இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி

காமெடிக்கலைஞர் கருணாநிதி தமிழக மக்களுக்கு எப்பவுமே தன்னால முடிஞ்ச வஞ்சனையில்லாம பல கூத்துக்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறார்.என்றாலும் இந்த மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல் அறிக்கை தமாஷ் நிறைய வித்தியாசமானது.கலைஞர் செய்கிற நகைச்சுவைகள் பொதுவாக மற்றவரைத் துன்புறித்தியே தீரும்.

ஒருவன் அருகே வாழைப்பழத்தோலை போட்டு விட்டு ,அதனால் அவன் வழுக்கி விழும்போது சிரிக்கிற தமாஷ் இரகங்கள்.அதாவது மற்றவன் துன்பத்தில் இன்பம் காண்கின்ற வகைத் தமாஷூக்கள்.ஆனால்,இந்த இடைத்தேர்தலுக்காக அவர் விட்ட அறிக்கைத் தமாஷ் இந்த வகையைச் சேர்ந்ததல்ல.அது ஒரு தமிழக மக்கள் துன்பம் இல்லாமல் இரசிக்கக் கூடிய நகைச்சுவை வகையறாக்களைச் சேர்ந்தது.

அதாவது,எம்ஜிஆர் இருந்த காலத்தில் தமிழா!.என்னை வெட்டிப் போட்டாலும் முட்டி போட்டுக் கெஞ்சுவேன் .கட்டிப் போட்டாலும் கட்டு மரமாவேன் என்று கதறிப் பினாத்திய இரகம்.
அதிலும் தேர்தலை நினைத்துக் கதறி அழும் கட்டத்தில் பினாத்தும் பினாத்தல்கள் ஏ ஒன் இரகம்.சிவாஜி அழுகையையும் அந்த அழுகைப் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாதே என்று அழுகையை மென்று விழுங்கி விட்டு சிரிப்பது போல நடிக்கும் காட்சிக்கு இணையானது ஏன் அதை விட மேலானது. தேர்தல் ஏன் வந்தது(ஏன் வந்துத் தொலைந்தது!) என்று அவர் தலையில் அடித்துக் கொண்டே, கொடுக்கும் விளக்கங்கள் திமுக தொண்டர்களை இப்போதே உதறவைக்கும்.

இந்த அறிக்கையில் அவர் திருப்பத்தூர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் காங்கிரஸிற்க்கு ஆதரவு தந்த விஷயத்தில் அதிகம் புலம்பியதால் இந்தக் கட்டுரை.மற்ற தமாஷ்களுக்கு உள்ளே நான் போகவில்லை.




திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.


ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

அடடா மதிமுகாவின் மேல் கலைஞருக்கு என்ன ஒரு கரிசனம்.அய்யய்யோ மதிமுகாவின் தொகுதியை ஜெயலலிதா அநியாயமாகப் பிடிங்கிக் கொள்கிறாரே என்று கலைஞர் கதறும் பாணியே தனி.

திருப்பத்தூர் தேர்தலின் போது என்ன நடந்தது.காலியாகும் உறுப்பினர் தொகுதிக்கு ஏற்கனவே போட்டியிட்ட கட்சியே போட்டியிட வேண்டுமாம் ,இந்தக் கொள்கையை எம்.ஜி.ஆர் வகுத்தாராம்.உண்மையில் இந்த மரபு கூட்டணிக்கட்சிகளிடையே எம்.ஜி.ஆருக்கு முன்பே ஒரு மரபாகவே இருந்தது.ஆனால் அப்போது அதிமுக.காங்கிரஸ் கூட்டணி இல்லாத காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த சமயத்தில் எதிர் கட்சியான காங்கிரஸிற்க்கு எம்.ஜி.ஆர் ஆதரவு தந்ததற்கான காரணம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு ,ஏற்கனவே கலைஞரின் மேல் கடுப்பாக இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்ரமணியம் சட்டசபைத் தேர்தலோடு திமுக -காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டது என்று பேச அந்த இடைத்தேர்தலிலும்,இன்றைய திருமங்கலம் இடைத்தேர்தலில் கலைஞர் தடுமாறுவதைப் போல அன்றும் தடுமாறினார்.

தேர்தலில் காங்கிரஸிற்க்கு ஆதரவு ஆனால் கலைஞர் பிரச்சாரத்திற்க்குப் போகவில்லை.ஆனால் காங்கிரஸிற்குத் தீடீர் ஆதரவு தந்த எம்.ஜி.ஆர் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்க்கு வேலை செய்யாமல் ஜனதாவிற்கு வேலை செய்து தங்களுக்கு மிகவும் பழக்கமான, கூட இருந்தே கழுத்தறுக்கும்  உள்ளடி வேலைகள் செய்தனர்.( பா.ம.க கவனிக்க ).அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட திரு.அருணகிரி வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தலைவர்களைக் கூடப் பார்க்காமல் முதலில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத்தான் ஆசி பெற்றார்.திமுக தலைவர்களைப் பார்க்கமாட்டேன் என்று அறிக்கையே விட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி பணால் ஆனது.எம்.ஜி.ஆரின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

எனவே திருப்பத்தூர் தேர்தலில்,எம்.ஜி.ஆர் காங்கிரஸை ஆதரித்ததன் காரணம் முழுக்க முழுக்க திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கத்தான்.


கலைஞரின் அறிக்கையை முழுமையாகப் படித்து சிரிக்க விரும்புகிறவர்களுக்கு.கீழே அவரது கட்டுரை.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.


இப்போது தேர்தல் எதற்கு?:



மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.


நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.


அதற்காக இப்படி `விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.



ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:



இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.


உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.


நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.



உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.


ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.



ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.



மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட `எஸ்மா', `டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;


அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.


அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!

Posted on by நல்லதந்தி



ஆதரவற்று ரயில் நிலையத்தில் தவித்த ஐந்து வயது இந்துக்குழந்தையை வளர்த்து வந்தார் முஸ்லிம் மேஜிக் நிபுணர்; 13 ஆண்டுகள் கழித்து திடீரென போலீஸ் தலையிட்டு தந்தை - மகளை பிரித்ததும், கோர்ட்டுக்கு போய் போராடி மீட்டார்!இரு வேறு பட்ட மதமாக இருந்தாலும், மனம் குறுக்கே வரும் போது, மதம் பெரிய விஷயமல்ல என்பதை இந்த தந்தை - மகள் நிரூபித்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காத்ரி; மேஜிக் நிபுணர். மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி யில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்தார். ஊர் திரும்புவதற்காக ரயிலில் ஏறும் போது, பிளாட்பாரத்தில், ஒரு குழந்தை அழுதபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தது.அரை மணி நேரமாக அதை கண்காணித்து வந்த காத்ரிக்கு அதை விட்டுப்போக மனதில்லை. அதன் அருகே சென்று, குழந்தையிடம் விசாரித்தார். அதற்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை.


யாரோ தன்னை பிளாட்பாரத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டதாக கூறியது.எல்லா பிளாட்பாரங்களிலும் சென்று தேடியும் குழந்தையுடன் வந்தவர்களை காணவில்லை. அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை காத்ரிக்கு. தன்னுடன், ரயிலில் அழைத்துச் சென்றார். பெயரை கேட்டபோது, வர்ஷா என்று கூறியது; எல்லாரும் தன்னை முன்னி என்று செல்லமாக அழைப்பர் என்றும் கூறியது. இந்த சம்பவம் நடந்தது 1995ம் ஆண்டில்.


குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள தன்காரியா என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். வர்ஷாவை அவர் தன் மகளை போல வளர்த்துவந்தார். பின், அவர்கள், ஆமதாபாத் மாவட்டம், ரமோல் என்ற இடத்தில் குடியேறினர்.தன்காரியா கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வர்ஷா வளர்ப்பு மகள் என்பது தெரியும். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் வர்ஷாவுடன் பகக்கத்து வீட்டுக் குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் பழகி வந்தனர்.


இந்நிலையில், சில மாதங்கள் முன், அக்கா,தம்பி இருவரும் தங்கள் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள காத்ரி வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் விஷயத்தை கேள்விப்பட்ட காத்ரி, வீட்டில் தங்கிக் கொள்ளச்சொன்னார். அவர்களை சமாதானப்படுத்தி அப்பாவிடம் ஒப்ப டைக்க முடிவு செய்தார். இதற்குள், அவர்களின் அப்பா, தன் மகள், மகன் இருவரையும் காத்ரி தான் கடத்தி வைத்திருக்கிறார்; அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீசில் புகார் செய்தார்.


காத்ரி வீட்டுக்கு வந்த போலீஸ், அங்கிருந்த அக்கா, தம்பியை மீட்டு, அவர்களின் பெற் றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்து, அவள் சொந்த மகள் இல்லை என்று தெரிந்ததும், அவளை அரசு காப்பகத்தில் சேர்த்து , காத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் காத்ரி வழக்கு போட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், வளர்ப்பு மகளாக வர்ஷா மீது உரிமை கோர முடியாது என்று கூறி அவர் மனுவை கோர்ட் நிராகரித்தது.


செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் காத்ரி. அவர் மனுவை ஏற்ற கோர்ட்," இத்தனை ஆண்டுகள் காத்ரியிடம் வளர்ந்துவந்த வர்ஷாவை அவரிடம் ஒப்படைத்து விடலாம்; இதற்கான உரிய ஆவணங்களை அவர் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் காத்ரி, - வர்ஷா ஒன்று சேர்ந்தனர். "என் பாச மகள் கிடைத்து விட்டாள்; அது போதும்' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் காத்ரி.


நன்றி: தினமலர்

பிராமணர்கள் கோழைகள் இல்லை!

Posted on Sunday, December 14, 2008 by நல்லதந்தி




ஜெமினிகணேசனைப் பொறுத்த வரையில் அவர் “சாம்பார்” என்ற ஒருஅடை மொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.அது அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனபதால் ,அவ்ரைக் கீழ்மைப் படுத்த இருக்கலாம்.ஆனால் சாம்பார் என்ற பெயர் வந்த காரணம் வேறு என்று நான் இதே இணையத்தில் படித்திருக்கிறேன்.அது ஏதோ ஒரு திரைப் படத்தின் மூலமாக வந்தது என அறிகிறேன்.ஆனால் அது கோழை என்று அடைமொழியாகி அவர் சார்ந்த வகுப்பை கிண்டலடிக்க தி.க.,திமுக, கும்பல்களுக்கு உதவின.நிஜத்தில் அவர் அன்றைய காலத்தில் இருந்த மற்ற நாயக நடிகர்களை விட அதி தைரியசாலி என்பதே உண்மை.

விஜயா-வாஹினி புரெடெக்‌ஷன் சார்பில் ,அவர்கள் தயாரித்த இரு மொழி படத்தில் ஹீரோ மாடியில் இருந்து குதிக்கும் காட்சி ஒன்றுண்டு.அந்தப் படத்தில் தமிழில் நாயகனாக நடித்த ஜெமினி கணேசன்.இருபதடி உயரத்தில் இருந்து அநாவசியமாகக் குதித்தார்.அதன் தெலுங்குப் பதிப்பில் நடித்த என்.டி.ராமராவ் சிறிது தயக்கப் படவே அவருக்குப் பதிலாக ஜெமினி கணேசன் மாடியில் இருந்து குதித்து டூப்பாக நடித்தார்.ஆக திரையுலகில் டூப்பாக ஒரு பிரபநடிகருக்கு மற்றொரு பிரபலம் நடித்தது.அதுவே முதல் முறை.ஒருவேளை கடைசி முறையாகவும் இருக்கலாம்.அடுத்த மேட்டர்.........................

ஜூபிடர் பிக்சர்ஸின் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள’ படத்திற்கென ஒரு போர்காட்சி நெப்டியூனில் படமாகி வந்தது.அப்பொழுது, நட்சத்திரங்களில் மிகவும் அதிக நெஞ்சுத் துணிவுள்ள பேர்வழி யார் என்பதைப் பற்றி கேள்வி வந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரைச் சொன்னார்கள்.அந்த சமயம் அங்கே இருந்த ஒர் இளம் நாடிகர் புன் சிரிப்புடன்,” நான் கூறட்டுமா?,அந்த துணிச்சல் நடிகர் யாறென்று!” என்று கூறி விட்டு “ஜெமினி கணெசனின் துணிச்சல் யாருக்கும் வராது,” என்று சொல்லி பின் கண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சியை விவரித்தார்.

புதுக்கோட்டை ராஜவம்சத்தைச் சேர்ந்த நடுத்துரை என்பவர் அப்போது தங்கியிருந்தார்.அவர் ஜெமினிகணேசனின் நெருங்கிய நண்பர்.தமது நண்பரைப் பார்க்க போயிருந்தார். நடுத்துரை பேச்சோடு பேச்சாக, ” நீங்கள் சினிமாவில் பல துணிகரச் செயல்கள் செய்வதல்லாம் வெறும் நடிப்புத்தானே?,” என்று கேட்டார்.

“நிஜமாய் எனக்கு மனோ தைரியம் உண்டா என்று பார்க்க ஒரு பரிட்சை வேண்டுமானால் வையுங்களேன்” என்றார் ஜெமினி கணேசன்.நடுத்துரை உடனடியாக ஒரு பரிட்சை வைத்து விட்டார்.

ஜெமினிகணேசனை உட்கார வைத்துஅவர் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தார் நடுத்துரை.நண்பர் நடுத்துரை குறி பார்த்து சுடுவதில் சூரர்.தொலைவில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த ஜெமினி கணெசனின் உதட்டிலிருந்த சிகரெட்டைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார்.தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!

Posted on Friday, December 12, 2008 by நல்லதந்தி



ஊட்டி,குன்னூர் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளைப் படமாக்க அதிகாரிகளின் அனுமதி தேவை.அனுமதியை வாங்க தேவர் கையாளும் முறை மிகுந்த ரசமாக இருக்கும்.

முதலில் தேவர் அதிகாரியிடம் போவார்.(தொடர்ந்து தேவர் அப்பகுதிகளிலேயே படங்கள் தயாரித்து வருவதால் அனேகமாக அதிகாரிகள் அனைவரும் அவருக்குத் தெரிந்தவர்களே.

“முருகா” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு,அதிகாரியினுடைய காலடியில் கீழே உட்கார்ந்து விடுவார்.”என்னங்க இது,எழுந்திருந்து மேலே உட்காருங்க!” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா!’ என்று கூறித் த்ம்மை தாம் யார்,வந்த விஷயம் என்ன என்ற விவரங்களைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்.

ஒருக்கால் அதிகாரி,”அது மிகவும் ஆபத்தான இடம் அனுமதி அளிக்க இயலாது” என்று மறுத்து விட்டால்,தேவர் விட்டு விடமாட்டார்.

மறுநாள் நேரே அதிகாரியின் வீட்டிற்குப் போய்விடுவார்.அதிகாரியின் மனைவியைப் போய் பார்ப்பார்.”முருகா!” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்?” என்று பாவத்துடன் சொல்வார்.அதிகாரியின் மனைவி சுவாரஸ்யமாகக் கேட்டு, “ச்சூ...ச்சூ..” என்று சூள் கொட்டுவார்.அந்த நேரம் பார்த்து, “இந்த மாதிரியான கட்டத்தைப் படமாக்க அந்தக் காடுதான் சரியான இடம்.உங்க வீட்டுக்காரர் அனுமதி மறுக்கிறாரே” என்று முடிப்பார்.

அவ்வளவுதான் அந்த அம்மாள் சிபாரிசில் அதிகாரியின் அனுமதியுடன் தம்பதிகளுக்கு ஒரு “முருகா” போட்டு விட்டு வெற்றியுடன் திரும்புவார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு படத்துக்கு குந்தா அணைக்கட்டுக்கருகில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.கதாநாயகன் கோஷ்டியுடன்,எதிரிகளின் நூற்றுக் கணக்கான வாள் வீரர்கள் மோதும் காட்சி அது.சிப்பாய்களுக்கான உடைகளையெல்லாம் தயார் படுத்தி விட்டனர்.ஆனால் சிப்பாய்களாக வேஷம் போட ஆட்களைத்தான் காணோம்.

தேவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியாமலேயே இருந்தது.ஆனால் கூட வந்த நடிகர்கள் அனைவரும் ஆர்ச்சரியப் படும் படி சிப்பாய்களாக நடிக்க ஆட்களைக் கொண்டு வந்து அக்காட்சியைப் படமாக்கி விட்டார்.

அவர் எங்கிருந்து,எப்படி ஆட்களைத் தேடிப்பிடித்தார் என்பது பிறகு தெரிய வந்தது.குந்தா அணைக் கட்டு வேலையையே ஒரு நாள் நிறுத்தி விட்டார்.அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களை எல்லாம் ஒரு நாள் லீவு போட வைத்து ,அவர்களுக்குச் சிப்பாய் உடைகளை மாட்டி,கையில் கத்தியையும் கொடுத்து விட்டார்.

வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.

இவனை என்ன செய்தால் தகும்?

Posted on Thursday, December 11, 2008 by நல்லதந்தி



திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர். செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் மாடி வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.

சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி செய்தி!

மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!

Posted on Wednesday, December 10, 2008 by நல்லதந்தி

நான் பெங்களூர் போகும் போது எல்லாம் ஹொசூரைக் கடக்கும் போது “மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம்” என்று எழுதப் பட்ட பெரிய வளைவைப் 
பார்த்தவுடன் ஒரு முறையாவது நாம் போய் அவர் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.பேருந்தில் இருந்து இறங்கி நகரப்பேருந்திற்க்கு காத்திருந்து (எத்தனை மணிநேரத்துக்கொன்றோ) அதைப்பிடித்து போய்ப் பார்க்க 
வேண்டிய அசெளகர்யத்தை நினைத்தவுடன் அந்த நினைப்பு மாறிவிடும்.

இந்த முறை பெங்களூரு சென்றது டூ வீலரில் என்பதால்,கட்டாயம் தொரப்பள்ளி செல்லவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அப்போது எடுத்த சில 
படங்களைப் பதிவிடுகிறேன்.நேரம் கிடைத்தால் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

               தொப்பூர் கணவாய் காலை வேளை
                         பாலக்காடு அல்ல! பாலக்கோடு

இராயக்கோட்டை

முன்வாசல்
நுழைந்தவுடன் இராஜாஜி



புகைப்படக் காட்சிகள்



சேலத்தில் அவர் வாழ்ந்த வீடு
வெறும் மூங்கில் தடிகளால் வேயப்பட்ட வீடு
வீட்டுக்கருகில் அழகிய சிறு நதி




ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1

Posted on by நல்லதந்தி



இன்றல்லோ கம்பன்
இன்றல்லோ ராச சபைக்கு
ஏற்கு நாள் ---இன்றல்லோ
இறந்த நாள்;புன் கவிதை
பூ மடந்தை வாழ,
புவி மடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாங்கும் 
நாள்!

என்று ஒரு பாட்டு,கவிச்சக்ரவர்த்தி கம்பன் இறந்து பட்ட போது ஒரு கவிஞன் பாடியதாக வழங்கப் படுகிறது இந்தப் பாடல்.நண்பர் புதுமைப் பித்தன் இந்தப் பாடலை கம்பனேதான் பாடியிருக்கிறான் என்று சாதித்துக் கொண்டிருந்தார். சரசுவதியின் தாலிபாக்கியம் தறி பட்டுப் போயிற்று என்று கூற அவன் ஒருவனுக்குத்தான் அத்தனை தைரியமும்,துணிச்சலும்,கலைத் தேவியிடம் தோழமை உணர்ச்சியும் உண்டு என்பது அவர் வாதம்.

தனது கவிதையின் மேதாவிலாசம் உணரப்படாமல் போவதையும்,அதே வேளை வறட்டு வெள்ளைக் கவிகள் அம்பலமேறி அட்டகாசம் புரிவதையும் கம்பனும் அவன் ஆயுளிலேயே அனுபவித்தே இருப்பான்.அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே அவனே இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறான் என்று அழுத்திச் சொன்னார் புதுமைப்பித்தன்.இதை வலியுறுத்துவது போல,இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருச்சி வானொலி நிலையத்தார் புதுமைப் பித்தனுக்கு ஒரு வானொலிப் பேச்சுக்கு அழைப்பு அனுப்பினார்கள்’பாட்டு எப்படி பிறக்கிறது?’ என்பது பொருள்.

புதுமைப்பித்தன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்தப் பேச்சுக்காக எழுதிய எழுத்துப் பிரதியில் கம்பனைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைக் கூறி,வயிற்றெரிச்சலிலும் பாட்டு பிறக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அத்துடன் நில்லாமல்,கம்பனுக்கு ஏற்பட்டதைப் போல தன்னுடைய வயிற்றெரிச்ச்லையும் இப்படி ஒரு பாட்டாக அமைக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருச்சி ரேடியோ நிலையத்தில் பேசுவதற்காக இருந்த புதுமைப்பித்தன் அதற்கு முன்பே காலாவதியாகி விட்டால்?-- என்ற கேள்வியை அவரே எழுப்பிக்கொண்டு அப்போது தம் எதிரிகள் எத்தனை கும்மாளம் அடிப்பார்கள்,”பய போயித் தொலைஞ்சானா?” என்று எவ்வளவு நிம்மதியுடன் சொல்வார்கள்,புதுமைப் பித்தனின் மிதியடியின் காலடி ஓசையைக் காலனின் அடியோசையாகக் கேட்டுக் கிலியடைந்த இலக்கியப் போலிகள் எப்படி ஆனந்த பள்ளாட்டம் போடுவார்கள் என்பதையெல்லாம் கற்பித்துக் கொண்டு,அந்த வேளையில் புதுமைப் பித்தனின் நண்பர் ஒருவர் இந்த “நரியின் அம்பலக் கூத்தைக்’கண்டு வயிறெரிந்து,அந்த இலக்கியப் போலிகளைப் பார்த்துப் பாடுவதாக,புதுமைப் பித்தனே ஒரு பாட்டு பாடிவிட்டார்.

திருச்சிக்கு என்றான்;
தெந்திசைக்கே சென்று விட்டான்
கிரிச்சிச் சடாச் சத்தம்
கேட்டாயோ?-உரிச்சி
வச்ச ம்டையா வக்கு
அத்த மடையா| எச்சிற்
காசுமடையா போ
டா!

என்று பாட்டு.வயிற்றெரிச்சலின் காரணமாக வல்லின ஓசை செவிட்டில் அறைந்தாற் போல் உறைத்து விழுந்து,எதுகை மோனை இலக்கணங்கள் தட்டழிந்து தறிகெட்டுத் தாவுகின்றனவாம்!

இந்தப் பாட்டுக்கும் திருச்சிக்கும் ஏதோ தெய்வீக சம்பந்தம் உள்ள மாதிரி,புதுமைப் பித்தன் சந்தர்ப்ப பேதத்தால் திருச்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது; அவருடைய பேச்சும் ஒலிபரப்பப் படாமல் நின்று விட்டது.

புதுமைப் பித்தன் கடைசிக் காலத்தில் திருச்சிக்குச் செல்லவில்லை,அதற்க்கும் தெற்கே திருவனந்தபுரத்துக்குத் தான் சென்றார்.ஆனால்,தமிழ்நாட்டின் சாபத்தீட்டு அவரை அதற்கும் தெற்கே-சென்றவர்கள் மீளாத தென் திசைக்கே--வழியனுப்பி விட்டது.ஆம் தமிழ்நாட்டு மறுமலர்ச்சியின் தனிக்காட்டு ராஜாவான புதுமைப் பித்தன் இந்த வருடம் 1948 வருஷம் ஜூன் மாசம் 31-ம் தேதியன்று காலமாகி விட்டார்.


சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன் திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற வேளாள குல ஆசாமி ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவிற்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்யோகம் பார்த்து வந்தார்.

அவர் அங்கு விருதாச்சலத்தில்,ஷதர் கோர்ட் கலெக்ட்டராக இருந்த வெள்ளைக் காரத் துரையிடம் நன் மதிப்பு பெற்று,பதவி உயர்வும் பெற்றார்.அச் சமயம் லகர ளகரம் நிறைந்து,வெள்ளைப் ப்ரங்கித் துரையின் வாயில் நுழையாத தம் பெயரை துரையவர்கள் உத்திரவுப் படி விருத்தாச்சலம் என்று மாற்றிக் கொண்டார்.இந்த விருத்தாச்சலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரன் தான் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன்.

உலகளந்த பெருமாள் பிள்ளையிம் காலம் தொடங்கி,அவர்களின் வமிச பரம்பரை சர்க்கார் ரெவினியூ இலாகாவில் உத்தியோகம் விகித்து,ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.புதுமைப் பித்தனின் தந்தையான ஸ்ரீ வி.சொக்கலிங்கம் பிள்ளை படித்து,பி.ஏ. பட்டம் பெற்று, ஸ்ரீமதி பர்வதம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்று, தென்னாற்காடு ஜில்லாவில் உத்தியோகம் பார்த்து வந்தார்.அப்போதுதான், 1906 ம் ஆண்டு கடலூருக்கருகில் உள்ள திருப்பாதிரிப் புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமாந்தப் புத்திரனாகப் பிறந்தார்.

தமிழ்நாட்டுச் சம்பிரதாயப்படி,புதுமைப் பித்தனுக்கு அவரது தாத்தா விருதாச்சலம் பிள்ளையின் பெயரே சூட்டப்பட்டது.ஸ்ரீ மதி பார்வதியம்மாள் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ருக்மணி என்ற செல்லத்தம்மாள் என்ற பெண் மகவை ஈன்றெடுத்து விட்டு 1914-ம் ஆண்டு தேக வியோகம் அடைந்து விட்டார்.அப்போது சொ.விருத்தாசலத்திற்கு வயது எட்டு; தாயின் பரிபூரணமான அன்பையும் பெற அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை.

தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் உத்யோகத்தின் ஸ்தல மாற்றங்கள் காரணமாக ,புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பும் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.ஸ்திரமற்ற படிப்பால், சொ.விக்கு ஆரம்பக் கல்வி ஒழுங்காக நடைபெறவில்லை.அவருடைய ஆரம்பப் படிப்பு செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் நடந்தேறியது.

“பள்ளிக் கூடத்தில் படிப்பதைவிட செஞ்சி மலைக் கோட்டையில் ஏறிச் சுற்றுவதுதான் எனக்கு பிடித்திருந்தது” என்று சொ.வியே குறிப்பிட்டார்.எனினும் பிறப்பால் அமைந்த புத்திக்கூர்மையால் பாடமும் படித்து வந்தார். ”பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பயல் கலிவெண்பாவை எடுத்து வைத்துக் கொண்டு பாராயணம் செய்வான்” என்று இன்றும் சொக்கலிங்கம் பிள்ளை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்.

1918-ம் வருஷம் சொக்கலிங்கம் பிள்ளை பென்ஷன் பெற்று,தமது பூர்விக நாடாகிய தென்பாண்டிச் சீமைக்கு-திருநெல்வேலிக்கு வந்து குடியேறினார். அப்போதுதான் சொ.வி.க்கு பனிரெண்டு நிரம்பி,பால்யத்தின் பேதமை மறைந்து அறிவு தெளிந்து வரும் பருவம்.திருநெல்வேலியில் தான் அவருடைய பள்ளிப் படிப்பும் ஸ்திரமாயிற்று.தமிழ் மொழி பொருப்பிலே பிறந்தாலும்,தென்னன் புகழிலே வளர்ந்தது போல்,சொ.வி. திருப்பாதிரிப் புலியூரில் பிறந்தாலும்,அவரை ஆளாக்கி விட்டது தென்னன் புகழ் படைத்த திருநெல்வேலிச் சீமைதான்.

சொ.வி.யின் பள்ளிப் படிப்பு திருநெல்வேலி கிறிஷ்தவத் திருச்சபையைச் சார்ந்த அர்ச்.யோவான் ஸ்தாபனக் கல்விக் கூடத்தில் தான் நடந்தேறியது.பள்ளியில் அவர் ஒவ்வொரு வகுப்பிலும் பல தடவை குட்டிக்கரணம் போட்டே வந்திருக்கிறார்.பள்ளிப் படிப்பு இந்தப் புள்ளிக்கு உதவாமல் போய்விட்டாலும் அனுபவக் கல்வியும் அதிகமாகவே அமைந்து வந்தது.பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குத் தயாரானதும் சொ.வி.யின் கல்விக்கூடம் யோவான் கலாசாலையில் இருந்து இந்துக் க்ல்லூரிக்கு மாறியது.திருநெல்வேலி ஜங்கஷ்னில் உள்ள இந்தக் கல்லூரியில் தான் கவிஞர் பாரதியும் கல்வி கற்றார்.இந்தக் க்ல்லூரியில் தான் பாரதி உபாத்தியாரைப் பார்த்து “காள மேகம் ஆசிரியரின் உத்திரவுக்கு பணிந்து மழை பொழியாது” என்று வீராப்புடன் பதிலளித்தார்.

மற்றவை அடுத்த இடுகையில்:-

பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!

Posted on Tuesday, December 9, 2008 by நல்லதந்தி




எழுத்தாளர் புதுமைப்பித்தனுடன் இருந்த போது நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளை நடிகர் சந்திரபாபு கூறினார்.அவைகளில் இதுவும் ஒன்று.

புதுமைப்பித்தன் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.இருமல் வியாதியால் பீடிக்கப் பட்டிருந்த எழுத்தாளரும்,சந்திரபாபுவும் டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.

எழுத்தாளரின் வரவிற்காக ஒரு பத்திரிகாசிரியர் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்.

“அட்டை படமாகப் வெளியிட உங்கள் போட்டோ ஒன்று தேவை” என்று புதுமைப் பித்தனிடம் அவர் கேட்டார்.

புதுமைப்பித்தன் தமக்கே உரித்தான வரட்டுச் சிரிப்பை சிரித்துவிட்டு “என்னிடம் இப்போது ஒரே ஒரு போட்டோதான் இருக்கிறது.அதுவும் உங்களுக்குப் பயன்படாது!” என்றார்.

வந்தவர் விடுவதாக இல்லை. “பரவாயில்லை.அதையே கொடுங்கள்.நான் எதாவது செய்து சரிப்படுத்திக் கொள்கிறேன்.” என்றார்.

புதுமைப்பித்தன் மறுக்கவே வந்தவர் தருமாறு வற்புறித்தினார்.

“சரி, சொன்னால் கேட்க மாட்டீர்கள்.” என்றபடி ஒரு பெரிய கவரைப் பத்திரிகாசிரியரிடம் கொடுத்தார்.அதனுள் இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தார் வந்தவர்.உடனே திரு திருவென்று விழித்தார்.

அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!

அரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா!

Posted on Sunday, December 7, 2008 by நல்லதந்தி




கோல்டன் ஸ்டூடியோவில் ‘சந்திரகாந்தா’படப்பிடிப்பு  நடந்து கொண்டிருந்த  சமயம்அது.காவி உடைகளும்,திரு நீர்ப்பூச்சும் நீண்ட தாடியும் துலங்க, ‘போலிச்சாமியார் வேடத்திலிருந்தார்.டி.எஸ்.பாலையா.

அன்றைய காட்சியில் சாமியாரின் காதலியாய் நடித்த வனஜா, ‘நீங்க இப்படியே போனீர்களானால் உங்களைப் பார்த்து ஜனங்களெல்லாம் உங்கள் காலில் விழுந்து கும்பிடுவார்கள்’ என்று பாராட்டினார்.

அதற்கு பாலையா,’ நன்றாய்ச் சொன்னீர்கள்!.என் மேல் விழுந்து எலும்பை எண்ணி விடுவார்கள்.கால்ம் மாறிவிட்டதம்மா!.போலிகள் பிழைக்க முடியாது என்றார்.

-------------------------------------------------------------------------------------------------


புத்தா பிச்சர்ஸ் படத்தில் நடிக்க வந்திருந்த டி.எஸ்.பாலையா வெற்றிலை போடவென வெளியே வந்த போது அருகில் இருந்த நண்பர் ஒருவரின் கையில் இருந்த தினசரியை வாங்கிப் பார்த்தார்.

அதில் நடிகர் சிவதாணு ஒரு திருடனைப் பிடித்துக் கொடுத்ததற்கு,போலீஸ் இலாகா அவருக்குச் சன்மானம், அளித்த செய்தி வெளி வந்து இருந்தது.


‘இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குப் ப்ழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது’ எனக்கூறி அதைச் சொன்னார் பாலையா.

‘அப்போது அது அரிசி ரேஷன் இருந்த சமயம்.நான் நிறையப் படங்களில் போலீஸ்காரனாக நடித்து வந்த சீசன். சேலத்திலிருந்து திருச்சிக்குக் காரில் வந்து கொண்டிருந்தேன்.

‘இரவு நேரம்.கார் திம்மாச்சி புரம் அருகே வந்ததும்,ஆட்கள் பலர் தலையில் மூட்டையைச் சுமந்து பதுங்கி பதுங்கிப் போவதைப் பார்த்தேன்.எனக்குச் சந்தேகம் ஏற்ப்பட்டதும்,காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினேன்.போலீஸ் உடுப்பு வேறு போட்டிருந்தேன்.மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே வந்துக் கொண்டிருந்த்தேன்.என்னைக் கண்டத்தும் அவர்கள் மூட்டையைக் கீழேப் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.அவ்வளவும் கறுப்புச் சந்தை வியாபாரத்துக்காக கடத்தப் படும் அரிசி! மூட்டைகள்.

‘கையில் இருந்த டார்ச் லைட்டைப் போட்டேன்.ஒரு பெரிய மரத்தின் மறைவில் கைகால்கள் தந்தி அடிக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.நான் அருகே போனதும்,ஐயா,இதை நீங்களே எடுத்துக்கிட்டுப் போங்க.என்னை விட்டுடுங்க’, என்று கெஞ்சினான்.

‘இனிமேல் இந்த மாதிரிச் செய்யாதீங்க ‘ என்று எச்சரித்து விட்டு போலீஸ் முறுக்கோடு மூட்டைகளை விட்டு விட்டு என பயணத்தை மேல தொடர்ந்தேன் என்று கூறினார் பாலையா!.


நடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே!

Posted on Saturday, December 6, 2008 by நல்லதந்தி

பி.வி.என். புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.


குலதெய்வம் ராஜகோபால் சொன்ன பல ரசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

கலைவாணரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒருத்தி அங்கு வந்தாள்.”மவராசா! நிறைமாதக் கர்பிணி ஆஸ்பத்திரிக்கு போகணும் ,உதவுங்கள் “என்று கேட்டாள்.

கலைவாணரோ அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தார்.அவள் துடித்த துடிப்பையும்,கிருஷ்ணன் அவர்களின் அலட்சியத்தையும் கண்டு எனக்குக் கோபம் கோபமாக வந்தது.கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் கலைவாணர் இந்தக் கர்பிணி விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று நான் அவசரப் பட்டேன்.

அவரோ சிறிது கூடப் பதட்டம் காட்டவில்லை.நான்கணா நாணயம் ஒன்றை ஒரு பக்கம் வைத்தார்.ஐந்து ரூபாய் நோட்டென்றை மற்றொரு பக்கம் வைத்தார்.         ”இந்தாம்மா,நீ நிஜமாகவே கர்பிணியாக இருந்தா இந்த நாலணாவை எடுத்துக்க,வேஷம் போடறவளா இருந்தா ஐந்து ரூபாயை எடுத்துக்க” என்று சொன்னார்.

அந்தப் பெண்ணோ,”சாமி,நீங்க இப்படிச் சோதிக்கலாமுங்களா?” என்று சொன்னாளேத் தவிர எதையும் தொடவில்லை.அவளது பார்வை மட்டும் ஐந்து ரூபாய் நோட்டின் மேலேயே பதிந்திருந்தது.

கொஞ்ச நேரத்துக் பின் தான் எனக்கு எல்லாமே விளங்கியது.அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த கந்தைகளை ஒவ்வொன்றாகக் களைந்தப் பிறகுதான் அவள் ஏமாற்று வேஷம் போட்டு இருக்கிறாள் என்பது தெரிந்தது.

கலைவாணர் அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து”இன்றோடு இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடு “,என்று சொல்லி அனுப்பினார்.

நான் என்னுடைய அவசர முடிவுக்காக வருந்தினாலும்,”அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏன் ஐந்து ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கோபமாய் கேட்டேன்.

“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2

Posted on Thursday, December 4, 2008 by நல்லதந்தி

இது ஏற்கனவே போட்ட பதிவுதான்.ஆனால் மீள் பதிவல்ல.வழக்கம் போல் காப்பி பதிவு.இப்போ மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இதைப் போடணும்னு தோணிச்சு.செப்டம்பரில் எழுதியது 
இந்த கட்டுரையின் முடிவில் ”அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம் அப்படின்னு எழுதியிருந்தேன்.யாரும் தேடிப் படிக்கப் போறதில்லை.அதனால் நமக்கு நாமே திட்டத்தின் படி நானே திரும்பவும் போட்டு விட்டேன்.

றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.

எதிர்கட்சிகள் சதி! மன்னிப்பு கேட்ட கையோடு, கம்மிரேட் அச்சு(பிச்சு)

Posted on Wednesday, December 3, 2008 by நல்லதந்தி

தீவிரவாதிகளால் தன் இன்னுயிரை ஈந்த காமண்டர் உன்னி கிருஷ்ணன் வீட்டிற்கு அவருக்கு மரியாதை செய்ய கேரள அரசால் யாரும் வாராததைக் கண்டு கேரளத்தவர்கள் கொதித்ததால் வேறு வழியின்றி அடுத்த நாள் துக்கம் விசாரிக்க வந்த அச்சு, அங்கு உன்னி கிருஷ்ணனின் தந்தைக் கொதித்து வெளியேறுமாறு சொல்ல, அங்கு அவமானப்பட்ட அச்சு பிறகு நாய் இந்த வீட்டிற்க்குப் போகாது என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நம் தலைவர் கலைஞர் பாணியில் நீ தாண்டா கொலைகாரன்!. தீக் குளிக்க வர்றியா?..என்றதைப் போல, உளறிக் கொட்ட நாடே அச்சுவைக் கண்டு கொதித்தது அனைவரும் அறிந்ததே.

பிறகு அச்சு பிச்சுவிற்காக CPM தலைவர் காரம் மன்னிப்புக் கேட்டதும் நாம் அறிந்ததே.அச்சு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொன்னதும் அறிந்ததே!

இப்போதைய செய்தி நம் அச்சு பிச்சு உன்னிக் கிருஷ்ணன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.இதற்க்கு காரணம் பதவியில் இருந்து தூக்கப் படுவோம் என்ற பயமா? .(லாலு இவரைப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று CPM தலைவரிடம் கேட்டுக் கொண்டார்) அல்லது அடுத்த தேர்தலில் CPM ற்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்ற பயமாத் தெரியவில்லை.

இருந்தாலும், வழக்கம் போல உளறுவதை அச்சு பிச்சு நிறுத்தவில்லை.இது எதிர்கட்சிகள் சதியாம்!. இது எப்படி இருக்கு?(கலைஞருக்கு சற்றும் சளைக்காதவர் போலிருக்கு இந்த அச்சு பிச்சு!)

இந்துத் தீவிரவாதி அஜ்மல் அமீல்! அப்பாவி வாஞ்ஜூர் அண்ணனுக்காக

Posted on Sunday, November 30, 2008 by நல்லதந்தி

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இயங்கிவரும் நம்முடைய அண்ணன் வாஞ்ஜூர் அவர்கள் இரண்டு நாட்களாக அமைதி காத்தது ஆச்சரியமாக இருக்கவில்லை எனெனில் அவருக்குச் சாதகமான செய்தி இரண்டு நாட்களாகக் கிடைக்க வில்லை.இருந்த போதும் அண்ணன் பலவாறு சிந்தித்து மும்பையைத் தாக்கியது இந்து தீவிரவாதிகள் என்று கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார்.அவரது மனம் நோகின்ற மாதிரி இந்த செய்தி வந்துள்ளது.இதற்க்கு மேல் அண்ணன் என்னத்தை கண்டு பிடித்துச் சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை!.

தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் 60 மணி நேரத்துப்பாக்கி சண்டைக்குப் பின் தீரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.இதில் ஒரேஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான்.அவன் மூலம் தாக்குதல் பிண்ணனி தெரியவந்தது.

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் அஜ்மல் அமீல் கஜா.21 வயதான இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத் தீவிரவாதி.இவனுடன் மேலும் 10 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவினார்கள்.

சிலர் கொலாபா மார்கெட் பகுதியில் வீடு எடுத்துத் தங்கினர்.சிலர் தாஜ் ஓட்ட்லில் அறை எடுத்துத் தங்கி ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் பதுக்கினர்

திட்டமிட்டபடி 29-ம் தேதி புதன் கிழமை இரவு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதலில் ஈடு பட்டனர்

அப்போது அஜ்மல் தமது கூட்டாளி இஸ்மாயிலுடன் எந்திரத் துப்பாக்கியுடன் வந்து மும்பை அதிரடிப் படைத் த்லைவர் ஹேமந்த் கார்க்கரே,என் கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் விஜய் ச்லாஸ்கர்,மற்றொரு அதிகாரியான அசோக் காம்தே ஆகியோரைச் சுட்டுக் கொன்றான்.

பின்னர் கார்க்கேயின் குவாலிஸ் காரில் அஜ்மலும் ,இஸ்மாயுலும் தப்பினர்.”மெரைன் டிரைவ்” என்ற இடத்தில் சென்ற போது கார் நின்று விட்டது.உடனே இருவரும் எதிரே மற்றொரு காரில் வந்த மும்பை வியாபாரிகள் காரமேஷ்,ஆர்ஷா, ஆகியோரை துப்பாக்கி மினையில் மிரட்ட்டி அவர்கள்து “கோடா” காரில் தாக்குதலுக்குப் பறந்தனர்.தந்து காரை தீவிரவாதிகள் பறித்துச் சென்றது பற்றி ஆர்ஷா போலீஸூக்கு தகவல் கொடுத்தார்.

இதற்க்குள் இரண்டு தீவிரவாதிகள் தப்பியது பற்றி தெரிந்ததும் மும்பையில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்த்ப் பட்டன.


டி.பி. மார்க் போலீஸார் சவுபாதி சர்க்கிள் அருகில் “கோடா” காரை மடக்கினர்.கார் நிற்க்காமல் சென்றதால் துப்பாக்கியால் சுட்டானர்.இதில் இரண்டு தீவிரவாதிகள் மீதும் குண்டு பாய்ந்து,இருவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

உடனே இரண்டு பேரையும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு நாயர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.தீவிரவாதி இஸ்மாயில் ச்ம்பவ இடத்திலேயே பலியாகி விட்டது தெரிய வந்தது.அஜ்மலுக்கு லேசாக உயிர் இருப்பதை கண்டு பிடித்தனர்.அவனது மார்பில் குண்டு பாய்ந்து இருந்தது.ஆனால் அவன் இறந்த்தது போல் நடித்து தப்பிக்க திட்ட் மிடு இருந்தான்.

போலீஸார் உஷாராகி அவனை ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தானர்.முதலில் சிகிச்சையை ஏற்க மறுத்தான்.

அவனுடன் வந்த இஸ்மாயில் பிணத்தைக் காட்டியதும்,இனி தன்னால் தனியாக ஒன்றும் செய்யமுடியாது என்பதை அறிந்து சிகிச்சையை ஏற்றுக் கொண்டான்.

ஆபரேஷன் மூலம் அவன் மார்பில் இருந்த குண்டுகள் அகற்றப் பட்டன.உயிர் பிழைத்த அவனிடம் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்த வந்தனர்.ஆனால் அவன் வாயை திறக்க மறுத்து விட்டான்.

பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்திற்க்கு கொண்டு சென்று விசாரித்த்ப் பிறகு உண்மையை கக்கிவிட்டான்.தற்போது முமொஐ போலீஸ் விசாரணைக்கு உதவியாய் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அஜ்மல் அமீல் தான்.

நன்றி : மாலை மலர்.

சீமான்,அமீர் கைது! சிலிர்த்தெழுந்த சத்தியராஜ்! ஒரு நேரடி ரிப்போர்ட்!

Posted on Saturday, October 25, 2008 by நல்லதந்தி

சத்தியராஜ் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழாவில் (நிகழ்ச்சி?, கலைஞர் கலந்து கொண்டாலே விழாவாத்தான் நினைக்கத் தொன்றுகிறது அவர்தான் இது விழும் அரசல்ல விழா அரசு! என்று சிலேடையாக ஜெயலலிதாவிற்க்குப் பதில அளித்து இன்று வரை விழாவை விடாமலேயே இருக்கிறார்!) அவரைப்பற்றி எந்தப் பத்திரிக்கைகளும் சரியான படி எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.மைக் இல்லாததால் வாய்க்கு வந்தபடி பேசி தற்காலிகப் புகழ் பெற முடியாத ஆதங்கம் சத்தியராஜிற்கு இருப்பதால் அவருக்கு ஆறுதல் தரும் வகையில் நேரடி ரிப்போர்ட்த் தர நமது விஷேச நிருபரை அனுப்பியிருந்தோம்.

நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்!

ஈழத்தமிழர்களுக்காக மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டு நின்றிருந்த சத்தியராஜ் கருப்புக் கலர் சட்டை போட்டுக் கொண்டு இருந்ததால் அவர் சோகமாக இருப்பதாக நமது நிருபர் நினைத்துக் கொண்டார்.நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள்.

நடுவில் நின்ற நமீதாவின் ஒன்றை சத்தியராஜும் மற்றொன்றை சிபிராஜும் பிடித்துக் கொண்டு இருந்தனர் ---கையை!. வலது கையால் நக்மா வினுடையதைப் பிடித்துக் கொண்டிருந்தார்.அதே போல் சிபிராஜ் தன் இடது கையால் நிலாவினுடையதைப் பிடித்துக் கொண்டு நின்றார்.இருவரும், அந்த வட நாட்டு மங்கைகளிடம் தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தனர்.வாழ்க தமிழ்!

மழை வேறு வரவே சத்தியராஜ் குளிருக்காக கையை இறுக்கிக் கொண்டார். நமீதா வலிக்கிறது என்று சொன்னது நமது நிருபரின் பாம்புக் காதுக்கு விழுந்தது.

மனித சங்கிலி முடியும் நேரத்தில் அந்த அதிர்ச்சியான தகவல் நிருபருக்கு எட்டியது .அவர் சத்தியராஜிடம் “சீமானையும்,அமீரையும் கைது செஞ்சிட்டாங்க சார்! “என்றவுடன் ஆவேசமடைந்த சத்தியராஜ் ‘அடக் கேனக்கூ.......”என்று தன் வழக்கமான பாணியில் திட்ட எத்தனித்தவுடன்,பக்கத்தில் நின்ற நமது நிருபர் “சார் இந்த அரசு கலைஞர் அரசு “ என்றவுடன் வாயைப் பொத்திக் கொண்டு சின்னதாகக் கேனக்கூ...என்றார் தன் பழக்கதோஷத்தை விட முடியாமல்!.அது பூனை மியாவ் என்று கத்துவதைப் போலிருந்ததால் அருகில் உள்ள போலீசாருக்குக் கேட்கவில்லை.

நிகழ்சி முடித்ததும் கிளம்பிய சத்தியராஜை வழிமறித்த நமது நிருபர் எங்கே சார் சீமானையும்,அமீரையும் காப்பாற்றுவதற்க்கா? என்றார்.அந்தக் கருமத்துக்கெல்லாம் இப்பொ நேரமில்லை,எனக்கு வேற அர்ஜண்ட் வேலை இருக்கிறது என்றார்.நமீதாவைப் பார்த்துக் கொண்டே!

சார் என்னாங்க சார்! அவங்க பின்னாடியே நிப்போமுன்னிங்க இப்போ வீட்டிற்க்கு கிளம்பறிங்களே! என்று நமது நிருபர் கேட்க ,”வீட்டில ஒரு சின்ன வேலை இருக்குங்க” என்றார்.சுற்றி இருந்தவர்கள் சத்தியராஜையே பார்த்துக் கொண்டிருக்கவே வீர இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி காவல் நிலையம் சென்றார்.

அடுத்து போலீஸ் ஸ்டேசன் சென்ற சத்தியராஜ் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

”யோவ்! தமிழனென்றால் இளிச்சவாயனா?.ஏன் அந்த நடிகனை கைது செய்யவில்லை?” என ஆவேசத்துடன் கேள்வி கேட்க,”சார் நீங்க சொன்னது வாஸ்தவம் தான் ஆனா அவரு இந்த மாதிரி பேசலையே?.வேணும்முன்னா அவரு எதாவது படத்தில இந்த மாதிரி வசனம் பேசியிருந்தா சொல்லுங்க, கலைஞரிடம் ,அந்த நடிகரால தொந்தரவு இருக்கான்னு கேட்டுட்டு அவரோட அறிவுரைப் படி சட்டம் தன் கடமையைச் செய்யுதுன்னு சொல்லிட்டு கைது செஞ்சிடலாம்” என்றார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.

”யோவ்! தமிழனன்னா இந்த மாதிரி ஆவேசமா பேசத்தான்யா செய்வான்,அதுக்கப்புறம் பொத்திக்கிட்டு சும்மாதானய்யா இருப்பான்!. என்னிக்காவது சொன்னதைச் செஞ்சிருக்கானய்யா! .எங்களைப் பாத்துக் கூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?.என்னய்யா போலீஸ் நீங்க தூ...” என்று காரி உழிந்தார்.அந்த காரி உமிழ்தலில் ஸ்டேசன் சுவர்கள் எல்லாம் வார்னீஷ் போட்டது போல பளீச் சென்று ஆனதைப் பார்த்த போலீசார் சத்தியராஜைப் பார்த்து,” சார் கக்கூசையும் கொஞ்சம் சுத்தம் செய்யணும் சார்!” என்றனர்.

பிறகு ஆவேசமான சத்தியராஜ் மைக்கைக் கண்டது போல ஆவேசமாகப் பேசத்தொடங்கினார்.இரண்டு மணிநேரம் ஆனபிறகும் பேச்சை நிறுத்தாததால்,ஒரு போலீஸ்காரர் உயர் அதிகாரியுடம் கேட்டார்”சார்! ”கட்” சொல்லிடலாமா?.வீட்டுக்குப் போகணும் ரொம்பப் பசிக்குது சார்!”

காலில் முள்ளு குத்தியதால் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள் முடியவில்லை! சத்தியராஜ் அழுகை!

Posted on Friday, October 24, 2008 by நல்லதந்தி


பிரபு சாலமன் டைரக்ட் செய்துள்ள "லாடம்" படத்தின் பாடல்கள்அடங்கிய சி.டி யை நடிகர் சத்தியராஜ் வெளியிட,டைரக்டர் அமீர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ,சத்தியராஜ் பேசியதாவது:-
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.என் வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால்,என்னால் ராமேஸ்வரம் போக இயலவில்லை

வீடு முக்கியமா ஈழத்தமிழர் முக்கியமா என்பதற்க்கு வீடுதான் முக்கியம் என்ற சத்தியராஜின் உண்மையான பதிலுக்கு பாராட்டுக்கள்.ராமேஸ்வரத்திற்கு எதாவது ஆயிடுமோ அப்படிங்கற பயம் போலிருக்கு!.இவரு மட்டும் போயிருந்தாருன்னா,விதை ரெண்டும் வாய்க்கு வர்ற மாதிரி இவரு போடற சத்தத்துக்கு,ஒரு வேளை சிங்களக்காரன் பயந்து சிலோனை விட்டே ஓடிப் போயிருப்பான்.ஒரு நல்ல விஷயம் நடக்காம போயிருச்சே!.வீட்டில உள்ளவங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா சார்?.எப்பவுமே நாம செஃப்டியா இருக்கணும் சார்!

இலங்கை தமிழர்களுக்காக,சென்னையில் நாளை மனித சங்கிலி நடைபெற இருக்கிறது.அதில் கலந்துகொள்ளாதவர்கள் குறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப் பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னது போல்,இந்த போராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் தமிழ்
நாட்ட்டில் இருக்கத் தகுதி இல்லாதவர்கள்.இதைகட்சிசார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசவில்லை.தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன்.

இவரு வீட்டுப் பிரச்சனைக்காக இந்த தடவையும்" எஸ்கேப்"ஆகி விடாமல் இருக்க வேண்டும்.இல்லையன்னா இவருக்கும் தமிழ் நாட்டில் இருக்கிற தகுதி போய்விடும்.இது சென்னையில் தானே நடக்குது அதனால் காலையில சாப்பிட்டு விட்டு தெம்பா போய்டுங்க சார்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி-மொழி-இன பாகுபாடின்றி
அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.

குரல் மட்டும் தானே கொடுக்கச் சொல்றாரு. குரல் தானே கொடுத்திடுவோம் காசாப் பணமா?. வழக்கமா சத்தியராஜ் கொடுக்கிறதுதானே!. காசு கேட்டாத்தானே அவரு காணாமப் போவாரு!

டைரக்டர்கள் சீமான் - அமீர் ஆகிய இருவரையும் அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றன.அவர்கள் பேசியது சரியா,தவறா? என்று நான் கூற வில்லை. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சீமான் அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வேண்டும்.


சீமான்,அமீர் மீது உங்களுக்கு என்ன சார் கோபம்! உங்கப் பையனை வெச்சிப் படம் எடுக்கலைன்னா?.நீங்க குரல் கொடுத்துக் கிட்டே பின்னாடி போயிருவீங்க,அவங்க ரெண்டு பேரும் உள்ள போய் களி திங்கணும் அதானே உங்க ஆசை?

எனக்குத் தனிப்பட்ட முறையில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது,
திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை.திராவிடர் கழகமும்,விடுதலைச்
சிறுத்தைகளும் தான் உதவி செய்தார்கள்.

அண்ணா, தனிப்பட்ட முறையில் என்னத் தியாகம் செஞ்சி உங்களுக்குப் பிரச்சனை வந்துச்சிங்க,உங்கத் தியாகத்தால மக்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்க,விபரம் புரியாமல்தான் கேக்குறேன்.ஒரு வேளை தனிப்பட்ட பிரச்சனையன்னா உங்க குடும்பப் பிரச்சனை எதுனாச்சுங்களா?.

ஈழத் தமிழர்கள் நலனுக்காகத்தான் சீமானும்,அமீரும் அப்படி பேசியிருக் கிறார்கள்.எனவே அவர்களுக்கு பின்னால் அனைவரும் நிற்கவேண்டும்.

ரொம்ப உஷாராத்தான் இருக்குறீங்க போலிருக்கு!.ரொம்ப பின்னாடியே போய் கடலிலே விழுந்துடாதீங்க!

இவ்வாறு சத்தியராஜ் பேசினார்.

மயக்கமா?கலக்கமா?,மனதிலே குழப்பமா? ஸ்ரீதரின் நினைவுகள்!

Posted on Thursday, October 23, 2008 by நல்லதந்தி


ஸ்ரீதர் தமிழர்களின் வாழ்க்கையில்மறக்கமுடியாத ஒரு பெயர்!.இந்த கவர்ச்சிகரமான பெயர் அந்தக் கால எத்தனை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வெறித்தனமான வேகத்தைத் தந்தது!.சொல்லப் போனால் மிகுந்த மோகத்தையும் தந்தது!.
1933-ல் பிறந்த இவர் 1954 முதல் 1991 வரை உள்ள 35 ஆண்டுக் காலம் திரையுலகில் இருந்தார்.இவர் கோலச்சிய காலம் சுமார் 35 ஆண்டுகள்.இப்படி 35 ஆண்டு காலம் கோலோச்சிய இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் வெகு குறைவு. தன் திரையுல வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைக் கண்டாலும்,தமிழ்த் திரையுலகை பல பரிமாணங்களுக்கு இட்டுச் சென்றவர்!.
திரு.இளங்கோவன் என்றால் யாருக்கும் தெரியாது,இரத்தக் கண்ணீர் வசனகர்த்தா என்றால் எல்லாருக்கும் பளீச் சென்று தெரியும்.ஸ்ரீதருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்.இவருடைய தாக்கத்தாலேயே ஸ்ரீதர் திரையுலகில் நுழைந்தார். ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,இளங்கோவனுடைய வசனங்கள் தீவிர தமிழ் வீச்சு உடையவை,அது போன்ற வசனங்களை ஸ்ரீதர் என்றுமே தன் பாணியாகக் கொண்டதில்லை.

இளங்ககோவனின் வசனங்களின் பாணியைப் பின் பற்றி அண்ணாவும், அவரது சீடரான கருணாநிதியும் பெரு வளர்ச்சி கண்டிருந்த நேரத்தில், அதற்க்கு நேர் மாறாக இயல்பான வசனங்களை எழுதி அதனால் தன்னை தமிழகமே திரும்பிப் பார்க்கும் படி செய்தவர் ஸ்ரீதர்!.

இரத்தபாசம் என்ற திரைப் படத்தின் மூலமாக 1954-ல் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் நுழைந்த போது அவருக்கு வயது வெறும் இருபத்தி ஒன்றுதான்!.அந்த நேரத்தில் எம்ஜிஆரின் ம்லைக்கள்ளனும்,சிவாஜியின் மனோகராவும் வெளி வந்தன.இந்த இரண்டு படங்களுக்கு இடையேயும் T.K.சண்முகம் நடித்த இரத்த பாசம் பெரு வெற்றி பெற்றது.பிறகு அடுத்து வந்த வருடங்களில் எதிர் பாராதது,அமரதீபம் ,மகேஸ்வரி,எங்க வீட்டு மகாலட்சுமி,மஞ்சள் மகிமை,உத்தமபுத்திரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

இதில் எல்லாப் படங்கள் பெரு வெற்றி பெற்றன.ஸ்ரீதர் புகழ் பெற்ற வசனகர்த்தாக் களின் வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தார்.இதற்க்கடுத்து கல்யாணப் பரிசு படத்தை இயக்கியதும்,அதை இயக்கும் போது முதலில் ஏற்ப்பட்ட பிரச்சனை களும் அனைவரும் அறிந்ததே,அதனால் அதைப் பற்றி விஸ்தாரமாகப் பேச ஓன்றும் இல்லை!.

ஸ்ரீதருடை சினிமா கிராஃப் பல முறை மேலேறி கீழறங்கும் வித்தை கொண்டது. இவர் கல்யாணப் பரிசு போன்ற படங்களை கொடுத்த காலத்தில் சிவாஜி சொந்தப் படமான விடிவெள்ளி ஊற்றிக் கொண்டது,தேன்நிலவு போன்ற படங்கள் அப்போது தேல்வியைத் தழுவினாலும் இன்றும் பார்க்கும் போது ஆர்ச்சரியப் படவைக்கும் தன்மை கொண்டது.

அடுத்து சிலிர்த்தெழுந்த ஸ்ரீதர் சுமைதாங்கி போன்ற படங்களில் எழுந்தார்.பிறகு கொடிமலர் போன்ற படங்கள் அவரது சுமையை ஏற்றின.ஆனால் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற படங்கள் ,அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தன. வெற்றியும் கண்டன.நெஞ்சம் மறப்பதில்லை ஒரு சராசரிப்படமாக இருந்தாலும் இன்றும் மக்களின் மனதில் நின்றபடம்!.

அடுத்த ஆட்டத்தை கலரில் ஆரம்பித்தார் காதலிக்க நேரமில்லை!.இதுவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டிராத காண்முடியாத அரும் பெரும் நகைச்சுவைப் படத்தை மக்களுக்கு அளித்தார்.அதுவரையில் பம்பாய் சென்றே கலர்ப் படங்களை பிரதியெடுத்தார்கள்.ஜெமினி நிறுவனம் தன்னுடைய கலர் லேப்பை ஆரம்பித்தவுடன் அதில் பிரதி எடுக்கப் பட்ட முதல் படம் இதுதான்!.

பிறகு ஊட்டிவரை உறவு,போன்ற படங்களையும் அவர் தந்தார்.வெண்ணிற ஆடையில் அவருக்கு அடி விழுந்தாலும் அதில் நடித்த கலைஞர்கள் மிகவும் புகழ் பெற்றனர்.

அடுத்த கட்டமும் அவருக்கு மிகவும் சோர்வைத் தந்தது , நெஞ்சிருக்கும் வரை,போன்ற படங்கள் வரிசையாக அடி வாங்கின!.அவளுக்கென்று ஒரு மனம்,சிவந்த மண் போன்ற படங்கள் வண்ணத்தில் எடுக்கப் பட்டாலும் பெரு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.இன்னமும் அவளுக்கென்று ஒரு மனம் படப் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றவையாகவே இருக்கின்றன.

70 களில் சிவாஜியை வைத்து வைரநெஞ்சம் என்றப் படத்தை உருவாக்கினார்.இது இவரது வாழ்க்கையிலேயே சிரமான கட்டம்தான் என்று சொல்ல வேண்டும்.இந்தப் படம் மகாத் தோல்வியைத் தழுவியது.மிகவும் சிரமத்திற்குள்ளான ஸ்ரீதர் அன்றைய சூப்ப்ர்ஸ்டார் திரு.எம்.ஜிஆரிடம் உதவியை நாடினார்.இவர் படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருமுறை கூட எம்ஜிஆரை வைத்து எடுத்ததில்லை.(ஒரு முறை அன்று சிந்திய ரத்தம் என்றப் படத்தை எம்ஜிஆரை வைத்து எடுக்க முயற்ச்சி செய்தார்..கைகூடி வரவில்லை) அதற்க்குக் காரணம் பல இருந்தன.ஸ்ரீதரைப் பொறுத்தவரை குறைந்த சம்பளம் உள்ள நடிகர்கள்,நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள் ,நல்ல படம் ,நல்ல லாபம் என்ற அடிப்படைக் கொள்கையிலேயே இயங்கி வந்தார்.

இதனால் இவரது படங்கள் இயக்குனர் படம் என்றும் புகழ் பெற்றன.தம் தகுதியை அவர் அப்போது விட்டுக் கொடுக்காமலேயே இயங்கினார்.சிவாஜியை வைத்து இயக்கினாலும் அவர் இயக்குனர்களின் நடிகர் என்பதை மறக்கக் கூடாது.

தம்முடைய தொடர் தோல்வியினால் மனம் நொந்த நிலையில் எம்ஜிஆரை அணுகியதும் எம்ஜிஆர் தன்னுடைய பெருந்தன்மையை நிரூபித்தார்.அடுத்தது ஆரம்பமானது ஸ்ரீதருடைய அடுத்த பரிமாணம் .உரிமைக்குரல் முழுக்க முழுக்க எம்ஜிஆர் படமாக வெளிவந்தாலும் “விழியே கதையெழுது” என்ற பாடல் ஸ்ரீதருடைய “டச்”சிலேயே இருந்தது என்பது ஸ்ரீதர் ஆளுமைக்கு காரணமா?எம்ஜிஆருடைய பெருந்தன்மையா?.அல்லது வியாபார நோக்கில் இருவருடைய “காம்ரமைஸா” என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

படம் சூப்பர் டூப்ப்ர் வெற்றி!.தமிழகத்தில் அன்றுள்ள திரையுலக மந்தமான சூழ்நிலையில் பல விநியோகஸ்தர்களும்,திரைஅரங்கு உரிமையாளகளும் பிழைத்தனர்(அந்த சூழ்நிலைக்குக் காரணம் அரசியல் காரணமாக எம்ஜிஆரின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட கலைஞர்தான் என்பது வேறு விஷயம்....இதைப் பற்றிப் பேசப் போய் கட்டுரை வேறு பக்கம் போய் விடப் போகிறது..எனவே இதை இத்தோடு ஏறக்கட்டிவிடலாம்!)

பிறகு, எம்ஜிஆரை முதலமைச்சராக்க வந்தது மீனவ நண்பன்.இதுவும் சூப்ப்ர் டூப்பர் ஹிட்!.இந்த கால கட்டத்திலேயே ஸ்ரீதர் இயக்கத்தில் பூஜை போட்டு சில காட்சிகளும்,பாடல்களும் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற படம் எடுக்கப் பட்டது .எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் அது கைவிடப் பட்டது.இந்தப் படத்திலும் சில காட்சிகளை நாம் கண்டிருப்போம். எனென்றால் இது தான் பிற்பாடு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளி வ்ந்த “அவரச போலீஸ்”என்ற படத்தில் எம்ஜிஆர் வரும் காட்சிகளுக்காக உபயோகப்ப்டுத்தப் பட்டது !.


இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீதரின் அலைகள்,ஓ..மஞ்சு போன்ற படங்கள் வெளிவந்து தோல்வியைத் தழுவின.


அடுத்து எம்ஜிஆர் அரசியலுக்குச் சென்ற பிறகு தனது அடுத்த பரிமாணத்திற்கு செல்ல அன்றைய இளம் நடிகர்களான ரஜினியையும் கமலையும் வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தைக் கொடுத்தார்.அவரது வழக்கமான முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் தன் பழைய பாணியில் இருந்து மாறி 78 வருடத்திற்க்கேற்ப இளமையாகத் தந்தார்.படம் மெகா ஹிட் ஆனது.அடுத்து மீண்டும் விஜயகுமார்,ஜெய்கணேஷ் போன்றவர்களை வைத்து மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக அழகே உன்னை ஆராதிக்கிறேன் வெளி வந்தது.இதுவும் மெகா ஹிட் ஆனது.இரண்டு படங்களிலும் இளையராஜா ஒரு ராக ரகளையே செய்து அசத்தியிருந்தார்.


மீண்டும் ஸ்ரீதருக்கு இறங்கு முகம்.இந்தக் காலக் கட்டத்தில் ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்கள் வெளிவந்தன.ஆனால் எந்த படங்களும் வெற்றியைத் தொடவில்லை.


1985 வாக்கில் மைக் மோகனை வைத்து தென்றலே என்னைத் தொடு என்ற காமெடி கலந்த காதல் கதையை இயக்கினார்.இதில் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோவோ என்ற அளவிற்கு கலக்கியிருந்தார்.படம் சூப்பர் ஹிட்!.இதற்கு பிறகு திரைக்கு வந்த ஆலயதீபத்துடன் ஸ்ரீதருடைய திரையுல வெற்றிகள் முடிந்து போயின.


ரஜினியுடம் துடிக்கும் கரங்கள்(இதில்தான் தமிழில் S.P.பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்).கமலுடன் நானும் ஒரு தொழிலாளி போன்ற படங்கள் ஸ்ரீதருக்கும் ரஜினி,கமலுக்கும் பெருமை சேர்க்கவில்லை.ஆர்ஜூன்,சதனா போன்ற அந்த காலத்தில் கடைநிலை ஹீரோ ஹீரோயின் களோடு இணைந்து ”குளிர் மேகங்கள்” போன்ற யாராலும் அறியப் படாத படங்களையும் எடுத்து தன்னயும்,மற்றவர்களையும் சிரமப்படுத்தினார்.என்னுடய படங்கள் ஏன் தோல்வியைத் தழுவுகின்றன என்றே தெரியவில்லை எனப் பத்திரிக்கைகளில் புலம்பும் அளவிற்க்கு தள்ளப் பட்டார்.திரையுலகை ஸ்டெடி செய்து மீண்டும் வெற்றி பெருவேன் என்றார்.
நீண்ட இடை வேளைக்குப் பின் 91-ல் விக்ரம்,ரோகிணியை வைத்து “தந்து விட்டேன் என்னை”என்ற படத்தைக் கொடுத்தார்.இதில்தான் விக்ரம் அறிமுகமானர்.இந்தப் படமும் பப்படம் ஆகவே, தன் நீண்ட திரையுலக வாழ்க்கையைத் துறந்து ஒரு தோல் பதனிடும் தொழிற்ச்சாலையை வெற்றிகரமாக நடத்தினார்.திரையுலகில் இருந்தவர் அதிலிருந்து வெளிவந்து வெற்றிகரமான தொழில் அதிபர் ஆனதிலும் நம் ஸ்ரீதர் புதுமை படைத்தார்.


பாரதிராஜாவுக்கு முன்பே டைரக்டர்களின் டைரக்டர் என்று பெருமை பெற்றவர் ஸ்ரீதர்.இவரால் பட்டறையில் இருந்து வெளிவந்த பல இயக்குனர்கள் பெரும் புகழ் பெற்றனர்.


P.மாதவன் போன்றோர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றனர்.பீம்சிங்கிற்குப் பின் சிவாஜியின் ஆஸ்தான டைரக்டர் ஆனார்,P.மாதவன்.


C.V.ராஜேந்திரனும் மிகப் பெரிய வெற்றியடைந்தார்.(இவர் ஸ்ரீதரின் (உறவினர்) தம்பி!)இவரும் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கினார்.ஸ்டாலினை வைத்து குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்,என்பது கழகத் தோழர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்.


சக்ரவர்த்தி இவரும் பல படங்களை இயக்கினார்.உத்தரவின்றி உள்ளே வா, திக்குத் தெரியாத காட்டில் போன்றவை,குறிப்பிடத்தக்கவை(இவர் செல்வி ஜெயலலிதாவின் உறவினர் என்பது கூடுதல் தகவல்)


தற்காலத்தில் புகழ் பெற்ற டைரக்டர்களாக விளங்கும் P.வாசு,சந்தான பாரதி போன்றவர்களும் ஸ்ரீதரின் தாயாரிப்புகளே.


ஸ்ரீதர் அறிமுகம் செய்த நடிக,நடிகையரில் பட்டியல் மிக நீளமானது.தேன் நிலவில் புது நடிகையை அறிமுகம் செய்தார்.பெயர் தெரியவில்லை. பட்டதாரியான அந்தப் பெண் அதிகப் படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. 71-ல் திமுகாவில் இருந்த காமராஜரைத் தோற்கடித்த சீனிவாசனை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.என்று நினைக்கிறேன்.அதன் பின் படத்தயாரிப்பாளராக மாறினார்.


சுமைதாங்கியில் விஜயலட்சுமி,காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்,காஞ்சனா,ராஜஸ்ரீ.நாகேஷும் இவர் படங்களில் நடித்துத்தான் ஆரம்பகாலத்தில் புகழ் பெற்றார்.வெண்ணிற ஆடையில்,ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி,வெண்ணிற ஆடை நிர்மலா,ஆஷா(பிற்பாடு சைலஸ்ரீ என்று பெயர் மாற்றிக் கொண்டார்).நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மாலி,அலைகள் படத்தின் மூலமாக தமிழுக்கு இன்று கன்னடத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஷ்ணுவர்தன், ஓ...மஞ்சு படத்தில் கவிதா...இன்னும் எத்தனையோ பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்.


வசனத்தில் மாற்றம் கொண்டு வந்தது(அடேய் பழி! போன்ற அந்தக் கால கல்லூரி மாணவர்களின் சொல்லாடலைப் பயன் படுத்தினார்,இந்த வார்த்தை சக மாணவனை மச்சி,மாம்ஸ் என்று அழைப்பது போன்றது),தமிழ் சினிமாவை ஸ்டூடியோவில் இருந்து வெளி உலகத்திற்க்கு கொண்டு வந்தது.வசன சினிமாவை காட்சி சினிமாவாக மாற்றியது,அழகிய வண்ணப் படங்களுக்கு தமிழ் சினிமா மாறக் காரணமாக இருந்தது,தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்களை வட நாட்டு சினிமா உலகம் ஆச்சரியமாகப் பார்க்கும் படி செய்தது, இன்னும் இது போன்ற எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் ஸ்ரீதர். வாழ்க வளர்க ஸ்ரீதரின் புகழ்!


வால் பையன் சினிமா தொடர்பான தொடருக்கு என்னை அழைத்திருந்தார்.இந்த மாதிரி செயின் விளையாட்டெல்லாம் பிரபல பதிவர்கள் செய்வது என்று ப்ளீச்சிங் பௌடர் எழுதியிந்ததாலும்,நான் பிரபல பதிவர் இல்லை என்பதாலும்,அதை விட முக்கியமான விஷயம் அடுத்தது நான் யாரை அழைப்பது என்பது எனக்குத் தெரியாததாலும்,இணையத்தில் எனக்குத் தெரிந்த ப்ளீச்சிங் பௌடரை கூப்பிட முடியாததாலும் (அவர்தானே இந்த செயின் விளையாட்டை கிண்டல் செய்த்து) இன்ன பிற காரணங் களாலும், வால் பையன் அழைத்த செயின் விளையாட்டு விளையாட முடியவில்லை.
எனவே வால்பையன் கூப்பிட்ட மரியாதைக்காக இந்தக் கட்டுரை.
நன்றாக இருந்தால் வால் பையனைப் பாராட்டவும்,நன்றாக இல்லையென்றால் அவரையே திட்டவும்!. :))




















ஈழத்தமிழர்களுக்காக மனிதச்சங்கிலியும்! பந்த்களும்!

Posted on Tuesday, October 21, 2008 by நல்லதந்தி

ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் ஒரு அரசியல் விளையாட்டு நடக்கப் போகிறது.இன்று நடப்பதாக இருந்த மனிதச் சங்கிலி வருகிற 24-ம் தேதி தள்ளி வைக்கப் பட்டு இருக்கிறது.நான் இதில் எதுவும் எழுத விரும்பவில்லை.எப்படியோ நம் இனத்தவரின் துயர் தீர்க்கப்பட்டால் சரி!.

பதினோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று ஒரு சடங்கு நடந்த போது ஆனந்த விகடன் எழுதிய தலையங்கத்தை கீழே படியுங்கள்.அது நடந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் எந்த வித மாற்றமும் இல்லாத ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.இதிலிருந்து இம்மாதிரியான பந்த்,மனித சங்கிலி போன்றவைகள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளால் நடத்தப் படும் சம்பிரதாயமான சடங்குகள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.


இனி தலையங்கம்- 08-06-1997 இதழில் வெளிவந்தது!.

பந்த் என்கிற சடங்கு!


பதினைந்து ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாட்டில் இது வரை நடந்த ‘பந்த்’ எத்தனை என்பது கணக்கிடுவது கஷ்டம்!.அதனால் என்ன பலன் ஏற்பட்டது என்று கணிப்பதும் கஷ்டம்!. இப்போது மீண்டும் ஜூன் 6-ம் தேதி ஈழத்தமிழர்களுக்காக ‘பந்த்’ நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் சிங்கள அரசியல்வாதிகள் ஒரு தலைப்பட்சமாக நடக்கும் அநீதி ஒரு புறம்.அதே நேரத்தில் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஓரே இயக்கமாகக் காட்சிதரும் விடுதலைப் புலிகள் அமைப்பும்,’விரோதிகள் யார்...சகோதரர்கள் யார்....நண்பர்கள் யார்’ என்று புரியாமல் வெறித்தனமாகச் செயல் படும் இயக்கமாக மாறிவிட்டது.
ஈழத்தமிழர் வேதனை பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது.அதோடு,ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ஆதரவும்,இந்தியாவின் ஆதரவும் தேவையில்லாதது போல விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்து விட்டது!.

தமிழ்நாட்டின் குரலை சிங்கள அரசும் லட்சியம் செய்யாது.விடுதலைப் புலிகளும் காதில் போட்டுக்கொள்ளப் போவதில்லை.

இந்நிலையில்’பந்த்’ நம் கையாலாகாத நிலையை உணர்த்தும்! வெறும் சடங்காக நடந்து முடியும்!

ஹோய்! ஹோய்! ஹோய்! சும்மா ஒரு தமாஷூக்கு!

Posted on Monday, October 20, 2008 by நல்லதந்தி




பல நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை!.இது நிஜம் தான் என்று நான் இத்தனை நாள் பதிவு எழுதாத போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இப்போ ஏண்டா எல்லாரையும் இம்சை பண்றாய் என்று கேட்டால்,அதற்க்கு காரணம் உலகப்புகழ் பெற்ற பதிவர்தான்.

அவரு பல வருடங்கள் கழித்து இப்போ திரும்ப பதிவு எழுதியிருக்காராம்.என்னக் கொடுமை வடிவேலா!.சிரங்கு புடிச்ச கை சொறியாம இருக்குமா!.நாலுநாள் பினாத்தெலயாம் .நாலாவது நாள் எல்லோருக்கும் எழுத்துக் கொடுமை பண்ணும் போது இந்த டயலாக்!.

அவரு பதிவு எழுதினாரா போனாரா அப்படின்னு இல்லாம எங்களை நோண்டியதால இந்த பதிவு.இல்லேன்னா இந்தக் கொடுமையை எவன் எழுதுவான்!.

நான் எங்கேயோ படிச்சது!

”இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...
 - உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
 
- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.
 
- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.
 
- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.
 
- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.
 
- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
 
- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
 
- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.
 
- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.
 
- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.
 
எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. ”

ஒரு புண்ணாக்கும் உங்களாலேயும் சரி எங்களாலையும் சரி எதுவும் நடக்கப் போறதில்லைன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே! .அப்புறம் எதுக்கு இந்த ஈர வெங்காயம்!. 

”முன்பு என்னை நண்பர் என்று சொல்லிக்கொண்ட வால்பையன் என்பவரும், அவரது உருப்படாத 'மூல' வியாதி நண்பர்கள் சிலரும் சேர்ந்து எனக்கு ஒரு போலி ஐடி உருவாக்கி ஏதோ எழுதிவருவதாக சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.”

என்னய்யா இது !.உங்களுக்குப் புடிக்கலைனா இது தான் மரியாதையா?.இவரது கக்கூஸில் இவர் இடம் கொடுக்கலையாம்.அதுக்காக எங்களுக்கு மூல வியாதியா?.அதுவும் உருப்படாத ஆளுங்களாம் ! சாமி நாங்க இந்த இணையத்தில எழுதி எந்த கோட்டையையும் கட்டப் போறதில்லை.அத நல்லத் தெரிஞ்சிக்கிட்டதால் தான் இந்த பீலாவை விடாம உருப்பட வழியைப் பாத்துகிட்டு இருக்கோம்!.நீங்க நல்ல எழுதி எதோ நோபல் பரிசு அப்படிம்பாங்களே அதை வாங்குங்க!.கலைஞர் அடிப்பொடியா இருக்கறதாலே கூட்டத்தோட கும்பலா கலைமாமணியாவது வாங்கிக்கிங்க!.நாங்க இதுக்கு ஏன் வருத்தப் படப் போறோம்!.

அடுத்தது போலி ID யாம் !.இந்தக் கொடுமைய என்னான்னு சொல்ல!.
இப்போ ஒரு உண்மையைச் சொல்றேன்!.நீங்க நினைக்கிற மாதிரி வால்பையன்,நல்லதந்தி,ப்ளீச்சிங் பௌடர், எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.எல்லாம் ஒரே ஆள் அல்ல!.வால்பையனுக்கும் எனக்கும் பழக்கம் உண்டு.ஆனால் நண்பர் ப்ளீச்சிங் பௌடர் இணையதின் மூலம் மட்டுமே பழக்கம்!.அதே போலத்தான் நண்பர் பக்கிலுக்கும்!

நாங்கள் இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை!.
முதலில் வால்பையனை , அவர்தான்,ப்ளீச்சிங் பௌடர் என்று ஆரம்பித்து புரளியைக் கிளப்பியது உங்கள் கும்பல்தான் அன்றி நாங்களல்ல!.எவ்வளவோ மறுத்துப் பார்த்து சரி விட்டுத்தொலைப்போம் அப்படின்னு விட்டுடோம்.பிறகு உங்களைப் போன்றவர்களை வெறுப்பேத்தத்தான் இந்த விளையாட்டைத் தொடர்ந்தோம்.மற்றபடி வேறு ID யில் எழுதுவதோ, அனானியில வந்து திட்டுவதோ ஒரு பிரபல பழைய பிராமணப் பதிவரை வேறுப்பேற்றவும் ,திட்டவும் நீங்கள் உபயோகித்த வழிகளை நாங்கள் சத்தியமாக உபயோகிக்க வில்லை. உபயோகிக்கவும் மாட்டோம்.

//கொஞ்ச நாட்களாக வலையில் மேய ஆர்வம் இல்லாமல் இருப்பதால் எனக்கு ஒரு இழவும் புரியவில்லை.
 
அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன்//

அடடா என்னவொரு அடக்கமான பொய்!.
மந்திரி மாசம் மும்மாரி பெய்கிறதா?....இணையத்தைப் பற்றி அலட்டிக்காத நாங்களே நாங்க போட்ட பின்னூட்டம் வந்து இருக்கான்னு எட்டிப் பாப்போம்.இணையத்தில வெறிபிடிச்சி அலையிர ஒரு ஆளு,எப்பவோ சலிப்பா வந்து பாப்பாராம்.அப்புறம் எதுக்கு சாமி உக்காந்தா ஒரு பதிவு, நின்னா ஒரு பதிவு அப்படின்னு போடணும்!.

//அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். நகைச்சுவையாக எழுதுவதாக சொல்லி ஆக்‌ஷா ப்ளேடு போட்டு படிப்பவனின் கழுத்தை சுப்பிரமணியபுரம் பாணியில் கதற கதற அறுத்திருக்கிறார்கள். எப்போது ஒருவன் தான் நகைச்சுவையாக எழுதப்போகிறேன் என்ற முன்முடிவுடன் எழுத உட்காருகிறானோ அப்போதே அவனும் (ஆசிரியனும்) செத்து, அவன் எழுதப்போகும் பிரதியும் மரணக்குழிக்குள் மண்போட்டு மூடப்படுகிறது என்று மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பின்நவீனத்துவ சிந்தனையாளர் வெறித்தா போய்க்கோ சொல்லியிருக்கிறார். *****கை நக்கலடித்து அசத்தலாக எழுத *****காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.//

ஐய்யா!,நாங்க எழுதியது நகைச்சுவை அப்படின்னு உங்க கிட்ட சொன்னோமா?.
இதைப் படிச்சவுடனே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது.நாங்க பள்ளிக்கூடத்தில படிச்ச காலத்தில,ஒரு தடவை நானும் என் ஃப்ரண்டும் ஸ்கூலுக்குப் போகும் தடத்தில ஒரு கடை இருந்திச்சி!.(நிறைய கடைகள் இருந்திச்சிங்க நாங்க எப்பவுமே மிட்டாய் வாங்கற கடைங்க ஸ்ஸ் அப்பாடா போதுமா! )
ஒரு நாளு நாங்க ரெண்டு பேரும் மிட்டாய் வாங்க அந்த கடை வாசலில நின்னோம்.கடையில யாருமில்ல.கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு அதுக்கப்புறமும் யாரும் வரலேன்னுட்டு கடைக்குள்ளார எட்டிப் பாத்தோம்.ஒரு கோணத்தில கடையைத் தாண்டி கடைக்காரரோட வீட்டு ஹால் தெரியும், நாங்க எட்டிப் பாத்த்ப்ப அங்க கடைக்கார சில்மிஷ பாண்டி செவுத்தோரமா ஒரு சிட்டுக்கிளியை உருட்டிக்கிட்டிருந்தாரு!.அது அவரோட பொண்டாட்டியான்னு எங்களுக்குத் தெரியாது.இருந்தாலும் பட்டப் பகலுன்னு சொல்லக் கூடாது,காலங்காத்தாலே ,செவுத்தில முட்டுக்கொடுத்து அவரு ஜக ஜகா பண்ணுனதை நாங்க ரெண்டு பேரும் பாத்துட்டோம்.


இங்க காமெடி எங்க வருதுன்னா?..அதுக்கப்புறம் அந்தக் கடைக்காரரைப் பாக்கும் போதெல்லாம் நாங்க ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள சிரிப்பு!.இதில யாராவது மூணாவது ஆள் வந்து அர்த்தம் கண்டுபிடிக்க முடியுமா?.புடிக்கத்தான் முடியுமா?.யாராவது எங்களைப் பார்த்தால் மெண்டல் அப்படின்னுதான் நினைக்கனும்!.ஆனா அந்த கடைக்காரரே வந்து எங்களை லூசுன்னு சொன்னால் சிரிப்பு கூடுமா?.குறையுமா?.அப்படித்தான் இருக்கு உங்க இந்த பத்தி!(*******கை நக்கலடித்து அசத்தலாக எழுத *******க்காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.)

நாங்க எழுதிக்கிட்டது எங்களுக்காக!,இப்ப நீங்க வேற யாரோ எழுத வற்புறுத்தி (ஹி ..ஹி..ஹி..ஹி) அதனாலெ இப்ப எழுதிறீங்களே அப்படி!.எங்க தமாஷை ஏன் நீங்க படிக்கிறீங்க!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதனுன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!.எழுத்துகளின் கட்டற்ற ஒழுங்கற்ற வரையறையற்ற ஒழுங்கு தான் பின்நவீனத்துவம் என்பது என் எண்ணம்.பிரேசிலின் பிரபல எழுத்தாளர் வென்கோ டிஸௌஸோ சொன்னது போல கட்டிய தளைகள் விடுபடும் போது அதனிடையே உள்ள மெல்லிய மின் முடிச்சுத்தான் பின்நவீனத்த்துவம்.இந்த போஸ்ட் மார்டனிசம் தமிழ் எழுத்தாளர்கள் சில பேரால் மிகத்துல்லியமாக கையாளப் பட்டுள்ளது.ஆதவன்,சுப்பிரமணியராஜூ போன்றவர்களை இதில் கை தேர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.
1978-ல் ஒரு முறை ஸ்ரீ வேணுகோபலன் என்கின்ற புஷ்பா தங்கதுரை சொன்னது ஞாபகம் வருகிறது. ”பின் வழிப் புணர்தல் மிக வலிய எழுத்தில் உள்ளதை மிகச் சுலபமாக மண்டி போட்டாள் என்று எழுதினால் அதுதான் பின்நவீனத்துவம்.”

பின்குறிப்பு: பின்நவீனத்துவத்தைப் பற்றி எங்களாலும் உளறமுடியும் என்பதற்குத் தான் இதை எழுதினேன்.மேலே உள்ளதைப் படித்துவிட்டு யாருக்காவது ஜன்னி வந்தால் நான் பொறுப்பல்ல!..கொஞ்சம் கிட்ட வாங்க,பின்நவீனம் அப்படின்னா என்னங்கண்ணா?.......... 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் கண்ணன்.S ஒரு முறை எழுதினார்.”
நாம்பதான் அவரை நோண்டுறோம்.அவர் நம்மை கண்டுக்கவில்லையே” என்று அதற்க்கப்புறம் நான் அந்தப் பக்கமே போகவில்லை!.இப்போ அவர் நம்மை நோண்டி இருப்பதால் தான் இந்த பதில்!.இல்லேன்னா நாம ஏன் இந்தக் கொடுமையை எழுதுறோம்!
(மேல உள்ளது எல்லாம் நேத்து எழுதினது!.கீழே உள்ளது மட்டும் இப்ப எழுதியது)

கடைசியா பதிவு அரசியல் இதோட முடிஞ்சிருச்சி!.அதான் பரிசல்க்கார அண்ணன் பிளீச்சிங் பௌடர் யாரன்னுதான் போட்டுட்டாரே!.
so, வாங்க எல்லோரும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்!.வாங்க பழகலாம்! :))

பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!

Posted on Friday, October 3, 2008 by நல்லதந்தி



ரசியல் செய்வதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஜனங்களைக் கவர நிஜமாகவே அவர்களுக்கு நன்மை செய்து, அவர்களைக் கவர்வது மற்றொன்று வெறும் ஸ்டண்ட் அடித்து அவர்களைக் கவர்வது.

இதில் இரண்டாவது வகை அரசியல் செய்கிறார். நேரு பரம்பரையின் அடுத்த இளவரசர் ராகுல் காந்தி. இந்த ஸ்டைல் நேரு குடும்பத்தின் காப்பிரைட் ஸ்டைல் என்றாலும், நேரு,இந்திராவிற்க்குப் பின் வந்த ராஜீவ் காந்தி இந்த ஸ்டைலை ஜனங்களைக் கவர பயன் படுத்தி தோல்வியே கண்டார்.

தந்தையைப் போலவே தனயனும் தங்களது இந்த குடும்ப காப்பிரைட் ஸ்டைலைப் பயன் படுத்தினாலும்,தந்தையை விட மிக மட்டமான தோல்வியே இவருக்கு இது வரை மிஞ்சியிருக்கிறது.

பீகாரில் முயற்சி செய்தார் தோல்வி.பிறகு உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நேரத்தில் இதைப் பிரமாதமாகப் பயன் படுத்தினார்.அதில் படு தோல்வி!.போதாக் குறைக்கு மாயாவதி வேறு, ராகுல்காந்தி, தலித் மற்றும் ஏழைகளைத் தொட்ட கைகளின் அழுக்கு நீங்க அவர் ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிக்கிறார் என்று குண்டைத் தூக்கிப் போட்டு ராகுல் காந்தியின் மொத்த விளையாட்டுக்கும் ஆப்பு வைத்தார்.

அடுத்து கர்நாடகத் தேர்தலின் போதும் இதே ஸ்டண்ட் செய்தார் மக்கள் அவருக்குப் போட்டது பட்டை நாமம்.இப்போது இராஜஸ்தானில் தேர்தல் நெருங்குவதால் இந்த ஸ்டண்டைக் கையில எடுத்துள்ளார்.மக்கள் மீண்டும் பட்டை நாமம் போடுவது உறுதி என்று நம் எல்லோருக்கும் தெரியும்.அது நெத்தியில் மட்டும்தானா? அல்லது உடல் முழுக்கப் போட்டு டெல்லிக்கு அனுப்புவார்களா?. என்பதை கவனித்து இருந்துப் பார்ப்போம். ராகுல் காந்தியின் ராசி அப்படி!

வந்த செய்தி!

அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பாரன் மாவட்டம் அம்ரோலி கிராமத்துக்கு சென்றார். அந்த கிராமம் மலைப்பகுதியில் இருக்கிறது. அங்கு ஏழை மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்குள்ள ஏரியில், கிராம புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, கிராம மக்கள், மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். உடனே ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பணியை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளையும் கேட்டார்.

பின்னர் அவர், ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளி போல சிறிது நேரம் மண் சுமந்தார். அவருடன் சேர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் 40 பேரும் மண் சுமந்தார்கள். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ஏழை ஒருவரின் வீட்டுக்கு, இரவில் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டார். கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இரவில் கயிற்று கட்டிலில் தூங்கினார்.

பின்னர் அவர் காலையில் எழுந்து தன்னுடைய காரில் ஏறி, கோடா நகருக்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நல்லதந்திக்கு உதவியது தினத்தந்தி!

அகர்தலாவில் அன்புவாதிகளின் அன்புப் பரிசு

Posted on Thursday, October 2, 2008 by நல்லதந்தி




திங்கட்கிழமைக்கு அடுத்து செவ்வாய் கிழமை என்பது போல் வழக்கம் போல மீண்டும் குண்டு வெடிப்பு.
திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் குண்டு வெடித்தது.இது அன்புவாதிகளின் வழக்கத்துக்குரிய செயல் என்றாலும் இப்போது புதிதாக ஏன் திரிபுராவில் வெடித்தது என்று விசாரித்தோம்.

ஒரு பத்திரிக்கை நிருபரிடம் கேட்டபோது,இதில் என்ன இருக்கிறது,அன்புவாதிகளிடம் அகர்தலாவில் உள்ள சிலர் தாங்கள் சாக வேண்டும் என்றும் ஆனால் பூச்சி மருந்து வாங்கக் கூட கையில் காசு இல்லை என்று கதறி அழுததாகத்தெரிகிறது.எப்போதுமே இரக்க மனம் கொண்ட நமது அன்புவாதிகள் சிலர் தம் கைக் காசைச் செலவு செய்து அன்பு வெடிகுண்டைத் தயார் செய்து,எங்கிருந்து மேல் ஊர் போக வேண்டும் என்று அகர்தலாவாசிகளிடம் அன்புடன் வினவியதாகத் தெரிகிறது.

அந்த அகர்தலாவாசிகளும் ,அவர்களது வீடு இருக்கும் பகுதியில் இருந்தே போய்ச் சேர வேண்டும்,அப்பதான் பாடியை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகும் செலவு குறையும் என்று கூறியதாகத் தெரிகிறது.உடனே அன்புவாதிகளும் தம் கைக் காசு செலவு செய்து ஆட்டோ பிடித்து அகர்தலாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குண்டு வைத்ததாகத் தெரிகிறது.

இதில் நெஞ்சை நெகிழவைக்கும் விசயம் என்னவென்றால் குண்டு வைத்தவுடன் அகர்தலாவாசிகளைப் பார்த்து நீங்கள் மேல்லோகம் போவதை எங்களால் கண்கொண்டு பார்க்கமுடியாது,எங்கள் மனம் தாங்காது என்று கூறி அழுதவாறே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிச் சென்றார்களாம். என்று அந்த அன்புவாதிகளின் கைக் காசு செலவு செய்து அகர்தலாவாசி மீது அவர்கள் காட்டிய கருணை ஈடு இணையில்லாதது என்றார்.

போலீசாரிடம் விசாரித்த போது அதெல்லாம் இல்லீங்க!.இந்த திரிபுராவில் எல்லோரும் ஏழையாகவும் கல்வியறிவு இல்லாமலும் முன்னே இருந்தாங்க,கிருஸ்துமத பாதிரிகளின் கருணையாலும்,வெளிநாட்டுக்கார புண்ணியவானுங்க நிறைய பணம் அனுப்பி படிக்க வைச்சதாலும்,கிருஸ்துவ மதம் மாறினாத்தான் படிப்பு வரும் அப்படிங்கறதாலே முக்கால்வாசிப் பேர் கிருஸ்வராக மாறிட்டாங்க.அதனால திரிபுரா இந்தியாவிலேயே பணக்கார மாநிலமா ஆயிடுச்சி!.

இப்போ உள்ளுரில் இருக்கிற கொஞ்ச நஞ்ச இந்துக்களுக்கு இந்து மத பண்டிகையெல்லாம் எப்படி கொண்டாடரதுன்னு மறந்து போச்சி!.இப்போ தீபாவளி கிட்ட வர்றதாலே பட்டாசு எப்படி வெடிக்கிறதுன்னு கத்துக் கொடுக்க அன்புவாதிகளிடன் கேட்டு இருக்காங்க போலிருக்கு.அவங்களும் வந்து பட்டாசு வெடிச்சி காமிச்சி இருக்காங்க! அவ்வளவுதான்!.என்றார்.

பின்குறிப்பு: இணையத்தில் தீவிரவாதிகளை தீவிரவாதிகன்னு எழுதறத்துக்கு இப்போ ரொம்பப்பேர் எதிர்க்கிறாங்க.இவங்களுக்கு அவ்வளவு அன்பு அவங்க மேலே.நானும் எதுக்கு வம்புன்னுட்டு அவங்க பேர மாத்திட்டேன். என்ன கொடுமை சார் இது!


வந்த செய்தி!

திரிபுராவில் 7 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில், தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.


வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிலும் நேற்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

மகாராஜாகஞ்ச் பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட், ராதாநகர் பஸ் நிலையம், ஜி.பி.பஜார், கிரிஷ்நகர், மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான அபயநகர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இரவு 10 மணிக்கு மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு இடத்தில் வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


முதல் குண்டு ராதாநகர் பஸ் நிலையத்தில் வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். மற்றொருவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தார். 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ராதாநகர் பஸ் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு மர்ம மனிதர்கள் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டு இருந்ததாகவும் அவர்கள் அங்கிருந்து சென்ற இரண்டு மூன்று நிமிடங்களில் குண்டு வெடித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த சக்தி கொண்ட வெடிபொருட்கள் இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தகவல் அறிந்ததும் போலீசார் குண்டு வெடிப்பு பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக இந்திராகாந்தி நினைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மார்க்கெட் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் 5 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி மத்திய புலனாய்வு துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது யார் என்று இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதற்கிடையில் அகர்தலாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் டி.ஐ.ஜி. நேபாள்தாஸ், `ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி (ஹுஜி) இயக்க தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார். சதிகாரர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.