூர்மையுள்ள டைரக்ஷ்ன் பொறிகள். இவ்வளவு இருந்தும்---


அன்னக்கிளியை மனசில் நின்ன கிளி என்று சொல்லத் தோன்றவில்லை.


பி.கு : இந்த திரைப் படத்திலிருந்து தமிழ் திரை இசையை வேறு தளதிற்க்கு கொண்டு சென்ற இளைய ராஜாவின் இசையைப் பற்றி ஒரு வரி கூட எழுதாத ஞான சூனிய குமுதம் விமரிசகரைப் பற்றி என்ன சொல்ல!


குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 3

Posted on Thursday, August 21, 2008 by நல்லதந்தி

முதற்பகுதி: பகுதி-ஒன்று

இரண்டாம்பகுதி: பகுதி-இரண்டு


கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்- அத்தியாயம் - இரண்டு.


இவ்விதமாக சத்தியமங்கலத்திற்கு முதல் முதல் வந்தவர்களிலே எனக்கு ஏழாம் தலைமுறை பாட்டனான கோவிந்தப் பட்டர் ஒருவர்.அக்காலத்தில் அவருக்கு வயது 20.அவர் காசிப்பட்டர் குமாரர்.அவர் சத்தியமங்கலத்தில் குப்பா வாத்தியார் கன்னிகையை விவாகம் செய்து கொண்டவர்.அவர் வெங்கிடாசலபதியின் அனுக்கிரகத்தால்,புத்திர சந்தானம் பெற்று ஜேஷ்ட குமாரனுக்கு வெங்கிடபதி என்று நாமகரணம் செய்தார்.இந்த வெங்கிடபதி அய்யர் மகாபுத்திமான் ஆனபடியால்,சத்தியமங்கலம் அரண்மணைச் சர்வாதிகாரியின் கச்சேரியில் ஒரு உத்தியோகத்தில் அமர்ந்தார்.

இவர் காலஞ் செல்லவே இவருடைய உத்தியோகத்தில் இவருடைய நான்காம் குமாரரான நாராயண அய்யர் நியமனம் பெற்றார்.இதற்கு சமீப காலத்தில் திருமலை நாயக்கன் மதுரை அரசனானான்.அவன் தன்னுடைய மருமகனான அளகாத்திரி நாயக்கனை சத்தியமங்கலத்திற்கு ராஜாவாக நியமித்து,நாராயணையர் யுத்த காலத்தில் சர்வாதிகார உத்தியோகத்தை நிர்வகிக்கத் தகுந்தவர் என்று நேரில் தெரிந்து அவரைச் சர்வாதிகாரியாக நியமித்தான்.

நாராயணையருக்குப் பிறகு அவருடைய ஜேஷ்ட குமாரராகிய வெங்கடபதி அய்யர் சத்தியமங்கலம் சர்வாதியாக நியமனம் பெற்றார்.மதுரைத் துரைத்தனத்தின் பலம் நாளுக்கு நாள் க்ஷீணித்துக் கொண்டு வந்து மைசூர் துரைத்தனத்தார் பலம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து கொண்டு வந்தது.

கடைசியாக,மைசூர் அரசனான சிக்க தேவராஜ உடையார் மலைக்கணவாய் களின் அடிவாரங்களில் உள்ள சத்தியமங்கலம் முதலான கோட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கவர்ந்து கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து அந்த நாட்டை ஆளுவதற்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தி சர்வாதிகார உத்தியோகத்தில் அனுபவமுள்ள வெங்கடபதி அய்யரையே சர்வாதியாக நியமித்தான்.

அரசாட்சி மாறியதனால்,ராஜ்ஜியத்தின் வரும்படி குறைந்து போனது.நாட்டில் கூட்டக் கள்வரின் உபத்திரவம் மேலிட்டது.வெங்கடபதி அய்யர் வரிகள் கிரமமாக வசூலாவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து,சத்தியமங்கலம் நாட்டின் வரும்படி முன்னிலும் அதிகமாகும்படி செய்தார்.கூட்டக் கள்வர்களை எல்லாம் பிடித்துத் தண்டணைக்குட்படுத்தி ஜனங்கள் சமாதனமாய் வாழ்வதற்கு வேண்டிய வழி துறைகளையெல்லாம் ஏற்படுத்தியதினாலே அவர் சத்தியமங்கலம் ராஜாவிற்கு முக்கிய சிநேகிதர் ஆனார்.

அதற்கு பிறகு,அவருடைய இளைய சகோதரன் ராமசுவாமய்யர் சர்வாதிகாரியாக நியமனம் பெற்றார்.அவர் காலத்திற்குப் பிறகு கோவிந்த பட்டருடைய கடைசிக் குமாரன் விசுவபதி அய்யருக்குக் கனிஷ்ட புத்திர சந்ததியிலே பேரனான விஸ்வபதி அய்யர் சர்வாதிகாரியானார்.இவருக்குப் பிறகு சர்வாதிகார உத்தியோகம் கோவிந்த பட்டருடைய குடும்பத்தை விட்டு விலகியது.இதற்கு சமீப காலத்தில் மைசூர் ராஜ்ஜியம் ஹைதர் நாவாபுடைய ஆட்சிக்குள்ளானது.

மேல கண்டவர் சர்வாதிகாரம் செய்யும் காலத்தில் கோட்டை வீரன்பாளையம் அக்கிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரசாமி தேவாலயத்திற்கு மேற்கு; நடு வீதிக்கும் வடக்கு; வடக்கு வீதிக்கு மத்தியில் கட்டப் பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில்,அவர்கள் ஏக குடும்பமாக வாசம் செய்து வந்தார்கள்......

தொடர்ச்சி பிறகு....

அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!

Posted on Wednesday, August 20, 2008 by நல்லதந்தி


அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!


ஒவ்வொரு வரியாக பத்தி பிரித்துப் எழுதியிருப்பதால் கவிதை என்றே கண்டுணர்க!......


அவர் கவிதை எழுதி சம்பந்தப் பட்டவர்களுக்கு துன்பம் கொடுக்கிறாரோ இல்லையோ,அந்த கவிதையை பிரசுரிக்கும் பத்திரிக்கைகளின் அச்சகங்களில் அச்சு கோர்ப்பவரில் இருந்து,வாங்கிப் படிப்பவர்கள்,அனைவருக்கும் ஜன்னி,பேதி வருவது சர்வ நிச்சயம்!.


இந்த கவிதையில் அவர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கட்டி கலைஞர் தொலைக்காட்சியைப் பார்கின்ற பரவசத்தையும் அளிக்கிறார்!.


அய்யர்களைத் திட்டுவது மாதிரி இருந்தாலும் திட்டு வாங்குபவர்கள் மாறன் மகன்கள் என்பது போலத் தெரிகிறது.அவர்கள் பிராமணர்களா?(தாய் வழியில்).அதனால்தான், தாசில்தார் கலைஞர், அவர்களுக்கு புது சாதிச் சான்றிதழ்(வழக்கம் போல் பிடிக்காத மற்றவர்களுக்கு கொடுப்பது போல) கொடுக்கிறாரா தெரியவில்லை!


கவிதைக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்கள் தயவு கூர்ந்து கீழ் கண்ட முகவரிக்கு ஒரு வரி எழுதிப் போட்டு விடவும்!.


திரு.அச்சுக் கோர்ப்பவர்

முரசொலி அச்சகம்

கோடம்பாக்கம்

சென்னை.


பி.கு: கவிஞர் கனிமொழியின் கவிதைகளைக் கண்டு(!) பிடித்து படித்தவர்கள்

படிக்கும் போதே கண்களில் சொர்கம் தெரிவதாகத் பரவசத்துடன் கூறியதாக, கேள்வி!.


பின்னே என்னத்துக்காக கவிதையைப் போட்டாய்? என்பவர்களுக்கு... யான் பெற்ற இ(து)ன்பம்! பெறுக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மைதான்! :)


உஷார். .....இனி கவிதை அரங்கேறும் நேரம்!...


அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;


அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!
(ஸ்ஸ்.....பெரியவங்க பேசும் போது சிரிக்கக்கூடாது!)

அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....


அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?
(ரொம்ப நொந்துட்டார் போலிருக்கே...)

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும் "ஆத்துக்காராள்'' காட்டிய
(இது முரசொலி மாறனின் மனைவிக்கு!)

அன்பும் நன்றியும் கூட ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.


ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி,


அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; "அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;
(இது முரசொலி மாறனின் மகன்களுக்கு)

அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப்பார்த்தேன்


அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!


அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்


படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து


படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
(அய்யய்யோ அவ்வளவு சிரமம் குடுத்திட்டீங்களா? பிரதர்ஸ்!)

உணர்ந்து கொண்டேன்; "அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!
(அடடடா!. இப்பதான் அவர்கள்(அம்மா வழியில்) அய்யர்கள்ன்னு கண்டுபிடித்தாராம்)

உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-


கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்


நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
(யோவ்...வாங்கையா!...நாமும் சிரிச்சிடுவோம், இல்லையன்னா அடுத்த கவிதை ரெடியாயிரும்!........)

குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 2

Posted on Tuesday, August 19, 2008 by நல்லதந்தி

முதற்பகுதி பகுதி - ஒன்று
கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்- அத்தியாயம் - ஒன்று.




பூர்வகாலத்தில் நம்ம முன்னோர்கள் திருவண்ணாமலையில் இருந்தவர்கள்..... திருவண்ணாமலை ராஜ வம்சத்தர்களுடையவும்,பிறகு செஞ்சி நாயக அரசர்களுடையவும் சம்ரக்க்ஷணையில் பரம்பரையாக இருந்தவர்கள். அவர்கள் திருவண்ணாமலையை விட்டு இன்ன காலத்தில் சத்தியமங்கலத்திக்கு வந்தார்கள் என்றும்,இன்ன காரணம் பற்றி வர வேண்டியதாயிற்று என்றும் சரித்திர சம்பந்தமாகவுள்ள சில முக்கிய சங்கதிகளை நான் சுருக்கிச் சொல்வதவசியம்.




மகம்மத் டோக்ளாக்கு டில்லி சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் மத்திய இந்தியாவில் "டெக்கான்" முழுவதும் அவனுடைய ஜெனரல்களுடைய ஆட்சிக்குள்ளாகியது.......




1335-ம் வருஷத்தில் ஸ்தாபிக்கப்படலான விஜயநகர ராஜ்யம் நாளுக்குநாள் விருத்தியடைந்து,அளவற்ற செல்வமும்,கீர்த்தியும் பெற்றது.டில்லி சக்கரவர்த்திகள் முதலாய் அஞ்சும்படி 230 வருஷ காலம் வம்ச பரம்பரையாக துரைத்தனம் செய்து வந்தார்கள்.




இப்படியிருக்கையில், (டெக்கான்) மத்திய இந்தியாவில் பீஜப்பூர், கோல்கொண்டா,அஹெமெத் நகர் மகம்மதிய ராஜாக்கள் ஒன்று கூடி 1565-ம் வருஷத்தில் "தாலிகோட்" என்னுமிடத்தில் விஜயநகர மகாராஜாவுடன் பெரும் போர் புரிந்து மகாராஜாவைக் கொலை செய்து விஜயநகரத்தைப் பாழாக்கி விட்டார்கள்.




அந்த மகாராஜாவினுடய சகோதரர் ஒருவன் மகம்மதிய ராஜாக்களுடைய சம்மதியின் பேரில் சந்திரகிரியில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டான். மதுரை,தஞ்சாவூர்,செஞ்சிக்கோட்டை ஆகிய இவைகளில் இருந்து துரைத்தனம் செய்து வந்த நாயக்க அரசர்கள் இவனுக்கு கீழ்ப்பட்ட ராஜாக்களானார்கள்.




விஜயநகரம் தோல்வி அடையவே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ராஜாவுடைய பலம் குறைந்து போயிற்று.அவனுடைய ஆட்சிகுட்பட்டு ஒரு சிறு பாளையபட்டுக்கு தலைவராக இருந்து நாளாவட்டத்தில் பலமடைந்த ஒருவன்,தன் எஜமானிடமிருந்து மைசூர் சீமையை அபகரித்துக் கொண்டு தானே ஸ்ரீரங்கப் பட்டணத்திலிருந்து துரைத்தனம் செய்து வரலாகிறான்.இப்போது மைசூர் தேசத்தையாளும் மகராஜா இவருடைய சந்ததியியைச் சேர்ந்தவர்.




ஸ்ரீரங்கப் பட்டணத்தின் ஆட்சிகுட்பட்ட கோயமுத்தூர்,சேலம் அடங்கிய கொங்கு நாட்டை அதே காலத்தில் மதுரை அரசரான வீரய்ய நாயக்கன் கட்டிக் கொண்டான். இது முதல் மைசூர் அரசனுக்கும் மதுரை அரசனுக்கும் ஓயாமல் போர் நேர்ந்தது.மைசூர் படைகள் மலைக் கணவாய்களின் வழியாக கொங்கு நாட்டுக்குள் நுழையாதபடி கணவாய்களின் அடிவாரங்களில் டணாய்க்கன் கோட்டை,சத்தியமங்கலம்,அந்தியூர்,காவேரிபுரம் ஆகிய இடங்களில் மதுரை அரசனான வீரய்ய நாய்க்கன் பலமான கோட்டைகளைக் கட்டி அவைகள் ஒவ்வொன்றிலும் காப்பு சேனைகளை நிறுத்தி சத்தியமங்கலம் கோட்டையில் இருந்து அந்த நாட்டை ஆளுவதற்கு ஒரு ராஜாவையும் ஏற்படுத்தினான்.




இப்படியிருக்கையில்" தாலிகோட்" யுத்தத்திற்கு பிறகு மகம்மதியர்---குதிரைப் படைகளை நடத்திக் கொண்டு அடிக்கடி திருவண்ணாமலை சீமைக்குள் கொள்ளையும்,கொடுமைகளையும் செய்து வந்தார்கள்.அவர்களை அடக்க சந்திரகிரி ராஜாவாலும் முடியவில்லை.இதனால் நம் முன்னோர்கள் திருவண்ணாமலையில் வசிக்க கூடாமல்,அதே காலத்தில் மதுரை ராஜ்யம் பலமுள்ளதாகி வடக்கே மலைவரிசைகள் வரை பரவி வீரப்ப நாய்கனுடைய துரைத்தனத்தில் ஜனங்கள் சமாதானத்துடன் வாழ்வது கேட்டு அவர்கள் மதுரைக்குச் சென்று வீரப்ப நாய்க்கனுடன் முறையிட்டுக் கொண்டார்கள்.




வீரப்ப நாய்க்கன் அவர்களைச் சத்தியமங்கலத்திற்கே அனுப்பி அங்கே கோட்டை வீரப்பன் பாளையம் என்ற பெயரால் ஒரு அக்ரகாரம் கட்டி அவர்களுக்கு கிரகதானம் செய்து அதற்கடுத்து மேல் புறம் இருக்கும் கொளத்தூர் கிராமத்தை சர்வமானியம் விட்டான்.இந்த சர்வமானியத்தை நம் முன்னோர்கள் வெகு காலம் அனுபவித்து வந்ததில் கடைசியாக அநேக வருஷ காலம் தரிசு கிடந்து குயிட் ரெண்டு(quit rent) செலுத்தப் படாமல் 1860-ம் வருஷம் சர்க்காருக்கு சேர்ந்து போச்சுது.




தொடர்ச்சி பிறகு...

அரைத்த மசாலாவையே திரும்பத்திரும்ப அரைக்கும் பாகிஸ்தான் அரசியல்!

Posted on by நல்லதந்தி

பாகிஸ்தானில் மட்டும் அரசியல், பார்த்த சினிமாவையே மீண்டும்மீண்டும் பார்ப்பது போல, பார்த்த காட்சிகளே திரும்பதிரும்ப அரங்கேறுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சியை தற்போது மீண்டும் பாகிஸ்தான்மக்கள் பார்க்கிறார்கள்.



1969-ல் குமுதத்தில் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைப்படியுங்கள். நீங்கள் மாற்ற வேண்டியது 'அயூப்கான்' என்று வரும் இடத்தில்'முஷாரஃப்' என்று படிக்க வேண்டியது மட்டுமே!



பாவம், அயூப்கான்!.அஸ்தமனம் என்பது எல்லோருக்கும் உண்டுதான்.ஆனாலும்,தளபதியாக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த இந்த பாகிஸ்த்தான் தலைவரின் அரசியல் வாழ்க்கை இப்படிப்பொசுக்கென்றா முடிய வேண்டும்?. பரிதாபத்திற்க்குரிய விஷயம். ஊழல்பிடித்த அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து அன்று மக்களை அவர் மீட்டார்.



இன்றோ,அவரது பிடியில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ள மக்கள் ஒரு புரட்சியே செய்து விட்டார்கள். விளைவு? சட்டத்தின் உயிர் ஊசலாட ஆரம்பித்தது.ஒழுங்குக்கு மூச்சுத் திணறலாயிற்று.



எந்த நாட்டிலுமே,வன்முறையை வன்முறையால்தான் ஒடுக்க முடியும் என்ற நெருக்கடியானகட்டம் வரும்போது, ‘கைவரிசையைக் காட்டுங்கள்' என்று இராணுவத்திற்க்கு கட்டளைஇடப்படுவது உண்டு.இராணுவத்திற்க்கு அயூப்கான் கட்டளை இடவில்லை.அதனிடம் சரணாகதி ஆகிவிட்டார்.‘துணைக்கு வாருங்கள்' என்று அவர் தற்போதைய தளபதி யாஹ்யாகானைக் கூப்பிடுவதோடுநிறுத்திக் கொள்ளவில்லை.தூக்கியே கொடுத்துவிட்டார் ஆட்சிப்பொறுப்பை.



இப்போது பாகிஸ்த்தானில் அமைதி நிலவுகிறது என்றால் அதற்க்கு ஒரே காரணம்தான்இருக்க முடியும்.துப்பாக்கி அங்கே அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.பாகிஸ்த்தானிய மக்கள் அயூப்கானுக்கு எதிராகப் பொங்கியது ஏன்?

குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 1

Posted on Sunday, August 17, 2008 by நல்லதந்தி

வரலாறு, அது எழுதுபவரின் பார்வையையும், கலந்தே எழுதப்படுகிறது..ஒரு மன்னன் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பான் என்பது பிற்காலத்தில் நமக்கு கிடைக்கும் சில ஆதரங்களைக் கொண்டே புனையப்படுகிறது.கிடைக்கும் ஆதாரங்களெல்லாம் அந்த மன்னனாலேயே உருவாக்கப்பட்ட, கல்வெட்டாகவோ,பட்டையங்களாகவோ இருந்தால் அது அவனைப் புகழமட்டுமே செய்யும், அவனுடைய மறுபக்கத்தை காட்டாது.அவனுடைய மறுபக்கத்தை பார்க்கவேண்டுமென்றால்,
அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களைத்தான் கேட்க வேண்டும்.



வரலாற்றை நாம் பாடபுத்தகளில் மட்டுமே படித்திருக்கிறோம்.ஒரு குடும்பத்தின் வரலாறு மூலமாக, விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியிலிருந்து ஆங்கில ஆட்சிகாலம் வரை நடந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் போது அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை நாமே நேரில் அனுபவிக்கிற உணர்வு உண்டாகிறது.



கீழே உள்ள கட்டுரை ஓம் சக்தி இதழின் 1998-ம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியிடப்பட்டது.







இது ஒரு மெனத்கல்ய பிராமணக் குடும்பத்து வரலாறு.விஜய நகர் வீழ்ச்சி தொடங்கி கும்பினி ஆட்சி கொங்கு நாட்டில் கால் கொள்ளும் காலம் வரையிலான நிகழ்வுகள் அடங்கியது.சுவடியின் காலம் 1914.





திப்புசுல்த்தான் பற்றிய கோரச்சித்திரத்தை இந்த ஆவணம் மூலம் பார்க்க முடிகிறது,அதோடு ஆங்கிலேயர் ஆட்சியை வரவேற்று,அவர்களுக்கு இங்குள்ள மக்கள் கோட்டை கொத்தளங்களைத் திறந்து விட்டனர் என்ற வேதனை தரத்தக்க செய்தியையும் இது புலப்படுத்துகிறது.





சேலம் தமிழாசிரியர் புலவர் சீனிராமநாதனிடமிருந்து 1994-ல் சேலம் மாவட்ட வரலாற்று ஆவணக்குழுவிற்குக் கிடைக்கப் பெற்றது,இந்த ஆவணம்.இப்படிப் பட்ட குடும்ப வரலாறு,பொது வரலாற்றை வரைவதற்கு உதவும் என்னும் நோக்கில் "கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்" இங்கு வெளியிடப்படுகிறது.





கோவிந்த பட்டர் குடும்பசரித்திரம் -- பீடிகை.





நான் கோவிந்த பட்டருக்கு ஜேஷ்ட புத்திர வம்சத்தில் ஏழாம் தலைமுறைப் பேரன்மாரில் ஒருவன். என்னை நம் பந்து வர்கத்தினர் சாமண்ணா என்றும்,அன்னியர்கள் சுப்புராயர் என்றும் அழைப்பார்கள்.இப்போது நான் ஏறக்குறைய 70 வயது சென்ற விருத்தனாகி விட்டேன்.





தற்காலம், நம்ம குடும்ப பூர்வ சரித்திரம் தெரிந்தவர்கள் என்னைத் தவிர யாரும் இல்லை.அது என்னோடு மறைவதாக இருப்பதால்,நம்ம குடும்பத்தின் சந்ததியராகிய நீங்களும் உங்கள் வம்சர்களும் மறவாதிருக்கும்,இச்சிறு புத்தகத்தில் எழுதி வைத்ததும் இல்லாமல்,நம்ம வம்ச விருக்ஷத்தையும் இதனோடு சேர்த்திருக்கிறேன்.


இந்த வம்ச விருக்ஷம் கோவிந்த பட்டருடைய ஜேஷ்ட புத்திர வம்சத்தில் வெங்கடபதி அய்யருக்குப் பேரனான சத்திய மங்கலம் வெங்கிட சுப்பையர் வம்ச பரம்பரையாக பெரியோர்கள் சொல்லக் கேட்டும்,நேரில் தெரிந்தும் எழுதி வைத்தது.1863-ம் வருஷத்தில் அவரால் எனக்குக் கொடுக்கலானது.அவர் 80 வருஷ காலம் பிழைத்திருந்து,1880-ம் வருஷத்தில் காலம் சென்றவர்.


வெங்கிட நாராயண அய்யர்-குடும்பபூர்வ சரித்திரத்தை நான்கு அத்தியாயங்களாக வகுத்து எழுதியிருக்கிறேன்.என்னிலும் வயதில் தாழ்ந்தவர்களைப் பற்றி வயதில் முதிர்ந்தோனாகிய நான், இந்தப் பூர்வ சரித்திரத்தில் பிரஸ்தாபிப்பது தகாது.மேலும்,அவர்களைப் பற்றிய சரித்திரம்,இக்கால சரித்திரமாகையால்,நம் குடும்பத்தின் பிற சந்ததியர் 5-வது அத்தியாயமாக எழுதி இதனோடு சேர்க்க வேண்டியது அவசியம்.





1914-ம் வருஷம்,பிப்ரவரி 22-ம் தேதி.


சாமண்ணா ஆர். சுப்பையர்.








தொடர்ச்சி பிறகு.....

சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!

Posted on Saturday, August 16, 2008 by நல்லதந்தி

சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!
இது மளையாளப் பட விமரிசனம் அல்ல!.சூட்டிற்காக வைக்கப் பட்ட தலைப்பும் அல்ல!.

தவறாக வந்து,விஷம விஷயம் இல்லாது போனதால் மனத்திற்குள் திட்டுபவர்கள் மன்னிக்க.

இது ஒரு புதிர் கணக்கு!.

இதைப் படித்து விட்டு அட நல்லயிருக்கே! என்பவர்களின் பாரட்டு கே.நடராஜன் என்பவருக்கு போகட்டும். அடச்சீ! இதல்லாம் ஒரு புதிரா என்று திட்டுபவர்களும் அவரையே திட்டிக்கொள்ளுங்கள்.ஏன்னா? புதிர் அவரோடது!


ஒரு நாள் இரவு ஒரு சத்திரத்தில் தங்குவதற்கு 10 வழிப்போக்கர்கள்,இடம் தேடி வந்தனர்.

அந்தச் சத்திரத்திலோ 9 கட்டில்கள் மட்டுமே இருந்தன.ஆனால் ஒவ்வொருவரும் தமக்குத் தனித்தனியாக ஒரு கட்டில் வேண்டுமென்று வற்புறுத்தினர்.

சத்திரத்தின் நிர்வாகி சற்று நேரம் யோசித்தார்.பிறகு ஒரு ஐடியா செய்தார்.10 ஆசாமிகளில் இரண்டு பேரைக்கூப்பிட்டு, முதல் கட்டிலில், கொஞ்ச நேரத்துக்கு படுத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

மூன்றாவது ஆசாமியை இரண்டாவது கட்டிலில் படுத்துக்கொள்ளுமாறு சொன்னார்.நான்காவது ஆசாமியை மூன்றாவது கட்டிலிலும்,ஐந்தாவது ஆசாமியை நான்காவது கட்டிலிலும்,ஆறாவது ஆசாமியை ஐந்தாவது கட்டிலிலும் ,இதே வரிசைப் படி..கடைசியாக ஒன்பதாவது ஆசாமியை எட்டாவது கட்டிலில் படுக்கச் செய்தார்.

ஒன்பதாவது கட்டில் மீதம் இருக்கிறதல்லவா? அதில்,முதல் கட்டிலில் தற்காலிகமாக இருக்கும், பத்தாவது ஆசாமியைப் படுக்கச் செய்தார்.

இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கட்டில் கிடைத்து விட்டது.ஆனால் இருந்ததோ ஒன்பது கட்டில்.ஆட்களோ பத்துப் பேர்.இது எப்படி சாத்தியம்?.

புதிருக்குக்கான விடையை கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

சரியான விடையை நான் அப்புறம் சொல்றேன்!




சரி இப்போ விடையை சொல்லிடுறேன்.

விடை: முதல் கட்டிலில் தற்காலிகமாகப் படுத்திருப்பவர் 10 அது ஆசாமி என்று முதலில் சொல்லப் படுகிறது.அவர் கணக்கில் சேரமாட்டார்.எனவே, இரண்டாவது கட்டிலில் படுத்து இருப்பவ்ர் இரண்டாவது ஆசாமி,மூன்றாவது கட்டிலில் இருப்பவர் மூன்றாவது ஆசாமி என்றுதானே இருக்க வேண்டும்?.

என்ன சரியா?. முதல் பின்னூட்டத்திலே அதைக் கண்டுபிடித்து என்னை கலவரப் படுத்திய அண்ணன் இலவசக் கொத்தனாருக்கு ஜே!.அவருக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி "எஸ்" ஆவது நல்லதந்தி!

தமிழர்களுக்கு தமிழர் சர்டிஃபிகெட் வேண்டுமா?-அணுகவேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை!

Posted on Thursday, August 7, 2008 by நல்லதந்தி

மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் :))))))))))என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். (செத்துப்போனவர்களை வைத்து எத்தனை விளையாட்டுதான் விளையாடுவார்-தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.தமிழ்த்தாயின் நன்றி!நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி (விஸ்வநாதன்\இராமமூர்த்தி 1964லிலேயே பிரிந்து விட்டதாக தகவல்கள் உள்ளன.கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்க்காக இசை அமைத்ததாக ஞாபகம்.அப்புறம் எப்படி 1969ல் இரண்டு பேரும் சேர்ந்து இசையமைத்தார்களோ தெரியவில்லை.மதுரையில் இவர்கள் இருவரும் உண்மையைச் சொல்லாததற்கு பயமும் காரணமாக இருக்கலாம்.எல்லாம் வல்லவராயிற்றே கலைஞர். அவர்தான் கலைஞர் பார் அவர்தான் கலைஞர்!.)இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.டிஎம்எஸ் ஒரு தமிழன்...இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. (தேவைப் படும் போது தமிழன் இல்லாவிட்டால் செளராஷ்ட்ரா?. எம்.ஜி.ஆர் அனுபவிக்காததா?..தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மொழியில் மட்டுமே, தமிழ் அல்லாத தமிழர்களுக்கு,(தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட அந்த தமிழர்களுக்கு) தமிழர்கள் சர்டிஃபிகெட் வேண்டுமா?? அணுக வேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை)ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.

நன்றி :-thatstamil

நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!-சுப்ரீம் கோர்ட்

Posted on by நல்லதந்தி

கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது-இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும்தான்.அரசு குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்துவிட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது.இது மட்டுமல்ல... இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.இந்த அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஒரு சாதாரண எழுத்தருடைய கையெழுத்துக்கெதிராகக் கூட நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அரசாகத்தான் இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.கடவுளால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு மோசமான தேசமாகிவிட்டது இந்தியா. ஒருவேளை கடவுளே இந்த நாட்டுக்கு இறங்கிவந்தால்கூட, அவரால் இங்குள்ள மோசமான நிலைமைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. இந்த தேசத்தின் ஒழுங்கீனங்களை மாற்ற முடியாது. நம் நாட்டு லட்சணம் அப்படி.பல்வேறு பிரச்சினைகளில் அரசின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சமாகத் தெரிவதால்தான், வெறுத்துப் போன மக்கள் பொது நல வழக்குகளோடு கோர்ட் படி ஏறுகின்றனர்.நேரத்துக்கொரு பேச்சு:அரசியல்வாதிகளைப் பாருங்கள். இவர்களை விட கேவலமாக யாராலும் நடந்து கொள்ள முடியாது. அதிகாரம் கையிலிருக்கும்போது நீதிமன்றத்தைவிட அரசு இயந்திரமும், நாடாளுமன்றமும்தான் பெரிது என முழங்குவார்கள்.நீதிபதிகளை விமர்சிப்பார்கள். ஆனால் அதிகாரத்தில் இல்லாதபோது, நியாயம் தேடி அதே நீதிமன்றத்துக்கு ஓடிவருவார்கள், என்றனர் இரு நீதிபதிகளும்.அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரேதமாக ஆக்கிரமித்திருக்கும் உயர் அதிகாரிகளை விரட்ட தற்போதுள்ள இந்தியக் குற்றவியல் சட்டம் 441-ல் போதிய வழிவகைகள் இல்லாததால் அதைத் திருத்த வேண்டும், கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து இந்த அதிகாரிகளுக்கு தண்டனை தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.இதுகுறித்து உடனடியாக பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு பொறுப்பான பதிலைத் தராத மத்திய அரசு, புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள சட்டத்தைப் பயன்படுத்தியே கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமரீந்தர் சரண் மூலம் பதிலளித்தது.இதில் கடுப்பான நீதிபதிகள்தான் அரசை இப்படி விளாசித் தள்ளிவிட்டனர். நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 1 லட்சம் உயர் தர அரசுக் குடியிருப்புகள் பெரும்பாலானவற்றில் பதவிக் காலம் முடிந்த பின்னரும் அரசு அதிகாரிகள் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.இன்னும் பல குடியிருப்புகளில் அதிரகாரிகளின் பெயர்களில் அவர்களது உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சில அதிகாரிகள் உள்வாடகைக்கும் (Sub-letting) விட்டுள்ளார்களாம்.ஆனால் அரசு வழக்கறிஞரோ, இவற்றை மறுத்ததோடு, மொத்தம் 300-க்கும் குபறைவான குடியிருப்புகள் மட்டுமே அந்த மாதிரி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், மீதி 99 ஆயிரம் வீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஒரே போடாகப் போட்டார்.அப்படியெனில் மனுதாரர் எங்களிடம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் பொய்யா... அரசே குற்றவாளிகளுக்கு உடந்தையாய் இருந்தால் எப்படி... என மடக்கிய நீதிபதிகள், அடுத்த சில நிமிடங்களில் காய்ச்சி எடுத்துவிட்டார்கள் மத்திய அரசை!

நன்றி: thatstamil

பகுத்தறிவுப் பகலவன் - ஸ்டாலின்!

Posted on Tuesday, August 5, 2008 by நல்லதந்தி

இந்து கடவுள்களை திட்டித்தீர்ப்பது மட்டுமே பகுத்து உணரும் அறிவாகிய பகுத்தறிவு என்பதை நமக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் மீண்டும் உணர்த்திய பகுத்தறிவர் ஸ்டாலின் வாழ்க!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், நேற்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்க்கா ஆகியோர் காணிக்கை அளித்து, பிரார்த்தனை செய்தனர். தென் தமிழகத்தின் புகழ் பெற்ற, 425 ஆண்டுகள் பழமையான, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, ஜூலை 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர்ப்பவனி இன்றிரவு நடக்கிறது.
நேற்று மதியம் பனிமய மாதா பேராலயத்திற்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்க்காவுடன் வந்தார். அவர்களை பேராலய பங்குத்தந்தை ஜெராசின் கற்றார், உதவி பங்குத்தந்தை செல்வம் வரவேற்றனர். அமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்க்கா ஆகியோர் பனிமய மாதா சொரூபத்தின் அருகில் சென்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மாதாவிற்கு காணிக்கை (மஞ்சள் வண்ணம் புத்தர் போட்ட மேலாடைத் துணியின் வண்ணம் என்பதால்! ஹி..ஹி ஹி)செலுத்தினர்.

நன்றி: தினமலர்

சூப்பர்ஸ்டாரை முழுவதும் புரிந்து கொள்ளாமல் குற்றம் சொல்லாதீர்கள்!

Posted on Sunday, August 3, 2008 by நல்லதந்தி




சூப்பர்ஸ்டாரை முழுவதும் புரிந்து கொள்ளாமல் திட்டாதீர்கள்!

எனக்கு விளக்கம் கொடுக்க பொறுமையில்லை.அதனால் இட்லிவடை பதிவை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த வீடியோவை மொழி புரிந்து,,உணர்ந்து கொண்டாலே எந்த குறையும் இல்லாத

சூப்பர்ஸ்டாரை நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள்.


தலைவா!! நானும் உங்களை குற்றம் சொல்லி இருப்பதை நினைத்து வருத்தப் படுகிறேன்!http://idlyvadai.blogspot.com/

குசேலன்-உருகிய கனிமொழி

Posted on by நல்லதந்தி

நேற்று காலை குசேலன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ஆதரவற்ற குழந்தைகளுடன் பார்த்த கனிமொழி எம்பி ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி அழுதுவிட்டதாகக் கூறினார்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது.சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை பிரமிட் சாய்மிரா நிறுவனம் இன்று காலை ஏற்பாடு செய்திருந்தது.சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சிறப்பகு காட்சியை குழந்தைகளோடு சேர்ந்து காண வந்திருந்தார் முதல்வர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.படம் முடிந்த பிறகு நிருபர்களிடம் கூறுகாயில், மிக அற்புதமான திரைப்படம் குசேலன் என்று பாராடினார். படத்தின் இறுதிக் காட்சியில் தான் நெகிழ்ந்துவிட்டதாகவும், ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்தார்.தமிழில் ஒரு அற்புதமான முயற்சிக்கு வழிகாட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த மாதிரி நல்ல படங்கள்தான் மக்களின் ரசனையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார். தமிழ் மையம் அமைப்பின் ஜெகத் கஸ்பர் ராஜூம் இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தார். மிக அருமையான, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்றார் அவர்.இந்த சிறப்புக் காட்சியைப் பார்க்க குசேலன் இயக்குநர் பி.வாசு, பிரமிட் சாய்மிரா நிர்வாக இயக்குநர் பி.எஸ்.சாமிநாதன் ஆகியோரும் வந்திருந்தனர்.

நன்றி: thatstamil

மன்னிப்பு கேட்டவிவகாரம்-ரஜினி உண்மையாக பேசியது என்ன?

Posted on Saturday, August 2, 2008 by நல்லதந்தி


மன்னிப்புக் கேட்ட விவகாரத்தில் உண்மையாக ரஜினிகாந்த் பேசியது என்ன? என்பதைப் படிக்க கீழே போகவும்.

^

^
^
^
^
^
^
^
^

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

ரஜினி பேசியது!


'ತಪ್ಪಾಗಿರುವುದು ಸಹಜ, ಮುಂದೆ ತಪ್ಪಾಗದಂತೆ ನೋಡಿಕೊಳ್ಳುತ್ತೇನೆ. ಮುಂದೆ ತಪ್ಪು ಮಾಡುವುದಿಲ್ಲ. ಕನ್ನಡಿಗರ ಬಗ್ಗೆ ನನಗೆ ಅಪಾರ ಗೌರವ ಇದೆ. ದಯವಿಟ್ಟು ಕುಸೇಲನ್ ಬಿಡುಗಡೆಗೆ ಅವಕಾಶ ಮಾಡಿಕೊಡಬೇಕು'' ಎಂದು ನಟ ರಜನಿಕಾಂತ್ ಪರೋಕ್ಷವಾಗಿ ಟಿವಿ 9 ಸುದ್ದಿ ವಾಹಿನಿ ಮೂಲಕ ಕ್ಷಮೆ ಕೋರಿದ್ದಾರೆ. ಹೈದರಾಬಾದ್‌ನಲ್ಲಿ ಮಾತನಾಡುತ್ತಿದ್ದ ಅವರು, 'ಕನ್ನಡದ ಮಕ್ಕಳಿಂದ ದೊಡ್ಡ ಪಾಠ ಕಲಿತಿದ್ದೇನೆ. ನಾನು ಒದೆಯಿರಿ ಎಂದು ಹೇಳಿದ್ದು ಪುಂಡು ಪೋಕರಿಗಳಿಗೆ, ಸಾರ್ವಜನಿಕ ಆಸ್ತಿ ಪಾಸ್ತಿಯನ್ನು ನಾಶ ಮಾಡುವವರಿಗೆ ಹೊರತು ಕನ್ನಡ ಹೋರಾಟಗಾರರನ್ನು ಉದ್ದೇಶಿಸಿ ಅಲ್ಲ. ಒಳ್ಳೆಯವರಿಗೆ ತಲೆಬಾಗುತ್ತೇನೆ. ಪುಂಡುಪೋಕರಿಗಳಿಗೆ ಯಾಕೆ ತಲೆಬಾಗಬೇಕು ಎಂದು ಪ್ರಶ್ನಿಸಿದರು.ನಾನು ರಾಜಕಾರಣಿ ಖಂಡಿತ ಅಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಮಾತಾಡುವಾಗ ತಪ್ಪಾಗಿದೆ. ಮುಂದೆ ಮಾತಾಡುವಾಗ ವಿಚಾರಮಾಡಿ ಮಾತನಾಡುತ್ತೇನೆ. ಕನ್ನಡ ಹೋರಾಟಗಾರರಿಗೆ ಏನು ಸಹಾಯ ಬೇಕೋ ಎಲ್ಲ ಮಾಡುತ್ತೇನೆ. ಇಂದು ನಾನು ಸಂತೋಷವಾಗಿದ್ದೇನೆ. ಹಣ, ಹೆಸರು ಎಲ್ಲ ದೊರೆತಿದೆ ಆದರೆ ನಾನು ಕಂಡಕ್ಟರ್ ಆಗಿದ್ದೆ ಎಂಬುದನ್ನು ಇನ್ನೂ ಮರೆತಿಲ್ಲ. ಸುಮಾರು ಜನ ನನ್ನನ್ನು ಅಹಂಕಾರಿ ಎನ್ನುತ್ತಾರೆ. ನಾನು ದುರಂಹಂಕಾರಿ ಖಂಡಿತ ಅಲ್ಲ ಎಂದು ನುಡಿದರು.ಅವರು ತಮ್ಮ ಮಾತಿನ ಮಧ್ಯೆ ಕನ್ನಡ ರಕ್ಷಣಾ ವೇದಿಕೆಯ ರಾಜ್ಯಾಧ್ಯಕ್ಷ ಟಿ.ಎ.ನಾರಾಯನಗೌಡ, ಪ್ರವೀಣ್ ಕುಮಾರ್ ಶೆಟ್ಟಿ, ವಾಟಾಳ್ ನಾಗರಾಜ್ ಹೆಸರುಗಳನ್ನು ಪ್ರಸ್ತಾಪಿಸಿ ಕನ್ನಡ ಹೋರಾಟಗಾರರೆಲ್ಲರು ಚಿತ್ರ ಬಿಡುಗಡೆಗೆ ಅವಕಾಶ ಮಾಡಿಕೊಡಬೇಕು ಎಂದು ವಿನಂತಿಸಿಕೊಂಡರು.


அடடா! புரியவில்லையா?.தமிழில் படிக்க இன்னும் கீழே போகவும்!

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
''தப்பாகிருவுது ஸஹஜ, முந்தெ தப்பாகதந்தெ நோடிகொள்ளுத்தேனெ. முந்தெ தப்பு மாடுவுதில்ல. கன்னடிகர பக்கெ நனகெ அபார கௌரவ இதெ. தயவிட்டு குஸேலன் பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு'' எந்து நட ரஜனிகாந்த் பரோக்ஷவாகி டிவி 9 ஸுத்தி வாஹினி மூலக க்ஷமெ கோரித்தாரெ.
ஹைதராபாத்னல்லி மாதனாடுத்தித்த அவரு, 'கன்னடத மக்களிந்த தொட்ட பாட கலிதித்தேனெ. நானு ஒதெயிரி எந்து ஹேளித்து புண்டு போகரிகளிகெ, ஸார்வஜனிக ஆஸ்தி பாஸ்தியன்னு நாஷ மாடுவவரிகெ ஹொரது கன்னட ஹோராடகாரரன்னு உத்தேஷிஸி அல்ல. ஒள்ளெயவரிகெ தலெபாகுத்தேனெ. புண்டுபோகரிகளிகெ யாகெ தலெபாகபேகு எந்து ப்ரஷ்னிஸிதரு.
நானு ராஜகாரணி கண்டித அல்ல. ஹீகாகி மாதாடுவாக தப்பாகிதெ. முந்தெ மாதாடுவாக விசாரமாடி மாதனாடுத்தேனெ. கன்னட ஹோராடகாரரிகெ ஏனு ஸஹாய பேகோ எல்ல மாடுத்தேனெ. இந்து நானு ஸந்தோஷவாகித்தேனெ. ஹண, ஹெஸரு எல்ல தொரெதிதெ ஆதரெ நானு கண்டக்டர் ஆகித்தெ எம்புதன்னு இன்னூ மரெதில்ல. ஸுமாரு ஜன நன்னன்னு அஹங்காரி என்னுத்தாரெ. நானு துரம்ஹங்காரி கண்டித அல்ல எந்து நுடிதரு.
அவரு தம்ம மாதின மத்யெ கன்னட ரக்ஷணா வேதிகெய ராஜ்யாத்யக்ஷ டி.எ.னாராயனகௌட, ப்ரவீண் குமார் ஷெட்டி, வாடாள் நாகராஜ் ஹெஸருகளன்னு ப்ரஸ்தாபிஸி கன்னட ஹோராடகாரரெல்லரு சித்ர பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு எந்து வினந்திஸிகொண்டரு.


இது எப்படி இருக்கு!
நன்றி:thatskannada