அமாவாசை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் கையாலாகாத்தனமும்,காவாலித்தனமும்!

Posted on Saturday, August 30, 2008 by நல்லதந்தி

வருங்காலத்தில் மின்சார சேமிப்பு!


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் போவதைப் பார்த்திருப்பீர்கள்.அல்லது சில சமயங்களில்,மிகுந்த மின்பற்றாக் குறையின் காரணமாக சில நாட்களில் இரண்டுமணிநேரம்,மூன்று மணி நேரம் மின்வெட்டை அனுபவித்திருப்போம்.ஆனால் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்க்கும் மேல் மின் வெட்டு ஏற்படுவதை வாரக் கணக்காக அனுபவித்து இருக்கிறீர்களா?.




சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிக அளவில் மின்வெட்டு இருந்து வருகிறது!.அதன் உச்ச பட்சமாக கடந்த 6 தினங்களாக நடந்து வரும் மின்வெட்டுக் கூத்தின் காட்சி நேரம் கீழே!



அதிகாலை 12 முதல் 2 வரை (2 மணி நேரம்)

அதிகாலை 4 முதல் 5 வரை (1 மணி நேரம்)
காலை 7 முதல் 8 வரை (1 மணி நேரம்)

காலை 9 முதல் 10 வரை(1 மணி நேரம்)

காலை 10 முதல் 12 வரை (சில இடங்களில்)

மதியம் 2 முதல் 5 வரை(3 மணி நேரம்)

மாலை 6 முதல் 9 வரை(3 மணி நேரம்)

இரவு 10 முதல் 11 வரை (1 மணி நேரம்)


குறிப்பு: இந்த பட்டியல் மிகைப் படுத்தி எழுதப் பட்டதல்ல!.100% அக்மார்க் உண்மை!


ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்வெட்டை அமுலுக்கு கொண்டு வந்த அற்புத ஆட்சியை எந்த மாநிலத்திலாவது பார்க்கமுடியுமா?.

அமாவாசை ஆற்காடு வீராசாமி இப்போது தன் மனைவியை எந்த மாநிலத்திற்கு அனுப்பி,அந்த மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மின் வெட்டு அதிகம் என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லுவார் என்று தெரியவில்லை!.

இந்த பக்கம் கலைஞர் கருணாநிதி பல்லுகுத்திக் கொண்டே இன்னிக்கு எந்த டான்ஸ் பாக்கலாம்,எந்த சினிமா விழாவுக்குப் போனால் கவர்ச்சி டான்ஸ்
காட்டுவார்கள்.அடடா இன்னிக்கு எந்த விழாவும் இல்லையா?.அப்போ மானாட மயிலாட தான் பாக்கணுமா?.என்று மக்களைப் பற்றிய இந்த ஒரே கவலையில் இருக்கிறார்.


தமிழ் நாட்டின் சிறு தொழில்களும்,குறுந்தொழில்களும் இந்த 9 மாதங்களாக மின் வெட்டால் நசிந்து விட்டன. கலைஞர் சென்னைக்கும் அதைச் சுற்றியுள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கும்,ஐ.டி கம்பனிகளுக்கும் மின்சாரம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

தமிழக மக்களின் தொழில்களை அழித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளைச் செழிக்க வைப்பதுதான்,தமிழர் நலன் காக்கும் அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின்
வேலையா? .

அமாவாசை அமைச்சரின் பொன்மொழி:
ஒரு மணிநேர மின்சாரச்சிக்கனம்,இரண்டு மணிநேர மின் உற்பத்திக்குச் சமம்!
இப்படித்தான் மின் உற்பத்தியைப் பெருக்குகிறார் போலிருக்கிறது.நாம் நிஜமாகவே உற்பத்தியைப் பெருக்குவார்கள் என்று நினைத்தோம்!.


அமாவாசை ஆற்காடுவீராசாமியின் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய உளறல்கள்!


மே 06,2008

செங்கோட்டையன் -புதிய தொழிற்சாலைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுத்து விட்டு ஏற்கனவே இருக்கிற தொழிற்சாலைகளுக்கு மின்சார சப்ளையை நிறுத்தியதால், அந்த தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது தொகுதியில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விஸ்கோஸ் தொழிற்சாலை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை என வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நீங்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆற்காடு வீராசாமி: விசைத்தறிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு ஆயிரம் மெகாவாட்டில் இருந்து ஆயிரத்து 400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் வாங்கும் 600 மெகாவாட் மின்சாரத்தில் 200 மெகாவாட்டை குறைத்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மின்தடை என்ற பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

செங்கோட்டையன் - அ.தி.மு.க: மின்வெட்டு இல்லையென்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுமாறு மின்வாரியம் சர்க்குலர் வெளியிட்டுள்ளது அமைச்சருக்கு தெரியுமா? அது தவிர பழுது பார்ப்பு என்ற பெயரில் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஆற்காடு வீராசாமி: இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களும் மின்சாரத்தை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், விசைத்தறிகளுக்கு இவற்றில் இருந்து விலக்கு தரப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகின்றன. உங்கள் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்களை பார்த்து இதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

மே மாதம்
""வரும் 15ம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கான மின்சார விடுமுறை ரத்தாகிறது. அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடே இருக்காது,'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். திருச்சியில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.

ஜூலை 19,2008

"சென்னை மாநகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தென்மேற்கு பருவமழை பெய்து, நீர் நிலைகளில் போதுமான அளவு இருப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும்' என்று மின்துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நிதித்துறைச் செயலர், தொழில் துறைச் செயலர், எரிசக்தித்துறைச் செயலர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. நாம் எதிர் பார்த்த அளவுக்கு காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை.காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.

மழை பெய்யாததால் நீர் மின் சாரம் அதிகமாக கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரத்தில் 60 சதவீதம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.அண்டை மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. கேரளா நம்மிடம் நான்கு டி.எம்.சி., தண்ணீர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வாரம் ஒரு நாள் விடுமுறை திட் டம் பற்றி விவாதிக்கப் பட்டது.

இதன்படி, தமிழகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்து, வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே 15 வரை இந்த திட்டத்தை அமல்படுத்திய போது அளிக்கப் பட்ட வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கேட்டனர். அந்த வரி விலக்கு மேலும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இது தவிர, பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்கப் படும்.மேலும், டீசலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை வைத்தனர்.

இது பற்றி விவாதித்து இறுதியில், இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பை, 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை தொழிற்சாலைகளும் ஈடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும். தமிழகத்தில் அறிவிக் கப்படாத மின் வெட்டு இருக்காது.

வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தின் மூலம் 375 முதல் 400 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறிப் பிட்ட நேரம் மட்டும் மின் தடை செய்வதன் மூலம் 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். சென்னையை எட்டு பகுதிகளாகப் பிரித்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை இருக்கும்.

கிராமப்புறங்களில் ஏற்படும் அதிக மின் தடையை சரி செய்யத் தான் இந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதிகபட்சம் வாரத் துக்கு நான்கு நாட்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரமும், இரண்டு நாட்கள் மட்டும் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப் படும்.தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்து, நீர்த்தேக்கங்களில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு வரும் வரை இந்த நிலைமை இருக்கும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக மின் தடை கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அதற்கான மின் வெட்டு இருக்காது. மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால் உற் பத்திப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஐந்தாயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தீட்டி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடைந்து நான்காயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆகஸ்ட் 11

சென்னையில் ஒரு மணி நேரமும், வெளிமாவட்டங்களில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுத் தப்பட்டது.இதற்கு எதிர்ப்பு கிளம் பியதும் அது ரத்து செய்யப் பட்டுவிட்டது.
டில்லியில் எட்டு மணிநேரம் மின்வெட்டும், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாடு முழுவதும் மின்பற்றாக்குறை இருக்கிறது. விவசாயிகள், சிறு தொழிற்சாலைகள் என தமிழகத்தில் ஆறு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு நாள் விடுமுறை விடப்படுகிறது. காற்று வீசி, மழைப் பெய்தால் கூடுதல் மின்சாரம் கிடைத்தும் அதுவும் ரத்து செய்யப்படும். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கிவிடும்.

15 Responses to "அமாவாசை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் கையாலாகாத்தனமும்,காவாலித்தனமும்!":

Anonymous says:

கடலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் போகிறோம்.வருகிற மாதம் கடல் அலைகள் அதிகமாக வரத்தொடங்கியவுன் மின்சார உற்பத்தி ஆரம்பமாகிவிடும்.
வருகிற மாதம் முதல் மின்வெட்டு இருக்காது.

Anonymous says:

காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் போகிறோம்.வருகிற மாதம் முதல் தென்மேற்கு பருவகாற்று அதிகமாக வரத்தொடங்கியவுன் மின்சார உற்பத்தி ஆரம்பமாகிவிடும்.
வருகிற மாதம் முதல் மின்வெட்டு இருக்காது.


ஜனவரி முதல் வடகிழக்கு பருவகாற்றில் இன்னும் ௨000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தயாரிக்க முடியும் என்பதால் இனி மின் தட்டுப்பாட்டை வேறு மாநிலங்களில் தான் காண முடியும்.

ரவி says:

வெரிகுட்.டெம்ப்ளேட் மாத்திட்டீங்க போலிருக்கு.

இதில் பின்னூட்டம் மற்றவர்களுக்கு ஓப்பன் ஆகுற மாதிரி அதே பக்கத்தில் (வலது பக்கம்) செய்ய முயலுங்கள்

Anonymous says:

:)))))))))))
:o

Anonymous says:

மீண்டும் பின்னூட்ட பெட்டி பிரச்சினை...

கிரி Blogகில் உள்ள மாதிரி தமிழ்மண பட்டையை கீழே போடவும். உங்கள் Blog ஸ்பீட் ஆக Load ஆகும்.

Anonymous says:

இதுக்கு நீங்க பேசாம அந்தாளை செருப்பாலேயே அடிச்சிருக்காலாம்!

Anonymous says:

தமிழகத்தில் காற்று, மழை, புயல் எல்லாம் ஒன்றாக அடித்தால் மட்டும் தடை இல்லா ஏற்பாடு செய்வார் போலும் வீராசாமி

Anonymous says:

:)

நல்லதந்தி says:

//செந்தழல் ரவி said...
வெரிகுட்.டெம்ப்ளேட் மாத்திட்டீங்க போலிருக்கு.

இதில் பின்னூட்டம் மற்றவர்களுக்கு ஓப்பன் ஆகுற மாதிரி அதே பக்கத்தில் (வலது பக்கம்) செய்ய முயலுங்கள்//

ஐயா! காமெடி கீமெடி பண்ணலீங்களே! :)
இதுக்க்கே தாவுதீந்த மாதிரி இருக்கு!

நல்லதந்தி says:

//Anonymous said...
மீண்டும் பின்னூட்ட பெட்டி பிரச்சினை...

கிரி Blogகில் உள்ள மாதிரி தமிழ்மண பட்டையை கீழே போடவும். உங்கள் Blog ஸ்பீட் ஆக Load ஆகும்.
//
நேத்திலிருந்து இந்த சைட்டை என்னாலையே பாக்க முடியலை.சுத்தமா திறக்க முடியலை..இப்போ நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருக்கேன்.நல்லாத்தான் இருக்கு!..
ரொம்ப நன்றி நண்பரே! :)

Anonymous says:

அமாவாசை என்ற அடைமொழி அருமைங்க!. மின்சாரதுறை ஏன் முன்பே இந்த பிரச்சினையை கணிக்க முடியாமல் போனது? இந்த அமாவாசை அமைச்சருக்கு பதில் வேறொருவர் இருந்திருந்தால் என்ன பண்ணியிருக்க முடியும்?

வால்பையன் says:

உள்நாட்டிலேயே மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும் பொது இன்னும் வெளி மாநிலங்களுக்கு மின்சார விற்பனை ஏன் செய்கிறது.

அது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் என்கிறார்களே உண்மையா

நல்லதந்தி says:

//Anonymous
September 1, 2008 12:14 PM
அமாவாசை என்ற அடைமொழி அருமைங்க!. மின்சாரதுறை ஏன் முன்பே இந்த பிரச்சினையை கணிக்க முடியாமல் போனது? இந்த அமாவாசை அமைச்சருக்கு பதில் வேறொருவர் இருந்திருந்தால் என்ன பண்ணியிருக்க முடியும்?///
இந்த அமாவாசை அமைச்சர் எந்த துறையில் பொறுப்பேற்றாலும் அந்தத் துறையை ஓரு வழி பண்ணாமல் போகமாட்டார்.சென்ற முறை தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு இலாகா மாற்றப் பட்டார்.இருந்தாலும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.கலைஞருக்கும் இவருக்கும் இடையில் ஏதோ ஓரு மிகப் பெரிய இரகசியம் இருக்க்கும் போலிருக்கு!

நல்லதந்தி says:

//உள்நாட்டிலேயே மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும் பொது இன்னும் வெளி மாநிலங்களுக்கு மின்சார விற்பனை ஏன் செய்கிறது.

அது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் என்கிறார்களே உண்மையா//
நெய்வேலியைப் பொறுத்தவரை அது மத்திய அரசு நிறுவனம்.அதற்க்கும் தமிழ அரசுக்கும் சம்பந்தமில்லை.என்வே அங்கு இருந்து மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் செல்வதற்கும் ஜெயலலிதா விற்கும் சம்பந்தம் கிடையாது!

Anonymous says:

useless fellow