Showing posts with label இராஜாஜி. Show all posts
Showing posts with label இராஜாஜி. Show all posts

மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!

Posted on Wednesday, December 10, 2008 by நல்லதந்தி

நான் பெங்களூர் போகும் போது எல்லாம் ஹொசூரைக் கடக்கும் போது “மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம்” என்று எழுதப் பட்ட பெரிய வளைவைப் 
பார்த்தவுடன் ஒரு முறையாவது நாம் போய் அவர் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.பேருந்தில் இருந்து இறங்கி நகரப்பேருந்திற்க்கு காத்திருந்து (எத்தனை மணிநேரத்துக்கொன்றோ) அதைப்பிடித்து போய்ப் பார்க்க 
வேண்டிய அசெளகர்யத்தை நினைத்தவுடன் அந்த நினைப்பு மாறிவிடும்.

இந்த முறை பெங்களூரு சென்றது டூ வீலரில் என்பதால்,கட்டாயம் தொரப்பள்ளி செல்லவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அப்போது எடுத்த சில 
படங்களைப் பதிவிடுகிறேன்.நேரம் கிடைத்தால் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

               தொப்பூர் கணவாய் காலை வேளை
                         பாலக்காடு அல்ல! பாலக்கோடு

இராயக்கோட்டை

முன்வாசல்
நுழைந்தவுடன் இராஜாஜி



புகைப்படக் காட்சிகள்



சேலத்தில் அவர் வாழ்ந்த வீடு
வெறும் மூங்கில் தடிகளால் வேயப்பட்ட வீடு
வீட்டுக்கருகில் அழகிய சிறு நதி