Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

ஜெயமோகனும், சாருவின் அல்லகையும்!

Posted on Sunday, March 21, 2010 by நல்லதந்தி

ரொம்ப நாள் கழித்து வர்றதால் அறிமுகப் படுத்திக் கொள்வேனேன எதிர்பார்க்க வேண்டாம்.


விஷயம் இதுதான்!.

நான் சமீப காலமாய் இரும்புத்திரையைப் படிக்கிறேன். அவர் நல்ல மாதிரியாய் எழுதுவதில் சிறந்தவர்களில் ஒருவர். இன்று காலையில் அவருடைய வலைப்பூவிற்கு போனபோதுதான், யுவகிருஷ்ணா என்கின்ற லக்கி லூக் என்ற நபர் ஜெயமோகனைப் பற்றி எழுதியுள்ள விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு அவருடைய வலைப் பக்கம் போய்ப் பார்த்தேன்.

சகட்டு மேனிக்கு அவர் குருநாதர் கு.நக்கியின், கு. நக்கி பாணியிலேயே விளாசுவதைப் பார்த்தால் அவருக்கு எந்த அறிவிமில்லை! என்பது தெரிகிறது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், என்னைப் போன்ற் சிலர் அவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்! :).

அதற்கு அவசியமே இல்லை!.

அவருக்கு எந்தவித அறிவும் இல்லை என அவர் சார்ந்த கட்சியை வைத்தே அவரை அளவு கோலிடுவது எல்லோர்க்கும் இயல்பான ஒன்றுதான் என்றாலும், நான் அப்படி வேகமாக முடிவு செய்யவில்லை. ஆனாலும் எனக்கு நடந்தது என்னவென்றால்!

சில அல்லது பல மாதங்களுக்கு முன் அவரது வலையில் அண்ணா இறந்து அடக்கம் நடக்கும் போது ஒரு கோடிப் பேர் கலந்து கொண்டனர் என்று எழுதினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அய்யா! அண்ணா இறந்த போது தமிழ் நாட்டு ஜனத்தொகை நான்கு கோடிக்குள்ளாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, ஆண்கள் ஒன்றரைக் கோடி, பெண்கள் ஒன்றரைக்கோடி, குழந்தைகள் ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு கோடி ஜனம் ஒரே இடத்தில் சென்னையில் திரள்வதெப்படி ? அப்படித் திரண்டால் சென்னைதான் தாங்குமா?. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிற்பாடு தன் மேல் புகழுரைத்து எழுதுமாறு பணித்து பிறர் அவர் மேல் புகழ்ந்து எழுதிய பாடல்களில் கூட ”நான்கு கோடி மக்களுக்குத் தலைவர் அண்ணா நல்லதம்பி என்றழைத்த கலைஞர்” என்று தான் எழுதினார்கள். நீங்கள் சொன்ன ஒரு கோடி மக்கள் என்ற தகவல் பிழை என்று என்று எழுதினேன். அவர் வழக்கம் போல கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொருட்டு அதை வெளியிடவில்லை. ( உங்களுக்காக ..., அன்று இறுதி மரியாதையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர். அன்று அதே பெரியவிஷயம், இன்றும் அது பெரிய விஷயம் தான்)

இந்த இலட்சணம்தான் அவரது சரித்திர அறிவின் எல்லை. எப்படி அய்யா இதைச் சொல்கிறாய் என்றால் பதில் இல்லை!. பிற்பாடு அதை கின்னஸ் புத்தகத்தில் படித்ததாக எழுதினார். மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என்னவோ அப்படி ஒரு படிப்பு!.
சரி புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்கின்ற அளவிற்குத்தானா உமது அறிவு( நான் கின்னஸை மட்டும் வைத்துச் சொல்ல வில்லை)., சுய சிந்தனை ஏதும் கிடையாதா?.. அப்புறம் என்ன அறிவு..ஒரு வேளை இதுதான் பகுத்தறிவோ என்னவோ!. எத்தனைப் புத்தகங்களில் பிழையான தகவல்களைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் சரியானது என கருதப் பட்ட எத்தனை விஷயங்கள் பிழையானது என்று மீண்டும் அதே புத்தகத்திலேயே கூட அடுத்த பதிப்பின் போது திருத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.

இந்த அறிவை வைத்துக் கொண்டே அவர் ஜெயமோகனின் கட்டுரையை விமர்சனம் செய்ய முடிகிறதென்றால் அவரது கட்சிக்கான அடிப்படைத் தகுதி மட்டும் சரியான முறையில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதைத் தவிர அவருக்கு எந்தத் தகுதியும் சரி.., அறிவும் இல்லை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கும்.

எல்லாருக்கும் தெரிந்த, இன்னும் அதை நேரில் பார்த்த பலர் இருக்கும், 40 வருட சரித்திரமே அவருக்கு இந்த அளவுதான் என்ற போது, வரலாற்றைப் பற்றிப் பேச இம்மியளவு கூட தகுதி இல்லாத இப்படிப் பட்ட நபர்கள் எல்லாம் இணையம் இலவசமாகக் கிடைகிறதே என்று, கண்டபடி எழுதி கூத்தடிப்பதைப் பார்த்தால், இணையத்தைக் கண்டுபிடித்தவர் நாண்டு கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை!. அவர் செத்திருந்தாலும் , அது இவரைப் போன்று எழுதுபவர்களால்தான் இருக்கும்.

இந்த அல்லகை அ,ஆ,இ,ஈ தெரிந்த ஒரே காரணத்துக்காக புத்திசாலி என்று நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா?.

சாக்கடை ஒரத்தில் இது நீச்சல் குளம் என்று எழுதியிருந்தால் அதில் யோசிக்காமல் குதித்து விடும் இந்த அல்லகை தற்குறி.,, படித்திருப்பதில் பிரயோசனம் உண்டா? ( பி.கு ஒரு வேளை படித்திருந்தால்! :) )

தேவரின் திருமுகமும், கொடு முகமும்!

Posted on Sunday, July 12, 2009 by நல்லதந்தி




நண்பர் RV எழுதிய இடுகையைப் பார்த்ததும் வந்த நினைவுகளால் எழுதியது!. முன்பே தேவரைப் பற்றி என்னுடைய இடுகை.

இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!.

ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம்.

முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது.

இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!.

இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!.
நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்‌ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.



ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.
தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு.

பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின.

ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது.

இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!..., இதென்ன இப்படி ஒரு டுபாக்கூர் சம்பவத்தை கதை கட்டுறானேன்னு நினைக்கிறீங்களா?.

இது நிஜமாகவே நடந்த உண்மை, நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.

நான் யோசிக்கிறது என்னன்னா அந்த ஹீரோ இராஜேஷ்கன்னாவா? இல்லை தர்மேந்திராவா அப்படிங்கிறதைத்தான்!!!!!!!!!!!!!!!!!

இரட்டை இலையால் விளையும் நன்மை!

Posted on Tuesday, May 12, 2009 by நல்லதந்தி




இது பழைய விஷயம் தான், இருந்தாலும் இப்போ தீடீரென்னு நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நன்மை இந்த இரட்டை இலையால் இருக்கான்னு நான் வியக்கிறேன்., பெரிய விஷயத்துக்கு ஜனங்களுக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்குமோ!.


அப்புறம் நாளைக்கு தேர்தல் . ஹய்யா ஒரு நாள் லீவுன்னு ஜாலியா இருக்கிறதுக்காக நேத்தே சரக்கு வாங்கி வெச்சிருந்தாலும், எந்த வேலையா இருந்தாலும் முதலிலே ஓட்டைப் போட்டுட்டு அப்புறம் உங்க ஜாலியையும், ஜோலியையும் பாருங்க!. இதுக்கும், மேலே உள்ள இரட்டை இலைக்கும்,  நீங்க  சம்பந்தப் படுத்திக்கிட்டா நான் தான் பொறுப்பு!.. ஹி..ஹி...ஹீ....

ஆகவே ஜனங்களே நாளைக்கு மறக்காம ஒட்டுப் போட்டுடுங்க...

இரட்டை இலையாலே செல் போனுக்கே “சார்ஜ்” ஏத்தமுடியும் போது நாட்டுக்கும், நமக்கும் “சார்ஜ்” ஏத்தமுடியாதா?.......




கலைஞருக்கு சில TIPS!

Posted on Friday, May 8, 2009 by நல்லதந்தி

வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.

இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இராஜபக்‌ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.

இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....

விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.

தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.

மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.

ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.

கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?

Posted on Thursday, April 16, 2009 by நல்லதந்தி

தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.

கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.

மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.

கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.

உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!

முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.

இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.

பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.

நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.

எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.

அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.

அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.

த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.

பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை

துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!

Posted on Sunday, March 15, 2009 by நல்லதந்தி



இந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும்,  நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்!.

காமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.

அன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா? என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.

மறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல! :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா!. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.

இன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.

அத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம்.  வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.

அப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா? என்றுக் கேட்டாராம்.

இதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா?. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
திமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா! கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை! :) )

1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல)  ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.

எதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது! :) ) .........என்னத்த சொல்றதுங்க!.

(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ? :)

பி.கு.: இது எதிர் பதிவல்ல! 

இறுதிச் சங்கிலி!. உபயம் கலைஞர்.மு.க.!

Posted on Sunday, February 22, 2009 by நல்லதந்தி

இலங்கைப் பிரச்சனையில் பல்வேறு சடங்குகள் இதுவரையிலும் நடத்தப் பட்டாலும்.,அது எப்பொதுமே கலைஞர் கையால் நடத்தப்படும் சடங்காகுமா?. அவர் இந்த மாதிரி சடங்குகளை நடத்துவதில் ஈடு இணையற்ற புரோகிதர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஏற்கனவே அவர் சட்டசபையில் நடத்திய “இறுதி வேண்டுகோள்” சடங்கின் ஈரம் 
இன்னும் காயாமல் இருக்கும் போதே மீண்டும் ஒரு வழமையான சங்கிலிச் சடங்கை தமது குடும்பத்தாரால் நடத்தியுள்ளார் ...சாரி ,.....கழகத்தாரால் நடத்தியுள்ளார்.

அய்யோ! அய்யய்யோ!. இலங்கைத் தமிழர்களின் மீது அவ்வளவு அன்பா? என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஒரு வேளை அந்த அளவிற்க்கு அப்புராணி தமிழனாக இருந்தால் கவலைப் பட வேண்டாம்.அதெல்லாம் ஒன்றுமில்லை . 
தமிழினத் தலைவர் என்றப் பட்டத்தால் வருகிற வழக்கமான ஜன்னி தான் பய்ப்
பட ஒன்று மில்லை, என்று குடும்ப டாக்டர்கள் ஆறுதல் தருகிறார்கள்!.

 
இந்த படத்தில் உள்ள வருங்கால முதல்வர், மற்றொரு வருங்கால முதல்வர்,இன்னுமொரு வருங்கால முதல்வர் இவர்கள் “நான் கடவுள்” படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்க வில்லை!. 
ஏதோ சங்கிலியாம் சிவாஜி நடித்தப் படமல்ல!. மீண்டும் ..மீண்டும் சங்கிலியாம்...அதனால் இது கழகம் சம்பந்தப் பட்ட வழக்கம் போல் ஒரு இலங்ககைத் தமிழர்களுக்கான மனிதசங்கிலிதான்!.
இந்தச் சிரித்த முகங்களைப் பார்த்தால், இன்னும் இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதாய்த் தெரியவில்லை!. இதையும் மீறி அவர்கள் துன்பப் பட்டால் அதற்க்கு கழகம் பொறுப்பாக முடியுமா?. 

பி.கு: கழகத்தின் போராட்டங்கள் எப்போதுமே ஒரு வழக்கமாகச் சுற்றி வரும் வட்டம் என்பதால், இதற்க்குப் பிறகு வரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்து இருக்கக் கூடும். ஆனால் திருமா வளவன் போன்ற கழக அல்லக்கைகள் அதை நடத்தி ஒரு மாதம் மட்டுமே ஆனதால் அதை அடுத்த்ப் போராட்டமாக வைத்துக் கொள்ளக் கூடும். அதனால் அடுத்த கழகப் போராட்டம் “தமிழர் தந்தி” போராட்டமாக இருக்கக் கூடும். எனவே தமிழர்கள் இன்று சரக்கடித்தது போக மிச்சக் காசை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நாளைக் காலை மத்திய அரசுக்கு தந்தி கொடுக்க உபயோகப் படும்!.

இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி



ஆதரவற்று ரயில் நிலையத்தில் தவித்த ஐந்து வயது இந்துக்குழந்தையை வளர்த்து வந்தார் முஸ்லிம் மேஜிக் நிபுணர்; 13 ஆண்டுகள் கழித்து திடீரென போலீஸ் தலையிட்டு தந்தை - மகளை பிரித்ததும், கோர்ட்டுக்கு போய் போராடி மீட்டார்!இரு வேறு பட்ட மதமாக இருந்தாலும், மனம் குறுக்கே வரும் போது, மதம் பெரிய விஷயமல்ல என்பதை இந்த தந்தை - மகள் நிரூபித்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காத்ரி; மேஜிக் நிபுணர். மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி யில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்தார். ஊர் திரும்புவதற்காக ரயிலில் ஏறும் போது, பிளாட்பாரத்தில், ஒரு குழந்தை அழுதபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தது.அரை மணி நேரமாக அதை கண்காணித்து வந்த காத்ரிக்கு அதை விட்டுப்போக மனதில்லை. அதன் அருகே சென்று, குழந்தையிடம் விசாரித்தார். அதற்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை.


யாரோ தன்னை பிளாட்பாரத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டதாக கூறியது.எல்லா பிளாட்பாரங்களிலும் சென்று தேடியும் குழந்தையுடன் வந்தவர்களை காணவில்லை. அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை காத்ரிக்கு. தன்னுடன், ரயிலில் அழைத்துச் சென்றார். பெயரை கேட்டபோது, வர்ஷா என்று கூறியது; எல்லாரும் தன்னை முன்னி என்று செல்லமாக அழைப்பர் என்றும் கூறியது. இந்த சம்பவம் நடந்தது 1995ம் ஆண்டில்.


குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள தன்காரியா என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். வர்ஷாவை அவர் தன் மகளை போல வளர்த்துவந்தார். பின், அவர்கள், ஆமதாபாத் மாவட்டம், ரமோல் என்ற இடத்தில் குடியேறினர்.தன்காரியா கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வர்ஷா வளர்ப்பு மகள் என்பது தெரியும். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் வர்ஷாவுடன் பகக்கத்து வீட்டுக் குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் பழகி வந்தனர்.


இந்நிலையில், சில மாதங்கள் முன், அக்கா,தம்பி இருவரும் தங்கள் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள காத்ரி வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் விஷயத்தை கேள்விப்பட்ட காத்ரி, வீட்டில் தங்கிக் கொள்ளச்சொன்னார். அவர்களை சமாதானப்படுத்தி அப்பாவிடம் ஒப்ப டைக்க முடிவு செய்தார். இதற்குள், அவர்களின் அப்பா, தன் மகள், மகன் இருவரையும் காத்ரி தான் கடத்தி வைத்திருக்கிறார்; அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீசில் புகார் செய்தார்.


காத்ரி வீட்டுக்கு வந்த போலீஸ், அங்கிருந்த அக்கா, தம்பியை மீட்டு, அவர்களின் பெற் றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்து, அவள் சொந்த மகள் இல்லை என்று தெரிந்ததும், அவளை அரசு காப்பகத்தில் சேர்த்து , காத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் காத்ரி வழக்கு போட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், வளர்ப்பு மகளாக வர்ஷா மீது உரிமை கோர முடியாது என்று கூறி அவர் மனுவை கோர்ட் நிராகரித்தது.


செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் காத்ரி. அவர் மனுவை ஏற்ற கோர்ட்," இத்தனை ஆண்டுகள் காத்ரியிடம் வளர்ந்துவந்த வர்ஷாவை அவரிடம் ஒப்படைத்து விடலாம்; இதற்கான உரிய ஆவணங்களை அவர் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் காத்ரி, - வர்ஷா ஒன்று சேர்ந்தனர். "என் பாச மகள் கிடைத்து விட்டாள்; அது போதும்' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் காத்ரி.


நன்றி: தினமலர்

பிராமணர்கள் கோழைகள் இல்லை!

Posted on Sunday, December 14, 2008 by நல்லதந்தி




ஜெமினிகணேசனைப் பொறுத்த வரையில் அவர் “சாம்பார்” என்ற ஒருஅடை மொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.அது அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனபதால் ,அவ்ரைக் கீழ்மைப் படுத்த இருக்கலாம்.ஆனால் சாம்பார் என்ற பெயர் வந்த காரணம் வேறு என்று நான் இதே இணையத்தில் படித்திருக்கிறேன்.அது ஏதோ ஒரு திரைப் படத்தின் மூலமாக வந்தது என அறிகிறேன்.ஆனால் அது கோழை என்று அடைமொழியாகி அவர் சார்ந்த வகுப்பை கிண்டலடிக்க தி.க.,திமுக, கும்பல்களுக்கு உதவின.நிஜத்தில் அவர் அன்றைய காலத்தில் இருந்த மற்ற நாயக நடிகர்களை விட அதி தைரியசாலி என்பதே உண்மை.

விஜயா-வாஹினி புரெடெக்‌ஷன் சார்பில் ,அவர்கள் தயாரித்த இரு மொழி படத்தில் ஹீரோ மாடியில் இருந்து குதிக்கும் காட்சி ஒன்றுண்டு.அந்தப் படத்தில் தமிழில் நாயகனாக நடித்த ஜெமினி கணேசன்.இருபதடி உயரத்தில் இருந்து அநாவசியமாகக் குதித்தார்.அதன் தெலுங்குப் பதிப்பில் நடித்த என்.டி.ராமராவ் சிறிது தயக்கப் படவே அவருக்குப் பதிலாக ஜெமினி கணேசன் மாடியில் இருந்து குதித்து டூப்பாக நடித்தார்.ஆக திரையுலகில் டூப்பாக ஒரு பிரபநடிகருக்கு மற்றொரு பிரபலம் நடித்தது.அதுவே முதல் முறை.ஒருவேளை கடைசி முறையாகவும் இருக்கலாம்.அடுத்த மேட்டர்.........................

ஜூபிடர் பிக்சர்ஸின் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள’ படத்திற்கென ஒரு போர்காட்சி நெப்டியூனில் படமாகி வந்தது.அப்பொழுது, நட்சத்திரங்களில் மிகவும் அதிக நெஞ்சுத் துணிவுள்ள பேர்வழி யார் என்பதைப் பற்றி கேள்வி வந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரைச் சொன்னார்கள்.அந்த சமயம் அங்கே இருந்த ஒர் இளம் நாடிகர் புன் சிரிப்புடன்,” நான் கூறட்டுமா?,அந்த துணிச்சல் நடிகர் யாறென்று!” என்று கூறி விட்டு “ஜெமினி கணெசனின் துணிச்சல் யாருக்கும் வராது,” என்று சொல்லி பின் கண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சியை விவரித்தார்.

புதுக்கோட்டை ராஜவம்சத்தைச் சேர்ந்த நடுத்துரை என்பவர் அப்போது தங்கியிருந்தார்.அவர் ஜெமினிகணேசனின் நெருங்கிய நண்பர்.தமது நண்பரைப் பார்க்க போயிருந்தார். நடுத்துரை பேச்சோடு பேச்சாக, ” நீங்கள் சினிமாவில் பல துணிகரச் செயல்கள் செய்வதல்லாம் வெறும் நடிப்புத்தானே?,” என்று கேட்டார்.

“நிஜமாய் எனக்கு மனோ தைரியம் உண்டா என்று பார்க்க ஒரு பரிட்சை வேண்டுமானால் வையுங்களேன்” என்றார் ஜெமினி கணேசன்.நடுத்துரை உடனடியாக ஒரு பரிட்சை வைத்து விட்டார்.

ஜெமினிகணேசனை உட்கார வைத்துஅவர் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தார் நடுத்துரை.நண்பர் நடுத்துரை குறி பார்த்து சுடுவதில் சூரர்.தொலைவில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த ஜெமினி கணெசனின் உதட்டிலிருந்த சிகரெட்டைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார்.தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

இவனை என்ன செய்தால் தகும்?

Posted on Thursday, December 11, 2008 by நல்லதந்தி



திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர். செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் மாடி வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.

சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி செய்தி!

மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!

Posted on Wednesday, December 10, 2008 by நல்லதந்தி

நான் பெங்களூர் போகும் போது எல்லாம் ஹொசூரைக் கடக்கும் போது “மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம்” என்று எழுதப் பட்ட பெரிய வளைவைப் 
பார்த்தவுடன் ஒரு முறையாவது நாம் போய் அவர் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.பேருந்தில் இருந்து இறங்கி நகரப்பேருந்திற்க்கு காத்திருந்து (எத்தனை மணிநேரத்துக்கொன்றோ) அதைப்பிடித்து போய்ப் பார்க்க 
வேண்டிய அசெளகர்யத்தை நினைத்தவுடன் அந்த நினைப்பு மாறிவிடும்.

இந்த முறை பெங்களூரு சென்றது டூ வீலரில் என்பதால்,கட்டாயம் தொரப்பள்ளி செல்லவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அப்போது எடுத்த சில 
படங்களைப் பதிவிடுகிறேன்.நேரம் கிடைத்தால் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

               தொப்பூர் கணவாய் காலை வேளை
                         பாலக்காடு அல்ல! பாலக்கோடு

இராயக்கோட்டை

முன்வாசல்
நுழைந்தவுடன் இராஜாஜி



புகைப்படக் காட்சிகள்



சேலத்தில் அவர் வாழ்ந்த வீடு
வெறும் மூங்கில் தடிகளால் வேயப்பட்ட வீடு
வீட்டுக்கருகில் அழகிய சிறு நதி




ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1

Posted on by நல்லதந்தி



இன்றல்லோ கம்பன்
இன்றல்லோ ராச சபைக்கு
ஏற்கு நாள் ---இன்றல்லோ
இறந்த நாள்;புன் கவிதை
பூ மடந்தை வாழ,
புவி மடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாங்கும் 
நாள்!

என்று ஒரு பாட்டு,கவிச்சக்ரவர்த்தி கம்பன் இறந்து பட்ட போது ஒரு கவிஞன் பாடியதாக வழங்கப் படுகிறது இந்தப் பாடல்.நண்பர் புதுமைப் பித்தன் இந்தப் பாடலை கம்பனேதான் பாடியிருக்கிறான் என்று சாதித்துக் கொண்டிருந்தார். சரசுவதியின் தாலிபாக்கியம் தறி பட்டுப் போயிற்று என்று கூற அவன் ஒருவனுக்குத்தான் அத்தனை தைரியமும்,துணிச்சலும்,கலைத் தேவியிடம் தோழமை உணர்ச்சியும் உண்டு என்பது அவர் வாதம்.

தனது கவிதையின் மேதாவிலாசம் உணரப்படாமல் போவதையும்,அதே வேளை வறட்டு வெள்ளைக் கவிகள் அம்பலமேறி அட்டகாசம் புரிவதையும் கம்பனும் அவன் ஆயுளிலேயே அனுபவித்தே இருப்பான்.அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே அவனே இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறான் என்று அழுத்திச் சொன்னார் புதுமைப்பித்தன்.இதை வலியுறுத்துவது போல,இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருச்சி வானொலி நிலையத்தார் புதுமைப் பித்தனுக்கு ஒரு வானொலிப் பேச்சுக்கு அழைப்பு அனுப்பினார்கள்’பாட்டு எப்படி பிறக்கிறது?’ என்பது பொருள்.

புதுமைப்பித்தன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்தப் பேச்சுக்காக எழுதிய எழுத்துப் பிரதியில் கம்பனைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைக் கூறி,வயிற்றெரிச்சலிலும் பாட்டு பிறக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அத்துடன் நில்லாமல்,கம்பனுக்கு ஏற்பட்டதைப் போல தன்னுடைய வயிற்றெரிச்ச்லையும் இப்படி ஒரு பாட்டாக அமைக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருச்சி ரேடியோ நிலையத்தில் பேசுவதற்காக இருந்த புதுமைப்பித்தன் அதற்கு முன்பே காலாவதியாகி விட்டால்?-- என்ற கேள்வியை அவரே எழுப்பிக்கொண்டு அப்போது தம் எதிரிகள் எத்தனை கும்மாளம் அடிப்பார்கள்,”பய போயித் தொலைஞ்சானா?” என்று எவ்வளவு நிம்மதியுடன் சொல்வார்கள்,புதுமைப் பித்தனின் மிதியடியின் காலடி ஓசையைக் காலனின் அடியோசையாகக் கேட்டுக் கிலியடைந்த இலக்கியப் போலிகள் எப்படி ஆனந்த பள்ளாட்டம் போடுவார்கள் என்பதையெல்லாம் கற்பித்துக் கொண்டு,அந்த வேளையில் புதுமைப் பித்தனின் நண்பர் ஒருவர் இந்த “நரியின் அம்பலக் கூத்தைக்’கண்டு வயிறெரிந்து,அந்த இலக்கியப் போலிகளைப் பார்த்துப் பாடுவதாக,புதுமைப் பித்தனே ஒரு பாட்டு பாடிவிட்டார்.

திருச்சிக்கு என்றான்;
தெந்திசைக்கே சென்று விட்டான்
கிரிச்சிச் சடாச் சத்தம்
கேட்டாயோ?-உரிச்சி
வச்ச ம்டையா வக்கு
அத்த மடையா| எச்சிற்
காசுமடையா போ
டா!

என்று பாட்டு.வயிற்றெரிச்சலின் காரணமாக வல்லின ஓசை செவிட்டில் அறைந்தாற் போல் உறைத்து விழுந்து,எதுகை மோனை இலக்கணங்கள் தட்டழிந்து தறிகெட்டுத் தாவுகின்றனவாம்!

இந்தப் பாட்டுக்கும் திருச்சிக்கும் ஏதோ தெய்வீக சம்பந்தம் உள்ள மாதிரி,புதுமைப் பித்தன் சந்தர்ப்ப பேதத்தால் திருச்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது; அவருடைய பேச்சும் ஒலிபரப்பப் படாமல் நின்று விட்டது.

புதுமைப் பித்தன் கடைசிக் காலத்தில் திருச்சிக்குச் செல்லவில்லை,அதற்க்கும் தெற்கே திருவனந்தபுரத்துக்குத் தான் சென்றார்.ஆனால்,தமிழ்நாட்டின் சாபத்தீட்டு அவரை அதற்கும் தெற்கே-சென்றவர்கள் மீளாத தென் திசைக்கே--வழியனுப்பி விட்டது.ஆம் தமிழ்நாட்டு மறுமலர்ச்சியின் தனிக்காட்டு ராஜாவான புதுமைப் பித்தன் இந்த வருடம் 1948 வருஷம் ஜூன் மாசம் 31-ம் தேதியன்று காலமாகி விட்டார்.


சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன் திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற வேளாள குல ஆசாமி ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவிற்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்யோகம் பார்த்து வந்தார்.

அவர் அங்கு விருதாச்சலத்தில்,ஷதர் கோர்ட் கலெக்ட்டராக இருந்த வெள்ளைக் காரத் துரையிடம் நன் மதிப்பு பெற்று,பதவி உயர்வும் பெற்றார்.அச் சமயம் லகர ளகரம் நிறைந்து,வெள்ளைப் ப்ரங்கித் துரையின் வாயில் நுழையாத தம் பெயரை துரையவர்கள் உத்திரவுப் படி விருத்தாச்சலம் என்று மாற்றிக் கொண்டார்.இந்த விருத்தாச்சலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரன் தான் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன்.

உலகளந்த பெருமாள் பிள்ளையிம் காலம் தொடங்கி,அவர்களின் வமிச பரம்பரை சர்க்கார் ரெவினியூ இலாகாவில் உத்தியோகம் விகித்து,ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.புதுமைப் பித்தனின் தந்தையான ஸ்ரீ வி.சொக்கலிங்கம் பிள்ளை படித்து,பி.ஏ. பட்டம் பெற்று, ஸ்ரீமதி பர்வதம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்று, தென்னாற்காடு ஜில்லாவில் உத்தியோகம் பார்த்து வந்தார்.அப்போதுதான், 1906 ம் ஆண்டு கடலூருக்கருகில் உள்ள திருப்பாதிரிப் புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமாந்தப் புத்திரனாகப் பிறந்தார்.

தமிழ்நாட்டுச் சம்பிரதாயப்படி,புதுமைப் பித்தனுக்கு அவரது தாத்தா விருதாச்சலம் பிள்ளையின் பெயரே சூட்டப்பட்டது.ஸ்ரீ மதி பார்வதியம்மாள் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ருக்மணி என்ற செல்லத்தம்மாள் என்ற பெண் மகவை ஈன்றெடுத்து விட்டு 1914-ம் ஆண்டு தேக வியோகம் அடைந்து விட்டார்.அப்போது சொ.விருத்தாசலத்திற்கு வயது எட்டு; தாயின் பரிபூரணமான அன்பையும் பெற அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை.

தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் உத்யோகத்தின் ஸ்தல மாற்றங்கள் காரணமாக ,புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பும் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.ஸ்திரமற்ற படிப்பால், சொ.விக்கு ஆரம்பக் கல்வி ஒழுங்காக நடைபெறவில்லை.அவருடைய ஆரம்பப் படிப்பு செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் நடந்தேறியது.

“பள்ளிக் கூடத்தில் படிப்பதைவிட செஞ்சி மலைக் கோட்டையில் ஏறிச் சுற்றுவதுதான் எனக்கு பிடித்திருந்தது” என்று சொ.வியே குறிப்பிட்டார்.எனினும் பிறப்பால் அமைந்த புத்திக்கூர்மையால் பாடமும் படித்து வந்தார். ”பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பயல் கலிவெண்பாவை எடுத்து வைத்துக் கொண்டு பாராயணம் செய்வான்” என்று இன்றும் சொக்கலிங்கம் பிள்ளை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்.

1918-ம் வருஷம் சொக்கலிங்கம் பிள்ளை பென்ஷன் பெற்று,தமது பூர்விக நாடாகிய தென்பாண்டிச் சீமைக்கு-திருநெல்வேலிக்கு வந்து குடியேறினார். அப்போதுதான் சொ.வி.க்கு பனிரெண்டு நிரம்பி,பால்யத்தின் பேதமை மறைந்து அறிவு தெளிந்து வரும் பருவம்.திருநெல்வேலியில் தான் அவருடைய பள்ளிப் படிப்பும் ஸ்திரமாயிற்று.தமிழ் மொழி பொருப்பிலே பிறந்தாலும்,தென்னன் புகழிலே வளர்ந்தது போல்,சொ.வி. திருப்பாதிரிப் புலியூரில் பிறந்தாலும்,அவரை ஆளாக்கி விட்டது தென்னன் புகழ் படைத்த திருநெல்வேலிச் சீமைதான்.

சொ.வி.யின் பள்ளிப் படிப்பு திருநெல்வேலி கிறிஷ்தவத் திருச்சபையைச் சார்ந்த அர்ச்.யோவான் ஸ்தாபனக் கல்விக் கூடத்தில் தான் நடந்தேறியது.பள்ளியில் அவர் ஒவ்வொரு வகுப்பிலும் பல தடவை குட்டிக்கரணம் போட்டே வந்திருக்கிறார்.பள்ளிப் படிப்பு இந்தப் புள்ளிக்கு உதவாமல் போய்விட்டாலும் அனுபவக் கல்வியும் அதிகமாகவே அமைந்து வந்தது.பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குத் தயாரானதும் சொ.வி.யின் கல்விக்கூடம் யோவான் கலாசாலையில் இருந்து இந்துக் க்ல்லூரிக்கு மாறியது.திருநெல்வேலி ஜங்கஷ்னில் உள்ள இந்தக் கல்லூரியில் தான் கவிஞர் பாரதியும் கல்வி கற்றார்.இந்தக் க்ல்லூரியில் தான் பாரதி உபாத்தியாரைப் பார்த்து “காள மேகம் ஆசிரியரின் உத்திரவுக்கு பணிந்து மழை பொழியாது” என்று வீராப்புடன் பதிலளித்தார்.

மற்றவை அடுத்த இடுகையில்:-

பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!

Posted on Tuesday, December 9, 2008 by நல்லதந்தி




எழுத்தாளர் புதுமைப்பித்தனுடன் இருந்த போது நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளை நடிகர் சந்திரபாபு கூறினார்.அவைகளில் இதுவும் ஒன்று.

புதுமைப்பித்தன் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.இருமல் வியாதியால் பீடிக்கப் பட்டிருந்த எழுத்தாளரும்,சந்திரபாபுவும் டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.

எழுத்தாளரின் வரவிற்காக ஒரு பத்திரிகாசிரியர் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்.

“அட்டை படமாகப் வெளியிட உங்கள் போட்டோ ஒன்று தேவை” என்று புதுமைப் பித்தனிடம் அவர் கேட்டார்.

புதுமைப்பித்தன் தமக்கே உரித்தான வரட்டுச் சிரிப்பை சிரித்துவிட்டு “என்னிடம் இப்போது ஒரே ஒரு போட்டோதான் இருக்கிறது.அதுவும் உங்களுக்குப் பயன்படாது!” என்றார்.

வந்தவர் விடுவதாக இல்லை. “பரவாயில்லை.அதையே கொடுங்கள்.நான் எதாவது செய்து சரிப்படுத்திக் கொள்கிறேன்.” என்றார்.

புதுமைப்பித்தன் மறுக்கவே வந்தவர் தருமாறு வற்புறித்தினார்.

“சரி, சொன்னால் கேட்க மாட்டீர்கள்.” என்றபடி ஒரு பெரிய கவரைப் பத்திரிகாசிரியரிடம் கொடுத்தார்.அதனுள் இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தார் வந்தவர்.உடனே திரு திருவென்று விழித்தார்.

அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2

Posted on Thursday, December 4, 2008 by நல்லதந்தி

இது ஏற்கனவே போட்ட பதிவுதான்.ஆனால் மீள் பதிவல்ல.வழக்கம் போல் காப்பி பதிவு.இப்போ மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இதைப் போடணும்னு தோணிச்சு.செப்டம்பரில் எழுதியது 
இந்த கட்டுரையின் முடிவில் ”அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம் அப்படின்னு எழுதியிருந்தேன்.யாரும் தேடிப் படிக்கப் போறதில்லை.அதனால் நமக்கு நாமே திட்டத்தின் படி நானே திரும்பவும் போட்டு விட்டேன்.

றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.

"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!

Posted on Monday, September 29, 2008 by நல்லதந்தி




தெள கீர்த்தனாம்பரத்திலே ,இப்போ ’மும்பை’யன்னு அழைக்கப் படற ஷேத்ரம் அப்போ ’பாம்பே’ன்னு அழைக்கப்பட்டு இருந்த காலம்.ஒரு 100 வருடங்களுக்கு முன்னே கம்ப்யூட்டரன்னு சொல்லப் படற வஸ்து அப்போ ’பாம்பே’லதான் கண்டு பிடிக்கப் பட்டதுன்னு நோக்குத்தெரியுமோ?.அதைக் கண்டுபிடிக்கிறப்போ கடைசியாய் கூட மாட ஒத்தாசை செஞ்சது நம்ப கொமாருன்னாவது தெரியுமோ?. கொமாரு யாருன்னு கேக்கறேளா?.இப்பச் சொல்றேன்!.

நம்ம கொமாருக்கு பொறக்கறச்சே வெச்ச பேரு வேறயாக்கும்.அதத்தான் இப்ப நா சொல்லப் போறேன்.அந்த அம்பி பொறக்கறச்சே பெரும் பிரளயம் வந்தாப்புல ஒரு பெருத்த ஷப்தம் கேட்டது.அதக் கேட்ட அவரோட சொந்தக்காரா ...இது சிவனுடைய லீலைதான்,இதெல்லாம் சிவ கணங்கள் எழுப்புற சப்தமான்னோ!. இவ்ன் பொறந்த நேரத்தில மணியொலிங்க கேட்டதால் மணி குமாருன்னு பேர வச்சிப்பிடுங்க்கோ!ன்னுட்டாள்.

இதைக் கேட்ட உடையவா அந்த அம்பிக்கு அந்தப் பேரயே வச்சிட்டா!.செத்த நேரம் கழிச்சி வெளியே வந்து எட்டிப் பாக்கறச்சேதான் தெரிஞ்சது ஒரு பிரம்மஹத்தி TVS ஃபிஃப்டிக்கார படுவா ஆயிலும் போடாம சைலன்சர கழட்டி வீட்டில வெச்சிண்டுட்டு தலதெறிக்க ஓட்டிண்டு போறது!.ஆனா அப்பவே நம்ப அம்பி ராசி சனி ராசின்னு தெரிஞ்சிடுத்து.

கட்டேலே போற அந்த கம்மினாட்டி கடங்காரனோட வண்டியோட டயர் பஞ்சர் ஆகி டமாருன்னு வெடிச்சிடுத்து.அவன் கீழே வுழுந்து கடலைப் பொறி பொறிக்கினான். அப்போ அம்பியோட ராசியப் பாத்து பயந்து.. க்‌ஷமிக்கணும்.. வியந்து அம்பிக்கு வெச்சச் செல்லப் பேருதான் டமாரு கொமாருன்னு.

இப்படிப்பட்ட ராசியான பையனான டமாரு கொமாரு வளர்ந்து வரச்சே!.............................

இந்த இடத்தில தமிழ் படடைரக்க்டருங்க இறந்த காலத்தைக் குறிக்க ஹீரோவோ அல்லது ஹீரோயின் கண்ணுக்கு மின்னாடி கருப்புக்கலர் ரிப்பனை சுத்திக்காட்டு வாங்க.இல்லேன்னா வருங்காலமா இருக்கறச்சே மாட்டு வண்டியோட சலங்கைச் சத்தத்தோட மாட்டோட கால்ல இருந்து அப்படியே மெல்லப் போயி வண்டியோட சக்கரத்தில கேமராவ நிறுத்தி டில்ட் அப் பண்ணுவாங்க.மாட்டு வண்டி கிடைக்காட்டி காரோட சக்கரம்,அதுவுமில்லேன்னா தையல் மிஷினோட வீல் இதில எதினாச்சிம் ஒண்ண காட்டினாப் போதும் அறிவாளித் தமிழ் ஜனங்க புரிஞ்சிக்கு வாங்க....

இப்படியே காலச்சக்க்ரத்தில ஏறி நீங்களும் நசுங்கிடாம வந்துருங்க.

ஸ்ஸப்பா!.இதுக்கு மேலயும் பிராமணாத்து பாஷை தேவையா?.முயற்ச்சி பண்றேன்!.

நம்ப ஹீரோ ஹீரோயிசப்படி ஏழையா இருக்கணும்ங்கறதாலே..இப்போ ஹீரோ டீக்கடையில டெலிவரி அம்பியா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காரு!. அப்படி இருக்கறச்சே,கடைக்கு எதித்தாப்புல கம்ப்ப்யூடர் கண்டு பிடிக்கப் போற கம்பனி அவுங்க கச்சேரி நடத்த ஒரு குடிசை போட்டாங்க.அதில வேலை செய்யுற வேலைக்காரவா கூட அம்பிக்கு நல்ல பரிச்சியமாயிடுத்து. எந்த நேரமும் அம்பியை அழைச்சிண்டும் ,கூப்பிட்டுண்டும் டீ கொண்டு வரச்சொல்லிண்டும் இருப்பா!

இப்படி இருக்கையில ஒரு நாள் ஒரு பெரிய உத்யோகஸ்த்தர் நம்ப அம்பியைப் பாத்து ,”டே ! அம்பி நேக்கு ஒரு டீயும் ஒரு வடையும் கொண்டு வாடா .”ன்னு சொல்லவே பதறியடிச்சுண்டு ,ஒரு டீயையும் முந்தினநாள் போட்ட வடையும் தூக்கிண்டு கம்ப்யூட்டர் கம்பனிக்கு அம்பி ஓடினான்.


அந்த பெரிய உத்யோகஸ்தர் சரியான பசி மயக்கத்தில இருந்ததால ஒரு கையில் செங்கல் பொடி கலரில் இருந்த டீயையும் மறு கையில வடையையும் எடுத்துக் கொண்டு பறக்கா வெட்டித்தனமா சாப்பிடத் தொடங்கினார்.

அந்த நேரம் பாத்தா அந்தப் பாழப்போனவரும் இவருக்கு மேலதிகாரியுமான இன்னொரு பறக்கா வெட்டி “ஸ்வாமி உங்க டேபிள் மேலிருக்கிற வால்வைச் சீக்கிரம் எடுத்துண்டு வாரும்”மென்னு அதி அவசரமாய் கூப்பிட்டுத்தொலைக்க முதல் பறக்காவெட்டி ஒரு கையில் டீயும் மறு கையில் வடையும்,இருந்த காரணத்தால்,வாயில் வேறு பாதி வடையை முழுங்கிக் கொண்டிருந்தாலும், பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததால் ,கமறும் கண்ணீர் நிரம்பிய கண்ணில் நம்ப அம்பியைப் பார்த்து அந்த வால்வை எடுத்து அங்கே கொடுக்குமாறு ஜாடை செஞ்சாரு.

உலகத்தில் பாஸ்பரஸுக்கு அடுத்து தானாகவே தீப்பற்றக் கூடிய கழக புத்திக்காரனாகிய நம்ப அம்பி,அந்த மேலதிகாரியின் டேபிள் மேல் தனியாகவிருந்த வால்வை தேர்ச்சி பெற்ற நாய் வாயில் கவ்வறப்புல கையில எடுத்துக் கொண்டு சடுதியில் அந்த பெரிய ஆபீஸரண்டை கொண்டு கொடுத்தான்.

அதை கம்ப்யூட்டர் முற்றத்தில் ஒரு ஒரமாய் சொருவிய அவர்,ராகு காலம் முடிஞ்சவுடனே சுவிடசைப் போட்டார்.அடடா...என்னவொரு அற்புதம்,அந்த மூவாயிரம் அடி விஸ்தீரணமாய் இருந்த அந்த கம்ப்யூட்டர் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சிடுத்து!.நம்ப அம்பியோட கை பட்டதாலத்தான் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நம்பிய அந்த எமகண்டத்தில பொறந்த அபீஸர்,கொமாருக்கு ”வால்வு தந்த வால் பையன்” அப்படிங்கிற பட்டத்தையும் கொடுத்தாரு!.

அவரு தமாஷாக் குடுத்தப் பட்டத்தை சீரியஸா நினைச்சு அம்பிக்கு பல நாள் தூக்கம் போனது தனிக்கதை!.

மீண்டும் கொஞ்சம் மின்ன போயிரலாமா!.சொல்லும் காட்சி மாதிரி இப்போ செல்லும் காட்சி!

கொஞ்சம் நாளாகி முடியும் போது அதாவது நம்ப அம்பிக்கு வாலிப வயசு .அப்போ தானும் புதுசா எதாவது கண்டு பிடிக்கணூங்கற அதீத வெறி அம்பிக்கு வந்துடுத்து.தன்னை ரொம்பப் புத்திசாலின்னு அந்த டமாரு தெரியாத்தனமா நினைச்சிக் கிட்டாரு! (வாலிபரு ஆய்ட்டதால இந்த மரியாதை.இல்லேன்னா நம்ப அம்பிக்கு எதுக்கு மரியாதை)

அந்த ஆர்வத்தில பாம்பே சரோஜாதேவி மார்கெட்டுக்குப் போயி,எதாவது உருப்படியான புஸ்தகங்கள் இருக்கான்னு பாக்கும் போது அங்க பலான புஸ்தகங்கள் மட்டும் இருக்கவே(அதாகப்பட்டது கொக்கேக சாஸ்திர புஸ்தகங்ககள்)அதில நாலஞ்சி அள்ளிகிட்டு வந்து வீட்டு மேக்கூறையில பதிக்கி வெச்சிக் கிட்டது நமக்கு வேண்டப் படாத விஷயம்.

அப்புறம் வானொலியில் நாம பேசறது எப்படி ஒரு புஸ்தகம் கடைவீதியில வந்து இருக்கிறதா யாரோ சொல்ல அதையும் தேடி அலைஞ்சாரு.அப்புறம் ”நமக்கு நாமே” அப்படிங்கிற திட்டத்தின் பிரகாரம்,ரேடியோவுக்கு சிக்னலோ என்னோமோ ன்னு சொல்லுவாங்களே, அதுக்கு ஒரு வலைமாதிரி ஒண்ணு வீட்டுக்கு வீடு கட்டி வெச்சிண்டு இருப்பாங்க,ஆண்டெனாவோ அண்டோனியோ மொய்னோவோ.அதெ செத்த சுரண்டிணா கொரு கொருண்ணு ஒரு ஷப்தம் வரும் அத தானே பேசற மாதிரி நினச்சி பேசிகிட்டே ஒரு ரெண்டு இழுப்பு இழுப்பாரு,அல்லோன்னு சொல்லறச்சே அல்லு க்கு ஒரு இழுப்பு லோவுக்கு ஒரு இழுப்பு உடனே ரேடியோ பொட்டியில அல்லுக்கு ஒரு டர்ரும் லோவுக்கு இன்னொரு டர்ரும்,மொத்தத்தில ட்ர்ர்டர்ர்ர்ன்னு ஒரு ஷப்தம் வரும்.உடனே தாம் பேசருது ஊருக்கே தெரியுதுன்னு நினைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாரு நம்ப டமாரு கொமாரு!.

அந்த ஷப்தமே தன்னோட வீட்டில இருக்கிற ரேடியோவில மட்டும்தான் கேக்குமின்னு தெரியாத அப்பாவி கொமாரு,அந்த வலையே இரெண்டு இழுப்பு இழுத்து ரேடியோவில் ஷப்தம் கேட்ட தன்னோட கண்டு பிடிப்பை மெச்சி தனக்கே ”வலை கொண்டான்”ன்னு ஒரு கருமாந்திரப் பட்டத்தையும் குடுத்துக்கிட்டாரு,நம்ப அம்பி!

இப்படியாகத்தானே நம்ப அம்பி டமாரு கொமாருவுக்கு வலைகொண்டான் அப்படீங்கிற பேரு வந்திச்சி!.பேரு வந்திச்சி,புகழு வந்திச்சா?.(பின்னாடி வரப்போற சூப்பர்ஸ்டாருன்னு சொல்லப் படப்போற அம்பி ரஜினி நடிச்ச 16 வயதினிலே!ங்கிற படத்தில வர்ற சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளோங்க்கிற ஸ்லோகம் மாதிரி சொல்லிப்பாருங்க!) ஹிஹிஹிஹி

இது 100 வருடத்திற்க்கு முந்தின கதை என்பதை நினைவில் கொள்ளவும்!


பின்குறிப்பு: இது எந்த நபரையும்,குறிப்பிடும் பதிவல்ல!.அப்படி யாராவது நினைத்துக் கொண்டால், வட அமெரிக்காவில் உள்ள பகுத்தறிவு புராணீகரின் மஞ்சள் துண்டை இரவல் வாங்கிப் போட்டுத் தாண்டத் தாயார்!. :)

பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!

Posted on Wednesday, September 24, 2008 by நல்லதந்தி



போன நூற்றாண்டின் இறுதியில் இந்த வினைல் விளம்பர போர்டுகளை ,செல் போன் கம்பனிகளும்,மோட்டார் சைகிள் கம்பனிகளும் 100X100,200X200,300X300, என்று பிரமாண்டமாக வைத்தபோதும் சரி,இந்தி படம் வெளியிடும் தியேட்டர்களில், கட் அவுட்டிற்குப் பதிலாக ,இந்த வினைல் போர்டுகளை வைக்கும் போதும் சரி , அடேங்கப்பா இவ்வளவு பெரிய போட்டோவா?. இத்தனைத் துல்லியமா?.இவ்வளவு பிரமாண்டமா?.என்று வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் பார்த்தோம்.,இதனால் எத்தனை பேனர் ஓவியர்கள்,சிறு போர்டு ஓவியர்கள் காலியாகப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை இரசித்தோம்.

இப்படி பெரிய தொழிற்கம்பனிகளின் ஆதிக்கம் மட்டுமே இருந்த வினைல் போர்டு ராஜ்ஜியம்,விரைவில பொது மக்கள் கைக்கும் மாறியது உலகமயமாக்கலின் ஒரு அம்சமே!.பம்பாய் போன்ற நகரங்களில் மட்டும் இருந்த வினைல் போர்டு அச்சகங்கள் தற்போது ஊருக்கு நாலு என்றாகி விட்டபோது ,ஆரம்பித்தது வினைல் போர்டின் வினைகள்.

ஊருக்கு நாலுஎன்று ஆகிவிட்டபோது தொழிற்ப் போட்டியின் காரணமாக தரைமட்டத்திற்கு வந்து விட்டது வினைல் போர்டு செலவுகள்.முன்பு யானை விலையென்றால் இப்போது பூனை விலைதான்.போதாதா..நம்முடைய ஜனங்களுக்கு.எதற்க்கெடுத்தாலும் வைடா வினைல் போர்டை! போடுடா நம்ம படத்தை! என்று விளம்பரப் பிரியர்களானத் தமிழர்கள் எங்குப் பார்த்தாலும் சந்தர்ப்பம் தெரியாமல் வினைல் போர்டுகளில் சிரித்துக் கொண்டு இருகிறார்கள்!. 

இப்போது எங்கே பார்த்தாலும் வினைல்போர்டு மயம்தான்!.கல்யாணமா? வினைல் போர்டு,கருமாதியா வினைல் போர்டு.கல்யாண மண்டபத்தின் வாசல்தோறும் பெரிய சவுக்கு மரங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் போர்டுகளில் மணமகனும்,மணமகளும் சிரித்தவாறு வரவேற்கிறார்கள்.சில இடங்களில் மண்மகன் மார்பில் வட்டவ்டிவில் மணமகள்,மணமகள் மார்பில் மணமகன்.யோவ்! கல்யாணத்துக்கு முன்னே இந்த மாதிரி செய்வது தப்பு என்றால் கேட்பார்களா?.இந்த விளம்பரப் பிரியர்கள் .. . இரண்டு பக்க ஓரங்களில் வாழ்த்தும் நண்பர்களின் தலைகள்!.ஒரே விளம்பர மோகம்தான்.

கருமாதி வினைல் போர்டுகளில் இன்னும் கொடுமை!.இறந்த நபரின் படத்தைப் போட்டு,காத்தமுத்து கவிராயர் பாணியில் அல்லது கலைஞர் பாணியில் ஒரு இரங்கற்கவிதை!.கவிதை முடிந்தவுடன் கண்ணீர் கடலில் உன் நினைவாகவே வாழும் நண்பர்கள்!.என்று முடித்து வரிசையாக ஒரு தலை,கீழே அந்த தலையின் பெயர் என்ற வாக்கில் வினைல் போர்டு வைக்கப் பட்டிருக்கும். இதில் ஒரு கொடுமையான சந்தர்ப்பப் பிழை என்னவென்றால் அனைவரின் தலைகளும் சிரித்தவாறே “போஸ்” கொடுத்துக் கொண்டிருக்கும்!.இறந்தவரும் சிரித்தவாறே நண்பர்களின் அஞ்சலியை ஏற்றுக்கொண்டிருப்பார்.மொத்ததில் அந்த இறப்பே சிரிப்பாய் சிரித்திருக்கும்.ஒரு சோகத்தைக் கூட சிரிப்பாய் மாற்ற வல்லது இந்த வினைல் போர்டு!.


அரசியல் வினைல் போர்டுகள்,இன்னும் ஒரு ரகம்.இன்று வினைல் போர்டு கம்பனிகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களே அரசியல் கட்சிகள்தான்!.அதுவும் இதில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலைஞர் டி.வி எப்படி முதல் இடத்தில் உள்ளதோ ஹி..ஹி...அதைப் போல இந்த விளம்பர விளையாட்டிலும் முதல் இடம் கலைஞரின் கட்சிக்குத்தான் !..இவர்கள் 100 விளம்பரங்கள் கொடுத்தால் மற்ற கட்சியினர் 1 விளம்பரம்தான் கொடுப்பார்கள்.அந்த அளவிற்க்கு இந்த விளையாட்டில் வல்லவர்கள் கலைஞரின் தொண்டர்கள்.

தமிழகத்தின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் சும்மா அப்படியே அசந்து போகவேண்டும்..எங்கெங்கு காணிணும் சக்தியடா என்கிற மாதிரி எங்கெங்கு காணிணும் கலைஞரடா...
10வது வார்டு கவுன்ஸிலரின் இல்லத் திருமணமா?..அந்த ஏரியாவே வினைல் போர்டு காடாகவே மாறிவிடும்.அந்த ஊர் அமைச்சர் சென்னையிலிருந்து முதல் பொண்டாட்டியைப் பார்க்க ஊருக்கு வருகிறாரா?...இரயில்வே நிலையத்திலிருந்து அமைச்சருடைய வீடு வரைக்கும் ஓரே வினைல் போர்டு மயம்!.

சரி அதைதான் விடுங்கள்,சாலையின் இரு மருங்கிலும் ஒரே வினைல் போர்டுகளாக இருந்தாலும்,அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று பார்த்தால், வள்ளுவமே! வா! ,வாலிபமே வா! வா! என்ற அளவிற்குத்தான் விஷயச்செறிவு இருக்கிறது.

ஒரு போர்டில்,ஒரு வட்டம் சொல்கிறது!,அந்த மாவட்டத்தின் பெயரை அந்த அமைச்சரின் பெயராக மாற்றிச் சொல்லி ஒரு வரவேற்ப்பு!. பன்னீர் செல்வம் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!.வீரபாண்டியார் மாவட்டம்,பொன்முடியார் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!. இவர்களே தங்கள் மாவட்டத்திற்க்கு தங்கள் பகுதி அமைச்சரின் பெயரை சாதாரணமாக வைத்துக் கொள்கிறார்கள்.

அடுத்த வினைல் போர்டில் அமைச்சரின் முதல் மனைவி ஒருபுறம்! மறு புறம் இரண்டாவதாக சென்னையில் சேர்த்துக் கொண்ட துணைவி ,இரண்டு பேரும் அமைச்சரைப் பார்த்து ஒருங்கே சிரிக்கிறார்கள்.ஆஹா என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!.என்ன குடும்ப ஒற்றுமை. முதல் மனைவி பக்கத்தில அவ்ருக்கு பிறந்த பிள்ளைகளும், துணைவி பக்கத்தில் அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் ஒரே போர்டில்,ஒரு குடும்பம்,இரு மனைவி, பல பிள்ளைகள் என்று வாழும் வள்ளுவம் கலைஞர் போல, அமைச்சர்களும் நிற்க்கும் காட்சி எல்லா மாவட்டத்திலும் நிகழும் வழக்கமாக நிகழும் தெய்வீகக் காட்சி!.

அவர்களின் தலைக்கு மேலே நட்சத்திர வடிவிலோ,சூரிய வடிவிலோ ஒரு புறம் க்லைஞரும் ,மற்றொரு புறம் இசுடாலினோ ,தென் மாவட்டமாக இருந்தால் அழகிரியோ இந்தக் கோராமையைப் பார்த்து நம்ம வீட்டில் உள்ள விஷயம்தானே என்று சிரித்தபடி இருப்பார்கள்!.
 தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு பதிவர்,சாதாரணப் பதிவர் அல்ல!.உலக நாடுகள் அனைத்திலும் உள்ள த்மிழர் மட்டுமல்ல,இந்தியர் மட்டுமல்ல!...வட அமெரிக்காவில் கனடா முதல் ஆஃப்ரிக்க கண்டம் நைஜீரியா மட்டுமல்ல!...ச்ச்சீ சலிப்பா இருக்குப்பா!..பிரபஞ்சம் முச்சூடும்ன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.மொத்தத்தில் அவரைத் தெரியாத ஆளே இல்லை போதுமா?.... அப்பேற்ப்பட்ட பதிவர் எழுதிய தமிழ் பண்பாடு, ஒட்டு மொத்தமாக இருக்கிற ஒரே ஒரு கட்சி திமுக என்பதால் ஜனங்களும் எந்தவிதமான கூச்சமும் நாச்சமும் பட்டுக் கொள்வதில்லை!.

ஆனால் ஒரு வார்த்தை மட்டும் குசு குசு வென பேசிக்கொள்வார்கள்.”என்னடா முதல் பொண்டாடிக்கே 60வயசாயிடுச்சி! அப்போ இந்த ஆளுக்கு 60 இல்லே 65 இருக்குமே ,இரண்டாவது இருக்கிற 35 ஐ என்னாதாண்டா பண்ணுவாரு?”..அடுத்த திமுகா பார்ட்டி வேறே என்னத்த சொல்லுவான்...எங்க ஐய்யா! என்ன சாதாரணமானவரா?.எல்லாம் புகுந்து வெளையாடுவாரு!.ஆஹா..எவ்வளவு பெருமை!...

இன்னொரு பெருமையும் இந்த அரசியல் வினைல் போர்டுகளுக்கு உண்டு.மற்ற ,பொது மக்கள் கல்யாணத்திற்க்கோ,கருமாதிக்கோ, செய்யும் வினைல் போர்டுகளை!. எல்லோராலேயும் சத்தியமாக ஒரே ஒரு தடவையாவது படிக்கப் படும் வாய்ப்புண்டு.ஆனால் அரசியல் வினைல் போர்டுகளை வைத்த அவர்களே படிப்பார்களா? என்பது சந்தேகம் தான்!.

ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வாசகங்கள் ,உள்ளாட்சித்துறை அமைச்சரென்றால் உள்ளாட்சியே! வருக!.பொதுப்பணித்துறை அமைச்சரா! பொதுப்பணியே!வருக!.சட்டத்துறை அமைச்சரா! சட்டமே! வருக!..நல்ல வேளை வடிகால் வாரியத்திற்க்கு தனி அமைச்சர் இல்லை!.இல்லையென்றால் அடிக்கடி சாக்கடையே! வருக! வருக! என்றும் வினைல் போர்டில் பார்த்திருக்க வாய்ப்புண்டு!.

இந்த அமைச்சரையோ அல்லது வருகின்ற VIP ஐ பிடிக்காத வட்டமோ, ஒன்றியமோ, தானைத்தலைவரே! என்பதற்க்கு பதில் தண்டக் கருமாந்திரமே! என்று எழுதினாலும்,பண்பாளனே! என்பதற்குப் பதிலாக பண்ணாடையே! என்று எழுதினாலும்,பார்ப்பவர்களுக்கும்,சம்மந்தப் பட்டவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை.வ்ருகிறவர்கள் போர்டைத்தான் பார்ப்பார்களே ஓழிய வாசகத்தைப் யாரும் படிக்கப் போவது இல்லையே!.வாழ்க வினைல் போர்டு!

அடுத்து இந்த அரசியல் வினைல் போர்டுகளைப் பார்க்கும் போது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம்தான் ஞாபகம் வரும்.தலைவர் முழு உருவமாக நின்றிருக்க காலடியில் கிடக்கும் அரக்கர் கூட்டத்தைப் போல சிரித்த தலைகளாகக் காட்சிதரும் வட்டம், ஒன்றியம் போன்ற ஆட்கள் முண்டமில்லா முண்டங்களாக காட்சியளிப்பது வினைல் போர்டின் தனி விசேஷம்.
தலைக்கு கீழ் அவர்களின் பட்டங்களோடு பெயரும் உண்டு.காண்டு கஜெந்திரன்,மயிலை கபாலி,டிஞ்சர் தனபாலு,கடா குமாரு போன்று பெரிய லிஸ்ட்ட்டும் போட்டிருபார்கள்.தலைவரும் காளியாத்தாப் போல அவர்களின் தலையை மிதித்துக் கொண்டு சிரித்தபடி காட்சியளிப்பார்.என்னே வினைல் போர்டின் பெருமை!.

இன்னோரு தமாஷ் என்னவென்றால் பகுத்தறிவுக் கட்சியான திமுகவில உள்ள தொண்டர்களின் தலைகள் அனைத்தும் திருநீறும்,மஞ்சளும், குங்குமமும், துலங்க பகுத்தறிவு அஞ்ஞானிகளாகவே காணப்படும். இந்த பகுத்தறிவு சிங்கங்கள் வீட்டில் உள்ள பெண்டுகளைத்தான் மாற்ற முடியவில்லைத் தொண்டர்களையாவது மாற்றலாமே?.ஆனால் மாற்ற முயற்சிக் கூட எடுக்கமாட்டார்கள்.எந்தத் தொண்டனையாவது சாமி இல்லையென்று சொன்னால்தான் திமுக உறுப்பினர் கார்டு என்று சொன்னால் கூட திமுகவே மொத்தமாக காலியாகிவிடும் என்று தலைவருக்குத் தெரியும்.வீட்டில் உள்ள பெண்டுகளிடம் ஜெயிக்கமுடியாதவர்.வீதியில் உள்ளத் தொண்டு களிடமா ஜெயிப்பார்.

இதைப் பார்க்கும் போது நன்னன் என்ற பிரகிருதியின் ஞாபகம் வருகிறது,
அவரைச் சமீபத்தில் கலைஞர் டிவியில் ,ரமேஷ் பிரபா பேட்டி கண்டார்.அப்போதுதான் அவர் திமுக வென்றே எனக்குத்தெரியும்.அப்போது இந்த பிரகிருதி ,ஒரு வார்த்தைச் சொன்னார்,அதாவது இப்போது தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு திராவிடர் இயக்கம் தான் உள்ளது என்று சொன்னார்.அது எந்த எந்த இயக்கம் என்று,திரு நன்னன் அவர்கள் தான் சார்ந்த கட்சியைச் சொல்லிவிட்டதால் உங்களுக்கேத் தெரியும்.அவரைத் தரதர வென்று இழுத்து வந்து இம் மாதிரியான வினைல் போர்டுகளைக் காட்டவேண்டும்.இதுதான் பகுத்தறிவா?.நெத்தி நிறைய இத்தனைப் பொட்டுக்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள்தான் ,பகுத்தறிவு இயக்கத் தொண்டர்களா? என்று முடிந்தால் கேள்வி கேட்க வேண்டும்.மற்றபடி அவர் தமிழாய்ந்த அறிஞர் என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை.கிஞ்சித்தும் சந்தேகமும் இல்லை.
இசுடாலினைத் (நன்னன் சொன்னதுதான்)தளபதி தளபதி என்று பேட்டியின் போது அவர் பெருமையுடன் சொன்னபோது தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது.எப்படி இருந்த தமிழறிஞர் இப்படி ஆயிட்டாரே?.

திமுகவைப் பொறுத்தவரை வினைல் போர்டுகளில் உள்ள ஆங்காங்கே சிலதலைகளின் படங்கள் வெட்டியெடுக்கப் பட்டு இருக்கும்.விசாரித்தால் அந்தத்தலைகள் ஏதாவது கொலைக் கேஸிலோ,அரிசி கடத்தலிலோ, சாரயக்கேஸிலோ, அல்லது கற்பழிப்பு கேஸிலோஅதையும்விட்டால் திருட்டு வழக்கிலோமாட்டியதால் தற்காலிகமாக ஜனங்களின் மத்தியில் கட்சிக்குத் தவறான எண்ணம் வரக்கூடாது என்று கட்சி பிரமுகர்களின் அறிவுறுத்தல் பிரகாரம் படத்தை எடுத்து இருக்கிறார்களாம். :)).
இதனால் நன்மையடைவது இந்த வினைல் போர்டு தயாரிப்பாளர்கள்!.அடுத்த வினைல் போர்டுக்கு ஆர்டர்கள் தயார்.ஆகையால் இப்போது வினைல் போர்டு ராஜ்ஜியம் திமுக வினரிடம்தான் உள்ளது. 

அப்பாடா...கட்டுரை முடிந்தது..இதில் முதல் சந்தோஷம் உங்களுக்கு!.அடுத்து எனக்கு! :) 
இதில் இருந்து ஒரு விஷயம் தெரிகிறது.எதைப் பற்றி எழுதினாலும் அரசியல் கலக்காமல் என்னால் எழுதமுடியாது போலிருக்கிறதே?..என்ன செய்வேன்?.....:((

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?

Posted on Monday, September 15, 2008 by நல்லதந்தி



றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.


1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!(மீண்டு ஜெயித்த கதை)

Posted on Tuesday, September 9, 2008 by நல்லதந்தி


படம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.

ரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்
திரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.


விரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.

பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்?' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....

இவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.

ரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

ஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்!.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.

நடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.

ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..

பள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.

அதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்
கல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு
கல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.

பெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு?.. சோற்றுக்கு!..வயிற்றுக்கு!!' என்கிறார் இப்போதும்.

இவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.

புதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்!.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்?..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.

தீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.

'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.

நடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.

இப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.

அரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.

ரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.

1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்!

இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!

Posted on Thursday, September 4, 2008 by நல்லதந்தி

உருப்படியான யோசனை!.

ஒரு கூட்டத்துக்கோ, விருந்துக்கோ புறப்படும் போது,அங்கே சந்திக்கப்போகும் ஒவ்வொருவரிடமும் கவனம் செலுத்துவது என்று தீர்மானத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் உங்களுக்கு அறிமுகம் ஆகும் போது,அந்தப் பெயரைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.அநேக தடவைகளில் அறிமுகம் என்பது அவசர அவசரமாக முடிந்துவிடும்.முணுமுணுவென்று ஏதோ சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.கூச்சப் படாமல் ஒரு தடவைக்கு இரண்டுதடவையாக அந்தப் புது நண்பரையே,அவர் பெயரைக் கேளுங்கள்.

அறிமுகம் ஆனவருடைய பெயர் அடிக்கடி பேச்சில் வ்ரும்படி உரையாடுங்கள்.அறிமுகம் ஆகும் போது "வணக்கம்" என்று வெறுமே மொட்டையாகச் சொல்வதை விட "வணக்கம் சரவணன்"..என்று சொல்வது நலம்.

முகத்தைக் கூர்ந்து கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.முகத்தின் அமைப்பு,வடிவம் இவற்றை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.காது,மூக்கு, முதலியவற்றின் அடையாளங்களில் விசேஷ கவனம் செலுத்துங்கள்.

பெயரைச் சட்டென்று நினைவுக்கு கொண்டு வரக்கூடியபடி அதற்குத் தொடர்பான இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஒருவர் "வீராசாமி" என்று பெயர் கொண்டிருந்தால்,"அமாவாசை அமைச்சர் ஆற்காடு வீராசாமி" என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த கற்பனை எவ்வளவுக்கெவ்வளவு பித்துக்குளித்தனமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேல்!.

நீங்கள் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளை அன்றாடம் டைரியில் எழுதி வையுங்கள்.இது முக்கியம்.ஏனென்றால் ஒரு நாளில் நடைபெறும் விஷயங்களில் ஐந்தில் ஒரு பகுதி 24 மணிநேரத்தில் மறந்து விடுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முன்பு சந்தித்த நபரையே மீண்டும் பார்க்க நேரிட்டால் அவர் பெயரைச் சொல்ல நினைக்காதீர்கள்.நிதானித்து அவரை எந்தச் சந்தர்ப்பத்தில்,எப்படிச் சந்தித்தீர்கள் என்ற பழைய நிகழ்ச்சியை ஞாபகத்துக்கு கொண்டு வாருங்கள்.

மேல உள்ளவைகள் முகங்களையும்,பெயர்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சில நல்ல வழிகள்.


கண்டதும்,சுட்டதும்.......நல்லதந்தி!.

நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!

Posted on Tuesday, September 2, 2008 by நல்லதந்தி



ஊரில் உள்ள தொலைக்காட்சிகளெல்லாம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புத்திரைப் படம்,சிறப்பு குத்தாட்ட நிகழ்சிகள் என்று பணம் அள்ளும் வேலையை ஜருராக செய்து கொண்டிருக்கும் போது பகுத்தறிவு தொல்லைக்காட்சியான கலைஞர் டிவி மட்டும் சும்மா உக்காந்து பேன் பார்த்துக் கொண்டிருக்குமா?.ஆரம்பித்து விட்டது தன் சிறப்புக் கொடுமைகளை!.


ஆனால் தம்முடைய பகுத்தறிவிற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா?.பகுத்தறிவு படபடவென்று வேலை செய்ய,பணம் சம்பாதிக்கும் குறுக்கறிவு குத்தாட்டம் போட,தான் ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டுக்கு கண்டுபிடித்து வைத்திருந்த அதே ஃபார்முலாவை கையில் எடுத்து விட்டது.


மற்ற டிவிக்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாடும் போது பகுத்தறிவு டிவி மட்டும் சித்திரை நன்னாள் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடியது.அது என்னங்க சித்திரை நன்னாள்ன்னு நமக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதை வரவேற்ற பகுத்தறிவு மாமணிகள் யாரும் அது என்ன சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று கேட்கவில்லை.வேறு யாராவது கேட்டிருந்தால் கூட இவர்களே முன் நின்று அதற்கு சப்பைகட்டு கட்டியிருப்பார்கள்!.


இப்போது பகுத்தறிவு கலைஞர் டிவிக்கு நாளை விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளாம்!.இந்தியாவிலேயே நாளைக்குத்தான் முதன்முறையாக விடுமுறை விடுகிறார்களா?அல்லது வருடத்திற்கு ஒரு முறைதான் விடுமுறை விடுகிறார்களா?.இதற்குமுன் விட்டதில்லையா?.என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்.எனென்றால் பதில் கிடைக்காத கேள்விகளை கலைஞரிடம் கேட்க கூடாது என்பதுதான் பகுத்தறிவு என்று அவர்களுக்குத் தெரியும்!.


கலைஞர் டிவியிடம் பகுத்தறிவை விட பட்டறிவு அதிகம் இருக்கிறது.இல்லையென்றால் விநாயகர் சதுர்த்தியை,விநாயகரைத் தவிர்த்து விட்டு விடுமுறை நன்னாளாக அறிவித்து விளம்பரத்தில்..............ஸ்..ஸ்ஸ்ஸ்... அப்பா....எத்தனை "வி"...... ..காசு அள்ளும் கலையில் தேறியிருப்பார்களா?