Showing posts with label பிரியங்கா. Show all posts
Showing posts with label பிரியங்கா. Show all posts

இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?

Posted on Thursday, April 9, 2009 by நல்லதந்தி


பிரியங்காவின் மாமனார் இராஜேந்திர வதேரா நேற்று தீடீரென்று மரணம் அடைந்தார். அவரது உடல் தூக்கில் பிணமாகத் தொங்கியது. இவ்வளவு தான் செய்தி மேலதிக விவரம் பெரிதாக ஒன்றுமில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு செய்தி சஞ்சைகாந்தியின் மாமனாரும், மேனகா காந்தியின் தந்தையுமான திரு. ஆனந்த் மரணம். இது எப்படி நடந்ததென்றால் அவர் வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு நெடுஞ்சாலையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் காணாமல் தேடி இரண்டு நாட்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் பிணமாகக் கண்டு எடுக்கப் பட்டார். துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாகச் சொல்லப் பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார். எப்படி பல் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தள்ளி அந்த நெடுஞ்சாலைக்கு வந்தார். என்பதெல்லாம் அப்போது மர்மமாகப் பேசப்பட்டது. 

அன்று சஞ்சைக்கும் அவரது மாமனாருக்கும் சுமுக உறவு இல்லை அதே போல் இப்போதும் பிரியங்கா தம்பதியினருக்கும் செத்தவருக்கும் உறவு சரியில்லை போலிருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு, களம் இறங்குவது வாடிக்கை. ஆனால் ஒரு பெரிய குடும்பத்து சம்பந்தி ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இருந்தும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு சாதாரண செய்தியாய் வெளியானது ஆச்சரியாக இருக்கிறது.

நமக்கேன் வம்பு!. இந்தத் தற்கொலை செய்தியை கண்டதும், அந்தத் தற்கொலை சம்பவம் நினைவுக்கு வந்தது!. அவ்வளவுதான்!.