Showing posts with label சத்தியராஜ். Show all posts
Showing posts with label சத்தியராஜ். Show all posts

சீமான்,அமீர் கைது! சிலிர்த்தெழுந்த சத்தியராஜ்! ஒரு நேரடி ரிப்போர்ட்!

Posted on Saturday, October 25, 2008 by நல்லதந்தி

சத்தியராஜ் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழாவில் (நிகழ்ச்சி?, கலைஞர் கலந்து கொண்டாலே விழாவாத்தான் நினைக்கத் தொன்றுகிறது அவர்தான் இது விழும் அரசல்ல விழா அரசு! என்று சிலேடையாக ஜெயலலிதாவிற்க்குப் பதில அளித்து இன்று வரை விழாவை விடாமலேயே இருக்கிறார்!) அவரைப்பற்றி எந்தப் பத்திரிக்கைகளும் சரியான படி எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.மைக் இல்லாததால் வாய்க்கு வந்தபடி பேசி தற்காலிகப் புகழ் பெற முடியாத ஆதங்கம் சத்தியராஜிற்கு இருப்பதால் அவருக்கு ஆறுதல் தரும் வகையில் நேரடி ரிப்போர்ட்த் தர நமது விஷேச நிருபரை அனுப்பியிருந்தோம்.

நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்!

ஈழத்தமிழர்களுக்காக மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டு நின்றிருந்த சத்தியராஜ் கருப்புக் கலர் சட்டை போட்டுக் கொண்டு இருந்ததால் அவர் சோகமாக இருப்பதாக நமது நிருபர் நினைத்துக் கொண்டார்.நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள்.

நடுவில் நின்ற நமீதாவின் ஒன்றை சத்தியராஜும் மற்றொன்றை சிபிராஜும் பிடித்துக் கொண்டு இருந்தனர் ---கையை!. வலது கையால் நக்மா வினுடையதைப் பிடித்துக் கொண்டிருந்தார்.அதே போல் சிபிராஜ் தன் இடது கையால் நிலாவினுடையதைப் பிடித்துக் கொண்டு நின்றார்.இருவரும், அந்த வட நாட்டு மங்கைகளிடம் தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தனர்.வாழ்க தமிழ்!

மழை வேறு வரவே சத்தியராஜ் குளிருக்காக கையை இறுக்கிக் கொண்டார். நமீதா வலிக்கிறது என்று சொன்னது நமது நிருபரின் பாம்புக் காதுக்கு விழுந்தது.

மனித சங்கிலி முடியும் நேரத்தில் அந்த அதிர்ச்சியான தகவல் நிருபருக்கு எட்டியது .அவர் சத்தியராஜிடம் “சீமானையும்,அமீரையும் கைது செஞ்சிட்டாங்க சார்! “என்றவுடன் ஆவேசமடைந்த சத்தியராஜ் ‘அடக் கேனக்கூ.......”என்று தன் வழக்கமான பாணியில் திட்ட எத்தனித்தவுடன்,பக்கத்தில் நின்ற நமது நிருபர் “சார் இந்த அரசு கலைஞர் அரசு “ என்றவுடன் வாயைப் பொத்திக் கொண்டு சின்னதாகக் கேனக்கூ...என்றார் தன் பழக்கதோஷத்தை விட முடியாமல்!.அது பூனை மியாவ் என்று கத்துவதைப் போலிருந்ததால் அருகில் உள்ள போலீசாருக்குக் கேட்கவில்லை.

நிகழ்சி முடித்ததும் கிளம்பிய சத்தியராஜை வழிமறித்த நமது நிருபர் எங்கே சார் சீமானையும்,அமீரையும் காப்பாற்றுவதற்க்கா? என்றார்.அந்தக் கருமத்துக்கெல்லாம் இப்பொ நேரமில்லை,எனக்கு வேற அர்ஜண்ட் வேலை இருக்கிறது என்றார்.நமீதாவைப் பார்த்துக் கொண்டே!

சார் என்னாங்க சார்! அவங்க பின்னாடியே நிப்போமுன்னிங்க இப்போ வீட்டிற்க்கு கிளம்பறிங்களே! என்று நமது நிருபர் கேட்க ,”வீட்டில ஒரு சின்ன வேலை இருக்குங்க” என்றார்.சுற்றி இருந்தவர்கள் சத்தியராஜையே பார்த்துக் கொண்டிருக்கவே வீர இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி காவல் நிலையம் சென்றார்.

அடுத்து போலீஸ் ஸ்டேசன் சென்ற சத்தியராஜ் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

”யோவ்! தமிழனென்றால் இளிச்சவாயனா?.ஏன் அந்த நடிகனை கைது செய்யவில்லை?” என ஆவேசத்துடன் கேள்வி கேட்க,”சார் நீங்க சொன்னது வாஸ்தவம் தான் ஆனா அவரு இந்த மாதிரி பேசலையே?.வேணும்முன்னா அவரு எதாவது படத்தில இந்த மாதிரி வசனம் பேசியிருந்தா சொல்லுங்க, கலைஞரிடம் ,அந்த நடிகரால தொந்தரவு இருக்கான்னு கேட்டுட்டு அவரோட அறிவுரைப் படி சட்டம் தன் கடமையைச் செய்யுதுன்னு சொல்லிட்டு கைது செஞ்சிடலாம்” என்றார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.

”யோவ்! தமிழனன்னா இந்த மாதிரி ஆவேசமா பேசத்தான்யா செய்வான்,அதுக்கப்புறம் பொத்திக்கிட்டு சும்மாதானய்யா இருப்பான்!. என்னிக்காவது சொன்னதைச் செஞ்சிருக்கானய்யா! .எங்களைப் பாத்துக் கூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?.என்னய்யா போலீஸ் நீங்க தூ...” என்று காரி உழிந்தார்.அந்த காரி உமிழ்தலில் ஸ்டேசன் சுவர்கள் எல்லாம் வார்னீஷ் போட்டது போல பளீச் சென்று ஆனதைப் பார்த்த போலீசார் சத்தியராஜைப் பார்த்து,” சார் கக்கூசையும் கொஞ்சம் சுத்தம் செய்யணும் சார்!” என்றனர்.

பிறகு ஆவேசமான சத்தியராஜ் மைக்கைக் கண்டது போல ஆவேசமாகப் பேசத்தொடங்கினார்.இரண்டு மணிநேரம் ஆனபிறகும் பேச்சை நிறுத்தாததால்,ஒரு போலீஸ்காரர் உயர் அதிகாரியுடம் கேட்டார்”சார்! ”கட்” சொல்லிடலாமா?.வீட்டுக்குப் போகணும் ரொம்பப் பசிக்குது சார்!”

காலில் முள்ளு குத்தியதால் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள் முடியவில்லை! சத்தியராஜ் அழுகை!

Posted on Friday, October 24, 2008 by நல்லதந்தி


பிரபு சாலமன் டைரக்ட் செய்துள்ள "லாடம்" படத்தின் பாடல்கள்அடங்கிய சி.டி யை நடிகர் சத்தியராஜ் வெளியிட,டைரக்டர் அமீர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ,சத்தியராஜ் பேசியதாவது:-
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.என் வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால்,என்னால் ராமேஸ்வரம் போக இயலவில்லை

வீடு முக்கியமா ஈழத்தமிழர் முக்கியமா என்பதற்க்கு வீடுதான் முக்கியம் என்ற சத்தியராஜின் உண்மையான பதிலுக்கு பாராட்டுக்கள்.ராமேஸ்வரத்திற்கு எதாவது ஆயிடுமோ அப்படிங்கற பயம் போலிருக்கு!.இவரு மட்டும் போயிருந்தாருன்னா,விதை ரெண்டும் வாய்க்கு வர்ற மாதிரி இவரு போடற சத்தத்துக்கு,ஒரு வேளை சிங்களக்காரன் பயந்து சிலோனை விட்டே ஓடிப் போயிருப்பான்.ஒரு நல்ல விஷயம் நடக்காம போயிருச்சே!.வீட்டில உள்ளவங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா சார்?.எப்பவுமே நாம செஃப்டியா இருக்கணும் சார்!

இலங்கை தமிழர்களுக்காக,சென்னையில் நாளை மனித சங்கிலி நடைபெற இருக்கிறது.அதில் கலந்துகொள்ளாதவர்கள் குறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப் பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னது போல்,இந்த போராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் தமிழ்
நாட்ட்டில் இருக்கத் தகுதி இல்லாதவர்கள்.இதைகட்சிசார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசவில்லை.தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன்.

இவரு வீட்டுப் பிரச்சனைக்காக இந்த தடவையும்" எஸ்கேப்"ஆகி விடாமல் இருக்க வேண்டும்.இல்லையன்னா இவருக்கும் தமிழ் நாட்டில் இருக்கிற தகுதி போய்விடும்.இது சென்னையில் தானே நடக்குது அதனால் காலையில சாப்பிட்டு விட்டு தெம்பா போய்டுங்க சார்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி-மொழி-இன பாகுபாடின்றி
அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.

குரல் மட்டும் தானே கொடுக்கச் சொல்றாரு. குரல் தானே கொடுத்திடுவோம் காசாப் பணமா?. வழக்கமா சத்தியராஜ் கொடுக்கிறதுதானே!. காசு கேட்டாத்தானே அவரு காணாமப் போவாரு!

டைரக்டர்கள் சீமான் - அமீர் ஆகிய இருவரையும் அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றன.அவர்கள் பேசியது சரியா,தவறா? என்று நான் கூற வில்லை. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சீமான் அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வேண்டும்.


சீமான்,அமீர் மீது உங்களுக்கு என்ன சார் கோபம்! உங்கப் பையனை வெச்சிப் படம் எடுக்கலைன்னா?.நீங்க குரல் கொடுத்துக் கிட்டே பின்னாடி போயிருவீங்க,அவங்க ரெண்டு பேரும் உள்ள போய் களி திங்கணும் அதானே உங்க ஆசை?

எனக்குத் தனிப்பட்ட முறையில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது,
திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை.திராவிடர் கழகமும்,விடுதலைச்
சிறுத்தைகளும் தான் உதவி செய்தார்கள்.

அண்ணா, தனிப்பட்ட முறையில் என்னத் தியாகம் செஞ்சி உங்களுக்குப் பிரச்சனை வந்துச்சிங்க,உங்கத் தியாகத்தால மக்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்க,விபரம் புரியாமல்தான் கேக்குறேன்.ஒரு வேளை தனிப்பட்ட பிரச்சனையன்னா உங்க குடும்பப் பிரச்சனை எதுனாச்சுங்களா?.

ஈழத் தமிழர்கள் நலனுக்காகத்தான் சீமானும்,அமீரும் அப்படி பேசியிருக் கிறார்கள்.எனவே அவர்களுக்கு பின்னால் அனைவரும் நிற்கவேண்டும்.

ரொம்ப உஷாராத்தான் இருக்குறீங்க போலிருக்கு!.ரொம்ப பின்னாடியே போய் கடலிலே விழுந்துடாதீங்க!

இவ்வாறு சத்தியராஜ் பேசினார்.