ஜெமினிகணேசனைப் பொறுத்த வரையில் அவர் “சாம்பார்” என்ற ஒருஅடை மொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.அது அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனபதால் ,அவ்ரைக் கீழ்மைப் படுத்த இருக்கலாம்.ஆனால் சாம்பார் என்ற பெயர் வந்த காரணம் வேறு என்று நான் இதே இணையத்தில் படித்திருக்கிறேன்.அது ஏதோ ஒரு திரைப் படத்தின் மூலமாக வந்தது என அறிகிறேன்.ஆனால் அது கோழை என்று அடைமொழியாகி அவர் சார்ந்த வகுப்பை கிண்டலடிக்க தி.க.,திமுக, கும்பல்களுக்கு உதவின.நிஜத்தில் அவர் அன்றைய காலத்தில் இருந்த மற்ற நாயக நடிகர்களை விட அதி தைரியசாலி என்பதே உண்மை.
விஜயா-வாஹினி புரெடெக்ஷன் சார்பில் ,அவர்கள் தயாரித்த இரு மொழி படத்தில் ஹீரோ மாடியில் இருந்து குதிக்கும் காட்சி ஒன்றுண்டு.அந்தப் படத்தில் தமிழில் நாயகனாக நடித்த ஜெமினி கணேசன்.இருபதடி உயரத்தில் இருந்து அநாவசியமாகக் குதித்தார்.அதன் தெலுங்குப் பதிப்பில் நடித்த என்.டி.ராமராவ் சிறிது தயக்கப் படவே அவருக்குப் பதிலாக ஜெமினி கணேசன் மாடியில் இருந்து குதித்து டூப்பாக நடித்தார்.ஆக திரையுலகில் டூப்பாக ஒரு பிரபநடிகருக்கு மற்றொரு பிரபலம் நடித்தது.அதுவே முதல் முறை.ஒருவேளை கடைசி முறையாகவும் இருக்கலாம்.அடுத்த மேட்டர்.........................
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரைச் சொன்னார்கள்.அந்த சமயம் அங்கே இருந்த ஒர் இளம் நாடிகர் புன் சிரிப்புடன்,” நான் கூறட்டுமா?,அந்த துணிச்சல் நடிகர் யாறென்று!” என்று கூறி விட்டு “ஜெமினி கணெசனின் துணிச்சல் யாருக்கும் வராது,” என்று சொல்லி பின் கண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சியை விவரித்தார்.
புதுக்கோட்டை ராஜவம்சத்தைச் சேர்ந்த நடுத்துரை என்பவர் அப்போது தங்கியிருந்தார்.அவர் ஜெமினிகணேசனின் நெருங்கிய நண்பர்.தமது நண்பரைப் பார்க்க போயிருந்தார். நடுத்துரை பேச்சோடு பேச்சாக, ” நீங்கள் சினிமாவில் பல துணிகரச் செயல்கள் செய்வதல்லாம் வெறும் நடிப்புத்தானே?,” என்று கேட்டார்.
“நிஜமாய் எனக்கு மனோ தைரியம் உண்டா என்று பார்க்க ஒரு பரிட்சை வேண்டுமானால் வையுங்களேன்” என்றார் ஜெமினி கணேசன்.நடுத்துரை உடனடியாக ஒரு பரிட்சை வைத்து விட்டார்.
ஜெமினிகணேசனை உட்கார வைத்துஅவர் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தார் நடுத்துரை.நண்பர் நடுத்துரை குறி பார்த்து சுடுவதில் சூரர்.தொலைவில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த ஜெமினி கணெசனின் உதட்டிலிருந்த சிகரெட்டைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார்.தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.