அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!

Posted on Wednesday, August 20, 2008 by நல்லதந்தி


அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!


ஒவ்வொரு வரியாக பத்தி பிரித்துப் எழுதியிருப்பதால் கவிதை என்றே கண்டுணர்க!......


அவர் கவிதை எழுதி சம்பந்தப் பட்டவர்களுக்கு துன்பம் கொடுக்கிறாரோ இல்லையோ,அந்த கவிதையை பிரசுரிக்கும் பத்திரிக்கைகளின் அச்சகங்களில் அச்சு கோர்ப்பவரில் இருந்து,வாங்கிப் படிப்பவர்கள்,அனைவருக்கும் ஜன்னி,பேதி வருவது சர்வ நிச்சயம்!.


இந்த கவிதையில் அவர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கட்டி கலைஞர் தொலைக்காட்சியைப் பார்கின்ற பரவசத்தையும் அளிக்கிறார்!.


அய்யர்களைத் திட்டுவது மாதிரி இருந்தாலும் திட்டு வாங்குபவர்கள் மாறன் மகன்கள் என்பது போலத் தெரிகிறது.அவர்கள் பிராமணர்களா?(தாய் வழியில்).அதனால்தான், தாசில்தார் கலைஞர், அவர்களுக்கு புது சாதிச் சான்றிதழ்(வழக்கம் போல் பிடிக்காத மற்றவர்களுக்கு கொடுப்பது போல) கொடுக்கிறாரா தெரியவில்லை!


கவிதைக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்கள் தயவு கூர்ந்து கீழ் கண்ட முகவரிக்கு ஒரு வரி எழுதிப் போட்டு விடவும்!.


திரு.அச்சுக் கோர்ப்பவர்

முரசொலி அச்சகம்

கோடம்பாக்கம்

சென்னை.


பி.கு: கவிஞர் கனிமொழியின் கவிதைகளைக் கண்டு(!) பிடித்து படித்தவர்கள்

படிக்கும் போதே கண்களில் சொர்கம் தெரிவதாகத் பரவசத்துடன் கூறியதாக, கேள்வி!.


பின்னே என்னத்துக்காக கவிதையைப் போட்டாய்? என்பவர்களுக்கு... யான் பெற்ற இ(து)ன்பம்! பெறுக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மைதான்! :)


உஷார். .....இனி கவிதை அரங்கேறும் நேரம்!...


அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;


அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!
(ஸ்ஸ்.....பெரியவங்க பேசும் போது சிரிக்கக்கூடாது!)

அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....


அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?
(ரொம்ப நொந்துட்டார் போலிருக்கே...)

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும் "ஆத்துக்காராள்'' காட்டிய
(இது முரசொலி மாறனின் மனைவிக்கு!)

அன்பும் நன்றியும் கூட ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.


ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி,


அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; "அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;
(இது முரசொலி மாறனின் மகன்களுக்கு)

அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப்பார்த்தேன்


அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!


அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்


படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து


படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
(அய்யய்யோ அவ்வளவு சிரமம் குடுத்திட்டீங்களா? பிரதர்ஸ்!)

உணர்ந்து கொண்டேன்; "அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!
(அடடடா!. இப்பதான் அவர்கள்(அம்மா வழியில்) அய்யர்கள்ன்னு கண்டுபிடித்தாராம்)

உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-


கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்


நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
(யோவ்...வாங்கையா!...நாமும் சிரிச்சிடுவோம், இல்லையன்னா அடுத்த கவிதை ரெடியாயிரும்!........)

14 Responses to "அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!":

Anonymous says:

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!

கோவி.கண்ணன் says:

சூப்பரு !
:)

Anonymous says:

//(யோவ்...வாங்கையா!...நாமும் சிரிச்சிடுவோம், இல்லையன்னா அடுத்த கவிதை ரெடியாயிரும்!........)//

பயமா இருக்கு நானும் சிரிச்சு வைக்கிறேன்! . :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Anonymous says:

super!,kuthungaiya kuthunga!

நல்லதந்தி says:

//கலைஞர் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!//

வந்துட்டீரா! கலைஞர் ஐயா!.இனிமேலெ கவிதை கிவிதை எழுதுவிங்களா? :)

நல்லதந்தி says:

//கோவி.கண்ணன் said...
சூப்பரு !
:)//

பிரம்மரிஷி பட்டம் வாங்குன மாதிரி இருக்கு! :)

யோசிப்பவர் says:

;-D

Anonymous says:

ரொம்ப புல்லரிச்சி போய் எழுதி இருக்கேங்க போலிருக்கு. :) இதை எழுது முடிச்ச பிறகு இந்த "நிலா நிலா ஓடி வா.. பாட்டுல ஆடுன மாதிரி பீல் பண்ணி இருப்பேங்க போல இருக்கு

சின்னப் பையன் says:

:-))))))

நல்லதந்தி says:

/// Koman said...
ரொம்ப புல்லரிச்சி போய் எழுதி இருக்கேங்க போலிருக்கு. :) இதை எழுது முடிச்ச பிறகு இந்த "நிலா நிலா ஓடி வா.. பாட்டுல ஆடுன மாதிரி பீல் பண்ணி இருப்பேங்க போல இருக்கு///

koman முன்னாடியே சொல்லப் படாதா??..நீங்க கொடுத்த இணைப்புக்குத் தெரியாத்தனமா போய்ட்டனே!.கதறியது கலைஞர் அல்ல!.நான் தான் :)

நல்லதந்தி says:

This comment has been removed by the author.

Anonymous says:

Murasoli Marans' wife Mallika is NOT a Brahmin. I don't want to say what caste she is. See the ADMK papers (old) and they would asy what caste she is. Besides, after Dayanidhi Maran married a Brahamin and became CENTRAL MINISTER Mallika was baptized to Brahmin caste; the reason power brokers wants to, as always (you know who they are) identify with Daynidhi Maran saying you are ALSO brahmin to get favors!!!

Anonymous says:

Contd....

This is akin to Mrs. Subbulakshi Sadasivam aka MS the great singer was born in a Isai vellala community realted Chied Minister. MK.

Peopel world wide were fooled that she was a Brahain....

கூத்தன் says:

நல்ல மொக்கை நகைச்சுவை