வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.
இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இராஜபக்ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.
இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....
விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.
தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.
மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.
ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.
மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.
கலைஞருக்கு சில TIPS!
33 comments Filed Under: அரசியல், அனுபவம், கலைஞர், மொக்கை
சீமான்,அமீர் கைது! சிலிர்த்தெழுந்த சத்தியராஜ்! ஒரு நேரடி ரிப்போர்ட்!
25 comments Filed Under: சத்தியராஜ், மொக்கை
"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!
33 comments Filed Under: அனுபவம், நகைச்சுவை, மொக்கை
அஞ்சரைக்குள்ள வண்டி!
அஞ்சரைக்குள்ள வண்டி!
5 comments Filed Under: நகைச்சுவை, மொக்கை
"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!
டாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.
ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.
மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.
விலைப்பட்டியல்:
180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)
தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)
பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)
சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)
சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)
ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)
கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)
விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.
இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.
கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.
கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)
." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?
கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.
கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.
மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.
மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.
எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.
மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.
கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.
பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.
அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"
பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)
இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!
மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)
56 comments Filed Under: அரசியல், கலைஞர், நகைச்சுவை, மொக்கை
இதா இவிட வரு!
^
^^^
^
^
^
^
^^^^^^^
^^^
^^^^
^^
^^^
^^^^
^^^^^^
^
^
^^^
^^
^^
^^ பிளீச்சிங் பெளடருக்கு வேண்டியாணு ஈ போட்டோ ஞான் இவிட காணிச்சது!
^^

9 comments Filed Under: நகைச்சுவை, படிக்கக் கூடாதவை, மொக்கை
பச்சப் புள்ளைங்கப் படிக்கக் கூடாத ஜோக்குகள்!
12 comments Filed Under: நகைச்சுவை, படிக்கக் கூடாதவை, மொக்கை
அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!
14 comments Filed Under: கலைஞர், தமிழ், நகைச்சுவை, மொக்கை
சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!
சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!
இது மளையாளப் பட விமரிசனம் அல்ல!.சூட்டிற்காக வைக்கப் பட்ட தலைப்பும் அல்ல!.
தவறாக வந்து,விஷம விஷயம் இல்லாது போனதால் மனத்திற்குள் திட்டுபவர்கள் மன்னிக்க.
இது ஒரு புதிர் கணக்கு!.
இதைப் படித்து விட்டு அட நல்லயிருக்கே! என்பவர்களின் பாரட்டு கே.நடராஜன் என்பவருக்கு போகட்டும். அடச்சீ! இதல்லாம் ஒரு புதிரா என்று திட்டுபவர்களும் அவரையே திட்டிக்கொள்ளுங்கள்.ஏன்னா? புதிர் அவரோடது!
ஒரு நாள் இரவு ஒரு சத்திரத்தில் தங்குவதற்கு 10 வழிப்போக்கர்கள்,இடம் தேடி வந்தனர்.
அந்தச் சத்திரத்திலோ 9 கட்டில்கள் மட்டுமே இருந்தன.ஆனால் ஒவ்வொருவரும் தமக்குத் தனித்தனியாக ஒரு கட்டில் வேண்டுமென்று வற்புறுத்தினர்.
சத்திரத்தின் நிர்வாகி சற்று நேரம் யோசித்தார்.பிறகு ஒரு ஐடியா செய்தார்.10 ஆசாமிகளில் இரண்டு பேரைக்கூப்பிட்டு, முதல் கட்டிலில், கொஞ்ச நேரத்துக்கு படுத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.
மூன்றாவது ஆசாமியை இரண்டாவது கட்டிலில் படுத்துக்கொள்ளுமாறு சொன்னார்.நான்காவது ஆசாமியை மூன்றாவது கட்டிலிலும்,ஐந்தாவது ஆசாமியை நான்காவது கட்டிலிலும்,ஆறாவது ஆசாமியை ஐந்தாவது கட்டிலிலும் ,இதே வரிசைப் படி..கடைசியாக ஒன்பதாவது ஆசாமியை எட்டாவது கட்டிலில் படுக்கச் செய்தார்.
ஒன்பதாவது கட்டில் மீதம் இருக்கிறதல்லவா? அதில்,முதல் கட்டிலில் தற்காலிகமாக இருக்கும், பத்தாவது ஆசாமியைப் படுக்கச் செய்தார்.
இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கட்டில் கிடைத்து விட்டது.ஆனால் இருந்ததோ ஒன்பது கட்டில்.ஆட்களோ பத்துப் பேர்.இது எப்படி சாத்தியம்?.
புதிருக்குக்கான விடையை கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
சரியான விடையை நான் அப்புறம் சொல்றேன்!
சரி இப்போ விடையை சொல்லிடுறேன்.
விடை: முதல் கட்டிலில் தற்காலிகமாகப் படுத்திருப்பவர் 10 அது ஆசாமி என்று முதலில் சொல்லப் படுகிறது.அவர் கணக்கில் சேரமாட்டார்.எனவே, இரண்டாவது கட்டிலில் படுத்து இருப்பவ்ர் இரண்டாவது ஆசாமி,மூன்றாவது கட்டிலில் இருப்பவர் மூன்றாவது ஆசாமி என்றுதானே இருக்க வேண்டும்?.
என்ன சரியா?. முதல் பின்னூட்டத்திலே அதைக் கண்டுபிடித்து என்னை கலவரப் படுத்திய அண்ணன் இலவசக் கொத்தனாருக்கு ஜே!.அவருக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி "எஸ்" ஆவது நல்லதந்தி!
11 comments Filed Under: புதிர், மொக்கை
மன்னிப்பு கேட்டவிவகாரம்-ரஜினி உண்மையாக பேசியது என்ன?
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
''தப்பாகிருவுது ஸஹஜ, முந்தெ தப்பாகதந்தெ நோடிகொள்ளுத்தேனெ. முந்தெ தப்பு மாடுவுதில்ல. கன்னடிகர பக்கெ நனகெ அபார கௌரவ இதெ. தயவிட்டு குஸேலன் பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு'' எந்து நட ரஜனிகாந்த் பரோக்ஷவாகி டிவி 9 ஸுத்தி வாஹினி மூலக க்ஷமெ கோரித்தாரெ.
ஹைதராபாத்னல்லி மாதனாடுத்தித்த அவரு, 'கன்னடத மக்களிந்த தொட்ட பாட கலிதித்தேனெ. நானு ஒதெயிரி எந்து ஹேளித்து புண்டு போகரிகளிகெ, ஸார்வஜனிக ஆஸ்தி பாஸ்தியன்னு நாஷ மாடுவவரிகெ ஹொரது கன்னட ஹோராடகாரரன்னு உத்தேஷிஸி அல்ல. ஒள்ளெயவரிகெ தலெபாகுத்தேனெ. புண்டுபோகரிகளிகெ யாகெ தலெபாகபேகு எந்து ப்ரஷ்னிஸிதரு.
நானு ராஜகாரணி கண்டித அல்ல. ஹீகாகி மாதாடுவாக தப்பாகிதெ. முந்தெ மாதாடுவாக விசாரமாடி மாதனாடுத்தேனெ. கன்னட ஹோராடகாரரிகெ ஏனு ஸஹாய பேகோ எல்ல மாடுத்தேனெ. இந்து நானு ஸந்தோஷவாகித்தேனெ. ஹண, ஹெஸரு எல்ல தொரெதிதெ ஆதரெ நானு கண்டக்டர் ஆகித்தெ எம்புதன்னு இன்னூ மரெதில்ல. ஸுமாரு ஜன நன்னன்னு அஹங்காரி என்னுத்தாரெ. நானு துரம்ஹங்காரி கண்டித அல்ல எந்து நுடிதரு.
அவரு தம்ம மாதின மத்யெ கன்னட ரக்ஷணா வேதிகெய ராஜ்யாத்யக்ஷ டி.எ.னாராயனகௌட, ப்ரவீண் குமார் ஷெட்டி, வாடாள் நாகராஜ் ஹெஸருகளன்னு ப்ரஸ்தாபிஸி கன்னட ஹோராடகாரரெல்லரு சித்ர பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு எந்து வினந்திஸிகொண்டரு.
12 comments Filed Under: சினிமா, நகைச்சுவை, மொக்கை
தசாவதாரம் இரண்டு -- கமலின் மேக்கப் டெஸ்ட்!
13 comments Filed Under: நகைச்சுவை, மொக்கை
பஞ்ச் டயலாக்குகள் பதினொன்னு!
விஜயகாந்த் : உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, பணம் மட்டும் எப்பவுமே வீட்டுக்கு!. ஆங்!
கார்த்திக் : ஹேய்! நா..நா...நான்! . இண்டர் நெட்லீயே மக்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கேன்.இண்டர் நெட்டிலீயே ஓட்டு கேட்டு,இண்டர் நெட்டிலீயே முதலமைச்சர் ஆயிடுவேன்!.
டி.ஆர்.பாலு : கோவிந்தராஜ பெருமாள் சிலைய கடலில கொண்டுபோய் போட்டது.எங்க கம்பனி Boat கள் தான். இதுக்கு ஆதாரம் அய்யன் கலைஞர் கையிலெ இருக்கு.
ரஜினிகாந்த் : ஹே ஹே ஹே..... ஆண்டவன் தசாவதாரத்திற்க்கு ஒரு மாச கலைக்சனை அள்ளி கொடுப்பான்.அப்புறம் கை விட்டுவிடுவான்.ஆனா ரோபோ விற்க்கு சோதனைய நிறைய கொடுப்பான்.ஆனா கை விடமாட்டான்.
கமலஹாசன்: ம்ம்ம்ம்... நான் மைதா மாவு இல்லன்னா சொல்றேன். இருந்து இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொல்றேன்.
கலைஞர் : நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாங்கள் என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது.ஆனா தமிழ் மக்களுக்கு நாமம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுவது மட்டுமல்ல, நம் நெஞ்சும் மகிழ்ச்சியில் முட்டும்.
தயாநிதி மாறன்: இந்தியாவில் உள்ள சேனல் மட்டுமல்ல உலகத்திலுள்ள எல்லா சேனலும் ஒரு ரூபாய்க்கு விரைவில் வழங்கப்படும்..........ஒரு நிமிடத்திற்க்கு ஒரு ரூபாய் மட்டுமே . பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க.
புரட்சித்தலைவி: அம்மா என்றால் அன்பு.அய்யா என்றால் வம்பு.
அஞ்சாநெஞ்சன் அழகிரி: நான் தாயாநிதி மாறனுக்கு மட்டும் கெட்டவனா? இல்ல தம்பிக்கும் சேர்த்தி கெட்டவனா? புரியிலியே.
கவிஞர் கனிமொழி: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்.இதுதாங்க நான் எழுதிய ஒரே கவிதை. மண்டபத்தில எழுதிக் கொடுத்து ,வாங்கிட்டு வந்து படிக்கலைங்க
இளையதிலகம் பிரபு: நான் சும்மா வீட்டில உட்காந்து பல்லு குத்திக்கிட்டிருந்தேங்க. அப்போ தமிழ் மக்கள் ஞாபகம் வந்துடிச்சி.இனிமே வீட்டில உட்காந்து பல்லு குத்தமாட்டேங்க. தமிழ் மக்களுக்காகவே உழைச்சி உயிர் கொடுப்பேங்க. அப்பாவுக்கு விழுந்த ஓட்டில பாதி விழுந்தா கூட போதும் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிடுவேங்க.
7 comments Filed Under: மொக்கை