அங்குள்ள ஏரியில், கிராம புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, கிராம மக்கள், மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். உடனே ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பணியை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளையும் கேட்டார்.
பின்னர் அவர், ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளி போல சிறிது நேரம் மண் சுமந்தார். அவருடன் சேர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் 40 பேரும் மண் சுமந்தார்கள். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ஏழை ஒருவரின் வீட்டுக்கு, இரவில் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டார். கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இரவில் கயிற்று கட்டிலில் தூங்கினார்.
பின்னர் அவர் காலையில் எழுந்து தன்னுடைய காரில் ஏறி, கோடா நகருக்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
Showing posts with label ராகுல்காந்தி. Show all posts
Showing posts with label ராகுல்காந்தி. Show all posts
பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!
Posted on Friday, October 3, 2008
by நல்லதந்தி
அரசியல் செய்வதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஜனங்களைக் கவர நிஜமாகவே அவர்களுக்கு நன்மை செய்து, அவர்களைக் கவர்வது மற்றொன்று வெறும் ஸ்டண்ட் அடித்து அவர்களைக் கவர்வது.
இதில் இரண்டாவது வகை அரசியல் செய்கிறார். நேரு பரம்பரையின் அடுத்த இளவரசர் ராகுல் காந்தி. இந்த ஸ்டைல் நேரு குடும்பத்தின் காப்பிரைட் ஸ்டைல் என்றாலும், நேரு,இந்திராவிற்க்குப் பின் வந்த ராஜீவ் காந்தி இந்த ஸ்டைலை ஜனங்களைக் கவர பயன் படுத்தி தோல்வியே கண்டார்.
தந்தையைப் போலவே தனயனும் தங்களது இந்த குடும்ப காப்பிரைட் ஸ்டைலைப் பயன் படுத்தினாலும்,தந்தையை விட மிக மட்டமான தோல்வியே இவருக்கு இது வரை மிஞ்சியிருக்கிறது.
பீகாரில் முயற்சி செய்தார் தோல்வி.பிறகு உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நேரத்தில் இதைப் பிரமாதமாகப் பயன் படுத்தினார்.அதில் படு தோல்வி!.போதாக் குறைக்கு மாயாவதி வேறு, ராகுல்காந்தி, தலித் மற்றும் ஏழைகளைத் தொட்ட கைகளின் அழுக்கு நீங்க அவர் ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிக்கிறார் என்று குண்டைத் தூக்கிப் போட்டு ராகுல் காந்தியின் மொத்த விளையாட்டுக்கும் ஆப்பு வைத்தார்.
அடுத்து கர்நாடகத் தேர்தலின் போதும் இதே ஸ்டண்ட் செய்தார் மக்கள் அவருக்குப் போட்டது பட்டை நாமம்.இப்போது இராஜஸ்தானில் தேர்தல் நெருங்குவதால் இந்த ஸ்டண்டைக் கையில எடுத்துள்ளார்.மக்கள் மீண்டும் பட்டை நாமம் போடுவது உறுதி என்று நம் எல்லோருக்கும் தெரியும்.அது நெத்தியில் மட்டும்தானா? அல்லது உடல் முழுக்கப் போட்டு டெல்லிக்கு அனுப்புவார்களா?. என்பதை கவனித்து இருந்துப் பார்ப்போம். ராகுல் காந்தியின் ராசி அப்படி!
வந்த செய்தி!
நல்லதந்திக்கு உதவியது தினத்தந்தி!
50 comments Filed Under: அரசியல், நகைச்சுவை, ராகுல்காந்தி
Subscribe to:
Posts (Atom)