தேவரின் திருமுகமும், கொடு முகமும்!
21 comments Filed Under: அனுபவம், சினிமா, தேவர், நிகழ்வு, பழைய சினிமா
துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!
31 comments Filed Under: அரசியல், அனுபவம், சினிமா, சோ
பிராமணர்கள் கோழைகள் இல்லை!
28 comments Filed Under: அனுபவம், சினிமா, பழைய சினிமா, ஜெமினி
குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!
4 comments Filed Under: என்.எஸ்.கே, சினிமா, தேவர், பழைய சினிமா
பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!
10 comments Filed Under: அனுபவம், சினிமா, பழைய சினிமா, புதுமைப்பித்தன்
அரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா!
26 comments Filed Under: சினிமா, டி.எஸ்.பாலையா, பழைய சினிமா
நடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே!
பி.வி.என். புரொடெக்ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.
9 comments Filed Under: என்.எஸ்.கே, சினிமா, பழைய சினிமா
மயக்கமா?கலக்கமா?,மனதிலே குழப்பமா? ஸ்ரீதரின் நினைவுகள்!
22 comments Filed Under: சினிமா, ஸ்ரீதர்
சிம்பு வலையில் சிக்க நினைக்கும் சின்ன மீன் ஸ்னேகா!
2 comments Filed Under: சினிமா
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!(மீண்டு ஜெயித்த கதை)
படம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.
ரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்
திரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.
விரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.
பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்?' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....
இவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.
ரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
ஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்!.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.
நடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.
ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..
பள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.
அதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்
கல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு
கல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.
பெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு?.. சோற்றுக்கு!..வயிற்றுக்கு!!' என்கிறார் இப்போதும்.
இவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.
புதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.
ஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்!.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்?..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.
தீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.
நடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.
இப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.
அரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.
ரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.
1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்!
13 comments Filed Under: அனுபவம், சினிமா, ரஜினிகாந்த்
ஆனந்தவிகடனுக்கு பதிலடி---அன்னக்கிளி குமுதம் விமரிசனம்!
ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம்; அதற்கு ஒரே ஒரு வாத்தியார்.(பாடம் கீடம் நடத்தியதாகத் தெரியவைல்லை) அவர் காதலிப்பது அன்னக்கிளியை.கைப் பிடிக்க நேர்வது சொர்ணக்கிளியை.இன்னும் கொஞ்சம் துணிவு இருந்திருந்தால் கதையைக் கவிதையாகப் பண்ணி இருக்கலாம். கை நழுவ விட்டுவிட்டார்கள். கதையே டல் அடிக்கிறது.
முழுக்க முழுக்க கிராமத்துச் சூழ்நிலையை வைத்துத் தரமான பிளாக் அண்ட் வொய்ட் படம் வந்து ரொம்பக் காலம் ஆகிவிட்டது என்று ஏங்குபவர்களுக்கு அன்னக்கிளி ஆறுதல் தரும்.
ஊஞ்சலாட்டம் முதல் நீச்சலோட்டம் வரை வாத்தியாரைய்யாவுக்கு வாத்தியாரம்மாவாக விளங்குகிறார் சுஜாதா.
சிவகுமாரின் வயிற்றை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு, 'ஊம்.....இப்ப கால் ...இப்ப கை...' என்று நீச்சல் சொல்லிக் கொடுத்து விட்டு பிறகு அவரது இடுப்புத் துண்டைக் காணோம் என்று தெரிந்ததும் கூச்சத்துடன் ஓட்டம் பிடிப்பது கிளுகிளுப்பான -- அதே சமயம் அசிங்கமான -- குட்டிக் கதை.
அதென்னவோ தெரியவில்லை,படாபட் வந்த பிறகு தான் பழைய காதல் கதையில் சூடு பிடிக்கிறது.
முழங்காலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஆடிக்கொண்டே,"உங்களுக்கு எப்படி இந்தக் கிராமத்தில் பொழுது போகிறது?" என்று சிவகுமாரிடம் பேச்சுக் கொடுக்கும் சரளம்; 'என்னங்க,அன்னத்துக்கு ரெண்டு ரூபாய் கொடுங்க', என்று--கணவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப் பற்றி அறியாமலே----சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகும் லாவகம்---படே பட்தான் இந்த படாபட்.
அங்கே திரையில்,கண்ணகியின் போராட்டம்; இங்கே தியேட்டர் முதலாளியின் படுக்கை அறையில் அன்னக்கிளியின் போரட்டம்.டைரக்டர்களின் சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்.
தன்னை நேசித்து,சமயத்தில் தனக்கு ஆயிரம் ரூபாய்ப் பணத்தை-குருவி சேர்ப்பதுபோலச் சேர்த்து--அனாயாசமாக எடுத்துக் கொடுத்த பேதைப் பெண்ணை ஏமாற்றி விட்டோமே என்று சிவகுமார் ஏக்கப் பட்டவராக இருக்க, அவரைப் பிரிந்து விட்டோமே என்று சுஜாதா ஏங்க இருவரும் சந்திக்கும் போது,உணர்ச்சி வசப் பட்டுத் தங்களை ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு விடுவதும்,சுஜாதா உடனே பிரக்ஞை வரப் பெற்றவராக,'போயிடுங்க வாத்தியாரையா, போயிடுங்க..' என்று பதறுவதும் நல்ல கட்டம்.
ஸ்ரீகாந்த், சோக காந்த்.
சில ரே ரக கிராமிய அழகுகள்; சில ஆழ்ந்த வசனங்கள்; சில புத்திக் கூர்மையுள்ள டைரக்ஷ்ன் பொறிகள். இவ்வளவு இருந்தும்---
அன்னக்கிளியை மனசில் நின்ன கிளி என்று சொல்லத் தோன்றவில்லை.
பி.கு : இந்த திரைப் படத்திலிருந்து தமிழ் திரை இசையை வேறு தளதிற்க்கு கொண்டு சென்ற இளைய ராஜாவின் இசையைப் பற்றி ஒரு வரி கூட எழுதாத ஞான சூனிய குமுதம் விமரிசகரைப் பற்றி என்ன சொல்ல!
15 comments Filed Under: சினிமா, விமரிசனம்
தமிழர்களுக்கு தமிழர் சர்டிஃபிகெட் வேண்டுமா?-அணுகவேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை!
மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் :))))))))))என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். (செத்துப்போனவர்களை வைத்து எத்தனை விளையாட்டுதான் விளையாடுவார்-தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.தமிழ்த்தாயின் நன்றி!நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி (விஸ்வநாதன்\இராமமூர்த்தி 1964லிலேயே பிரிந்து விட்டதாக தகவல்கள் உள்ளன.கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்க்காக இசை அமைத்ததாக ஞாபகம்.அப்புறம் எப்படி 1969ல் இரண்டு பேரும் சேர்ந்து இசையமைத்தார்களோ தெரியவில்லை.மதுரையில் இவர்கள் இருவரும் உண்மையைச் சொல்லாததற்கு பயமும் காரணமாக இருக்கலாம்.எல்லாம் வல்லவராயிற்றே கலைஞர். அவர்தான் கலைஞர் பார் அவர்தான் கலைஞர்!.)இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.டிஎம்எஸ் ஒரு தமிழன்...இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. (தேவைப் படும் போது தமிழன் இல்லாவிட்டால் செளராஷ்ட்ரா?. எம்.ஜி.ஆர் அனுபவிக்காததா?..தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மொழியில் மட்டுமே, தமிழ் அல்லாத தமிழர்களுக்கு,(தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட அந்த தமிழர்களுக்கு) தமிழர்கள் சர்டிஃபிகெட் வேண்டுமா?? அணுக வேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை)ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.
நன்றி :-thatstamil
23 comments Filed Under: அரசியல், சினிமா
சூப்பர்ஸ்டாரை முழுவதும் புரிந்து கொள்ளாமல் குற்றம் சொல்லாதீர்கள்!
5 comments Filed Under: சினிமா
குசேலன்-உருகிய கனிமொழி
நேற்று காலை குசேலன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ஆதரவற்ற குழந்தைகளுடன் பார்த்த கனிமொழி எம்பி ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி அழுதுவிட்டதாகக் கூறினார்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது.சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை பிரமிட் சாய்மிரா நிறுவனம் இன்று காலை ஏற்பாடு செய்திருந்தது.சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சிறப்பகு காட்சியை குழந்தைகளோடு சேர்ந்து காண வந்திருந்தார் முதல்வர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.படம் முடிந்த பிறகு நிருபர்களிடம் கூறுகாயில், மிக அற்புதமான திரைப்படம் குசேலன் என்று பாராடினார். படத்தின் இறுதிக் காட்சியில் தான் நெகிழ்ந்துவிட்டதாகவும், ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்தார்.தமிழில் ஒரு அற்புதமான முயற்சிக்கு வழிகாட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த மாதிரி நல்ல படங்கள்தான் மக்களின் ரசனையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார். தமிழ் மையம் அமைப்பின் ஜெகத் கஸ்பர் ராஜூம் இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தார். மிக அருமையான, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்றார் அவர்.இந்த சிறப்புக் காட்சியைப் பார்க்க குசேலன் இயக்குநர் பி.வாசு, பிரமிட் சாய்மிரா நிர்வாக இயக்குநர் பி.எஸ்.சாமிநாதன் ஆகியோரும் வந்திருந்தனர்.
நன்றி: thatstamil
3 comments Filed Under: அரசியல், சினிமா
மன்னிப்பு கேட்டவிவகாரம்-ரஜினி உண்மையாக பேசியது என்ன?
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
''தப்பாகிருவுது ஸஹஜ, முந்தெ தப்பாகதந்தெ நோடிகொள்ளுத்தேனெ. முந்தெ தப்பு மாடுவுதில்ல. கன்னடிகர பக்கெ நனகெ அபார கௌரவ இதெ. தயவிட்டு குஸேலன் பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு'' எந்து நட ரஜனிகாந்த் பரோக்ஷவாகி டிவி 9 ஸுத்தி வாஹினி மூலக க்ஷமெ கோரித்தாரெ.
ஹைதராபாத்னல்லி மாதனாடுத்தித்த அவரு, 'கன்னடத மக்களிந்த தொட்ட பாட கலிதித்தேனெ. நானு ஒதெயிரி எந்து ஹேளித்து புண்டு போகரிகளிகெ, ஸார்வஜனிக ஆஸ்தி பாஸ்தியன்னு நாஷ மாடுவவரிகெ ஹொரது கன்னட ஹோராடகாரரன்னு உத்தேஷிஸி அல்ல. ஒள்ளெயவரிகெ தலெபாகுத்தேனெ. புண்டுபோகரிகளிகெ யாகெ தலெபாகபேகு எந்து ப்ரஷ்னிஸிதரு.
நானு ராஜகாரணி கண்டித அல்ல. ஹீகாகி மாதாடுவாக தப்பாகிதெ. முந்தெ மாதாடுவாக விசாரமாடி மாதனாடுத்தேனெ. கன்னட ஹோராடகாரரிகெ ஏனு ஸஹாய பேகோ எல்ல மாடுத்தேனெ. இந்து நானு ஸந்தோஷவாகித்தேனெ. ஹண, ஹெஸரு எல்ல தொரெதிதெ ஆதரெ நானு கண்டக்டர் ஆகித்தெ எம்புதன்னு இன்னூ மரெதில்ல. ஸுமாரு ஜன நன்னன்னு அஹங்காரி என்னுத்தாரெ. நானு துரம்ஹங்காரி கண்டித அல்ல எந்து நுடிதரு.
அவரு தம்ம மாதின மத்யெ கன்னட ரக்ஷணா வேதிகெய ராஜ்யாத்யக்ஷ டி.எ.னாராயனகௌட, ப்ரவீண் குமார் ஷெட்டி, வாடாள் நாகராஜ் ஹெஸருகளன்னு ப்ரஸ்தாபிஸி கன்னட ஹோராடகாரரெல்லரு சித்ர பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு எந்து வினந்திஸிகொண்டரு.
12 comments Filed Under: சினிமா, நகைச்சுவை, மொக்கை
சூப்பர்ஸ்டாரின் குசேலன் வெளியிடுவதில் சிக்கலா?
ரஜினி நடிக்கும் "குசேலன்' படம் 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் தமிழக வினியோக உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரையில் குத்தகை ஒப்பந்தம் எடுத்துள்ளது. "மற்ற தியேட்டர் உரிமையாளர்கள், "குசேலன்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால், தாங்கள் நிர்ணயம் செய்துள்ள தொகையைக் கொடுத்தால் மட்டுமே படப்பெட்டி வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.
" சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சாய்மீராவின் கட்டுப்பாட்டில் எட்டு தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் "குசேலனை' ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சதவீத அடிப்படையில் "குசேலனை' திரையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னையால், மற்ற தியேட்டர்களில் படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரச்னைக்குத் தீர்வு காண, தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினரும், வினியோகஸ்தர்களும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
2 comments Filed Under: சினிமா, செய்தி
நாகேஷின் உடல் நலம் குறித்து பரவிய வதந்தி!
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது.தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர்.நேற்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார் என்று அவரது வீட்டினர் தெரிவித்தனர்.இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் எனப் புகழப்படும் நாகேஷூக்கு இப்போது 75 வயதாகிறது. ஆனாலும் நடிப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தசாவதாரம் படத்தில் கமலுக்கு தந்தையாக நடித்திருந்தார்.இன்னும் சில படங்களில் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக உடல்நலக் கோளாறுகளால் அவதியுற்று வந்தார்.
அவது உடல்நலம் மிக விரைவாகத் தேற இறைவனைப் பிரார்த்திப்போம்.கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது!
1 comments Filed Under: சினிமா
பாலாவிற்க்கு பணமே குறியா?
அஜித்திடம் "நான் கடவுள்" படத்தின் ஆரம்பக்கட்டத்தில் தகராறு செய்த பாலா,தற்போது தயாரிப்பாளரிடம் தகராறு செய்யத்தொடங்கியுள்ளார்.இரண்டும் பணத்தைக் குறித்தே!.
அஜித்திடம் அடாவடியாக பணத்தை பிடுங்கினார்.இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!.
ஆர்யா, பூஜா நடிப்பில் பாலா இயக்கும் படம் ‘நான் கடவுள்’. இந்தப் படத்தை முதலில் ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இதற்கு பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.3.5 கோடி பட்ஜெட் பேசப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரூ.7 கோடி ஆகும் என்று பாலா தெரிவித்தாராம். இதையடுத்து இந்தப் படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ. 7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்து ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்போது பட்ஜெட் ரூ.15 கோடியை தொட்டுவிட்டதாகவும் பாக்கி பணத்தை தந்தால் மட்டுமே பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு படத்தை கொடுக்க முடியும் என்றும் பாலா கூறியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார். சாய்மீரா நிறுவனம், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்றும் முதலில் பேசிய தொகைக்கே படத்தை கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
5 comments Filed Under: சினிமா
சொந்த செலவில் சூனியம்!
தமிழ் சினிமா ஹீரோக்களின் கேரியரில் கடைசிக்கட்டம் எதுவாக இருக்கும்
1.இராமநாரயணன் படத்தில் நடிப்பது
2.V.சேகர் படத்தில் நடிப்பது
3.கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் நடிப்பது
இந்த மூன்று முடிவுகளில் எந்த முடிவை ஒரு ஹீரோ எடுத்தாலும் அவருக்கு சனி உச்சக்கட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.பாவம் பிரசாந்த் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் படுகின்ற பாட்டை சொல்லிமாளாது. கலை வாழ்விலும் அவரது சரிவு அதளபதாளத்தில் உள்ளது.
அடுத்து தனது கலைப் பயணத்தையும்,கூடவே தன் சொத்தையும் முடிவிற்க்கு கொண்டு வர தந்தையின் துணையோடு எடுக்கும் முயற்சிதான் கலைஞரின் கதை வசனத்தில் தன் சொந்த தயாரிப்பாக எடுக்கப் போகும் படம்.
பாவம் பிரசாந்த்!.
கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் என்ற சரித்திர நாவல் திரைப்படமாகிறது. இதில் பொன்னராகவும், சங்கராகவும் பிரசாந்த் நடிக்கிறார். படத்தை இயக்கப் போவது பிரசாந்தின் அப்பா தியாகராஜன். இரண்டு வேடத்திலும் பிரசாந்த் நடிக்கட்டுமே என்று விரும்பியதும் கலைஞர்தானாம். "தமிழ் திரைப்பட வரலாற்றில் இத்தனை பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் சரித்திரப்படம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படுகிற தமிழன் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். (யப்பா கொசுத் தொல்லைதாங்க முடியலையே நாராயணா!-நல்லதந்தி)இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவேன்" என்கிறார் தியாகராஜன். உலகம் முழுவதும் அலசி, சிறந்த கிராபிக்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். அதே மாதிரி முக்கிய காட்சிகளும் வெளிநாட்டில் படமாகவிருக்கிறது. "கதையில் கலைஞர் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியையும் அப்படியே திரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். போர்க் காட்சிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பங்கு பெற செய்வேன். அதே போல் கணக்கில் அடங்காத குதிரைகள் யானைகள் என்று பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது" என்கிறார் தியாகராஜன். சரி, இவ்வளவு செலவை தாங்குகிற தயாரிப்பாளர் வேண்டுமே? "அதனால்தான் என் அப்பாவையே பொன்னர் சங்கரை தயாரிக்க சொன்னேன்" என்கிறார் பிரசாந்த்.(இதுக்குப் பேர்தான் சொந்தமா சூனியம் வெச்சிக்கிறதோ-நல்லதந்தி) ஒன்றரை வருடத்திற்கு முன்பே முழு ஸ்கிரிப்டையும் கொடுத்துவிட்டாராம் கலைஞர். அதை திரைக்கேற்ப வடிவமைக்கவே இத்தனை மாதங்கள் ஆகிவிட்டதாம். "என் கல்லூரி நாட்களில் இந்த கதையை படித்துவிட்டு இதை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போதுதான் அது கனிந்திருக்கிறது. நான் ஆசைப்பட்டதை என் பிள்ளை செய்கிறார்" என்றார் தியாகராஜன்.
நன்றி: தமிழ் சினிமா:-
2 comments Filed Under: சினிமா
ஐஸ்வர்யாவின் ஜாதகம் வேலைசெய்ய ஆரம்பித்து விட்டதா?
முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின் கணவன்- மனைவி இருவரும் விழாக்களில் தம்பதி சமேதராய் ஆஜராகி வருகின்றனர். சினிமா விருது விழாவாக இருந்தாலும் சரி... பத்திரிகையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி... இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி சமீபத்தில் ஒரு பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
திரைப்பட விழா
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் அண்மையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் சென்றிருந்தார்.
ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்கள். அங்கிருந்து இருவரும் ஜோடியாக திரைப்பட விழாவுக்கு புறப்பட்டனர். நடிகர் குணால் கபூரும் உடன் இருந்தார்.
கணவருடன் வாக்குவாதம்
அப்போது ஐஸ்வர்யா ராய் உரத்த குரலில் பலமாக பேச ஆரம்பித்தார். உடனே பக்கத்தில் இருந்த அபிஷேக் பச்சன் மனைவியிடம் மெதுவாக பேசு... என்று நாசூக்காக கூறினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து உரத்த குரலில் பேசிக் கொண்டு இருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடிகர் குணால் கபூர் அங்கிருந்து நைசாக நழுவி வேறு இடத்துக்கு சென்று விட்டார்.
உடனே மனைவி ஐஸ்வர்யா ராயை ஓட்டல் வராந்தாவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அபிஷேக் பச்சன் அழைத்துச் சென்றார். அங்கு அவரை அமர வைத்து, பொறுமையாக பேசினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், கணவருடன் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.
அறைக்கு அழைத்துச் சென்றனர்
ஓட்டலில் வருவோர், போவோர் எல்லாம் இதை வேடிக்கை பார்த்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் பச்சன் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், தனது மெய்க்காப்பாளரை அழைத்து மனைவி ஐஸ்வர்யா ராயை அவரது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
உடனே ஐஸ்வர்யா ராயை அவர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.
1 comments Filed Under: சினிமா