வெடிகுண்டு புரளி!-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இன்னுமொரு கொலைக்கருவி!

Posted on Wednesday, October 1, 2008 by நல்லதந்தி




யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இப்போது கோவில்களில், கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கான பேர்கள்,நெரிசல்களில் சிக்கிக்கொண்டு இறப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன.எப்போதும் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இவைநிகழ்கின்றன என்றுப் பார்த்தால் அதன் பின்னால் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரப்பல் இளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

முதலில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு நெரிசல் ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்தனர்,அதன் பின்னர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனோ தேவி மலைக்கோவிலில் கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி அன்று நெரிசல் ஏற்பட்டு 162 பக்தர்கள் பலியாகினர்.

இந்த இரு சம்பவங்களின் போதே இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாகக் கருதப் பட்டது.இரண்டு சம்பவங்களிலும் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மூன்றாவதாக இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலையில் நடந்த சம்பவம்.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலை நவராத்திரி விழா நடந்தபோது வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பக்தர்கள் சிதறி ஓடினார்கள். அப்போது நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் உயிர் இழந்தனர்.

பொதுவாக வெடிகுண்டு சம்பவங்களை இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் நிகழ்த்துவதன் நோக்கம் சம்பவ இடங்களில் இறக்கும் மனித உயிர்கள மட்டுமல்ல நாட்டில் இந்து-முஸ்லீம், கலவரங்களைத் துண்டுவதும்,நாட்டில் எப்போதும் ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை மக்களிடையே நிலவவேண்டும் என்பதும்,நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதும் தான்.

எத்தனை வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தினாலும் இந்துக்கள் பொறுமையாக இருப்பது அவர்களுக்கு (பாகிஸ்த்தான் அரசுக்கு!) வெறுப்பைத் தோன்று வித்திருக்கக்கூடும்.கோவிலில் இம்மாதிரியான துர்சம்பவங்களை நிகழ்த்தும் போது குண்டு வைப்பதற்க்கான தொந்திரவும் இல்லை,அதற்கான பழியையும் ஏற்கவேண்டியிராது.மற்ற நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாகவேண்டியிராது. எல்லாவற்றை விட முக்கியமாக இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும் இதனால் சிதைந்து போய்விடும்.எனவே இந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இந்தியத் திருநாட்டில் மதக் கலவரத்தை நிகழ்த்தி அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முடக்கி விடலாம் என்று பாகிஸ்த்தான் அரசு நினைக்கிறது.அதனால்தான் இம்மாதிரியான சம்பவங்கள் இப்போது அடிக்கடி நிகழத்துவங்கியுள்ளன.

மேலும் இணையத்தில் உள்ள சில வலைப் பக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் சிலர் எழுதிவரும் கட்டுரைகள்,மத நெறியைச் சீர்குலைக்கும் நோக்கிலும்,முஸ்லீம்கள் இடையே இந்துத் துவேசத்தை பரப்ப நினக்கும் நோக்கிலும் இருப்பது, வெளிநாட்டுச் சதி, பெரும் அளவில் நம் மக்களைப் பின்னியுள்ளது,என்பதையே உணர்த்துகிறது.

நாட்டு மக்கள்,இந்துக்களானாலும்,சரி முஸ்லீம்களானாலும் சரி தங்களைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது.மதத்தின் பேரால் அன்னிய சக்திகளிடம் அடிமையாகாமல் முஸ்லீம் அன்பர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது!.


வந்த செய்தி!


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மெக்ரன்கார் என்ற பழங்கால கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும்.

15-ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட ராவ் ஜோதா என்ற மன்னர், இந்த கோட்டையில் சாமுண்டா தேவி சிலையை நிர்மாணித்து ஒரு அம்மன் கோவிலை அமைத்தார். பழமை வாய்ந்த அந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதுவதால் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. எனவே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சாமுண்டா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நவராத்திரி முதல்நாள் பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.


நவராத்திரி பூஜையில் பங்கேற்று தேவியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் கூடி இருந்தனர். ஆண்களுக்காக தனி வரிசையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி கும்பிடும் ஆர்வத்தில் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், கோவிலின் முகப்பு பகுதியில் நின்ற ஆண்கள் வரிசையில் இருந்து கீழே சரிவான பகுதியை நோக்கி சில பக்தர்கள் சறுக்கி விழுந்தனர். அந்த சரிவு பகுதி, 75 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இதனால், அந்த சரிவில் நின்ற பக்தர்களும் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.


சுவர் இடிந்து விழுந்து விட்டதாக ஒரு வதந்தியும், கோவிலில் குண்டு வெடித்ததாக ஒரு புரளியும் கிளம்பின. எனவே, ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு குறுகலான பாதையாக இருந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் நடந்தபோது, சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடியதால், காலில் மிதி பட்டு உயிரிழந்தனர். இதனால் ஒரே கூச்சலும், குழப்பமுமாக கேட்டது.

சுமார் 15 நிமிடங்கள் இந்த நெரிசல் நீடித்தது. அதற்குள் 20 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். தனது தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை ஒன்று, அவர் இறந்தது அறியாமல், `அப்பா, எழுந்திருங்கள்' என்று கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. உயிர் பிழைத்த பக்தர்களும் போலீசாருக்கு உதவினர். நெரிசலில் சிக்கி காயங்களுடனும் மூச்சுத் திணறியபடியும் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். மகாத்மா காந்தி மருத்துவமனை, மதுரா தாஸ் மருத்துவமனை, சன் சிட்டி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 180 பேர் பலியாகி விட்டனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் வரும் பட்டியலை சரிபார்த்த பிறகே பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியும். இந்த தகவலை, ஜோத்பூர் மண்டல ஆணையர் கிரண் சோனி தெரிவித்தார்.


சாமுண்டா தேவி கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் நிர்வாக துறை மந்திரி லட்சுமி நாராயண், மாநில உள்துறை செயலாளர் தன்வி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்த தனி வரிசையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவிலுக்கு செல்லவும், திரும்பி வரவும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், முன் ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர்.

விஜயகான்?.இஃப்தார் அரசியலின் இம்சைகள் ஆரம்பம்!

Posted on Tuesday, September 30, 2008 by நல்லதந்தி




அரசியல் தலைவர்கள் இஃப்தார் விருந்து கொடுப்பது.விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அண்ணா போன்ற தலைவர்கள் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.டெல்லி அரசியல்வாதிகள், பொதுவாக காங்கிரஸ்காரர்களால் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஆரம்பித்து இருப்பார்கள் என்றே நினக்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஒட்டுக்காக வித்தைக் காட்டத் தெரிந்தவரான கலைஞரால் தான் இம் மாதிரியான வியாதிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட இந்த விளையாட்டைக் கை கொள்ளவில்லை. எனென்றால் அப்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் முழுமையாக அவருக்கே விழுந்து கொண்டிருந்தது.மேலும் அரசியலில் அவர் மதத்தை கலக்க நினைத்ததில்லை.

இப்போது என்ன நடக்கிறது.இரம்ஜானுக்காக முஸ்லீம்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ இல்லையோ?.இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள் ரம்ஜானை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் தத்தம் கட்சிகளில் உள்ள முஸ்லீம் அடிப்பொடிகளுக்கு சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும் உடனே அரசியல் இஃப்தார் விழாக்கள் ஆரம்பமாகிவிடும்.

கலைஞருடன் ஸ்டாலினும் இன்ன பிற அமைச்சர்களும் பல் வேறு விழாக்களில் பங்கெடுக்க ரம்ஜான் நோன்பு களைக் கட்டத்துவங்கிவிடும்.
ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான குல்லா போட (!) மறு பக்கம் அவர்கள் அவருக்கு குல்லா போட ,அந்த போட்டோக்கள் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாக அமர்களமாக ஆரம்பமாகி விடும் ஓட்டு பொறுக்கும் அரசியல். மற்றத் தலைவர்களாவது விருந்துக்குப் போனோமா,நோன்புக் கஞ்சி குடிக்கிற போஸ் கொடுத்தோமா,விருந்து சாப்பிட்டோமா?.என்று வீடு திரும்பி விடுவார்கள்.

நம் கலைஞர் அப்படி ஒரு சாதாரணத்தலைவரா?.அங்குப் போய் உட்கார்ந்தவுடன் தான் தமது இந்து மதப் பகுத்தறிவு ஞாபகத்துக்கு வரும்.நான்கு வார்த்தை இந்துக் கடவுள் களைத் திட்டினால் தமக்கு நான்கு ஓட்டு சேர்த்து வருமே!.என்ற எண்ணம் வரும் உடனே அருகில் உள்ள முஸ்லீம் அன்பர்கள் முகம் சுளித்தாலும் இந்துக் கடவுளை ஏளனம் செய்து அர்ச்சகர் கலைஞர் ஒரு லட்சார்ச்சனை செய்வார். சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய்யும் வாயால் ,ரம்ஜான் மாதத்திற்க்கு ஒரு மாதம் நோன்பிருப்பதை வாயாரப் புகழ்வார். கிருத்திகை,அமாவசைப் போன்ற நாட்களில் உபவாசம் இருப்பதை கிண்டல் செய்யும் வாயால் நோன்பால் ஏற்படும் உடல் நன்மைகளை முஸ்லீம் அன்பர்களுக்கே விளக்குவார்.தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்.

மறுபக்கம் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தம் பங்கிற்க்கு ரம்ஜான் நோன்பு ஓட்டுக்களுக்கு முடிந்தவரை அடிபோடுவார்.என்ன, செல்வி ஜெயலலிதா தமக்குத்தான் முக்காடு போட்டுக் கொள்வாரேத் தவிர மற்றவர்களுக்குப் போடமாட்டார்.

அப்புறம் வைகோ,ராமதாஸ் போன்றவர்களும் தத்தமது ரம்ஜான் கடமையைச் செவ்வனே செய்வார்கள்.பின்னே செய்யாமல் இருந்தால் ஓட்டுப் போய்விடாதா?

இப்போது புதுத் தலைவர்களான,விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக்(!),தமது கடமையை ஆற்றத் துவங்கியிருப்பார்கள்.

நேற்று விஜயகாந்த் அதிரடியாக தனது பெயரை ”விஜயகான்” என்று மாற்றி தமிழக அரசியலில் ஒரு புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.பாழாய்ப் போன ஓட்டு என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!.

அடுத்து கலைஞரை நினைத்தால் இன்னும் பயமாய் இருக்கிறது.”விஜயகானா”ல் நாலைந்து முஸ்லீம் ஓட்டு தன்னை விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்க்காக மதம் மாறிவிட்டேன் என்று அறிக்கையை விரைவில் அவரிடமிருந்து வந்தாலும் வரலாம்?

இதெல்லாம் ஓட்டுக்காகத்தான் என்று குழந்தைக்குக் கூடத் தெரியும்.ஒரு வேளை முஸ்லீம்கள் தங்களது ஓட்டுக்கள் எல்லாம் அனைத்து தொகுதிகளிலும் முஸ்லீம் லீக்கட்சிக்கு மட்டும்தான், அந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரக்கூடாது,என்று அறிவித்துப் பார்க்கட்டும்.அப்போது தெரியும்! இந்த இஃப்தார் விருந்து வேடிக்கைகள் எல்லாம்!.

"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!

Posted on Monday, September 29, 2008 by நல்லதந்தி




தெள கீர்த்தனாம்பரத்திலே ,இப்போ ’மும்பை’யன்னு அழைக்கப் படற ஷேத்ரம் அப்போ ’பாம்பே’ன்னு அழைக்கப்பட்டு இருந்த காலம்.ஒரு 100 வருடங்களுக்கு முன்னே கம்ப்யூட்டரன்னு சொல்லப் படற வஸ்து அப்போ ’பாம்பே’லதான் கண்டு பிடிக்கப் பட்டதுன்னு நோக்குத்தெரியுமோ?.அதைக் கண்டுபிடிக்கிறப்போ கடைசியாய் கூட மாட ஒத்தாசை செஞ்சது நம்ப கொமாருன்னாவது தெரியுமோ?. கொமாரு யாருன்னு கேக்கறேளா?.இப்பச் சொல்றேன்!.

நம்ம கொமாருக்கு பொறக்கறச்சே வெச்ச பேரு வேறயாக்கும்.அதத்தான் இப்ப நா சொல்லப் போறேன்.அந்த அம்பி பொறக்கறச்சே பெரும் பிரளயம் வந்தாப்புல ஒரு பெருத்த ஷப்தம் கேட்டது.அதக் கேட்ட அவரோட சொந்தக்காரா ...இது சிவனுடைய லீலைதான்,இதெல்லாம் சிவ கணங்கள் எழுப்புற சப்தமான்னோ!. இவ்ன் பொறந்த நேரத்தில மணியொலிங்க கேட்டதால் மணி குமாருன்னு பேர வச்சிப்பிடுங்க்கோ!ன்னுட்டாள்.

இதைக் கேட்ட உடையவா அந்த அம்பிக்கு அந்தப் பேரயே வச்சிட்டா!.செத்த நேரம் கழிச்சி வெளியே வந்து எட்டிப் பாக்கறச்சேதான் தெரிஞ்சது ஒரு பிரம்மஹத்தி TVS ஃபிஃப்டிக்கார படுவா ஆயிலும் போடாம சைலன்சர கழட்டி வீட்டில வெச்சிண்டுட்டு தலதெறிக்க ஓட்டிண்டு போறது!.ஆனா அப்பவே நம்ப அம்பி ராசி சனி ராசின்னு தெரிஞ்சிடுத்து.

கட்டேலே போற அந்த கம்மினாட்டி கடங்காரனோட வண்டியோட டயர் பஞ்சர் ஆகி டமாருன்னு வெடிச்சிடுத்து.அவன் கீழே வுழுந்து கடலைப் பொறி பொறிக்கினான். அப்போ அம்பியோட ராசியப் பாத்து பயந்து.. க்‌ஷமிக்கணும்.. வியந்து அம்பிக்கு வெச்சச் செல்லப் பேருதான் டமாரு கொமாருன்னு.

இப்படிப்பட்ட ராசியான பையனான டமாரு கொமாரு வளர்ந்து வரச்சே!.............................

இந்த இடத்தில தமிழ் படடைரக்க்டருங்க இறந்த காலத்தைக் குறிக்க ஹீரோவோ அல்லது ஹீரோயின் கண்ணுக்கு மின்னாடி கருப்புக்கலர் ரிப்பனை சுத்திக்காட்டு வாங்க.இல்லேன்னா வருங்காலமா இருக்கறச்சே மாட்டு வண்டியோட சலங்கைச் சத்தத்தோட மாட்டோட கால்ல இருந்து அப்படியே மெல்லப் போயி வண்டியோட சக்கரத்தில கேமராவ நிறுத்தி டில்ட் அப் பண்ணுவாங்க.மாட்டு வண்டி கிடைக்காட்டி காரோட சக்கரம்,அதுவுமில்லேன்னா தையல் மிஷினோட வீல் இதில எதினாச்சிம் ஒண்ண காட்டினாப் போதும் அறிவாளித் தமிழ் ஜனங்க புரிஞ்சிக்கு வாங்க....

இப்படியே காலச்சக்க்ரத்தில ஏறி நீங்களும் நசுங்கிடாம வந்துருங்க.

ஸ்ஸப்பா!.இதுக்கு மேலயும் பிராமணாத்து பாஷை தேவையா?.முயற்ச்சி பண்றேன்!.

நம்ப ஹீரோ ஹீரோயிசப்படி ஏழையா இருக்கணும்ங்கறதாலே..இப்போ ஹீரோ டீக்கடையில டெலிவரி அம்பியா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காரு!. அப்படி இருக்கறச்சே,கடைக்கு எதித்தாப்புல கம்ப்ப்யூடர் கண்டு பிடிக்கப் போற கம்பனி அவுங்க கச்சேரி நடத்த ஒரு குடிசை போட்டாங்க.அதில வேலை செய்யுற வேலைக்காரவா கூட அம்பிக்கு நல்ல பரிச்சியமாயிடுத்து. எந்த நேரமும் அம்பியை அழைச்சிண்டும் ,கூப்பிட்டுண்டும் டீ கொண்டு வரச்சொல்லிண்டும் இருப்பா!

இப்படி இருக்கையில ஒரு நாள் ஒரு பெரிய உத்யோகஸ்த்தர் நம்ப அம்பியைப் பாத்து ,”டே ! அம்பி நேக்கு ஒரு டீயும் ஒரு வடையும் கொண்டு வாடா .”ன்னு சொல்லவே பதறியடிச்சுண்டு ,ஒரு டீயையும் முந்தினநாள் போட்ட வடையும் தூக்கிண்டு கம்ப்யூட்டர் கம்பனிக்கு அம்பி ஓடினான்.


அந்த பெரிய உத்யோகஸ்தர் சரியான பசி மயக்கத்தில இருந்ததால ஒரு கையில் செங்கல் பொடி கலரில் இருந்த டீயையும் மறு கையில வடையையும் எடுத்துக் கொண்டு பறக்கா வெட்டித்தனமா சாப்பிடத் தொடங்கினார்.

அந்த நேரம் பாத்தா அந்தப் பாழப்போனவரும் இவருக்கு மேலதிகாரியுமான இன்னொரு பறக்கா வெட்டி “ஸ்வாமி உங்க டேபிள் மேலிருக்கிற வால்வைச் சீக்கிரம் எடுத்துண்டு வாரும்”மென்னு அதி அவசரமாய் கூப்பிட்டுத்தொலைக்க முதல் பறக்காவெட்டி ஒரு கையில் டீயும் மறு கையில் வடையும்,இருந்த காரணத்தால்,வாயில் வேறு பாதி வடையை முழுங்கிக் கொண்டிருந்தாலும், பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததால் ,கமறும் கண்ணீர் நிரம்பிய கண்ணில் நம்ப அம்பியைப் பார்த்து அந்த வால்வை எடுத்து அங்கே கொடுக்குமாறு ஜாடை செஞ்சாரு.

உலகத்தில் பாஸ்பரஸுக்கு அடுத்து தானாகவே தீப்பற்றக் கூடிய கழக புத்திக்காரனாகிய நம்ப அம்பி,அந்த மேலதிகாரியின் டேபிள் மேல் தனியாகவிருந்த வால்வை தேர்ச்சி பெற்ற நாய் வாயில் கவ்வறப்புல கையில எடுத்துக் கொண்டு சடுதியில் அந்த பெரிய ஆபீஸரண்டை கொண்டு கொடுத்தான்.

அதை கம்ப்யூட்டர் முற்றத்தில் ஒரு ஒரமாய் சொருவிய அவர்,ராகு காலம் முடிஞ்சவுடனே சுவிடசைப் போட்டார்.அடடா...என்னவொரு அற்புதம்,அந்த மூவாயிரம் அடி விஸ்தீரணமாய் இருந்த அந்த கம்ப்யூட்டர் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சிடுத்து!.நம்ப அம்பியோட கை பட்டதாலத்தான் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நம்பிய அந்த எமகண்டத்தில பொறந்த அபீஸர்,கொமாருக்கு ”வால்வு தந்த வால் பையன்” அப்படிங்கிற பட்டத்தையும் கொடுத்தாரு!.

அவரு தமாஷாக் குடுத்தப் பட்டத்தை சீரியஸா நினைச்சு அம்பிக்கு பல நாள் தூக்கம் போனது தனிக்கதை!.

மீண்டும் கொஞ்சம் மின்ன போயிரலாமா!.சொல்லும் காட்சி மாதிரி இப்போ செல்லும் காட்சி!

கொஞ்சம் நாளாகி முடியும் போது அதாவது நம்ப அம்பிக்கு வாலிப வயசு .அப்போ தானும் புதுசா எதாவது கண்டு பிடிக்கணூங்கற அதீத வெறி அம்பிக்கு வந்துடுத்து.தன்னை ரொம்பப் புத்திசாலின்னு அந்த டமாரு தெரியாத்தனமா நினைச்சிக் கிட்டாரு! (வாலிபரு ஆய்ட்டதால இந்த மரியாதை.இல்லேன்னா நம்ப அம்பிக்கு எதுக்கு மரியாதை)

அந்த ஆர்வத்தில பாம்பே சரோஜாதேவி மார்கெட்டுக்குப் போயி,எதாவது உருப்படியான புஸ்தகங்கள் இருக்கான்னு பாக்கும் போது அங்க பலான புஸ்தகங்கள் மட்டும் இருக்கவே(அதாகப்பட்டது கொக்கேக சாஸ்திர புஸ்தகங்ககள்)அதில நாலஞ்சி அள்ளிகிட்டு வந்து வீட்டு மேக்கூறையில பதிக்கி வெச்சிக் கிட்டது நமக்கு வேண்டப் படாத விஷயம்.

அப்புறம் வானொலியில் நாம பேசறது எப்படி ஒரு புஸ்தகம் கடைவீதியில வந்து இருக்கிறதா யாரோ சொல்ல அதையும் தேடி அலைஞ்சாரு.அப்புறம் ”நமக்கு நாமே” அப்படிங்கிற திட்டத்தின் பிரகாரம்,ரேடியோவுக்கு சிக்னலோ என்னோமோ ன்னு சொல்லுவாங்களே, அதுக்கு ஒரு வலைமாதிரி ஒண்ணு வீட்டுக்கு வீடு கட்டி வெச்சிண்டு இருப்பாங்க,ஆண்டெனாவோ அண்டோனியோ மொய்னோவோ.அதெ செத்த சுரண்டிணா கொரு கொருண்ணு ஒரு ஷப்தம் வரும் அத தானே பேசற மாதிரி நினச்சி பேசிகிட்டே ஒரு ரெண்டு இழுப்பு இழுப்பாரு,அல்லோன்னு சொல்லறச்சே அல்லு க்கு ஒரு இழுப்பு லோவுக்கு ஒரு இழுப்பு உடனே ரேடியோ பொட்டியில அல்லுக்கு ஒரு டர்ரும் லோவுக்கு இன்னொரு டர்ரும்,மொத்தத்தில ட்ர்ர்டர்ர்ர்ன்னு ஒரு ஷப்தம் வரும்.உடனே தாம் பேசருது ஊருக்கே தெரியுதுன்னு நினைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாரு நம்ப டமாரு கொமாரு!.

அந்த ஷப்தமே தன்னோட வீட்டில இருக்கிற ரேடியோவில மட்டும்தான் கேக்குமின்னு தெரியாத அப்பாவி கொமாரு,அந்த வலையே இரெண்டு இழுப்பு இழுத்து ரேடியோவில் ஷப்தம் கேட்ட தன்னோட கண்டு பிடிப்பை மெச்சி தனக்கே ”வலை கொண்டான்”ன்னு ஒரு கருமாந்திரப் பட்டத்தையும் குடுத்துக்கிட்டாரு,நம்ப அம்பி!

இப்படியாகத்தானே நம்ப அம்பி டமாரு கொமாருவுக்கு வலைகொண்டான் அப்படீங்கிற பேரு வந்திச்சி!.பேரு வந்திச்சி,புகழு வந்திச்சா?.(பின்னாடி வரப்போற சூப்பர்ஸ்டாருன்னு சொல்லப் படப்போற அம்பி ரஜினி நடிச்ச 16 வயதினிலே!ங்கிற படத்தில வர்ற சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளோங்க்கிற ஸ்லோகம் மாதிரி சொல்லிப்பாருங்க!) ஹிஹிஹிஹி

இது 100 வருடத்திற்க்கு முந்தின கதை என்பதை நினைவில் கொள்ளவும்!


பின்குறிப்பு: இது எந்த நபரையும்,குறிப்பிடும் பதிவல்ல!.அப்படி யாராவது நினைத்துக் கொண்டால், வட அமெரிக்காவில் உள்ள பகுத்தறிவு புராணீகரின் மஞ்சள் துண்டை இரவல் வாங்கிப் போட்டுத் தாண்டத் தாயார்!. :)

அஞ்சரைக்குள்ள வண்டி!

Posted on Thursday, September 25, 2008 by நல்லதந்தி

அஞ்சரைக்குள்ள வண்டி!

ஆறு மணிக்கும் கவலைப் படாமல் நான்,
ஆறரை மணிக்குத்தானே படம்!.



இந்த கவிதையை நான் நட்டுக் கொண்டு நடு இரவில் எழுதியது.
இதனுடைய உரிமை,காப்பிரைட் என்னிடம் மட்டும் உள்ளது.காப்பியடித்து இணையத்தில் புகழ் பெற நினைப்பவர்கள்,காப்பிரைட் சட்டத்தின் படி தண்டணைக்குள்ளாவார்கள்.

இப்படிக்கு

நல்லதந்தி!.
 இணையத்தில் மக்களால் தினம் ஒன்றரை லட்சம் உதை வாங்குபவன்!.

சொன்னது யார்?.கண்டு பிடிங்க பாக்கலாம்!

Posted on by நல்லதந்தி

இது ஒரு வழக்கம் போல் அரசியல் பதிவுதான்.ஆனாலும் ஒரே வித்தியாசம்,இது எந்த பிரச்சனைக்காகவும் எழுதப் பட்டதல்ல!.ஒரு புதிர் அவ்வளவுதான்.


கீழே உள்ள பத்தியைச் சொன்ன நபர் யார்?.இதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்துகள் மட்டும் மனம் போல் அள்ளி வழங்கப் படும்!

ஜெயலலிதா குற்றங்கள் புரிந்திருப்பின் அவர் மீது வழக்குப் போட்டு, வழக்குகளை முறையாக நடத்தி,குற்றங்களைச் சட்டப்படி நிரூபித்த பிறகு எத்த்னை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைச்சாலைக்கு அனுப்பட்ட்டும். ஆனால் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கைகள்.கொடூரமான அத்துமீறல் செயல்கள் என்ற உணர்வினைத் தான் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மகுடம் வைத்தது போன்றதே ஜெயலலிதாவின் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை!.”

இந்த வாசகத்தைச் சொன்னவர் யார்?

சோ
இல.கணேசன்
கி.வீரமணி
தா.பாண்டியன்
அத்வானி
வாஜ்பாய்
சோனியா
நல்லகண்ணு
சுப்ரமணிய சாமி
ராமதாஸ்

கண்டு பிடிங்க மக்கள்ஸ்!



விடையைச் சொல்லி விடும் நேரம் வந்துவிட்டது!.
நண்பர் அருவை பாஸ்கரும்,தமிழிஷில் நண்பர் கொம்பனும் சரியான விடையான “கி.வீரமணி” யைச் சொல்லி என்னிடமிருந்து அளவில்லா வாழ்த்துக்களை “மட்டும்” பெற்றுக்கொள்கிறார்கள்.இன்னொரு நண்பர் பின்னூட்டம் பெரியசாமி சந்தேகத்துடன் வீரமணியின் பெயரைக் குறிப்பிட்டதால் ஆறுதல் வாழ்த்தை மட்டும் பெறுகிறார். :)

பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!

Posted on Wednesday, September 24, 2008 by நல்லதந்தி



போன நூற்றாண்டின் இறுதியில் இந்த வினைல் விளம்பர போர்டுகளை ,செல் போன் கம்பனிகளும்,மோட்டார் சைகிள் கம்பனிகளும் 100X100,200X200,300X300, என்று பிரமாண்டமாக வைத்தபோதும் சரி,இந்தி படம் வெளியிடும் தியேட்டர்களில், கட் அவுட்டிற்குப் பதிலாக ,இந்த வினைல் போர்டுகளை வைக்கும் போதும் சரி , அடேங்கப்பா இவ்வளவு பெரிய போட்டோவா?. இத்தனைத் துல்லியமா?.இவ்வளவு பிரமாண்டமா?.என்று வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் பார்த்தோம்.,இதனால் எத்தனை பேனர் ஓவியர்கள்,சிறு போர்டு ஓவியர்கள் காலியாகப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை இரசித்தோம்.

இப்படி பெரிய தொழிற்கம்பனிகளின் ஆதிக்கம் மட்டுமே இருந்த வினைல் போர்டு ராஜ்ஜியம்,விரைவில பொது மக்கள் கைக்கும் மாறியது உலகமயமாக்கலின் ஒரு அம்சமே!.பம்பாய் போன்ற நகரங்களில் மட்டும் இருந்த வினைல் போர்டு அச்சகங்கள் தற்போது ஊருக்கு நாலு என்றாகி விட்டபோது ,ஆரம்பித்தது வினைல் போர்டின் வினைகள்.

ஊருக்கு நாலுஎன்று ஆகிவிட்டபோது தொழிற்ப் போட்டியின் காரணமாக தரைமட்டத்திற்கு வந்து விட்டது வினைல் போர்டு செலவுகள்.முன்பு யானை விலையென்றால் இப்போது பூனை விலைதான்.போதாதா..நம்முடைய ஜனங்களுக்கு.எதற்க்கெடுத்தாலும் வைடா வினைல் போர்டை! போடுடா நம்ம படத்தை! என்று விளம்பரப் பிரியர்களானத் தமிழர்கள் எங்குப் பார்த்தாலும் சந்தர்ப்பம் தெரியாமல் வினைல் போர்டுகளில் சிரித்துக் கொண்டு இருகிறார்கள்!. 

இப்போது எங்கே பார்த்தாலும் வினைல்போர்டு மயம்தான்!.கல்யாணமா? வினைல் போர்டு,கருமாதியா வினைல் போர்டு.கல்யாண மண்டபத்தின் வாசல்தோறும் பெரிய சவுக்கு மரங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் போர்டுகளில் மணமகனும்,மணமகளும் சிரித்தவாறு வரவேற்கிறார்கள்.சில இடங்களில் மண்மகன் மார்பில் வட்டவ்டிவில் மணமகள்,மணமகள் மார்பில் மணமகன்.யோவ்! கல்யாணத்துக்கு முன்னே இந்த மாதிரி செய்வது தப்பு என்றால் கேட்பார்களா?.இந்த விளம்பரப் பிரியர்கள் .. . இரண்டு பக்க ஓரங்களில் வாழ்த்தும் நண்பர்களின் தலைகள்!.ஒரே விளம்பர மோகம்தான்.

கருமாதி வினைல் போர்டுகளில் இன்னும் கொடுமை!.இறந்த நபரின் படத்தைப் போட்டு,காத்தமுத்து கவிராயர் பாணியில் அல்லது கலைஞர் பாணியில் ஒரு இரங்கற்கவிதை!.கவிதை முடிந்தவுடன் கண்ணீர் கடலில் உன் நினைவாகவே வாழும் நண்பர்கள்!.என்று முடித்து வரிசையாக ஒரு தலை,கீழே அந்த தலையின் பெயர் என்ற வாக்கில் வினைல் போர்டு வைக்கப் பட்டிருக்கும். இதில் ஒரு கொடுமையான சந்தர்ப்பப் பிழை என்னவென்றால் அனைவரின் தலைகளும் சிரித்தவாறே “போஸ்” கொடுத்துக் கொண்டிருக்கும்!.இறந்தவரும் சிரித்தவாறே நண்பர்களின் அஞ்சலியை ஏற்றுக்கொண்டிருப்பார்.மொத்ததில் அந்த இறப்பே சிரிப்பாய் சிரித்திருக்கும்.ஒரு சோகத்தைக் கூட சிரிப்பாய் மாற்ற வல்லது இந்த வினைல் போர்டு!.


அரசியல் வினைல் போர்டுகள்,இன்னும் ஒரு ரகம்.இன்று வினைல் போர்டு கம்பனிகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களே அரசியல் கட்சிகள்தான்!.அதுவும் இதில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலைஞர் டி.வி எப்படி முதல் இடத்தில் உள்ளதோ ஹி..ஹி...அதைப் போல இந்த விளம்பர விளையாட்டிலும் முதல் இடம் கலைஞரின் கட்சிக்குத்தான் !..இவர்கள் 100 விளம்பரங்கள் கொடுத்தால் மற்ற கட்சியினர் 1 விளம்பரம்தான் கொடுப்பார்கள்.அந்த அளவிற்க்கு இந்த விளையாட்டில் வல்லவர்கள் கலைஞரின் தொண்டர்கள்.

தமிழகத்தின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் சும்மா அப்படியே அசந்து போகவேண்டும்..எங்கெங்கு காணிணும் சக்தியடா என்கிற மாதிரி எங்கெங்கு காணிணும் கலைஞரடா...
10வது வார்டு கவுன்ஸிலரின் இல்லத் திருமணமா?..அந்த ஏரியாவே வினைல் போர்டு காடாகவே மாறிவிடும்.அந்த ஊர் அமைச்சர் சென்னையிலிருந்து முதல் பொண்டாட்டியைப் பார்க்க ஊருக்கு வருகிறாரா?...இரயில்வே நிலையத்திலிருந்து அமைச்சருடைய வீடு வரைக்கும் ஓரே வினைல் போர்டு மயம்!.

சரி அதைதான் விடுங்கள்,சாலையின் இரு மருங்கிலும் ஒரே வினைல் போர்டுகளாக இருந்தாலும்,அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று பார்த்தால், வள்ளுவமே! வா! ,வாலிபமே வா! வா! என்ற அளவிற்குத்தான் விஷயச்செறிவு இருக்கிறது.

ஒரு போர்டில்,ஒரு வட்டம் சொல்கிறது!,அந்த மாவட்டத்தின் பெயரை அந்த அமைச்சரின் பெயராக மாற்றிச் சொல்லி ஒரு வரவேற்ப்பு!. பன்னீர் செல்வம் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!.வீரபாண்டியார் மாவட்டம்,பொன்முடியார் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!. இவர்களே தங்கள் மாவட்டத்திற்க்கு தங்கள் பகுதி அமைச்சரின் பெயரை சாதாரணமாக வைத்துக் கொள்கிறார்கள்.

அடுத்த வினைல் போர்டில் அமைச்சரின் முதல் மனைவி ஒருபுறம்! மறு புறம் இரண்டாவதாக சென்னையில் சேர்த்துக் கொண்ட துணைவி ,இரண்டு பேரும் அமைச்சரைப் பார்த்து ஒருங்கே சிரிக்கிறார்கள்.ஆஹா என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!.என்ன குடும்ப ஒற்றுமை. முதல் மனைவி பக்கத்தில அவ்ருக்கு பிறந்த பிள்ளைகளும், துணைவி பக்கத்தில் அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் ஒரே போர்டில்,ஒரு குடும்பம்,இரு மனைவி, பல பிள்ளைகள் என்று வாழும் வள்ளுவம் கலைஞர் போல, அமைச்சர்களும் நிற்க்கும் காட்சி எல்லா மாவட்டத்திலும் நிகழும் வழக்கமாக நிகழும் தெய்வீகக் காட்சி!.

அவர்களின் தலைக்கு மேலே நட்சத்திர வடிவிலோ,சூரிய வடிவிலோ ஒரு புறம் க்லைஞரும் ,மற்றொரு புறம் இசுடாலினோ ,தென் மாவட்டமாக இருந்தால் அழகிரியோ இந்தக் கோராமையைப் பார்த்து நம்ம வீட்டில் உள்ள விஷயம்தானே என்று சிரித்தபடி இருப்பார்கள்!.
 தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு பதிவர்,சாதாரணப் பதிவர் அல்ல!.உலக நாடுகள் அனைத்திலும் உள்ள த்மிழர் மட்டுமல்ல,இந்தியர் மட்டுமல்ல!...வட அமெரிக்காவில் கனடா முதல் ஆஃப்ரிக்க கண்டம் நைஜீரியா மட்டுமல்ல!...ச்ச்சீ சலிப்பா இருக்குப்பா!..பிரபஞ்சம் முச்சூடும்ன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.மொத்தத்தில் அவரைத் தெரியாத ஆளே இல்லை போதுமா?.... அப்பேற்ப்பட்ட பதிவர் எழுதிய தமிழ் பண்பாடு, ஒட்டு மொத்தமாக இருக்கிற ஒரே ஒரு கட்சி திமுக என்பதால் ஜனங்களும் எந்தவிதமான கூச்சமும் நாச்சமும் பட்டுக் கொள்வதில்லை!.

ஆனால் ஒரு வார்த்தை மட்டும் குசு குசு வென பேசிக்கொள்வார்கள்.”என்னடா முதல் பொண்டாடிக்கே 60வயசாயிடுச்சி! அப்போ இந்த ஆளுக்கு 60 இல்லே 65 இருக்குமே ,இரண்டாவது இருக்கிற 35 ஐ என்னாதாண்டா பண்ணுவாரு?”..அடுத்த திமுகா பார்ட்டி வேறே என்னத்த சொல்லுவான்...எங்க ஐய்யா! என்ன சாதாரணமானவரா?.எல்லாம் புகுந்து வெளையாடுவாரு!.ஆஹா..எவ்வளவு பெருமை!...

இன்னொரு பெருமையும் இந்த அரசியல் வினைல் போர்டுகளுக்கு உண்டு.மற்ற ,பொது மக்கள் கல்யாணத்திற்க்கோ,கருமாதிக்கோ, செய்யும் வினைல் போர்டுகளை!. எல்லோராலேயும் சத்தியமாக ஒரே ஒரு தடவையாவது படிக்கப் படும் வாய்ப்புண்டு.ஆனால் அரசியல் வினைல் போர்டுகளை வைத்த அவர்களே படிப்பார்களா? என்பது சந்தேகம் தான்!.

ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வாசகங்கள் ,உள்ளாட்சித்துறை அமைச்சரென்றால் உள்ளாட்சியே! வருக!.பொதுப்பணித்துறை அமைச்சரா! பொதுப்பணியே!வருக!.சட்டத்துறை அமைச்சரா! சட்டமே! வருக!..நல்ல வேளை வடிகால் வாரியத்திற்க்கு தனி அமைச்சர் இல்லை!.இல்லையென்றால் அடிக்கடி சாக்கடையே! வருக! வருக! என்றும் வினைல் போர்டில் பார்த்திருக்க வாய்ப்புண்டு!.

இந்த அமைச்சரையோ அல்லது வருகின்ற VIP ஐ பிடிக்காத வட்டமோ, ஒன்றியமோ, தானைத்தலைவரே! என்பதற்க்கு பதில் தண்டக் கருமாந்திரமே! என்று எழுதினாலும்,பண்பாளனே! என்பதற்குப் பதிலாக பண்ணாடையே! என்று எழுதினாலும்,பார்ப்பவர்களுக்கும்,சம்மந்தப் பட்டவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை.வ்ருகிறவர்கள் போர்டைத்தான் பார்ப்பார்களே ஓழிய வாசகத்தைப் யாரும் படிக்கப் போவது இல்லையே!.வாழ்க வினைல் போர்டு!

அடுத்து இந்த அரசியல் வினைல் போர்டுகளைப் பார்க்கும் போது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம்தான் ஞாபகம் வரும்.தலைவர் முழு உருவமாக நின்றிருக்க காலடியில் கிடக்கும் அரக்கர் கூட்டத்தைப் போல சிரித்த தலைகளாகக் காட்சிதரும் வட்டம், ஒன்றியம் போன்ற ஆட்கள் முண்டமில்லா முண்டங்களாக காட்சியளிப்பது வினைல் போர்டின் தனி விசேஷம்.
தலைக்கு கீழ் அவர்களின் பட்டங்களோடு பெயரும் உண்டு.காண்டு கஜெந்திரன்,மயிலை கபாலி,டிஞ்சர் தனபாலு,கடா குமாரு போன்று பெரிய லிஸ்ட்ட்டும் போட்டிருபார்கள்.தலைவரும் காளியாத்தாப் போல அவர்களின் தலையை மிதித்துக் கொண்டு சிரித்தபடி காட்சியளிப்பார்.என்னே வினைல் போர்டின் பெருமை!.

இன்னோரு தமாஷ் என்னவென்றால் பகுத்தறிவுக் கட்சியான திமுகவில உள்ள தொண்டர்களின் தலைகள் அனைத்தும் திருநீறும்,மஞ்சளும், குங்குமமும், துலங்க பகுத்தறிவு அஞ்ஞானிகளாகவே காணப்படும். இந்த பகுத்தறிவு சிங்கங்கள் வீட்டில் உள்ள பெண்டுகளைத்தான் மாற்ற முடியவில்லைத் தொண்டர்களையாவது மாற்றலாமே?.ஆனால் மாற்ற முயற்சிக் கூட எடுக்கமாட்டார்கள்.எந்தத் தொண்டனையாவது சாமி இல்லையென்று சொன்னால்தான் திமுக உறுப்பினர் கார்டு என்று சொன்னால் கூட திமுகவே மொத்தமாக காலியாகிவிடும் என்று தலைவருக்குத் தெரியும்.வீட்டில் உள்ள பெண்டுகளிடம் ஜெயிக்கமுடியாதவர்.வீதியில் உள்ளத் தொண்டு களிடமா ஜெயிப்பார்.

இதைப் பார்க்கும் போது நன்னன் என்ற பிரகிருதியின் ஞாபகம் வருகிறது,
அவரைச் சமீபத்தில் கலைஞர் டிவியில் ,ரமேஷ் பிரபா பேட்டி கண்டார்.அப்போதுதான் அவர் திமுக வென்றே எனக்குத்தெரியும்.அப்போது இந்த பிரகிருதி ,ஒரு வார்த்தைச் சொன்னார்,அதாவது இப்போது தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு திராவிடர் இயக்கம் தான் உள்ளது என்று சொன்னார்.அது எந்த எந்த இயக்கம் என்று,திரு நன்னன் அவர்கள் தான் சார்ந்த கட்சியைச் சொல்லிவிட்டதால் உங்களுக்கேத் தெரியும்.அவரைத் தரதர வென்று இழுத்து வந்து இம் மாதிரியான வினைல் போர்டுகளைக் காட்டவேண்டும்.இதுதான் பகுத்தறிவா?.நெத்தி நிறைய இத்தனைப் பொட்டுக்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள்தான் ,பகுத்தறிவு இயக்கத் தொண்டர்களா? என்று முடிந்தால் கேள்வி கேட்க வேண்டும்.மற்றபடி அவர் தமிழாய்ந்த அறிஞர் என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை.கிஞ்சித்தும் சந்தேகமும் இல்லை.
இசுடாலினைத் (நன்னன் சொன்னதுதான்)தளபதி தளபதி என்று பேட்டியின் போது அவர் பெருமையுடன் சொன்னபோது தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது.எப்படி இருந்த தமிழறிஞர் இப்படி ஆயிட்டாரே?.

திமுகவைப் பொறுத்தவரை வினைல் போர்டுகளில் உள்ள ஆங்காங்கே சிலதலைகளின் படங்கள் வெட்டியெடுக்கப் பட்டு இருக்கும்.விசாரித்தால் அந்தத்தலைகள் ஏதாவது கொலைக் கேஸிலோ,அரிசி கடத்தலிலோ, சாரயக்கேஸிலோ, அல்லது கற்பழிப்பு கேஸிலோஅதையும்விட்டால் திருட்டு வழக்கிலோமாட்டியதால் தற்காலிகமாக ஜனங்களின் மத்தியில் கட்சிக்குத் தவறான எண்ணம் வரக்கூடாது என்று கட்சி பிரமுகர்களின் அறிவுறுத்தல் பிரகாரம் படத்தை எடுத்து இருக்கிறார்களாம். :)).
இதனால் நன்மையடைவது இந்த வினைல் போர்டு தயாரிப்பாளர்கள்!.அடுத்த வினைல் போர்டுக்கு ஆர்டர்கள் தயார்.ஆகையால் இப்போது வினைல் போர்டு ராஜ்ஜியம் திமுக வினரிடம்தான் உள்ளது. 

அப்பாடா...கட்டுரை முடிந்தது..இதில் முதல் சந்தோஷம் உங்களுக்கு!.அடுத்து எனக்கு! :) 
இதில் இருந்து ஒரு விஷயம் தெரிகிறது.எதைப் பற்றி எழுதினாலும் அரசியல் கலக்காமல் என்னால் எழுதமுடியாது போலிருக்கிறதே?..என்ன செய்வேன்?.....:((

"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!

Posted on Thursday, September 18, 2008 by நல்லதந்தி



டாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.

ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.

மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

விலைப்பட்டியல்:

180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)

தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)

ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)

கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)


விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.


இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.

கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)

." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?

கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.

மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.

மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.

எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.

மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.

கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.

பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.

அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"


பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)

இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!

மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)