Showing posts with label சோ. Show all posts
Showing posts with label சோ. Show all posts

துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!

Posted on Sunday, March 15, 2009 by நல்லதந்தி



இந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும்,  நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்!.

காமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.

அன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா? என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.

மறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல! :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா!. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.

இன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.

அத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம்.  வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.

அப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா? என்றுக் கேட்டாராம்.

இதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா?. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
திமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா! கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை! :) )

1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல)  ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.

எதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது! :) ) .........என்னத்த சொல்றதுங்க!.

(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ? :)

பி.கு.: இது எதிர் பதிவல்ல!