பாலாவிற்க்கு பணமே குறியா?

Posted on Wednesday, July 16, 2008 by நல்லதந்தி

அஜித்திடம் "நான் கடவுள்" படத்தின் ஆரம்பக்கட்டத்தில் தகராறு செய்த பாலா,தற்போது தயாரிப்பாளரிடம் தகராறு செய்யத்தொடங்கியுள்ளார்.இரண்டும் பணத்தைக் குறித்தே!.
அஜித்திடம் அடாவடியாக பணத்தை பிடுங்கினார்.இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!.


ஆர்யா, பூஜா நடிப்பில் பாலா இயக்கும் படம் ‘நான் கடவுள்’. இந்தப் படத்தை முதலில் ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இதற்கு பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.3.5 கோடி பட்ஜெட் பேசப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரூ.7 கோடி ஆகும் என்று பாலா தெரிவித்தாராம். இதையடுத்து இந்தப் படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ. 7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்து ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்போது பட்ஜெட் ரூ.15 கோடியை தொட்டுவிட்டதாகவும் பாக்கி பணத்தை தந்தால் மட்டுமே பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு படத்தை கொடுக்க முடியும் என்றும் பாலா கூறியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார். சாய்மீரா நிறுவனம், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்றும் முதலில் பேசிய தொகைக்கே படத்தை கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

5 Responses to "பாலாவிற்க்கு பணமே குறியா?":

Anonymous says:

bala oru adaavadi aal pola theriyuthu. Onne mukkaal padam thaan idhuvarai eduthu irukkaar. Adhukkula ivvalavu koodaathu.

Anonymous says:

அவர் தைரியத்தில் அஜீத்தை மிரட்டினார் என்பது ஒரு ஆச்சரியம்!

Anonymous says:

please mail me.
vettriselvan@yahoo.com

Anonymous says:

//please mail me.
vettriselvan@yahoo.com//

நன்றி வெற்றிசெல்வன். எதை மெயில் பண்றது? :)

Anonymous says:

:)