Showing posts with label விமரிசனம். Show all posts
Showing posts with label விமரிசனம். Show all posts

ஜெயமோகனும், சாருவின் அல்லகையும்!

Posted on Sunday, March 21, 2010 by நல்லதந்தி

ரொம்ப நாள் கழித்து வர்றதால் அறிமுகப் படுத்திக் கொள்வேனேன எதிர்பார்க்க வேண்டாம்.


விஷயம் இதுதான்!.

நான் சமீப காலமாய் இரும்புத்திரையைப் படிக்கிறேன். அவர் நல்ல மாதிரியாய் எழுதுவதில் சிறந்தவர்களில் ஒருவர். இன்று காலையில் அவருடைய வலைப்பூவிற்கு போனபோதுதான், யுவகிருஷ்ணா என்கின்ற லக்கி லூக் என்ற நபர் ஜெயமோகனைப் பற்றி எழுதியுள்ள விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு அவருடைய வலைப் பக்கம் போய்ப் பார்த்தேன்.

சகட்டு மேனிக்கு அவர் குருநாதர் கு.நக்கியின், கு. நக்கி பாணியிலேயே விளாசுவதைப் பார்த்தால் அவருக்கு எந்த அறிவிமில்லை! என்பது தெரிகிறது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், என்னைப் போன்ற் சிலர் அவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்! :).

அதற்கு அவசியமே இல்லை!.

அவருக்கு எந்தவித அறிவும் இல்லை என அவர் சார்ந்த கட்சியை வைத்தே அவரை அளவு கோலிடுவது எல்லோர்க்கும் இயல்பான ஒன்றுதான் என்றாலும், நான் அப்படி வேகமாக முடிவு செய்யவில்லை. ஆனாலும் எனக்கு நடந்தது என்னவென்றால்!

சில அல்லது பல மாதங்களுக்கு முன் அவரது வலையில் அண்ணா இறந்து அடக்கம் நடக்கும் போது ஒரு கோடிப் பேர் கலந்து கொண்டனர் என்று எழுதினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அய்யா! அண்ணா இறந்த போது தமிழ் நாட்டு ஜனத்தொகை நான்கு கோடிக்குள்ளாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, ஆண்கள் ஒன்றரைக் கோடி, பெண்கள் ஒன்றரைக்கோடி, குழந்தைகள் ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு கோடி ஜனம் ஒரே இடத்தில் சென்னையில் திரள்வதெப்படி ? அப்படித் திரண்டால் சென்னைதான் தாங்குமா?. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிற்பாடு தன் மேல் புகழுரைத்து எழுதுமாறு பணித்து பிறர் அவர் மேல் புகழ்ந்து எழுதிய பாடல்களில் கூட ”நான்கு கோடி மக்களுக்குத் தலைவர் அண்ணா நல்லதம்பி என்றழைத்த கலைஞர்” என்று தான் எழுதினார்கள். நீங்கள் சொன்ன ஒரு கோடி மக்கள் என்ற தகவல் பிழை என்று என்று எழுதினேன். அவர் வழக்கம் போல கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொருட்டு அதை வெளியிடவில்லை. ( உங்களுக்காக ..., அன்று இறுதி மரியாதையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர். அன்று அதே பெரியவிஷயம், இன்றும் அது பெரிய விஷயம் தான்)

இந்த இலட்சணம்தான் அவரது சரித்திர அறிவின் எல்லை. எப்படி அய்யா இதைச் சொல்கிறாய் என்றால் பதில் இல்லை!. பிற்பாடு அதை கின்னஸ் புத்தகத்தில் படித்ததாக எழுதினார். மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என்னவோ அப்படி ஒரு படிப்பு!.
சரி புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்கின்ற அளவிற்குத்தானா உமது அறிவு( நான் கின்னஸை மட்டும் வைத்துச் சொல்ல வில்லை)., சுய சிந்தனை ஏதும் கிடையாதா?.. அப்புறம் என்ன அறிவு..ஒரு வேளை இதுதான் பகுத்தறிவோ என்னவோ!. எத்தனைப் புத்தகங்களில் பிழையான தகவல்களைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் சரியானது என கருதப் பட்ட எத்தனை விஷயங்கள் பிழையானது என்று மீண்டும் அதே புத்தகத்திலேயே கூட அடுத்த பதிப்பின் போது திருத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.

இந்த அறிவை வைத்துக் கொண்டே அவர் ஜெயமோகனின் கட்டுரையை விமர்சனம் செய்ய முடிகிறதென்றால் அவரது கட்சிக்கான அடிப்படைத் தகுதி மட்டும் சரியான முறையில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதைத் தவிர அவருக்கு எந்தத் தகுதியும் சரி.., அறிவும் இல்லை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கும்.

எல்லாருக்கும் தெரிந்த, இன்னும் அதை நேரில் பார்த்த பலர் இருக்கும், 40 வருட சரித்திரமே அவருக்கு இந்த அளவுதான் என்ற போது, வரலாற்றைப் பற்றிப் பேச இம்மியளவு கூட தகுதி இல்லாத இப்படிப் பட்ட நபர்கள் எல்லாம் இணையம் இலவசமாகக் கிடைகிறதே என்று, கண்டபடி எழுதி கூத்தடிப்பதைப் பார்த்தால், இணையத்தைக் கண்டுபிடித்தவர் நாண்டு கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை!. அவர் செத்திருந்தாலும் , அது இவரைப் போன்று எழுதுபவர்களால்தான் இருக்கும்.

இந்த அல்லகை அ,ஆ,இ,ஈ தெரிந்த ஒரே காரணத்துக்காக புத்திசாலி என்று நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா?.

சாக்கடை ஒரத்தில் இது நீச்சல் குளம் என்று எழுதியிருந்தால் அதில் யோசிக்காமல் குதித்து விடும் இந்த அல்லகை தற்குறி.,, படித்திருப்பதில் பிரயோசனம் உண்டா? ( பி.கு ஒரு வேளை படித்திருந்தால்! :) )

ஹோய்! ஹோய்! ஹோய்! சும்மா ஒரு தமாஷூக்கு!

Posted on Monday, October 20, 2008 by நல்லதந்தி




பல நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை!.இது நிஜம் தான் என்று நான் இத்தனை நாள் பதிவு எழுதாத போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இப்போ ஏண்டா எல்லாரையும் இம்சை பண்றாய் என்று கேட்டால்,அதற்க்கு காரணம் உலகப்புகழ் பெற்ற பதிவர்தான்.

அவரு பல வருடங்கள் கழித்து இப்போ திரும்ப பதிவு எழுதியிருக்காராம்.என்னக் கொடுமை வடிவேலா!.சிரங்கு புடிச்ச கை சொறியாம இருக்குமா!.நாலுநாள் பினாத்தெலயாம் .நாலாவது நாள் எல்லோருக்கும் எழுத்துக் கொடுமை பண்ணும் போது இந்த டயலாக்!.

அவரு பதிவு எழுதினாரா போனாரா அப்படின்னு இல்லாம எங்களை நோண்டியதால இந்த பதிவு.இல்லேன்னா இந்தக் கொடுமையை எவன் எழுதுவான்!.

நான் எங்கேயோ படிச்சது!

”இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...
 - உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
 
- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.
 
- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.
 
- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.
 
- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.
 
- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
 
- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
 
- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.
 
- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.
 
- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.
 
எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. ”

ஒரு புண்ணாக்கும் உங்களாலேயும் சரி எங்களாலையும் சரி எதுவும் நடக்கப் போறதில்லைன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே! .அப்புறம் எதுக்கு இந்த ஈர வெங்காயம்!. 

”முன்பு என்னை நண்பர் என்று சொல்லிக்கொண்ட வால்பையன் என்பவரும், அவரது உருப்படாத 'மூல' வியாதி நண்பர்கள் சிலரும் சேர்ந்து எனக்கு ஒரு போலி ஐடி உருவாக்கி ஏதோ எழுதிவருவதாக சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.”

என்னய்யா இது !.உங்களுக்குப் புடிக்கலைனா இது தான் மரியாதையா?.இவரது கக்கூஸில் இவர் இடம் கொடுக்கலையாம்.அதுக்காக எங்களுக்கு மூல வியாதியா?.அதுவும் உருப்படாத ஆளுங்களாம் ! சாமி நாங்க இந்த இணையத்தில எழுதி எந்த கோட்டையையும் கட்டப் போறதில்லை.அத நல்லத் தெரிஞ்சிக்கிட்டதால் தான் இந்த பீலாவை விடாம உருப்பட வழியைப் பாத்துகிட்டு இருக்கோம்!.நீங்க நல்ல எழுதி எதோ நோபல் பரிசு அப்படிம்பாங்களே அதை வாங்குங்க!.கலைஞர் அடிப்பொடியா இருக்கறதாலே கூட்டத்தோட கும்பலா கலைமாமணியாவது வாங்கிக்கிங்க!.நாங்க இதுக்கு ஏன் வருத்தப் படப் போறோம்!.

அடுத்தது போலி ID யாம் !.இந்தக் கொடுமைய என்னான்னு சொல்ல!.
இப்போ ஒரு உண்மையைச் சொல்றேன்!.நீங்க நினைக்கிற மாதிரி வால்பையன்,நல்லதந்தி,ப்ளீச்சிங் பௌடர், எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.எல்லாம் ஒரே ஆள் அல்ல!.வால்பையனுக்கும் எனக்கும் பழக்கம் உண்டு.ஆனால் நண்பர் ப்ளீச்சிங் பௌடர் இணையதின் மூலம் மட்டுமே பழக்கம்!.அதே போலத்தான் நண்பர் பக்கிலுக்கும்!

நாங்கள் இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை!.
முதலில் வால்பையனை , அவர்தான்,ப்ளீச்சிங் பௌடர் என்று ஆரம்பித்து புரளியைக் கிளப்பியது உங்கள் கும்பல்தான் அன்றி நாங்களல்ல!.எவ்வளவோ மறுத்துப் பார்த்து சரி விட்டுத்தொலைப்போம் அப்படின்னு விட்டுடோம்.பிறகு உங்களைப் போன்றவர்களை வெறுப்பேத்தத்தான் இந்த விளையாட்டைத் தொடர்ந்தோம்.மற்றபடி வேறு ID யில் எழுதுவதோ, அனானியில வந்து திட்டுவதோ ஒரு பிரபல பழைய பிராமணப் பதிவரை வேறுப்பேற்றவும் ,திட்டவும் நீங்கள் உபயோகித்த வழிகளை நாங்கள் சத்தியமாக உபயோகிக்க வில்லை. உபயோகிக்கவும் மாட்டோம்.

//கொஞ்ச நாட்களாக வலையில் மேய ஆர்வம் இல்லாமல் இருப்பதால் எனக்கு ஒரு இழவும் புரியவில்லை.
 
அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன்//

அடடா என்னவொரு அடக்கமான பொய்!.
மந்திரி மாசம் மும்மாரி பெய்கிறதா?....இணையத்தைப் பற்றி அலட்டிக்காத நாங்களே நாங்க போட்ட பின்னூட்டம் வந்து இருக்கான்னு எட்டிப் பாப்போம்.இணையத்தில வெறிபிடிச்சி அலையிர ஒரு ஆளு,எப்பவோ சலிப்பா வந்து பாப்பாராம்.அப்புறம் எதுக்கு சாமி உக்காந்தா ஒரு பதிவு, நின்னா ஒரு பதிவு அப்படின்னு போடணும்!.

//அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். நகைச்சுவையாக எழுதுவதாக சொல்லி ஆக்‌ஷா ப்ளேடு போட்டு படிப்பவனின் கழுத்தை சுப்பிரமணியபுரம் பாணியில் கதற கதற அறுத்திருக்கிறார்கள். எப்போது ஒருவன் தான் நகைச்சுவையாக எழுதப்போகிறேன் என்ற முன்முடிவுடன் எழுத உட்காருகிறானோ அப்போதே அவனும் (ஆசிரியனும்) செத்து, அவன் எழுதப்போகும் பிரதியும் மரணக்குழிக்குள் மண்போட்டு மூடப்படுகிறது என்று மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பின்நவீனத்துவ சிந்தனையாளர் வெறித்தா போய்க்கோ சொல்லியிருக்கிறார். *****கை நக்கலடித்து அசத்தலாக எழுத *****காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.//

ஐய்யா!,நாங்க எழுதியது நகைச்சுவை அப்படின்னு உங்க கிட்ட சொன்னோமா?.
இதைப் படிச்சவுடனே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது.நாங்க பள்ளிக்கூடத்தில படிச்ச காலத்தில,ஒரு தடவை நானும் என் ஃப்ரண்டும் ஸ்கூலுக்குப் போகும் தடத்தில ஒரு கடை இருந்திச்சி!.(நிறைய கடைகள் இருந்திச்சிங்க நாங்க எப்பவுமே மிட்டாய் வாங்கற கடைங்க ஸ்ஸ் அப்பாடா போதுமா! )
ஒரு நாளு நாங்க ரெண்டு பேரும் மிட்டாய் வாங்க அந்த கடை வாசலில நின்னோம்.கடையில யாருமில்ல.கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு அதுக்கப்புறமும் யாரும் வரலேன்னுட்டு கடைக்குள்ளார எட்டிப் பாத்தோம்.ஒரு கோணத்தில கடையைத் தாண்டி கடைக்காரரோட வீட்டு ஹால் தெரியும், நாங்க எட்டிப் பாத்த்ப்ப அங்க கடைக்கார சில்மிஷ பாண்டி செவுத்தோரமா ஒரு சிட்டுக்கிளியை உருட்டிக்கிட்டிருந்தாரு!.அது அவரோட பொண்டாட்டியான்னு எங்களுக்குத் தெரியாது.இருந்தாலும் பட்டப் பகலுன்னு சொல்லக் கூடாது,காலங்காத்தாலே ,செவுத்தில முட்டுக்கொடுத்து அவரு ஜக ஜகா பண்ணுனதை நாங்க ரெண்டு பேரும் பாத்துட்டோம்.


இங்க காமெடி எங்க வருதுன்னா?..அதுக்கப்புறம் அந்தக் கடைக்காரரைப் பாக்கும் போதெல்லாம் நாங்க ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள சிரிப்பு!.இதில யாராவது மூணாவது ஆள் வந்து அர்த்தம் கண்டுபிடிக்க முடியுமா?.புடிக்கத்தான் முடியுமா?.யாராவது எங்களைப் பார்த்தால் மெண்டல் அப்படின்னுதான் நினைக்கனும்!.ஆனா அந்த கடைக்காரரே வந்து எங்களை லூசுன்னு சொன்னால் சிரிப்பு கூடுமா?.குறையுமா?.அப்படித்தான் இருக்கு உங்க இந்த பத்தி!(*******கை நக்கலடித்து அசத்தலாக எழுத *******க்காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.)

நாங்க எழுதிக்கிட்டது எங்களுக்காக!,இப்ப நீங்க வேற யாரோ எழுத வற்புறுத்தி (ஹி ..ஹி..ஹி..ஹி) அதனாலெ இப்ப எழுதிறீங்களே அப்படி!.எங்க தமாஷை ஏன் நீங்க படிக்கிறீங்க!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதனுன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!.எழுத்துகளின் கட்டற்ற ஒழுங்கற்ற வரையறையற்ற ஒழுங்கு தான் பின்நவீனத்துவம் என்பது என் எண்ணம்.பிரேசிலின் பிரபல எழுத்தாளர் வென்கோ டிஸௌஸோ சொன்னது போல கட்டிய தளைகள் விடுபடும் போது அதனிடையே உள்ள மெல்லிய மின் முடிச்சுத்தான் பின்நவீனத்த்துவம்.இந்த போஸ்ட் மார்டனிசம் தமிழ் எழுத்தாளர்கள் சில பேரால் மிகத்துல்லியமாக கையாளப் பட்டுள்ளது.ஆதவன்,சுப்பிரமணியராஜூ போன்றவர்களை இதில் கை தேர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.
1978-ல் ஒரு முறை ஸ்ரீ வேணுகோபலன் என்கின்ற புஷ்பா தங்கதுரை சொன்னது ஞாபகம் வருகிறது. ”பின் வழிப் புணர்தல் மிக வலிய எழுத்தில் உள்ளதை மிகச் சுலபமாக மண்டி போட்டாள் என்று எழுதினால் அதுதான் பின்நவீனத்துவம்.”

பின்குறிப்பு: பின்நவீனத்துவத்தைப் பற்றி எங்களாலும் உளறமுடியும் என்பதற்குத் தான் இதை எழுதினேன்.மேலே உள்ளதைப் படித்துவிட்டு யாருக்காவது ஜன்னி வந்தால் நான் பொறுப்பல்ல!..கொஞ்சம் கிட்ட வாங்க,பின்நவீனம் அப்படின்னா என்னங்கண்ணா?.......... 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் கண்ணன்.S ஒரு முறை எழுதினார்.”
நாம்பதான் அவரை நோண்டுறோம்.அவர் நம்மை கண்டுக்கவில்லையே” என்று அதற்க்கப்புறம் நான் அந்தப் பக்கமே போகவில்லை!.இப்போ அவர் நம்மை நோண்டி இருப்பதால் தான் இந்த பதில்!.இல்லேன்னா நாம ஏன் இந்தக் கொடுமையை எழுதுறோம்!
(மேல உள்ளது எல்லாம் நேத்து எழுதினது!.கீழே உள்ளது மட்டும் இப்ப எழுதியது)

கடைசியா பதிவு அரசியல் இதோட முடிஞ்சிருச்சி!.அதான் பரிசல்க்கார அண்ணன் பிளீச்சிங் பௌடர் யாரன்னுதான் போட்டுட்டாரே!.
so, வாங்க எல்லோரும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்!.வாங்க பழகலாம்! :))

ஆனந்தவிகடனுக்கு பதிலடி---அன்னக்கிளி குமுதம் விமரிசனம்!

Posted on Saturday, August 23, 2008 by நல்லதந்தி


ஹி..ஹி... சினிமா ஸ்டில் கிடைக்கலை அதான்!

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம்; அதற்கு ஒரே ஒரு வாத்தியார்.(பாடம் கீடம் நடத்தியதாகத் தெரியவைல்லை) அவர் காதலிப்பது அன்னக்கிளியை.கைப் பிடிக்க நேர்வது சொர்ணக்கிளியை.இன்னும் கொஞ்சம் துணிவு இருந்திருந்தால் கதையைக் கவிதையாகப் பண்ணி இருக்கலாம். கை நழுவ விட்டுவிட்டார்கள். கதையே டல் அடிக்கிறது.


முழுக்க முழுக்க கிராமத்துச் சூழ்நிலையை வைத்துத் தரமான பிளாக் அண்ட் வொய்ட் படம் வந்து ரொம்பக் காலம் ஆகிவிட்டது என்று ஏங்குபவர்களுக்கு அன்னக்கிளி ஆறுதல் தரும்.


ஊஞ்சலாட்டம் முதல் நீச்சலோட்டம் வரை வாத்தியாரைய்யாவுக்கு வாத்தியாரம்மாவாக விளங்குகிறார் சுஜாதா.


சிவகுமாரின் வயிற்றை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு, 'ஊம்.....இப்ப கால் ...இப்ப கை...' என்று நீச்சல் சொல்லிக் கொடுத்து விட்டு பிறகு அவரது இடுப்புத் துண்டைக் காணோம் என்று தெரிந்ததும் கூச்சத்துடன் ஓட்டம் பிடிப்பது கிளுகிளுப்பான -- அதே சமயம் அசிங்கமான -- குட்டிக் கதை.


அதென்னவோ தெரியவில்லை,படாபட் வந்த பிறகு தான் பழைய காதல் கதையில் சூடு பிடிக்கிறது.


முழங்காலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஆடிக்கொண்டே,"உங்களுக்கு எப்படி இந்தக் கிராமத்தில் பொழுது போகிறது?" என்று சிவகுமாரிடம் பேச்சுக் கொடுக்கும் சரளம்; 'என்னங்க,அன்னத்துக்கு ரெண்டு ரூபாய் கொடுங்க', என்று--கணவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப் பற்றி அறியாமலே----சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகும் லாவகம்---படே பட்தான் இந்த படாபட்.


அங்கே திரையில்,கண்ணகியின் போராட்டம்; இங்கே தியேட்டர் முதலாளியின் படுக்கை அறையில் அன்னக்கிளியின் போரட்டம்.டைரக்டர்களின் சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்.


தன்னை நேசித்து,சமயத்தில் தனக்கு ஆயிரம் ரூபாய்ப் பணத்தை-குருவி சேர்ப்பதுபோலச் சேர்த்து--அனாயாசமாக எடுத்துக் கொடுத்த பேதைப் பெண்ணை ஏமாற்றி விட்டோமே என்று சிவகுமார் ஏக்கப் பட்டவராக இருக்க, அவரைப் பிரிந்து விட்டோமே என்று சுஜாதா ஏங்க இருவரும் சந்திக்கும் போது,உணர்ச்சி வசப் பட்டுத் தங்களை ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு விடுவதும்,சுஜாதா உடனே பிரக்ஞை வரப் பெற்றவராக,'போயிடுங்க வாத்தியாரையா, போயிடுங்க..' என்று பதறுவதும் நல்ல கட்டம்.


ஸ்ரீகாந்த், சோக காந்த்.


சில ரே ரக கிராமிய அழகுகள்; சில ஆழ்ந்த வசனங்கள்; சில புத்திக் கூர்மையுள்ள டைரக்ஷ்ன் பொறிகள். இவ்வளவு இருந்தும்---


அன்னக்கிளியை மனசில் நின்ன கிளி என்று சொல்லத் தோன்றவில்லை.


பி.கு : இந்த திரைப் படத்திலிருந்து தமிழ் திரை இசையை வேறு தளதிற்க்கு கொண்டு சென்ற இளைய ராஜாவின் இசையைப் பற்றி ஒரு வரி கூட எழுதாத ஞான சூனிய குமுதம் விமரிசகரைப் பற்றி என்ன சொல்ல!