Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

உண்மையான மதசார்பின்மை----அரசியலில் உள்ள ஒரே ஆண்பிள்ளை ஜெயலலிதா அறிக்கை!

Posted on Friday, September 5, 2008 by நல்லதந்தி



எனக்கு தெரிந்து போலி மதசார்பின்மை இல்லாத ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா தான்.

இந்து மதத்தை பற்றி திட்டிப் பேசுவதும்,மற்ற மதங்களைப் புகழ்ந்து பேசுவது மட்டுமே எழுதப் படாத மதசார்பின்மையாகிவிட்டது.

இந்து மதத்தைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டால் உடனே அவர்கள் RSS,இந்துத்வா வாதிகள்,அல்லது இந்து தீவிரவாதிகள் என்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் உடனே சித்தரித்து விடுகின்றன.

மதசார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் ஒரே நிறை என்றுதானே அர்த்தம்.அதை விட்டுவிட்டு பெரும்பான்மை மக்களின் மதத்தை இழிவு படுத்துவதும்,சிறு பான்மை மக்கள் மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் கண்டிக்காமல் இருப்பதும் தான் மதசார்பின்மையா?.


சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால், அது கலை!.அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்கள் இந்து வெறியர்கள்.

அதே ஒரு ஓவியக் கண்காட்சியில் முஸ்லீம் மன்னர்களின் கொடுங்கோல் தன்மையைப் பற்றி படம் இருந்தால் அதற்கு அரசாங்கமே எதிர்ப்பு தெரிவிக்கின்றது.அது சிறு பான்மையினர் மனதைப் புண்படுத்துமாம்.என்ன கொடுமை!.

அரசனுடைய கொடுங்கோன்மைக்கும் சிறு பான்மையினருக்கும் என்ன சம்பந்தம்.இது முஸ்லீம்கள் அனைவரையுமே அரசு கேவலப் படுத்தும் செயல் அல்லவா?.சிறுபான்மையினர் அனைவருமே அந்த அரசனைப் போன்றவர்கள் தான் என அரசு நம்புகிறதா?.

முஸ்லீம்கள் இதைக் கண்டிக்காமல், அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதால், அவர்கள் தங்களுக்கு ஆதரவானவர்கள் என்று தவறாக கருதிக்கொள்கிறார்கள்.எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை சிறுபான்மையி னர் மறந்துவிடக்கூடாது.


இந்த நிலையில் தானும் ஒரு அரசியல்வாதியாய் சில தவறு களைச் செய்திருத்தாலும், எல்லா மதங்களும் சமம் என்று உண்மையாய், மனதில் இருப்பதை தைரியமாகச் சொல்லும் ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு புரட்சிதலைவிதான்!


அவருடைய அறிக்கை கீழே!


ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்ட வசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும்.

அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரிசாவில் மத பிரச்சினையின்போது பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது. அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5 ஆயிரம் ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.

1990-களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச்சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள். அங்கிருந்து தப்பிய சுமார் 31/2 லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படை வாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒருகண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம். காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்.

இவ்வாறு அறிக்கையில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லையா?

Posted on Wednesday, August 27, 2008 by நல்லதந்தி


அ.தி.மு.க வை அழிப்பதற்கு கலைஞர் சிறு துரும்பையும் கிள்ளிப் போடத்தேவையில்லை,என்கிற அளவிற்கு அதை அழிப்பதற்கு,கலைஞரிடம் காசு வாங்காத அடியாளாய், அரும்பாடு பட்டு வருகிறார் செல்வி ஜெயலலிதா!.


எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரைத்தவிர,நெடுஞ்செழியன்,ராசாராம்,கே.வி.கிருஷ்ணசாமி,முத்துசாமி,சேலம் கண்ணன்,பொன்னையன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,விஜயலட்சுமி,சாமிநாதன் போன்ற, பொது மக்களுக்குப் பரிச்சயமான பல புள்ளிகள் அ.தி.மு.க வில் இருந்தார்கள்.ஏன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தலைவரான முசிறி புத்தனைக் கூட பொது மக்களுக்குத் தெரியும்.


ஆனால் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க வில் ஜெயலலிதாவைத் தவிர,மற்றவர்கள் யாரையும் அ.தி.மு.க வினருக்கேக் கூடத் தெரியாது.

தெரிந்த சிலரில் செல்வகணபதியும் ஒருவர்.1991-ம் ஆட்சியின் போது அ.தி.மு.க வின் ஆதி முதல் அந்தம் வரை ஊழல் புகார்களில் சிக்குண்ட போது செல்வகணபதியும் சுடுகாட்டு கொட்டகைப் போன்ற புகார்களில் மாட்டினார்.


அதன் பின் கட்சிப் பணியிலிருந்து ஓரம் கட்டப் பட்ட அவர்,பிறகு நாடாளுமன்றத் தேர்தலின் போது வாழப்பாடி இராமமூர்த்தி சேலம் தொகுதியில் நிற்க, அவரை வெற்றிபெறவைக்க,வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிரடி அரசியலுக்கு தக்க பதிலடி கொடுக்க தகுந்தவர் செல்வகணபதிதான் என்று மீண்டும் செல்வி ஜெயலலிதாவால் அரசியல் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.அவர் நினைத்தது போலவே,வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிரடிக்குத் தக்க பதிலடி கொடுத்து, வாழப்பாடியை செல்வகணபதி வெற்றி பெறச் செய்தார்.பிறகு மீண்டும் செல்வி ஜெயலலிதாவால் ஓரம் கட்டப் பட்டார்.


காட்சிகள் மாறின கட்சிகளும் இடம் மாறின.அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாழப்பாடி சேலம் தொகுதியில் போட்டியிட்ட போது தன் எதிரியாகிப் போன வாழப்பாடியைத் தோற்கடிக்க முடிவு செய்து செல்வி ஜெயலலிதா மீண்டும் ஒரங்கட்டப்பட்டிருந்தசெல்வகணபதியை,வாழப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க வேட்ப்பாளராகவே நிறுத்தினார்.


அந்த தேர்தலில் தன் தனித்திறமைக் காட்டி செல்வகணபதி வெற்றி பெற்றார்.அதோடு அவ்வளவுதான் மீண்டும் கட்சியில் ஓரம் கட்டப் பட்டார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராஇருந்தும்எல்லா நிகழ்ச்சிகளிலும் புறக்கணிக்கப் பட்டார்.காலம் ஓடியது.

மீண்டும் சேலம்கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப் பட்டார்.இப்போது அடுத்த ஓரம் கட்டல் நடந்துள்ளது.அவர் கட்சியைவிட்டே நீக்கப் பட்டுள்ளார்.இந்த முறை செல்வகணபதி பொறுமையாக இருப்பாரா? அல்லது தி.மு.க.வில் சேருவாரா என்று தெரியவில்லை!.


அவர் தி.மு.க.வில் இணைவதை வீரபாண்டி ஆறுமுகம் ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை?.தன் குகையில் இன்னொரு சிங்கத்தை இருக்கவிடுமா, மற்றொன்று?


இப்படி துடிப்பும் செல்வாக்குமுள்ள ஒவ்வொரு,திறமைசாலிகளையும் நீக்கிவிட்டு அ.தி.மு.க தேர்தலில் கரையேறுமா?.செல்வி ஜெயலலிதாவிற்கே வெளிச்சம்!


வந்தசெய்தி!


அ.தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் செல்வகணபதியை, கட்சியின் அடிப் படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டதால் அ.தி. மு.க., வில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமை யில் அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.


அந்த தேர்தலின்போது கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலராக இருந்த செல்கணபதி, திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று, கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவரானார். அவருக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.ஒரு சில ஆண்டுகளில், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. 1996க்கு பின் தமிழகத்தில் தி.மு.க., தலைமை யிலான அரசு பொறுப்புக்கு வந்தது. அ.தி.மு.க., ஆட்சியின் போது நடந்த ஊழல் களை தூசு தட்டத் துவங்கியது.


அதில் முதல்கட்டமாக, செல்வகணபதி மீது சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு பதிவு செய் யப்பட்டது.கடந்த 1999-2000 நாடாளுமன்ற தேர்தலில் காங்., கட்சி சார்பில் வாழப்பாடி ராம மூர்த்திக்கு சேலம் எம்.பி., சீட் வழங்கப்பட்டது. அவருக்கு சரியான போட்டியை ஏற்படுத்த, செல்வகணபதியை அ.தி.மு.க., தலைமை வேட்பாளராக அறிவித்தது. செல்வகணபதி வெற்றி பெற்றார். எம்.பி.,யாக இருந்தபோதும், அவரை கட்சித் தலைமை ஒதுக்கியே வைத்திருந்தது. கடந்த 2001ல் அ.தி.மு.க., ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோதும், செல்வ கணபதிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
13 ஆண்டு இடைவெளிக்கு பின் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது செல்வகணபதி யை, சேலம் கிழக்கு மாவட்டச்செயலராக கட்சித்தலைமை அறிவித்தது.அப்படியிருந்தும், அவரது பொறுப்பில் இருந்த சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் கூட அ.தி.மு.க., வெற்றி பெற முடியவில்லை. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல் களிலும், அதே நிலை தான் ஏற்பட்டது.இந்நிலையில்,செல்வகணபதியின் எதிர்கோஷ்டியாக செயல்பட்ட அ.தி. மு.க., வினர், பல்வேறு புகார் மனுக்களை தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜாதி அடிப்படையில் கட்சியினரை நடத்துவது, எதிர் கோஷ்டியினரை பழிவாங்கும் வகை யில் செயல்படுவது,போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தில் தி.மு.க., ஆதரவாளர்களை நியமனம் செய்தது என புகார்கள் தெரிவிக்கப்பட்டன.மேலும், "சுடுகாட்டு கூரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்தால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைவேன்' என செல்வகணபதி, தி.மு.க., முக்கிய பிரமுகருக்கு உறுதியளித்ததாகவும், தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார்களை பெற்றுக்கொண்ட கட்சி தலைமை, வழக்கம்போல், எந்த விதமான நேரடி விசாரணையும் நடத்தாமல், செல்வகணபதியை கட்சியில் இருந்து நீக்கி விட்டது.


அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த நீக்கத்தை எதிர் கோஷ்டியினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஏனெனில், சேலம் மாவட்டத்தில் வேறு எந்த அ.தி.மு.க., பிரமுகரை விடவும், செல்வகணபதிக்கு செல்வாக்கு அதிகம்."தங்களை விட செல்வாக்கான ஒருவர் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் புகார் மனு அனுப்பியவர்களின் நோக்கத்துக்கு கட்சி தலைமை பலியாகி விட்டது' என்கின்றனர் செல்வகணபதி ஆதரவாளர்கள்.