இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி

காமெடிக்கலைஞர் கருணாநிதி தமிழக மக்களுக்கு எப்பவுமே தன்னால முடிஞ்ச வஞ்சனையில்லாம பல கூத்துக்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறார்.என்றாலும் இந்த மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல் அறிக்கை தமாஷ் நிறைய வித்தியாசமானது.கலைஞர் செய்கிற நகைச்சுவைகள் பொதுவாக மற்றவரைத் துன்புறித்தியே தீரும்.

ஒருவன் அருகே வாழைப்பழத்தோலை போட்டு விட்டு ,அதனால் அவன் வழுக்கி விழும்போது சிரிக்கிற தமாஷ் இரகங்கள்.அதாவது மற்றவன் துன்பத்தில் இன்பம் காண்கின்ற வகைத் தமாஷூக்கள்.ஆனால்,இந்த இடைத்தேர்தலுக்காக அவர் விட்ட அறிக்கைத் தமாஷ் இந்த வகையைச் சேர்ந்ததல்ல.அது ஒரு தமிழக மக்கள் துன்பம் இல்லாமல் இரசிக்கக் கூடிய நகைச்சுவை வகையறாக்களைச் சேர்ந்தது.

அதாவது,எம்ஜிஆர் இருந்த காலத்தில் தமிழா!.என்னை வெட்டிப் போட்டாலும் முட்டி போட்டுக் கெஞ்சுவேன் .கட்டிப் போட்டாலும் கட்டு மரமாவேன் என்று கதறிப் பினாத்திய இரகம்.
அதிலும் தேர்தலை நினைத்துக் கதறி அழும் கட்டத்தில் பினாத்தும் பினாத்தல்கள் ஏ ஒன் இரகம்.சிவாஜி அழுகையையும் அந்த அழுகைப் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாதே என்று அழுகையை மென்று விழுங்கி விட்டு சிரிப்பது போல நடிக்கும் காட்சிக்கு இணையானது ஏன் அதை விட மேலானது. தேர்தல் ஏன் வந்தது(ஏன் வந்துத் தொலைந்தது!) என்று அவர் தலையில் அடித்துக் கொண்டே, கொடுக்கும் விளக்கங்கள் திமுக தொண்டர்களை இப்போதே உதறவைக்கும்.

இந்த அறிக்கையில் அவர் திருப்பத்தூர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் காங்கிரஸிற்க்கு ஆதரவு தந்த விஷயத்தில் அதிகம் புலம்பியதால் இந்தக் கட்டுரை.மற்ற தமாஷ்களுக்கு உள்ளே நான் போகவில்லை.




திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.


ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

அடடா மதிமுகாவின் மேல் கலைஞருக்கு என்ன ஒரு கரிசனம்.அய்யய்யோ மதிமுகாவின் தொகுதியை ஜெயலலிதா அநியாயமாகப் பிடிங்கிக் கொள்கிறாரே என்று கலைஞர் கதறும் பாணியே தனி.

திருப்பத்தூர் தேர்தலின் போது என்ன நடந்தது.காலியாகும் உறுப்பினர் தொகுதிக்கு ஏற்கனவே போட்டியிட்ட கட்சியே போட்டியிட வேண்டுமாம் ,இந்தக் கொள்கையை எம்.ஜி.ஆர் வகுத்தாராம்.உண்மையில் இந்த மரபு கூட்டணிக்கட்சிகளிடையே எம்.ஜி.ஆருக்கு முன்பே ஒரு மரபாகவே இருந்தது.ஆனால் அப்போது அதிமுக.காங்கிரஸ் கூட்டணி இல்லாத காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த சமயத்தில் எதிர் கட்சியான காங்கிரஸிற்க்கு எம்.ஜி.ஆர் ஆதரவு தந்ததற்கான காரணம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு ,ஏற்கனவே கலைஞரின் மேல் கடுப்பாக இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்ரமணியம் சட்டசபைத் தேர்தலோடு திமுக -காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டது என்று பேச அந்த இடைத்தேர்தலிலும்,இன்றைய திருமங்கலம் இடைத்தேர்தலில் கலைஞர் தடுமாறுவதைப் போல அன்றும் தடுமாறினார்.

தேர்தலில் காங்கிரஸிற்க்கு ஆதரவு ஆனால் கலைஞர் பிரச்சாரத்திற்க்குப் போகவில்லை.ஆனால் காங்கிரஸிற்குத் தீடீர் ஆதரவு தந்த எம்.ஜி.ஆர் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்க்கு வேலை செய்யாமல் ஜனதாவிற்கு வேலை செய்து தங்களுக்கு மிகவும் பழக்கமான, கூட இருந்தே கழுத்தறுக்கும்  உள்ளடி வேலைகள் செய்தனர்.( பா.ம.க கவனிக்க ).அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட திரு.அருணகிரி வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தலைவர்களைக் கூடப் பார்க்காமல் முதலில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத்தான் ஆசி பெற்றார்.திமுக தலைவர்களைப் பார்க்கமாட்டேன் என்று அறிக்கையே விட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி பணால் ஆனது.எம்.ஜி.ஆரின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

எனவே திருப்பத்தூர் தேர்தலில்,எம்.ஜி.ஆர் காங்கிரஸை ஆதரித்ததன் காரணம் முழுக்க முழுக்க திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கத்தான்.


கலைஞரின் அறிக்கையை முழுமையாகப் படித்து சிரிக்க விரும்புகிறவர்களுக்கு.கீழே அவரது கட்டுரை.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.


இப்போது தேர்தல் எதற்கு?:



மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.


நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.


அதற்காக இப்படி `விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.



ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:



இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.


உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.


நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.



உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.


ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.



ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.



மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட `எஸ்மா', `டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;


அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.


அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!

Posted on by நல்லதந்தி



ஆதரவற்று ரயில் நிலையத்தில் தவித்த ஐந்து வயது இந்துக்குழந்தையை வளர்த்து வந்தார் முஸ்லிம் மேஜிக் நிபுணர்; 13 ஆண்டுகள் கழித்து திடீரென போலீஸ் தலையிட்டு தந்தை - மகளை பிரித்ததும், கோர்ட்டுக்கு போய் போராடி மீட்டார்!இரு வேறு பட்ட மதமாக இருந்தாலும், மனம் குறுக்கே வரும் போது, மதம் பெரிய விஷயமல்ல என்பதை இந்த தந்தை - மகள் நிரூபித்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காத்ரி; மேஜிக் நிபுணர். மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி யில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்தார். ஊர் திரும்புவதற்காக ரயிலில் ஏறும் போது, பிளாட்பாரத்தில், ஒரு குழந்தை அழுதபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தது.அரை மணி நேரமாக அதை கண்காணித்து வந்த காத்ரிக்கு அதை விட்டுப்போக மனதில்லை. அதன் அருகே சென்று, குழந்தையிடம் விசாரித்தார். அதற்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை.


யாரோ தன்னை பிளாட்பாரத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டதாக கூறியது.எல்லா பிளாட்பாரங்களிலும் சென்று தேடியும் குழந்தையுடன் வந்தவர்களை காணவில்லை. அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை காத்ரிக்கு. தன்னுடன், ரயிலில் அழைத்துச் சென்றார். பெயரை கேட்டபோது, வர்ஷா என்று கூறியது; எல்லாரும் தன்னை முன்னி என்று செல்லமாக அழைப்பர் என்றும் கூறியது. இந்த சம்பவம் நடந்தது 1995ம் ஆண்டில்.


குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள தன்காரியா என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். வர்ஷாவை அவர் தன் மகளை போல வளர்த்துவந்தார். பின், அவர்கள், ஆமதாபாத் மாவட்டம், ரமோல் என்ற இடத்தில் குடியேறினர்.தன்காரியா கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வர்ஷா வளர்ப்பு மகள் என்பது தெரியும். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் வர்ஷாவுடன் பகக்கத்து வீட்டுக் குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் பழகி வந்தனர்.


இந்நிலையில், சில மாதங்கள் முன், அக்கா,தம்பி இருவரும் தங்கள் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள காத்ரி வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் விஷயத்தை கேள்விப்பட்ட காத்ரி, வீட்டில் தங்கிக் கொள்ளச்சொன்னார். அவர்களை சமாதானப்படுத்தி அப்பாவிடம் ஒப்ப டைக்க முடிவு செய்தார். இதற்குள், அவர்களின் அப்பா, தன் மகள், மகன் இருவரையும் காத்ரி தான் கடத்தி வைத்திருக்கிறார்; அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீசில் புகார் செய்தார்.


காத்ரி வீட்டுக்கு வந்த போலீஸ், அங்கிருந்த அக்கா, தம்பியை மீட்டு, அவர்களின் பெற் றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்து, அவள் சொந்த மகள் இல்லை என்று தெரிந்ததும், அவளை அரசு காப்பகத்தில் சேர்த்து , காத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் காத்ரி வழக்கு போட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், வளர்ப்பு மகளாக வர்ஷா மீது உரிமை கோர முடியாது என்று கூறி அவர் மனுவை கோர்ட் நிராகரித்தது.


செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் காத்ரி. அவர் மனுவை ஏற்ற கோர்ட்," இத்தனை ஆண்டுகள் காத்ரியிடம் வளர்ந்துவந்த வர்ஷாவை அவரிடம் ஒப்படைத்து விடலாம்; இதற்கான உரிய ஆவணங்களை அவர் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் காத்ரி, - வர்ஷா ஒன்று சேர்ந்தனர். "என் பாச மகள் கிடைத்து விட்டாள்; அது போதும்' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் காத்ரி.


நன்றி: தினமலர்

பிராமணர்கள் கோழைகள் இல்லை!

Posted on Sunday, December 14, 2008 by நல்லதந்தி




ஜெமினிகணேசனைப் பொறுத்த வரையில் அவர் “சாம்பார்” என்ற ஒருஅடை மொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.அது அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனபதால் ,அவ்ரைக் கீழ்மைப் படுத்த இருக்கலாம்.ஆனால் சாம்பார் என்ற பெயர் வந்த காரணம் வேறு என்று நான் இதே இணையத்தில் படித்திருக்கிறேன்.அது ஏதோ ஒரு திரைப் படத்தின் மூலமாக வந்தது என அறிகிறேன்.ஆனால் அது கோழை என்று அடைமொழியாகி அவர் சார்ந்த வகுப்பை கிண்டலடிக்க தி.க.,திமுக, கும்பல்களுக்கு உதவின.நிஜத்தில் அவர் அன்றைய காலத்தில் இருந்த மற்ற நாயக நடிகர்களை விட அதி தைரியசாலி என்பதே உண்மை.

விஜயா-வாஹினி புரெடெக்‌ஷன் சார்பில் ,அவர்கள் தயாரித்த இரு மொழி படத்தில் ஹீரோ மாடியில் இருந்து குதிக்கும் காட்சி ஒன்றுண்டு.அந்தப் படத்தில் தமிழில் நாயகனாக நடித்த ஜெமினி கணேசன்.இருபதடி உயரத்தில் இருந்து அநாவசியமாகக் குதித்தார்.அதன் தெலுங்குப் பதிப்பில் நடித்த என்.டி.ராமராவ் சிறிது தயக்கப் படவே அவருக்குப் பதிலாக ஜெமினி கணேசன் மாடியில் இருந்து குதித்து டூப்பாக நடித்தார்.ஆக திரையுலகில் டூப்பாக ஒரு பிரபநடிகருக்கு மற்றொரு பிரபலம் நடித்தது.அதுவே முதல் முறை.ஒருவேளை கடைசி முறையாகவும் இருக்கலாம்.அடுத்த மேட்டர்.........................

ஜூபிடர் பிக்சர்ஸின் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள’ படத்திற்கென ஒரு போர்காட்சி நெப்டியூனில் படமாகி வந்தது.அப்பொழுது, நட்சத்திரங்களில் மிகவும் அதிக நெஞ்சுத் துணிவுள்ள பேர்வழி யார் என்பதைப் பற்றி கேள்வி வந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரைச் சொன்னார்கள்.அந்த சமயம் அங்கே இருந்த ஒர் இளம் நாடிகர் புன் சிரிப்புடன்,” நான் கூறட்டுமா?,அந்த துணிச்சல் நடிகர் யாறென்று!” என்று கூறி விட்டு “ஜெமினி கணெசனின் துணிச்சல் யாருக்கும் வராது,” என்று சொல்லி பின் கண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சியை விவரித்தார்.

புதுக்கோட்டை ராஜவம்சத்தைச் சேர்ந்த நடுத்துரை என்பவர் அப்போது தங்கியிருந்தார்.அவர் ஜெமினிகணேசனின் நெருங்கிய நண்பர்.தமது நண்பரைப் பார்க்க போயிருந்தார். நடுத்துரை பேச்சோடு பேச்சாக, ” நீங்கள் சினிமாவில் பல துணிகரச் செயல்கள் செய்வதல்லாம் வெறும் நடிப்புத்தானே?,” என்று கேட்டார்.

“நிஜமாய் எனக்கு மனோ தைரியம் உண்டா என்று பார்க்க ஒரு பரிட்சை வேண்டுமானால் வையுங்களேன்” என்றார் ஜெமினி கணேசன்.நடுத்துரை உடனடியாக ஒரு பரிட்சை வைத்து விட்டார்.

ஜெமினிகணேசனை உட்கார வைத்துஅவர் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தார் நடுத்துரை.நண்பர் நடுத்துரை குறி பார்த்து சுடுவதில் சூரர்.தொலைவில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த ஜெமினி கணெசனின் உதட்டிலிருந்த சிகரெட்டைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார்.தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!

Posted on Friday, December 12, 2008 by நல்லதந்தி



ஊட்டி,குன்னூர் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளைப் படமாக்க அதிகாரிகளின் அனுமதி தேவை.அனுமதியை வாங்க தேவர் கையாளும் முறை மிகுந்த ரசமாக இருக்கும்.

முதலில் தேவர் அதிகாரியிடம் போவார்.(தொடர்ந்து தேவர் அப்பகுதிகளிலேயே படங்கள் தயாரித்து வருவதால் அனேகமாக அதிகாரிகள் அனைவரும் அவருக்குத் தெரிந்தவர்களே.

“முருகா” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு,அதிகாரியினுடைய காலடியில் கீழே உட்கார்ந்து விடுவார்.”என்னங்க இது,எழுந்திருந்து மேலே உட்காருங்க!” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா!’ என்று கூறித் த்ம்மை தாம் யார்,வந்த விஷயம் என்ன என்ற விவரங்களைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்.

ஒருக்கால் அதிகாரி,”அது மிகவும் ஆபத்தான இடம் அனுமதி அளிக்க இயலாது” என்று மறுத்து விட்டால்,தேவர் விட்டு விடமாட்டார்.

மறுநாள் நேரே அதிகாரியின் வீட்டிற்குப் போய்விடுவார்.அதிகாரியின் மனைவியைப் போய் பார்ப்பார்.”முருகா!” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்?” என்று பாவத்துடன் சொல்வார்.அதிகாரியின் மனைவி சுவாரஸ்யமாகக் கேட்டு, “ச்சூ...ச்சூ..” என்று சூள் கொட்டுவார்.அந்த நேரம் பார்த்து, “இந்த மாதிரியான கட்டத்தைப் படமாக்க அந்தக் காடுதான் சரியான இடம்.உங்க வீட்டுக்காரர் அனுமதி மறுக்கிறாரே” என்று முடிப்பார்.

அவ்வளவுதான் அந்த அம்மாள் சிபாரிசில் அதிகாரியின் அனுமதியுடன் தம்பதிகளுக்கு ஒரு “முருகா” போட்டு விட்டு வெற்றியுடன் திரும்புவார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு படத்துக்கு குந்தா அணைக்கட்டுக்கருகில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.கதாநாயகன் கோஷ்டியுடன்,எதிரிகளின் நூற்றுக் கணக்கான வாள் வீரர்கள் மோதும் காட்சி அது.சிப்பாய்களுக்கான உடைகளையெல்லாம் தயார் படுத்தி விட்டனர்.ஆனால் சிப்பாய்களாக வேஷம் போட ஆட்களைத்தான் காணோம்.

தேவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியாமலேயே இருந்தது.ஆனால் கூட வந்த நடிகர்கள் அனைவரும் ஆர்ச்சரியப் படும் படி சிப்பாய்களாக நடிக்க ஆட்களைக் கொண்டு வந்து அக்காட்சியைப் படமாக்கி விட்டார்.

அவர் எங்கிருந்து,எப்படி ஆட்களைத் தேடிப்பிடித்தார் என்பது பிறகு தெரிய வந்தது.குந்தா அணைக் கட்டு வேலையையே ஒரு நாள் நிறுத்தி விட்டார்.அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களை எல்லாம் ஒரு நாள் லீவு போட வைத்து ,அவர்களுக்குச் சிப்பாய் உடைகளை மாட்டி,கையில் கத்தியையும் கொடுத்து விட்டார்.

வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.

இவனை என்ன செய்தால் தகும்?

Posted on Thursday, December 11, 2008 by நல்லதந்தி



திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர். செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் மாடி வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.

சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி செய்தி!

மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!

Posted on Wednesday, December 10, 2008 by நல்லதந்தி

நான் பெங்களூர் போகும் போது எல்லாம் ஹொசூரைக் கடக்கும் போது “மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம்” என்று எழுதப் பட்ட பெரிய வளைவைப் 
பார்த்தவுடன் ஒரு முறையாவது நாம் போய் அவர் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.பேருந்தில் இருந்து இறங்கி நகரப்பேருந்திற்க்கு காத்திருந்து (எத்தனை மணிநேரத்துக்கொன்றோ) அதைப்பிடித்து போய்ப் பார்க்க 
வேண்டிய அசெளகர்யத்தை நினைத்தவுடன் அந்த நினைப்பு மாறிவிடும்.

இந்த முறை பெங்களூரு சென்றது டூ வீலரில் என்பதால்,கட்டாயம் தொரப்பள்ளி செல்லவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அப்போது எடுத்த சில 
படங்களைப் பதிவிடுகிறேன்.நேரம் கிடைத்தால் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

               தொப்பூர் கணவாய் காலை வேளை
                         பாலக்காடு அல்ல! பாலக்கோடு

இராயக்கோட்டை

முன்வாசல்
நுழைந்தவுடன் இராஜாஜி



புகைப்படக் காட்சிகள்



சேலத்தில் அவர் வாழ்ந்த வீடு
வெறும் மூங்கில் தடிகளால் வேயப்பட்ட வீடு
வீட்டுக்கருகில் அழகிய சிறு நதி




ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1

Posted on by நல்லதந்தி



இன்றல்லோ கம்பன்
இன்றல்லோ ராச சபைக்கு
ஏற்கு நாள் ---இன்றல்லோ
இறந்த நாள்;புன் கவிதை
பூ மடந்தை வாழ,
புவி மடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாங்கும் 
நாள்!

என்று ஒரு பாட்டு,கவிச்சக்ரவர்த்தி கம்பன் இறந்து பட்ட போது ஒரு கவிஞன் பாடியதாக வழங்கப் படுகிறது இந்தப் பாடல்.நண்பர் புதுமைப் பித்தன் இந்தப் பாடலை கம்பனேதான் பாடியிருக்கிறான் என்று சாதித்துக் கொண்டிருந்தார். சரசுவதியின் தாலிபாக்கியம் தறி பட்டுப் போயிற்று என்று கூற அவன் ஒருவனுக்குத்தான் அத்தனை தைரியமும்,துணிச்சலும்,கலைத் தேவியிடம் தோழமை உணர்ச்சியும் உண்டு என்பது அவர் வாதம்.

தனது கவிதையின் மேதாவிலாசம் உணரப்படாமல் போவதையும்,அதே வேளை வறட்டு வெள்ளைக் கவிகள் அம்பலமேறி அட்டகாசம் புரிவதையும் கம்பனும் அவன் ஆயுளிலேயே அனுபவித்தே இருப்பான்.அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே அவனே இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறான் என்று அழுத்திச் சொன்னார் புதுமைப்பித்தன்.இதை வலியுறுத்துவது போல,இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருச்சி வானொலி நிலையத்தார் புதுமைப் பித்தனுக்கு ஒரு வானொலிப் பேச்சுக்கு அழைப்பு அனுப்பினார்கள்’பாட்டு எப்படி பிறக்கிறது?’ என்பது பொருள்.

புதுமைப்பித்தன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்தப் பேச்சுக்காக எழுதிய எழுத்துப் பிரதியில் கம்பனைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைக் கூறி,வயிற்றெரிச்சலிலும் பாட்டு பிறக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அத்துடன் நில்லாமல்,கம்பனுக்கு ஏற்பட்டதைப் போல தன்னுடைய வயிற்றெரிச்ச்லையும் இப்படி ஒரு பாட்டாக அமைக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருச்சி ரேடியோ நிலையத்தில் பேசுவதற்காக இருந்த புதுமைப்பித்தன் அதற்கு முன்பே காலாவதியாகி விட்டால்?-- என்ற கேள்வியை அவரே எழுப்பிக்கொண்டு அப்போது தம் எதிரிகள் எத்தனை கும்மாளம் அடிப்பார்கள்,”பய போயித் தொலைஞ்சானா?” என்று எவ்வளவு நிம்மதியுடன் சொல்வார்கள்,புதுமைப் பித்தனின் மிதியடியின் காலடி ஓசையைக் காலனின் அடியோசையாகக் கேட்டுக் கிலியடைந்த இலக்கியப் போலிகள் எப்படி ஆனந்த பள்ளாட்டம் போடுவார்கள் என்பதையெல்லாம் கற்பித்துக் கொண்டு,அந்த வேளையில் புதுமைப் பித்தனின் நண்பர் ஒருவர் இந்த “நரியின் அம்பலக் கூத்தைக்’கண்டு வயிறெரிந்து,அந்த இலக்கியப் போலிகளைப் பார்த்துப் பாடுவதாக,புதுமைப் பித்தனே ஒரு பாட்டு பாடிவிட்டார்.

திருச்சிக்கு என்றான்;
தெந்திசைக்கே சென்று விட்டான்
கிரிச்சிச் சடாச் சத்தம்
கேட்டாயோ?-உரிச்சி
வச்ச ம்டையா வக்கு
அத்த மடையா| எச்சிற்
காசுமடையா போ
டா!

என்று பாட்டு.வயிற்றெரிச்சலின் காரணமாக வல்லின ஓசை செவிட்டில் அறைந்தாற் போல் உறைத்து விழுந்து,எதுகை மோனை இலக்கணங்கள் தட்டழிந்து தறிகெட்டுத் தாவுகின்றனவாம்!

இந்தப் பாட்டுக்கும் திருச்சிக்கும் ஏதோ தெய்வீக சம்பந்தம் உள்ள மாதிரி,புதுமைப் பித்தன் சந்தர்ப்ப பேதத்தால் திருச்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது; அவருடைய பேச்சும் ஒலிபரப்பப் படாமல் நின்று விட்டது.

புதுமைப் பித்தன் கடைசிக் காலத்தில் திருச்சிக்குச் செல்லவில்லை,அதற்க்கும் தெற்கே திருவனந்தபுரத்துக்குத் தான் சென்றார்.ஆனால்,தமிழ்நாட்டின் சாபத்தீட்டு அவரை அதற்கும் தெற்கே-சென்றவர்கள் மீளாத தென் திசைக்கே--வழியனுப்பி விட்டது.ஆம் தமிழ்நாட்டு மறுமலர்ச்சியின் தனிக்காட்டு ராஜாவான புதுமைப் பித்தன் இந்த வருடம் 1948 வருஷம் ஜூன் மாசம் 31-ம் தேதியன்று காலமாகி விட்டார்.


சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன் திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற வேளாள குல ஆசாமி ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவிற்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்யோகம் பார்த்து வந்தார்.

அவர் அங்கு விருதாச்சலத்தில்,ஷதர் கோர்ட் கலெக்ட்டராக இருந்த வெள்ளைக் காரத் துரையிடம் நன் மதிப்பு பெற்று,பதவி உயர்வும் பெற்றார்.அச் சமயம் லகர ளகரம் நிறைந்து,வெள்ளைப் ப்ரங்கித் துரையின் வாயில் நுழையாத தம் பெயரை துரையவர்கள் உத்திரவுப் படி விருத்தாச்சலம் என்று மாற்றிக் கொண்டார்.இந்த விருத்தாச்சலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரன் தான் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன்.

உலகளந்த பெருமாள் பிள்ளையிம் காலம் தொடங்கி,அவர்களின் வமிச பரம்பரை சர்க்கார் ரெவினியூ இலாகாவில் உத்தியோகம் விகித்து,ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.புதுமைப் பித்தனின் தந்தையான ஸ்ரீ வி.சொக்கலிங்கம் பிள்ளை படித்து,பி.ஏ. பட்டம் பெற்று, ஸ்ரீமதி பர்வதம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்று, தென்னாற்காடு ஜில்லாவில் உத்தியோகம் பார்த்து வந்தார்.அப்போதுதான், 1906 ம் ஆண்டு கடலூருக்கருகில் உள்ள திருப்பாதிரிப் புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமாந்தப் புத்திரனாகப் பிறந்தார்.

தமிழ்நாட்டுச் சம்பிரதாயப்படி,புதுமைப் பித்தனுக்கு அவரது தாத்தா விருதாச்சலம் பிள்ளையின் பெயரே சூட்டப்பட்டது.ஸ்ரீ மதி பார்வதியம்மாள் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ருக்மணி என்ற செல்லத்தம்மாள் என்ற பெண் மகவை ஈன்றெடுத்து விட்டு 1914-ம் ஆண்டு தேக வியோகம் அடைந்து விட்டார்.அப்போது சொ.விருத்தாசலத்திற்கு வயது எட்டு; தாயின் பரிபூரணமான அன்பையும் பெற அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை.

தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் உத்யோகத்தின் ஸ்தல மாற்றங்கள் காரணமாக ,புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பும் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.ஸ்திரமற்ற படிப்பால், சொ.விக்கு ஆரம்பக் கல்வி ஒழுங்காக நடைபெறவில்லை.அவருடைய ஆரம்பப் படிப்பு செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் நடந்தேறியது.

“பள்ளிக் கூடத்தில் படிப்பதைவிட செஞ்சி மலைக் கோட்டையில் ஏறிச் சுற்றுவதுதான் எனக்கு பிடித்திருந்தது” என்று சொ.வியே குறிப்பிட்டார்.எனினும் பிறப்பால் அமைந்த புத்திக்கூர்மையால் பாடமும் படித்து வந்தார். ”பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பயல் கலிவெண்பாவை எடுத்து வைத்துக் கொண்டு பாராயணம் செய்வான்” என்று இன்றும் சொக்கலிங்கம் பிள்ளை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்.

1918-ம் வருஷம் சொக்கலிங்கம் பிள்ளை பென்ஷன் பெற்று,தமது பூர்விக நாடாகிய தென்பாண்டிச் சீமைக்கு-திருநெல்வேலிக்கு வந்து குடியேறினார். அப்போதுதான் சொ.வி.க்கு பனிரெண்டு நிரம்பி,பால்யத்தின் பேதமை மறைந்து அறிவு தெளிந்து வரும் பருவம்.திருநெல்வேலியில் தான் அவருடைய பள்ளிப் படிப்பும் ஸ்திரமாயிற்று.தமிழ் மொழி பொருப்பிலே பிறந்தாலும்,தென்னன் புகழிலே வளர்ந்தது போல்,சொ.வி. திருப்பாதிரிப் புலியூரில் பிறந்தாலும்,அவரை ஆளாக்கி விட்டது தென்னன் புகழ் படைத்த திருநெல்வேலிச் சீமைதான்.

சொ.வி.யின் பள்ளிப் படிப்பு திருநெல்வேலி கிறிஷ்தவத் திருச்சபையைச் சார்ந்த அர்ச்.யோவான் ஸ்தாபனக் கல்விக் கூடத்தில் தான் நடந்தேறியது.பள்ளியில் அவர் ஒவ்வொரு வகுப்பிலும் பல தடவை குட்டிக்கரணம் போட்டே வந்திருக்கிறார்.பள்ளிப் படிப்பு இந்தப் புள்ளிக்கு உதவாமல் போய்விட்டாலும் அனுபவக் கல்வியும் அதிகமாகவே அமைந்து வந்தது.பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குத் தயாரானதும் சொ.வி.யின் கல்விக்கூடம் யோவான் கலாசாலையில் இருந்து இந்துக் க்ல்லூரிக்கு மாறியது.திருநெல்வேலி ஜங்கஷ்னில் உள்ள இந்தக் கல்லூரியில் தான் கவிஞர் பாரதியும் கல்வி கற்றார்.இந்தக் க்ல்லூரியில் தான் பாரதி உபாத்தியாரைப் பார்த்து “காள மேகம் ஆசிரியரின் உத்திரவுக்கு பணிந்து மழை பொழியாது” என்று வீராப்புடன் பதிலளித்தார்.

மற்றவை அடுத்த இடுகையில்:-

பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!

Posted on Tuesday, December 9, 2008 by நல்லதந்தி




எழுத்தாளர் புதுமைப்பித்தனுடன் இருந்த போது நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளை நடிகர் சந்திரபாபு கூறினார்.அவைகளில் இதுவும் ஒன்று.

புதுமைப்பித்தன் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.இருமல் வியாதியால் பீடிக்கப் பட்டிருந்த எழுத்தாளரும்,சந்திரபாபுவும் டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.

எழுத்தாளரின் வரவிற்காக ஒரு பத்திரிகாசிரியர் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்.

“அட்டை படமாகப் வெளியிட உங்கள் போட்டோ ஒன்று தேவை” என்று புதுமைப் பித்தனிடம் அவர் கேட்டார்.

புதுமைப்பித்தன் தமக்கே உரித்தான வரட்டுச் சிரிப்பை சிரித்துவிட்டு “என்னிடம் இப்போது ஒரே ஒரு போட்டோதான் இருக்கிறது.அதுவும் உங்களுக்குப் பயன்படாது!” என்றார்.

வந்தவர் விடுவதாக இல்லை. “பரவாயில்லை.அதையே கொடுங்கள்.நான் எதாவது செய்து சரிப்படுத்திக் கொள்கிறேன்.” என்றார்.

புதுமைப்பித்தன் மறுக்கவே வந்தவர் தருமாறு வற்புறித்தினார்.

“சரி, சொன்னால் கேட்க மாட்டீர்கள்.” என்றபடி ஒரு பெரிய கவரைப் பத்திரிகாசிரியரிடம் கொடுத்தார்.அதனுள் இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தார் வந்தவர்.உடனே திரு திருவென்று விழித்தார்.

அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!

அரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா!

Posted on Sunday, December 7, 2008 by நல்லதந்தி




கோல்டன் ஸ்டூடியோவில் ‘சந்திரகாந்தா’படப்பிடிப்பு  நடந்து கொண்டிருந்த  சமயம்அது.காவி உடைகளும்,திரு நீர்ப்பூச்சும் நீண்ட தாடியும் துலங்க, ‘போலிச்சாமியார் வேடத்திலிருந்தார்.டி.எஸ்.பாலையா.

அன்றைய காட்சியில் சாமியாரின் காதலியாய் நடித்த வனஜா, ‘நீங்க இப்படியே போனீர்களானால் உங்களைப் பார்த்து ஜனங்களெல்லாம் உங்கள் காலில் விழுந்து கும்பிடுவார்கள்’ என்று பாராட்டினார்.

அதற்கு பாலையா,’ நன்றாய்ச் சொன்னீர்கள்!.என் மேல் விழுந்து எலும்பை எண்ணி விடுவார்கள்.கால்ம் மாறிவிட்டதம்மா!.போலிகள் பிழைக்க முடியாது என்றார்.

-------------------------------------------------------------------------------------------------


புத்தா பிச்சர்ஸ் படத்தில் நடிக்க வந்திருந்த டி.எஸ்.பாலையா வெற்றிலை போடவென வெளியே வந்த போது அருகில் இருந்த நண்பர் ஒருவரின் கையில் இருந்த தினசரியை வாங்கிப் பார்த்தார்.

அதில் நடிகர் சிவதாணு ஒரு திருடனைப் பிடித்துக் கொடுத்ததற்கு,போலீஸ் இலாகா அவருக்குச் சன்மானம், அளித்த செய்தி வெளி வந்து இருந்தது.


‘இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குப் ப்ழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது’ எனக்கூறி அதைச் சொன்னார் பாலையா.

‘அப்போது அது அரிசி ரேஷன் இருந்த சமயம்.நான் நிறையப் படங்களில் போலீஸ்காரனாக நடித்து வந்த சீசன். சேலத்திலிருந்து திருச்சிக்குக் காரில் வந்து கொண்டிருந்தேன்.

‘இரவு நேரம்.கார் திம்மாச்சி புரம் அருகே வந்ததும்,ஆட்கள் பலர் தலையில் மூட்டையைச் சுமந்து பதுங்கி பதுங்கிப் போவதைப் பார்த்தேன்.எனக்குச் சந்தேகம் ஏற்ப்பட்டதும்,காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினேன்.போலீஸ் உடுப்பு வேறு போட்டிருந்தேன்.மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே வந்துக் கொண்டிருந்த்தேன்.என்னைக் கண்டத்தும் அவர்கள் மூட்டையைக் கீழேப் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.அவ்வளவும் கறுப்புச் சந்தை வியாபாரத்துக்காக கடத்தப் படும் அரிசி! மூட்டைகள்.

‘கையில் இருந்த டார்ச் லைட்டைப் போட்டேன்.ஒரு பெரிய மரத்தின் மறைவில் கைகால்கள் தந்தி அடிக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.நான் அருகே போனதும்,ஐயா,இதை நீங்களே எடுத்துக்கிட்டுப் போங்க.என்னை விட்டுடுங்க’, என்று கெஞ்சினான்.

‘இனிமேல் இந்த மாதிரிச் செய்யாதீங்க ‘ என்று எச்சரித்து விட்டு போலீஸ் முறுக்கோடு மூட்டைகளை விட்டு விட்டு என பயணத்தை மேல தொடர்ந்தேன் என்று கூறினார் பாலையா!.


நடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே!

Posted on Saturday, December 6, 2008 by நல்லதந்தி

பி.வி.என். புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.


குலதெய்வம் ராஜகோபால் சொன்ன பல ரசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

கலைவாணரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒருத்தி அங்கு வந்தாள்.”மவராசா! நிறைமாதக் கர்பிணி ஆஸ்பத்திரிக்கு போகணும் ,உதவுங்கள் “என்று கேட்டாள்.

கலைவாணரோ அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தார்.அவள் துடித்த துடிப்பையும்,கிருஷ்ணன் அவர்களின் அலட்சியத்தையும் கண்டு எனக்குக் கோபம் கோபமாக வந்தது.கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் கலைவாணர் இந்தக் கர்பிணி விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று நான் அவசரப் பட்டேன்.

அவரோ சிறிது கூடப் பதட்டம் காட்டவில்லை.நான்கணா நாணயம் ஒன்றை ஒரு பக்கம் வைத்தார்.ஐந்து ரூபாய் நோட்டென்றை மற்றொரு பக்கம் வைத்தார்.         ”இந்தாம்மா,நீ நிஜமாகவே கர்பிணியாக இருந்தா இந்த நாலணாவை எடுத்துக்க,வேஷம் போடறவளா இருந்தா ஐந்து ரூபாயை எடுத்துக்க” என்று சொன்னார்.

அந்தப் பெண்ணோ,”சாமி,நீங்க இப்படிச் சோதிக்கலாமுங்களா?” என்று சொன்னாளேத் தவிர எதையும் தொடவில்லை.அவளது பார்வை மட்டும் ஐந்து ரூபாய் நோட்டின் மேலேயே பதிந்திருந்தது.

கொஞ்ச நேரத்துக் பின் தான் எனக்கு எல்லாமே விளங்கியது.அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த கந்தைகளை ஒவ்வொன்றாகக் களைந்தப் பிறகுதான் அவள் ஏமாற்று வேஷம் போட்டு இருக்கிறாள் என்பது தெரிந்தது.

கலைவாணர் அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து”இன்றோடு இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடு “,என்று சொல்லி அனுப்பினார்.

நான் என்னுடைய அவசர முடிவுக்காக வருந்தினாலும்,”அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏன் ஐந்து ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கோபமாய் கேட்டேன்.

“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2

Posted on Thursday, December 4, 2008 by நல்லதந்தி

இது ஏற்கனவே போட்ட பதிவுதான்.ஆனால் மீள் பதிவல்ல.வழக்கம் போல் காப்பி பதிவு.இப்போ மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இதைப் போடணும்னு தோணிச்சு.செப்டம்பரில் எழுதியது 
இந்த கட்டுரையின் முடிவில் ”அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம் அப்படின்னு எழுதியிருந்தேன்.யாரும் தேடிப் படிக்கப் போறதில்லை.அதனால் நமக்கு நாமே திட்டத்தின் படி நானே திரும்பவும் போட்டு விட்டேன்.

றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.

எதிர்கட்சிகள் சதி! மன்னிப்பு கேட்ட கையோடு, கம்மிரேட் அச்சு(பிச்சு)

Posted on Wednesday, December 3, 2008 by நல்லதந்தி

தீவிரவாதிகளால் தன் இன்னுயிரை ஈந்த காமண்டர் உன்னி கிருஷ்ணன் வீட்டிற்கு அவருக்கு மரியாதை செய்ய கேரள அரசால் யாரும் வாராததைக் கண்டு கேரளத்தவர்கள் கொதித்ததால் வேறு வழியின்றி அடுத்த நாள் துக்கம் விசாரிக்க வந்த அச்சு, அங்கு உன்னி கிருஷ்ணனின் தந்தைக் கொதித்து வெளியேறுமாறு சொல்ல, அங்கு அவமானப்பட்ட அச்சு பிறகு நாய் இந்த வீட்டிற்க்குப் போகாது என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நம் தலைவர் கலைஞர் பாணியில் நீ தாண்டா கொலைகாரன்!. தீக் குளிக்க வர்றியா?..என்றதைப் போல, உளறிக் கொட்ட நாடே அச்சுவைக் கண்டு கொதித்தது அனைவரும் அறிந்ததே.

பிறகு அச்சு பிச்சுவிற்காக CPM தலைவர் காரம் மன்னிப்புக் கேட்டதும் நாம் அறிந்ததே.அச்சு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொன்னதும் அறிந்ததே!

இப்போதைய செய்தி நம் அச்சு பிச்சு உன்னிக் கிருஷ்ணன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.இதற்க்கு காரணம் பதவியில் இருந்து தூக்கப் படுவோம் என்ற பயமா? .(லாலு இவரைப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று CPM தலைவரிடம் கேட்டுக் கொண்டார்) அல்லது அடுத்த தேர்தலில் CPM ற்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்ற பயமாத் தெரியவில்லை.

இருந்தாலும், வழக்கம் போல உளறுவதை அச்சு பிச்சு நிறுத்தவில்லை.இது எதிர்கட்சிகள் சதியாம்!. இது எப்படி இருக்கு?(கலைஞருக்கு சற்றும் சளைக்காதவர் போலிருக்கு இந்த அச்சு பிச்சு!)