Showing posts with label அச்சுதானந்தன். Show all posts
Showing posts with label அச்சுதானந்தன். Show all posts

எதிர்கட்சிகள் சதி! மன்னிப்பு கேட்ட கையோடு, கம்மிரேட் அச்சு(பிச்சு)

Posted on Wednesday, December 3, 2008 by நல்லதந்தி

தீவிரவாதிகளால் தன் இன்னுயிரை ஈந்த காமண்டர் உன்னி கிருஷ்ணன் வீட்டிற்கு அவருக்கு மரியாதை செய்ய கேரள அரசால் யாரும் வாராததைக் கண்டு கேரளத்தவர்கள் கொதித்ததால் வேறு வழியின்றி அடுத்த நாள் துக்கம் விசாரிக்க வந்த அச்சு, அங்கு உன்னி கிருஷ்ணனின் தந்தைக் கொதித்து வெளியேறுமாறு சொல்ல, அங்கு அவமானப்பட்ட அச்சு பிறகு நாய் இந்த வீட்டிற்க்குப் போகாது என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நம் தலைவர் கலைஞர் பாணியில் நீ தாண்டா கொலைகாரன்!. தீக் குளிக்க வர்றியா?..என்றதைப் போல, உளறிக் கொட்ட நாடே அச்சுவைக் கண்டு கொதித்தது அனைவரும் அறிந்ததே.

பிறகு அச்சு பிச்சுவிற்காக CPM தலைவர் காரம் மன்னிப்புக் கேட்டதும் நாம் அறிந்ததே.அச்சு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொன்னதும் அறிந்ததே!

இப்போதைய செய்தி நம் அச்சு பிச்சு உன்னிக் கிருஷ்ணன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.இதற்க்கு காரணம் பதவியில் இருந்து தூக்கப் படுவோம் என்ற பயமா? .(லாலு இவரைப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று CPM தலைவரிடம் கேட்டுக் கொண்டார்) அல்லது அடுத்த தேர்தலில் CPM ற்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்ற பயமாத் தெரியவில்லை.

இருந்தாலும், வழக்கம் போல உளறுவதை அச்சு பிச்சு நிறுத்தவில்லை.இது எதிர்கட்சிகள் சதியாம்!. இது எப்படி இருக்கு?(கலைஞருக்கு சற்றும் சளைக்காதவர் போலிருக்கு இந்த அச்சு பிச்சு!)