ரொம்ப நாள் கழித்து வர்றதால் அறிமுகப் படுத்திக் கொள்வேனேன எதிர்பார்க்க வேண்டாம்.
ஜெயமோகனும், சாருவின் அல்லகையும்!
22 comments Filed Under: அனுபவம், பகுத்தறிவு, பதிவர் வட்டம், விமரிசனம், ஜெயமோகன்
தேவரின் திருமுகமும், கொடு முகமும்!
21 comments Filed Under: அனுபவம், சினிமா, தேவர், நிகழ்வு, பழைய சினிமா
இரட்டை இலையால் விளையும் நன்மை!
இது பழைய விஷயம் தான், இருந்தாலும் இப்போ தீடீரென்னு நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நன்மை இந்த இரட்டை இலையால் இருக்கான்னு நான் வியக்கிறேன்., பெரிய விஷயத்துக்கு ஜனங்களுக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்குமோ!.

10 comments Filed Under: அரசியல், அனுபவம், பாராளுமன்றத்தேர்தல்
கலைஞருக்கு சில TIPS!
வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.
இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இராஜபக்ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.
இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....
விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.
தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.
மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.
ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.
மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.
33 comments Filed Under: அரசியல், அனுபவம், கலைஞர், மொக்கை
கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?
தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.
கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.
மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.
கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.
உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!
முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.
இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.
பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.
நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.
எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.
அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.
அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.
த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.
பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை
10 comments Filed Under: அரசியல், அனுபவம், நகைச்சுவை
துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!
31 comments Filed Under: அரசியல், அனுபவம், சினிமா, சோ
இறுதிச் சங்கிலி!. உபயம் கலைஞர்.மு.க.!
8 comments Filed Under: அரசியல், அனுபவம், ஈழத்தமிழர், கலைஞர்
இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!
ஆதரவற்று ரயில் நிலையத்தில் தவித்த ஐந்து வயது இந்துக்குழந்தையை வளர்த்து வந்தார் முஸ்லிம் மேஜிக் நிபுணர்; 13 ஆண்டுகள் கழித்து திடீரென போலீஸ் தலையிட்டு தந்தை - மகளை பிரித்ததும், கோர்ட்டுக்கு போய் போராடி மீட்டார்!இரு வேறு பட்ட மதமாக இருந்தாலும், மனம் குறுக்கே வரும் போது, மதம் பெரிய விஷயமல்ல என்பதை இந்த தந்தை - மகள் நிரூபித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காத்ரி; மேஜிக் நிபுணர். மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி யில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்தார். ஊர் திரும்புவதற்காக ரயிலில் ஏறும் போது, பிளாட்பாரத்தில், ஒரு குழந்தை அழுதபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தது.அரை மணி நேரமாக அதை கண்காணித்து வந்த காத்ரிக்கு அதை விட்டுப்போக மனதில்லை. அதன் அருகே சென்று, குழந்தையிடம் விசாரித்தார். அதற்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை.
யாரோ தன்னை பிளாட்பாரத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டதாக கூறியது.எல்லா பிளாட்பாரங்களிலும் சென்று தேடியும் குழந்தையுடன் வந்தவர்களை காணவில்லை. அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை காத்ரிக்கு. தன்னுடன், ரயிலில் அழைத்துச் சென்றார். பெயரை கேட்டபோது, வர்ஷா என்று கூறியது; எல்லாரும் தன்னை முன்னி என்று செல்லமாக அழைப்பர் என்றும் கூறியது. இந்த சம்பவம் நடந்தது 1995ம் ஆண்டில்.
குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள தன்காரியா என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். வர்ஷாவை அவர் தன் மகளை போல வளர்த்துவந்தார். பின், அவர்கள், ஆமதாபாத் மாவட்டம், ரமோல் என்ற இடத்தில் குடியேறினர்.தன்காரியா கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வர்ஷா வளர்ப்பு மகள் என்பது தெரியும். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் வர்ஷாவுடன் பகக்கத்து வீட்டுக் குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் பழகி வந்தனர்.
இந்நிலையில், சில மாதங்கள் முன், அக்கா,தம்பி இருவரும் தங்கள் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள காத்ரி வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் விஷயத்தை கேள்விப்பட்ட காத்ரி, வீட்டில் தங்கிக் கொள்ளச்சொன்னார். அவர்களை சமாதானப்படுத்தி அப்பாவிடம் ஒப்ப டைக்க முடிவு செய்தார். இதற்குள், அவர்களின் அப்பா, தன் மகள், மகன் இருவரையும் காத்ரி தான் கடத்தி வைத்திருக்கிறார்; அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீசில் புகார் செய்தார்.
காத்ரி வீட்டுக்கு வந்த போலீஸ், அங்கிருந்த அக்கா, தம்பியை மீட்டு, அவர்களின் பெற் றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்து, அவள் சொந்த மகள் இல்லை என்று தெரிந்ததும், அவளை அரசு காப்பகத்தில் சேர்த்து , காத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் காத்ரி வழக்கு போட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், வளர்ப்பு மகளாக வர்ஷா மீது உரிமை கோர முடியாது என்று கூறி அவர் மனுவை கோர்ட் நிராகரித்தது.
செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் காத்ரி. அவர் மனுவை ஏற்ற கோர்ட்," இத்தனை ஆண்டுகள் காத்ரியிடம் வளர்ந்துவந்த வர்ஷாவை அவரிடம் ஒப்படைத்து விடலாம்; இதற்கான உரிய ஆவணங்களை அவர் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் காத்ரி, - வர்ஷா ஒன்று சேர்ந்தனர். "என் பாச மகள் கிடைத்து விட்டாள்; அது போதும்' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் காத்ரி.
நன்றி: தினமலர்
2 comments Filed Under: அனுபவம், நிகழ்வு, மதசார்பின்மை
பிராமணர்கள் கோழைகள் இல்லை!
28 comments Filed Under: அனுபவம், சினிமா, பழைய சினிமா, ஜெமினி
இவனை என்ன செய்தால் தகும்?
சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி செய்தி!
8 comments Filed Under: அனுபவம், குற்றம்
மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!
12 comments Filed Under: அரசியல், அனுபவம், இராஜாஜி
ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1
3 comments Filed Under: அனுபவம், புதுமைப்பித்தன், வரலாறு
பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!
10 comments Filed Under: அனுபவம், சினிமா, பழைய சினிமா, புதுமைப்பித்தன்
குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2
5 comments Filed Under: அரசியல், அனுபவம், குற்றம், பயங்கரவாதம்
"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!
33 comments Filed Under: அனுபவம், நகைச்சுவை, மொக்கை
பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!
29 comments Filed Under: அரசியல், அனுபவம்
குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?
19 comments Filed Under: அரசியல், அனுபவம், குற்றம், பயங்கரவாதம்
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!(மீண்டு ஜெயித்த கதை)
படம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.
ரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்
திரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.
விரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.
பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்?' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....
இவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.
ரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
ஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்!.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.
நடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.
ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..
பள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.
அதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்
கல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு
கல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.
பெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு?.. சோற்றுக்கு!..வயிற்றுக்கு!!' என்கிறார் இப்போதும்.
இவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.
புதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.
ஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்!.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்?..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.
தீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.
நடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.
இப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.
அரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.
ரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.
1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்!
13 comments Filed Under: அனுபவம், சினிமா, ரஜினிகாந்த்
இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!
17 comments Filed Under: அனுபவம், செய்தி
நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!
22 comments Filed Under: அனுபவம், கலைஞர்டிவி, பகுத்தறிவு