குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 3

Posted on Thursday, August 21, 2008 by நல்லதந்தி

முதற்பகுதி: பகுதி-ஒன்று

இரண்டாம்பகுதி: பகுதி-இரண்டு


கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்- அத்தியாயம் - இரண்டு.


இவ்விதமாக சத்தியமங்கலத்திற்கு முதல் முதல் வந்தவர்களிலே எனக்கு ஏழாம் தலைமுறை பாட்டனான கோவிந்தப் பட்டர் ஒருவர்.அக்காலத்தில் அவருக்கு வயது 20.அவர் காசிப்பட்டர் குமாரர்.அவர் சத்தியமங்கலத்தில் குப்பா வாத்தியார் கன்னிகையை விவாகம் செய்து கொண்டவர்.அவர் வெங்கிடாசலபதியின் அனுக்கிரகத்தால்,புத்திர சந்தானம் பெற்று ஜேஷ்ட குமாரனுக்கு வெங்கிடபதி என்று நாமகரணம் செய்தார்.இந்த வெங்கிடபதி அய்யர் மகாபுத்திமான் ஆனபடியால்,சத்தியமங்கலம் அரண்மணைச் சர்வாதிகாரியின் கச்சேரியில் ஒரு உத்தியோகத்தில் அமர்ந்தார்.

இவர் காலஞ் செல்லவே இவருடைய உத்தியோகத்தில் இவருடைய நான்காம் குமாரரான நாராயண அய்யர் நியமனம் பெற்றார்.இதற்கு சமீப காலத்தில் திருமலை நாயக்கன் மதுரை அரசனானான்.அவன் தன்னுடைய மருமகனான அளகாத்திரி நாயக்கனை சத்தியமங்கலத்திற்கு ராஜாவாக நியமித்து,நாராயணையர் யுத்த காலத்தில் சர்வாதிகார உத்தியோகத்தை நிர்வகிக்கத் தகுந்தவர் என்று நேரில் தெரிந்து அவரைச் சர்வாதிகாரியாக நியமித்தான்.

நாராயணையருக்குப் பிறகு அவருடைய ஜேஷ்ட குமாரராகிய வெங்கடபதி அய்யர் சத்தியமங்கலம் சர்வாதியாக நியமனம் பெற்றார்.மதுரைத் துரைத்தனத்தின் பலம் நாளுக்கு நாள் க்ஷீணித்துக் கொண்டு வந்து மைசூர் துரைத்தனத்தார் பலம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து கொண்டு வந்தது.

கடைசியாக,மைசூர் அரசனான சிக்க தேவராஜ உடையார் மலைக்கணவாய் களின் அடிவாரங்களில் உள்ள சத்தியமங்கலம் முதலான கோட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கவர்ந்து கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து அந்த நாட்டை ஆளுவதற்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தி சர்வாதிகார உத்தியோகத்தில் அனுபவமுள்ள வெங்கடபதி அய்யரையே சர்வாதியாக நியமித்தான்.

அரசாட்சி மாறியதனால்,ராஜ்ஜியத்தின் வரும்படி குறைந்து போனது.நாட்டில் கூட்டக் கள்வரின் உபத்திரவம் மேலிட்டது.வெங்கடபதி அய்யர் வரிகள் கிரமமாக வசூலாவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து,சத்தியமங்கலம் நாட்டின் வரும்படி முன்னிலும் அதிகமாகும்படி செய்தார்.கூட்டக் கள்வர்களை எல்லாம் பிடித்துத் தண்டணைக்குட்படுத்தி ஜனங்கள் சமாதனமாய் வாழ்வதற்கு வேண்டிய வழி துறைகளையெல்லாம் ஏற்படுத்தியதினாலே அவர் சத்தியமங்கலம் ராஜாவிற்கு முக்கிய சிநேகிதர் ஆனார்.

அதற்கு பிறகு,அவருடைய இளைய சகோதரன் ராமசுவாமய்யர் சர்வாதிகாரியாக நியமனம் பெற்றார்.அவர் காலத்திற்குப் பிறகு கோவிந்த பட்டருடைய கடைசிக் குமாரன் விசுவபதி அய்யருக்குக் கனிஷ்ட புத்திர சந்ததியிலே பேரனான விஸ்வபதி அய்யர் சர்வாதிகாரியானார்.இவருக்குப் பிறகு சர்வாதிகார உத்தியோகம் கோவிந்த பட்டருடைய குடும்பத்தை விட்டு விலகியது.இதற்கு சமீப காலத்தில் மைசூர் ராஜ்ஜியம் ஹைதர் நாவாபுடைய ஆட்சிக்குள்ளானது.

மேல கண்டவர் சர்வாதிகாரம் செய்யும் காலத்தில் கோட்டை வீரன்பாளையம் அக்கிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரசாமி தேவாலயத்திற்கு மேற்கு; நடு வீதிக்கும் வடக்கு; வடக்கு வீதிக்கு மத்தியில் கட்டப் பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில்,அவர்கள் ஏக குடும்பமாக வாசம் செய்து வந்தார்கள்......

தொடர்ச்சி பிறகு....

2 Responses to "குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 3":

Anonymous says:

ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Anonymous says:

sekkiram mutikka mutiyalaiya?