தேவரின் திருமுகமும், கொடு முகமும்!

Posted on Sunday, July 12, 2009 by நல்லதந்தி




நண்பர் RV எழுதிய இடுகையைப் பார்த்ததும் வந்த நினைவுகளால் எழுதியது!. முன்பே தேவரைப் பற்றி என்னுடைய இடுகை.

இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!.

ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம்.

முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது.

இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!.

இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!.
நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்‌ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.



ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.
தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு.

பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின.

ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது.

இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!..., இதென்ன இப்படி ஒரு டுபாக்கூர் சம்பவத்தை கதை கட்டுறானேன்னு நினைக்கிறீங்களா?.

இது நிஜமாகவே நடந்த உண்மை, நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.

நான் யோசிக்கிறது என்னன்னா அந்த ஹீரோ இராஜேஷ்கன்னாவா? இல்லை தர்மேந்திராவா அப்படிங்கிறதைத்தான்!!!!!!!!!!!!!!!!!

இரட்டை இலையால் விளையும் நன்மை!

Posted on Tuesday, May 12, 2009 by நல்லதந்தி




இது பழைய விஷயம் தான், இருந்தாலும் இப்போ தீடீரென்னு நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நன்மை இந்த இரட்டை இலையால் இருக்கான்னு நான் வியக்கிறேன்., பெரிய விஷயத்துக்கு ஜனங்களுக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்குமோ!.


அப்புறம் நாளைக்கு தேர்தல் . ஹய்யா ஒரு நாள் லீவுன்னு ஜாலியா இருக்கிறதுக்காக நேத்தே சரக்கு வாங்கி வெச்சிருந்தாலும், எந்த வேலையா இருந்தாலும் முதலிலே ஓட்டைப் போட்டுட்டு அப்புறம் உங்க ஜாலியையும், ஜோலியையும் பாருங்க!. இதுக்கும், மேலே உள்ள இரட்டை இலைக்கும்,  நீங்க  சம்பந்தப் படுத்திக்கிட்டா நான் தான் பொறுப்பு!.. ஹி..ஹி...ஹீ....

ஆகவே ஜனங்களே நாளைக்கு மறக்காம ஒட்டுப் போட்டுடுங்க...

இரட்டை இலையாலே செல் போனுக்கே “சார்ஜ்” ஏத்தமுடியும் போது நாட்டுக்கும், நமக்கும் “சார்ஜ்” ஏத்தமுடியாதா?.......




கலைஞருக்கு சில TIPS!

Posted on Friday, May 8, 2009 by நல்லதந்தி

வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.

இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இராஜபக்‌ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.

இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....

விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.

தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.

மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.

ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.

கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?

Posted on Thursday, April 16, 2009 by நல்லதந்தி

தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.

கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.

மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.

கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.

உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!

முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.

இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.

பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.

நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.

எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.

அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.

அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.

த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.

பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை

தமிழ்ப்புத்தாண்டை கலைஞர் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டாடுங்கள்!

Posted on Tuesday, April 14, 2009 by நல்லதந்தி

sun raising


தமிழ்ப்புத்தாண்டை தை ஒண்ணாம் தேதி கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து, எராளமான திராவிட தமிழ்காக்கும் அடிப்பொடிகளின் ஏகோபித்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்ற தலைவர் கலைஞரின் டிவியில் இன்னிக்கு சித்திரை நன்நாள் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளாம்.

தலைவரின் கொள்கையே தனிதான். வீட்டுக்கு ஒரு கொள்கை, நாட்டுக்கு ஒரு கொள்கை. தலைவர் மேடையில் கடவுள் இல்லை (இந்து மதக் கடவுள்) என்று கடவுள் நிந்தனை செய்வார்.மனைவியும், துணைவியும் கோவில் கோவிலாக பூஜை செய்து அதற்க்குப் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஊருக்கெல்லாம் தமிழ் புத்தாண்டை மாற்றிக் காட்டினார். கலைஞர் டிவியில் அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள். 

அதென்ன சித்திரை நன்நாள் பார்பனர்கள் கண்டு பிடித்த (!)தமிழ் வருடமே மாறிவிட்ட போது அந்த வருடம் உள்ளடக்கிய பார்பன மாதங்கள் ஏன் மாற்றப் படவில்லை. போய்த்தொலையட்டும்.

ஏற்கன்வே வினாயகர் சதுர்த்தி அன்று பிற டிவிக்களெல்லாம் கொண்டாத்தில் ஈடு பட்டு பணம் பார்த்த போது கலைஞர் டிவியும் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை, அவர்களும் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று ஒரு என்னவோ உளறி தேவையான அளவிற்க்கு பணம் பார்த்தார்கள்.

இந்த முறையும் சித்திரை நன்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை என்று பினாத்தி காசு பார்க்கப் போகிறார்கள். கொளுகையே எங்கள் கோவணம் என்று ஜனங்களிடம் கதறும் கலைஞர், காசு விஷயத்தில் மட்டும், காசைத்தான் இறுக்கமாக முடிந்து கொள்வாரே தவிர கோவணத்தை யார் உருவினாலும் கண்டு கொள்ள மாட்டார், என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் என்றாலும், நமக்குத்தான் பார்க்க கண்கூசுகிறது!.

அனைவருக்கும் உளம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!



இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?

Posted on Thursday, April 9, 2009 by நல்லதந்தி


பிரியங்காவின் மாமனார் இராஜேந்திர வதேரா நேற்று தீடீரென்று மரணம் அடைந்தார். அவரது உடல் தூக்கில் பிணமாகத் தொங்கியது. இவ்வளவு தான் செய்தி மேலதிக விவரம் பெரிதாக ஒன்றுமில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு செய்தி சஞ்சைகாந்தியின் மாமனாரும், மேனகா காந்தியின் தந்தையுமான திரு. ஆனந்த் மரணம். இது எப்படி நடந்ததென்றால் அவர் வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு நெடுஞ்சாலையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் காணாமல் தேடி இரண்டு நாட்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் பிணமாகக் கண்டு எடுக்கப் பட்டார். துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாகச் சொல்லப் பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார். எப்படி பல் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தள்ளி அந்த நெடுஞ்சாலைக்கு வந்தார். என்பதெல்லாம் அப்போது மர்மமாகப் பேசப்பட்டது. 

அன்று சஞ்சைக்கும் அவரது மாமனாருக்கும் சுமுக உறவு இல்லை அதே போல் இப்போதும் பிரியங்கா தம்பதியினருக்கும் செத்தவருக்கும் உறவு சரியில்லை போலிருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு, களம் இறங்குவது வாடிக்கை. ஆனால் ஒரு பெரிய குடும்பத்து சம்பந்தி ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இருந்தும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு சாதாரண செய்தியாய் வெளியானது ஆச்சரியாக இருக்கிறது.

நமக்கேன் வம்பு!. இந்தத் தற்கொலை செய்தியை கண்டதும், அந்தத் தற்கொலை சம்பவம் நினைவுக்கு வந்தது!. அவ்வளவுதான்!.


இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!

Posted on Sunday, March 29, 2009 by நல்லதந்தி



ஊடகங்களிலும், இணையத்திலும் தமிழகமக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கப் போவதாக பரபரப்பை ஊட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் இலங்கைப் பிரச்சனையில் தங்களுக்கு பெரும் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் தத்தம் சடங்குகளைக் செய்து முடித்து விட்டன. 

இதற்குமுன் பொதுவாக எந்தத் தேர்தலிலும் இலங்கைப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் முன்நிறுத்தியதில்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்யப் போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.

ஒரு வேளை தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே வாக்களிக்கப் போவதாக இருந்தால் என்ன நடக்கும்!. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும்!.

திமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையை நினைத்தால் நெஞ்சே பதறுது. வழக்கமாக, தமிழுக்கும், தலைவனுக்கும் தான் உயிர் கொடுத்துகிட்டு இருந்தோம். இப்போ இதுக்கும் சேர்த்தி உயிரைக் கொடுத்துகிட்டு இருக்கிறதைப் பாத்தா நிஜமாகவே எதாவது செய்யணும் போல இருக்கு. பிரச்சனை பெருசானதுக்கு காரணமே காங்கிரஸ்தான் அதனால அதுக்கு ஓட்டுப் போடக் கூடாது. திமுகாவுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா ஒரு வேளை பி.ஜே.பி ஜெயிச்சி தலைவர் வழக்கம் போல இந்தியாவை மொத்தமா காலி பண்ணலாமுன்னு மந்திரிப் பதவிக்காக தாவ நினைச்சாருன்னா இங்க ஆட்சி போயிடும். திமுக ஜெயிச்சாதானே இந்தப் பிரச்சனை. தலைவரோட ஆட்சியை காப்பாத்த வேறகட்சிக்குத்தான் ஓட்டு போடணும். 

அதிமுகாவுக்கு போடக் கூடாது. தேமுதிகவுக்குப் போடலாமா? வேணாம் அப்புறம் அவங்க வளந்துட்டா, நம்ம ஸ்டாலின், ஸ்டாலினோட மகன்,அழகிரி, அழகிரியோட மகன்,மகள், க்லாநிதி, கனிமொழி, அவுங்க மகன், மு.க.முத்து, அவுங்க மகன், தயாநிதி, அன்புநிதி, அறிவுநிதி,உதயநிதி, இம்சைநிதின்னு இன்னும் எத்தனை நிதி இருக்காங்களோத் தெரியிலை. அத்தனை பேரும் வசதியில்லாம நடுத்தெருவுக்கு வந்து கஷ்டப் படுவாங்க. விஜயகாந்தோட மாமன் மச்சானுங்கதான் நல்லா இருப்பாங்க. 

தமிழனை தமிழந்தான் அழிக்கணுங்கற கொள்கை என்னாகும். அப்போ மிச்சம் இருக்கிறது பி.ஜே.பி தான் அவுங்களும் இலங்கைப் பிரச்சனையில ஆர்வமாத்தான் இருக்காங்க. போனாப் போயிட்டு போவுது இந்த தடவை அவங்களை ஜெயிக்கவெச்சு இலங்கை பிரச்சனையை தீர்த்து புடலாம்.

அதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க என்ன பண்றது. நம்ம கட்சிக்கு ஓட்டு போட்டா ஒரு அம்மா மூணாவது அணி நாலாவது அணின்னு போயிட்டாங்கன்னா?. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே!. 

இந்த மூணாவது அணியச் சேர்க்கிற தேவகவுடா கும்பல் நல்ல காலத்திலேயே தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டாங்க. மூணாவது அணியை நம்புறது வேஸ்ட். காங்கிரஸுக்கு எப்படி போடறது இலங்கைப் பிரச்சனையில எதிரியே இவங்கதானே, அப்புறம் தானே இராஜபக்‌ஷே. திமுகவுக்கு நான் சுடுகாடு போனாலும் ஓட்டு போடமாட்டேன். 

விஜயகாந்து, ச்ச்சீ வேணாம். இந்த ஆளுக்கு என்னமோ நம்ம அம்மான்னு நினைப்பு. நான் கையை நீட்டறவனுக்கு ஓட்டு போடுன்னு சொல்றாரு. அம்மா டயலாகை அம்மா மட்டும் தானே பேசணும். அப்புறம் மிச்சம் இருக்கிறது. பி.ஜே.பி தான்!. சரி ஓட்டு ஏன் வேஸ்டா போவுணும் நான் போடாட்டாஅப்புறம் அழகிரி கும்பல் எப்படியும் போட்டும். அதனால பி.ஜே.பிக்கே போட்டு வைக்கலாம். 

ஒருவேளை எலக்‌ஷன் முடிஞ்சி அவங்க ஆட்சிக்கு வந்தா கருணாநிதி கவர்மெண்ட்டை டிஸ்மிஸ் செய்ய வைக்க அம்மா. பி.ஜே.பி யோட சேர்ந்தாலும் சேரலாம்.  அதனால இலங்கைப் பிரச்சனையும் போனாப்போவுதுன்னு தீர்ந்தாலும் தீரலாம்.

காங்கிரஸ் தொண்டர்: என்னய்யா இது!  எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா!, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி!. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு!. 

யாருக்குப் போடலாம் திமுகவுக்கு போட முடியாது. மொத்தப் பிரச்சனையும் அந்தாளாலேதான். அவரு நல்லவராகாட்டிக்க மொத்தப் பழியையும் காங்கிரஸ் மேல தானே போடறாரு!. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா?. இதுக்கா வேண்டியே திமுக வுக்கு வோட்டு கிடையாது. 

அம்மாவுக்குப் போடலாமா?. அது நல்லாத்தான் இருக்கும் ஆனா அவரு சோனியாவைப் பத்தி பல உண்மைகளை ஜனங்ககிட்டயே சொல்லிடறாரு. காங்கிரஸ் கொள்கையேஅவருக்குத் தெரியிலை. நாம ஆபிஸூக்குள்ளாறதானே அடிச்சுக்குவோம். 

தேமுதிக வுக்கு போடலாமுன்னா அந்தாளு நம்ப வெச்சி கழுத்தறுக்கிற பாலிஸியே நம்ப கிட்டயே காட்டுறாரே!. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே!. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு!. 

மீதி... பி.ஜே.பி தான் ...அதான் நல்லது நாம பண்ணின குழறுபடியை அஞ்சி வருஷம் உக்காந்து கஷ்டபட்டு சரி செஞ்சி அதனால ஜனங்ககிட்ட கெட்ட பேரு எடுத்திகிட்டு வரட்டும். அப்புறம் நாம ஜாலியா உக்காந்துகிலாம். அதனால பி.ஜே.பிக்கே ஓட்டு போடலாம். நாட்டுப் பிரச்சனையோட, இலங்கைப் பிரச்சனையும் சேத்தி வெச்சிகிட்டு திண்டாடட்டும்.

தேமுதிக தொண்டர்:  இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு?.... ஆங்!..போன சட்டசபை எலச்ஷனிலேயே ஒரேஒரு தொகுதி தானே கெலிச்சாரு?. மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங்!...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும்.  அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே? ஆங்....

நாம எப்படியும் தமில் நாட்டில தானே ஆச்சி பன்ன போறொம் . அண்ணனும் இந்தத் தேருதல்ல நிக்க மாட்டேன்னுதானே சொன்னாரு!.அப்ப இந்த ஓட்டு அண்ணனுக்கு எதுக்கு போட்டுகிட்டு, நாம்பளே,  அது வேணாம், இதுவேணாமுன்னுட்ட்டு தானே இவருக்கு ஓட்டு போடறோம். அதானால சும்மா போற உடம்புல பம்பரம் விட்டாக்க தப்பு இல்லன்னு தலைவர் சொன்னா மாதிரி வீணாப் போற ஓட்டை வீணாப் போற பி.ஜே.பிக்கே போட்டுறலாம் ஆங்...... 

பா.ம.க. தொண்டர்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! என்னால தாவ முடியில!. ஒரு தடவை தாவினா....சரி போவட்டும்ன்னு விட்டிடலாம். இத்தினி தாவுக்கு ஒடம்பு தாங்கிலயே!. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம்.  நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி!. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க!. 

இப்ப உங்க வூட்டாளுங்களைத் தவிர யாரும் வரமுடியிலையே!. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க!.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க!. வேற எதுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா காடு வெட்டிய கண்டம் பண்ணதால திமுக வேணாம். 

அம்மா இப்பத்தான் இலங்கைப் பிரச்சனையில் நுழைஞ்சதாலே அதிமுகவும் வேணாம். தேமுதிக நம்ப பரம்பரை எதிரி அதனால அதுவும் வேணாம். மிச்சமிருக்கிறது, பி.ஜே.பி தான். அதுக்கே போட்டுத் தொலையுறேன். இதிலையும் நம்ப கொள்கைதான் நீங்க காங்கிரஸை எப்பவுமே கன்னா பின்னான்னு திட்டி இருக்கீங்க!. இது வரைக்கும் பி.ஜே.பி யை திட்டி நான் பாத்ததே இல்லை. நீங்க பிற்பாடு ஒட்டறதுக்கு வசதியாயிருக்குமுன்னு அதுக்கே ஓட்டு போடப்போறேன்.

திருமாவளவன் தொண்டர்: அண்ணன் சொல்லறது காங்கிரஸை அழிக்கணுமுன்னு, அப்போ காங்கிரஸசுக்கு ஓட்டு போடக்கூடாது. அதனால காங்கிரஸ் கட்டிக் காப்பத்திற அரசுக்கும் ஓட்டு போடக்கூடாது. அப்படியன்னா அது திமுக அரசு!. ..சரி திமுகவுக்கும் ஒட்டு கிடையாது. மிச்சம் இருக்கிறது நம்ப அண்ணன், அவர் திமுக சப்போர்ட் அதனால அண்ணன் சொன்னபடி அவ்ருக்கே கூட ஓட்டு போடகூடாது. வேற யாருக்குப் போடலாம். 

அம்மாவுக்குப் போடலாமுன்னா அண்ணனுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்.  தேமுதிகவுக்கு போடலாமா? .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு!. காங்கிரஸ் எதிரின்னா பி.ஜே.பி நண்பன் தானே!

பி.ஜே.பி தொண்டர்: அப்போ இலங்கையில எதோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும் போலிருக்கு!. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா?. எதா இருந்தாலும், நாம பி.ஜே.பிக்குதான் ஓட்டு போடணும். 

அவுங்களுக்கு நம்மை உட்டா வேற யாரும் கதி இல்லையே!. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது!. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா?. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி!.

எலக்‌ஷன் முடிஞ்சி ரிசல்ட் அன்னிக்கு “ அண்மைச் செய்தி” .

40 தொகுதிகளில் நிற்க ஆளில்லாமல் தடுமாறித்தவித்து பிறகு பி.ஜே.பி பல கட்சிகளைத் தயாரித்து கெளரவத்திற்கு கூட்டணி அமைத்துக் கொண்டது தெரிந்ததே!. தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. 

ப.ஜ.க - 20 ( பாரதீய ஜனதா கட்சி)

அ.இ.ச.ம.க (?) ( ஸ்ஸ்ஸப்பா)-  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  சரத்குமார் பிராண்ட் - 10

அ.இ.ந.க(?) (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  கார்த்திக் பிராண்ட் - 10

மொத்தம் நாற்பதிற்கு நாற்பது வென்றுள்ளன!