Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?

Posted on Thursday, April 16, 2009 by நல்லதந்தி

தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.

கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.

மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.

கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.

உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!

முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.

இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.

பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.

நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.

எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.

அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.

அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.

த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.

பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை

இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!

Posted on Sunday, March 29, 2009 by நல்லதந்தி



ஊடகங்களிலும், இணையத்திலும் தமிழகமக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கப் போவதாக பரபரப்பை ஊட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் இலங்கைப் பிரச்சனையில் தங்களுக்கு பெரும் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் தத்தம் சடங்குகளைக் செய்து முடித்து விட்டன. 

இதற்குமுன் பொதுவாக எந்தத் தேர்தலிலும் இலங்கைப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் முன்நிறுத்தியதில்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்யப் போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.

ஒரு வேளை தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே வாக்களிக்கப் போவதாக இருந்தால் என்ன நடக்கும்!. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும்!.

திமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையை நினைத்தால் நெஞ்சே பதறுது. வழக்கமாக, தமிழுக்கும், தலைவனுக்கும் தான் உயிர் கொடுத்துகிட்டு இருந்தோம். இப்போ இதுக்கும் சேர்த்தி உயிரைக் கொடுத்துகிட்டு இருக்கிறதைப் பாத்தா நிஜமாகவே எதாவது செய்யணும் போல இருக்கு. பிரச்சனை பெருசானதுக்கு காரணமே காங்கிரஸ்தான் அதனால அதுக்கு ஓட்டுப் போடக் கூடாது. திமுகாவுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா ஒரு வேளை பி.ஜே.பி ஜெயிச்சி தலைவர் வழக்கம் போல இந்தியாவை மொத்தமா காலி பண்ணலாமுன்னு மந்திரிப் பதவிக்காக தாவ நினைச்சாருன்னா இங்க ஆட்சி போயிடும். திமுக ஜெயிச்சாதானே இந்தப் பிரச்சனை. தலைவரோட ஆட்சியை காப்பாத்த வேறகட்சிக்குத்தான் ஓட்டு போடணும். 

அதிமுகாவுக்கு போடக் கூடாது. தேமுதிகவுக்குப் போடலாமா? வேணாம் அப்புறம் அவங்க வளந்துட்டா, நம்ம ஸ்டாலின், ஸ்டாலினோட மகன்,அழகிரி, அழகிரியோட மகன்,மகள், க்லாநிதி, கனிமொழி, அவுங்க மகன், மு.க.முத்து, அவுங்க மகன், தயாநிதி, அன்புநிதி, அறிவுநிதி,உதயநிதி, இம்சைநிதின்னு இன்னும் எத்தனை நிதி இருக்காங்களோத் தெரியிலை. அத்தனை பேரும் வசதியில்லாம நடுத்தெருவுக்கு வந்து கஷ்டப் படுவாங்க. விஜயகாந்தோட மாமன் மச்சானுங்கதான் நல்லா இருப்பாங்க. 

தமிழனை தமிழந்தான் அழிக்கணுங்கற கொள்கை என்னாகும். அப்போ மிச்சம் இருக்கிறது பி.ஜே.பி தான் அவுங்களும் இலங்கைப் பிரச்சனையில ஆர்வமாத்தான் இருக்காங்க. போனாப் போயிட்டு போவுது இந்த தடவை அவங்களை ஜெயிக்கவெச்சு இலங்கை பிரச்சனையை தீர்த்து புடலாம்.

அதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க என்ன பண்றது. நம்ம கட்சிக்கு ஓட்டு போட்டா ஒரு அம்மா மூணாவது அணி நாலாவது அணின்னு போயிட்டாங்கன்னா?. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே!. 

இந்த மூணாவது அணியச் சேர்க்கிற தேவகவுடா கும்பல் நல்ல காலத்திலேயே தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டாங்க. மூணாவது அணியை நம்புறது வேஸ்ட். காங்கிரஸுக்கு எப்படி போடறது இலங்கைப் பிரச்சனையில எதிரியே இவங்கதானே, அப்புறம் தானே இராஜபக்‌ஷே. திமுகவுக்கு நான் சுடுகாடு போனாலும் ஓட்டு போடமாட்டேன். 

விஜயகாந்து, ச்ச்சீ வேணாம். இந்த ஆளுக்கு என்னமோ நம்ம அம்மான்னு நினைப்பு. நான் கையை நீட்டறவனுக்கு ஓட்டு போடுன்னு சொல்றாரு. அம்மா டயலாகை அம்மா மட்டும் தானே பேசணும். அப்புறம் மிச்சம் இருக்கிறது. பி.ஜே.பி தான்!. சரி ஓட்டு ஏன் வேஸ்டா போவுணும் நான் போடாட்டாஅப்புறம் அழகிரி கும்பல் எப்படியும் போட்டும். அதனால பி.ஜே.பிக்கே போட்டு வைக்கலாம். 

ஒருவேளை எலக்‌ஷன் முடிஞ்சி அவங்க ஆட்சிக்கு வந்தா கருணாநிதி கவர்மெண்ட்டை டிஸ்மிஸ் செய்ய வைக்க அம்மா. பி.ஜே.பி யோட சேர்ந்தாலும் சேரலாம்.  அதனால இலங்கைப் பிரச்சனையும் போனாப்போவுதுன்னு தீர்ந்தாலும் தீரலாம்.

காங்கிரஸ் தொண்டர்: என்னய்யா இது!  எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா!, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி!. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு!. 

யாருக்குப் போடலாம் திமுகவுக்கு போட முடியாது. மொத்தப் பிரச்சனையும் அந்தாளாலேதான். அவரு நல்லவராகாட்டிக்க மொத்தப் பழியையும் காங்கிரஸ் மேல தானே போடறாரு!. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா?. இதுக்கா வேண்டியே திமுக வுக்கு வோட்டு கிடையாது. 

அம்மாவுக்குப் போடலாமா?. அது நல்லாத்தான் இருக்கும் ஆனா அவரு சோனியாவைப் பத்தி பல உண்மைகளை ஜனங்ககிட்டயே சொல்லிடறாரு. காங்கிரஸ் கொள்கையேஅவருக்குத் தெரியிலை. நாம ஆபிஸூக்குள்ளாறதானே அடிச்சுக்குவோம். 

தேமுதிக வுக்கு போடலாமுன்னா அந்தாளு நம்ப வெச்சி கழுத்தறுக்கிற பாலிஸியே நம்ப கிட்டயே காட்டுறாரே!. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே!. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு!. 

மீதி... பி.ஜே.பி தான் ...அதான் நல்லது நாம பண்ணின குழறுபடியை அஞ்சி வருஷம் உக்காந்து கஷ்டபட்டு சரி செஞ்சி அதனால ஜனங்ககிட்ட கெட்ட பேரு எடுத்திகிட்டு வரட்டும். அப்புறம் நாம ஜாலியா உக்காந்துகிலாம். அதனால பி.ஜே.பிக்கே ஓட்டு போடலாம். நாட்டுப் பிரச்சனையோட, இலங்கைப் பிரச்சனையும் சேத்தி வெச்சிகிட்டு திண்டாடட்டும்.

தேமுதிக தொண்டர்:  இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு?.... ஆங்!..போன சட்டசபை எலச்ஷனிலேயே ஒரேஒரு தொகுதி தானே கெலிச்சாரு?. மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங்!...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும்.  அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே? ஆங்....

நாம எப்படியும் தமில் நாட்டில தானே ஆச்சி பன்ன போறொம் . அண்ணனும் இந்தத் தேருதல்ல நிக்க மாட்டேன்னுதானே சொன்னாரு!.அப்ப இந்த ஓட்டு அண்ணனுக்கு எதுக்கு போட்டுகிட்டு, நாம்பளே,  அது வேணாம், இதுவேணாமுன்னுட்ட்டு தானே இவருக்கு ஓட்டு போடறோம். அதானால சும்மா போற உடம்புல பம்பரம் விட்டாக்க தப்பு இல்லன்னு தலைவர் சொன்னா மாதிரி வீணாப் போற ஓட்டை வீணாப் போற பி.ஜே.பிக்கே போட்டுறலாம் ஆங்...... 

பா.ம.க. தொண்டர்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! என்னால தாவ முடியில!. ஒரு தடவை தாவினா....சரி போவட்டும்ன்னு விட்டிடலாம். இத்தினி தாவுக்கு ஒடம்பு தாங்கிலயே!. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம்.  நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி!. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க!. 

இப்ப உங்க வூட்டாளுங்களைத் தவிர யாரும் வரமுடியிலையே!. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க!.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க!. வேற எதுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா காடு வெட்டிய கண்டம் பண்ணதால திமுக வேணாம். 

அம்மா இப்பத்தான் இலங்கைப் பிரச்சனையில் நுழைஞ்சதாலே அதிமுகவும் வேணாம். தேமுதிக நம்ப பரம்பரை எதிரி அதனால அதுவும் வேணாம். மிச்சமிருக்கிறது, பி.ஜே.பி தான். அதுக்கே போட்டுத் தொலையுறேன். இதிலையும் நம்ப கொள்கைதான் நீங்க காங்கிரஸை எப்பவுமே கன்னா பின்னான்னு திட்டி இருக்கீங்க!. இது வரைக்கும் பி.ஜே.பி யை திட்டி நான் பாத்ததே இல்லை. நீங்க பிற்பாடு ஒட்டறதுக்கு வசதியாயிருக்குமுன்னு அதுக்கே ஓட்டு போடப்போறேன்.

திருமாவளவன் தொண்டர்: அண்ணன் சொல்லறது காங்கிரஸை அழிக்கணுமுன்னு, அப்போ காங்கிரஸசுக்கு ஓட்டு போடக்கூடாது. அதனால காங்கிரஸ் கட்டிக் காப்பத்திற அரசுக்கும் ஓட்டு போடக்கூடாது. அப்படியன்னா அது திமுக அரசு!. ..சரி திமுகவுக்கும் ஒட்டு கிடையாது. மிச்சம் இருக்கிறது நம்ப அண்ணன், அவர் திமுக சப்போர்ட் அதனால அண்ணன் சொன்னபடி அவ்ருக்கே கூட ஓட்டு போடகூடாது. வேற யாருக்குப் போடலாம். 

அம்மாவுக்குப் போடலாமுன்னா அண்ணனுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்.  தேமுதிகவுக்கு போடலாமா? .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு!. காங்கிரஸ் எதிரின்னா பி.ஜே.பி நண்பன் தானே!

பி.ஜே.பி தொண்டர்: அப்போ இலங்கையில எதோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும் போலிருக்கு!. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா?. எதா இருந்தாலும், நாம பி.ஜே.பிக்குதான் ஓட்டு போடணும். 

அவுங்களுக்கு நம்மை உட்டா வேற யாரும் கதி இல்லையே!. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது!. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா?. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி!.

எலக்‌ஷன் முடிஞ்சி ரிசல்ட் அன்னிக்கு “ அண்மைச் செய்தி” .

40 தொகுதிகளில் நிற்க ஆளில்லாமல் தடுமாறித்தவித்து பிறகு பி.ஜே.பி பல கட்சிகளைத் தயாரித்து கெளரவத்திற்கு கூட்டணி அமைத்துக் கொண்டது தெரிந்ததே!. தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. 

ப.ஜ.க - 20 ( பாரதீய ஜனதா கட்சி)

அ.இ.ச.ம.க (?) ( ஸ்ஸ்ஸப்பா)-  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  சரத்குமார் பிராண்ட் - 10

அ.இ.ந.க(?) (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  கார்த்திக் பிராண்ட் - 10

மொத்தம் நாற்பதிற்கு நாற்பது வென்றுள்ளன!

கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!

Posted on Sunday, March 22, 2009 by நல்லதந்தி




1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

உயிர் கொடுப்பேன்,உண்ணாவிரதம் இருப்பேன் திகில் திரை விமர்சனங்கள்

Posted on Monday, January 19, 2009 by நல்லதந்தி

சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்கள் நம் எல்லோருடைய நெஞ்சைக் கண்ணீரால் நனைய வைத்தன.இப்படியும் நடக்குமா என்று திகிலால் உறைய வைத்தன .

கலைஞர் கதை,வசனம்,திரைக்கதை எழுதி இயக்கி,நடித்த “சாகும் வரை உயிரைக் கொடுப்பேன்” திருமாவளவன் நடித்து,தயாரித்து இயக்கிய “உண்ணாமல் உண்ணாவிரதம்” ,இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,மக்களின் இரண்டு நாள் கவலையை திசைதிருப்பின என்றால் அதில் குற்றம் இல்லை.ஒரு கவலைக்கு பதில் இரண்டு கவலையாக மக்கள் படும்படிச் செய்து அதில் இருவரும் வெற்றி கண்டனர்.இரண்டிலும் வெளிக்கதையில் இலங்கைப் பிரச்சனையையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் உள்ளே வழக்கம் போல சொந்தக் கதைகளே பிரதானமாக இருந்தது.அதை இருவரும் வெளிக்காட்டாமல் தங்களை இலங்கைத்தியாகிகளாக சித்தரித்துக் காட்டியது இருவரின் டைரக்‌ஷன் திறமைக்கு நல்ல உதாரணம்.

கலைஞரின் “சாகும் வரை உயிர் கொடுப்பேன்” வழக்கமான கதைதான் என்றாலும் கலைஞர் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் கம்பனி தயாரிப்பாதலால் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல் படத்தின் திரைக்கதை காமெடியாக அமைக்கப் பட்டிருந்தது,ஜனங்களை எடை போடும் கலைஞரின் திறமையைக் காட்டியது.

மேடை ஏறும் போதெல்லாம் உயிரைக் கொடுப்பேன் என்கிற வசனத்தைக் கலைஞர் பேசுகிறார்.ஜனங்கள் சிறிது தொய்வடையும் போது,வசனகர்த்தா கலைஞர் வசனத்தை மாற்றிப்போட்டு கடலில் கட்டு மரமாவேன் என்று சொல்லும் போதிலும்,சில இடங்களில் விலா எலும்பை முறித்தாலும் ”ஒகேனக்கல்” ஆவேன் என்று பஞ்ச் டையலாக் அடிக்கும் போதும் நடிகர் கலைஞர் ஜொலிப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.சும்மாவா எத்தனை வருட நடிப்பு அனுபவம்.

வசனமா நடிப்பா எதைப் பாராட்டுவது என்று திகைக்க வைத்து விடுகிறார் மனிதர். அதிலும் ”இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் கொடுப்பேன்” என்கின்ற வசனத்தை வழக்கம் போல் சொல்லாமல் ”கொடுப்பேன் உயிர் தமிழர்களுக்காக இலங்கை” என்று ஜூனூன் தமிழில் வசனம் பேசிவிட்டு எல்லாம் அன்னை சோனியாவின் ஆசியால் வருவது என நமுட்டு சிரிப்பு சிரிப்பது திரை அரங்கை அதிர வைக்கிறது.

ப்ரணாப் முகர்ஜியுடன் “போவீயா! போமாட்டாயா! போலேன்னா உன் பேச்சுக்கா!” என்ற பாடலில் கலைஞரும்,ப்ரணாப் முகர்ஜியும் டப்பாங்குத்து டான்ஸ் ஆடிஅசத்துகின்றனர்.நடன இயக்கத்தை மன்மோகன் சிங் கையாண்டு இருக்கிறார்.சில இடங்களில் நம்புகிறார்ப்போல அமைத்திருக்கிறார்.சில இடங்களில் சற்று சோடையாகும் போது கலைஞர் தன் அனுபவத்தால் அதைச் சமாளிக்கிறார்.

”இலங்கைத் தமிழன் சாகிறான்.அவனைக் காப்பாற்ற வழியில்லை வா!தமிழனே அனைவரும் சேர்த்து சாவோம்” என்று சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே கவலைப் படும் காட்சி ஏற்கனவே கலைஞர் புரெடெக்‌ஷாரின் ”இலங்கைத் தமிழருக்கு இன்னுயிரைத் தருவோம் Part 3 யில் கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்காக பிறந்தநாளைக் கொண்டாட மாட்டேன் என பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தின் போது சொன்னதை நினைவு படுத்துகிறது.டைரக்டர் கவனிக்கவில்லையா?.அதே போல் அந்தக் காட்சியில் அவர் அனைவரும் சாவோம் என்று கூறிக் கொண்டு அழுதவாறு வானத்தைப் பார்க்கும் போது ஆயுதமேற்றிக் கொண்டு இலங்கை செல்லும் இந்திய விமானம் கண்ணில் படுகிறது.இது டைரக்டரின் உத்தியா?அல்லது தெரியாமல் நடந்த தவறா? என்று தெரியவில்லை.கலைஞருக்குத்தான் வெளிச்சம்.

க்ளைமாக்ஸ் காட்சி திருமங்கலம் இடைத்தேர்தலில் அமைக்கப்பட்டு இருப்பது ஏனென்று புரியவில்லை.இப்போது கலைஞர் இயக்கத்தில் தயாராகிவரும் “பாரப்பா! பார்லிமெண்டப்பா!” என்கிற படத்தின் முதல் காட்சியாக இருக்குமோ என்னவோ?.ஆனாலும் கலைஞரின் இயக்கத்தில் ஒரு காட்சிகூட வீணாகாது என்று நிரூபிக்கும் வகையில் கடைசி காட்சி சூப்பர்!.

அழகிரிக்கு “ நீ தென்மண்டல திமுக செயல் அமைப்பாளராக இரு!” என்று கலைஞர் சாபம் விடும் காட்சி அற்புதம்.அதைக் கேட்டு எத்தனை பாரத்தை நான் தாங்குவேன் என்று அழுது பிறகு அதை வீரமுடன் ஏற்கும் காட்சியில் அழகிரி சோபிக்கிறார்.
இந்த மாதிரிக் காட்சிகள் கலைஞரின் இயக்கத்தில் வழக்கமாக பார்க்கும் ஒன்று என்றாலும் ஒவ்வொரு முறையும் நம்புமளவிற்கு இருப்பது கலைஞரின் திரைக்கதை அமைக்கும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!.

திருமாவளவனின் ”லோ” பட்ஜெட் படமான “உண்ணாமல் உண்ணாவிரதம்” இரண்டு நாள் கூட ஓடாதது,முதலில் திருமாவளவனுக்குத்தான் மகிழ்சி அளித்திருக்கும்.

கதை என்னவோ வழக்கமான பங்காளிச் சண்டைக்கதைதான் அதை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏற்றிக் காட்டும் விதத்தில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.இதற்கு முன்னரே தமிழக நடிக இயக்குனர்களின் பாரம்பரியப் படி இலங்கைப் பிரச்சனைக் கதையில் இவரும் பலமுறை நடித்திருக்கிறார் என்றாலும் இந்த தடவை இவரது நடிப்பு எடுபடவில்லை.

தம்பி செல்வப் பெருந்தகை வீட்டிலுள்ள நகை நட்டுக்களை அபேஸ் செய்து விட்டு மாயாவதி பஸ்ஸில் ஏறிக்கொண்டு திருமாவளவனுக்கு டாட்டா காட்டி சிரிக்கும் காட்சியில் இருவருமே தங்களுடைய அதி அற்புத நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர்.திருமாவளவன் அழ,செல்வப் பெருந்தகைச் சிரிக்க,கேமரா சுழன்று இருவரையும் சுத்தி வருவது டைரக்டரின் திறமை வெளிப்படுத்துகிறது.

செல்வப் பெருந்தகை மாயாவதி பஸ் கம்பனியில் கிளீனர் வேலையில் சேருமாறு திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுக்கும் காட்சி செமை நக்கல்.பதிலுக்கு திருமாவளவன் பஸ்ஸைப் பஞ்சர் ஆக்குவேன் என்று ஆவேசமாக முள்ளை எடுத்துக் காண்பிக்கும் போது தியேட்டரே திகிலால் உறைகிறது.

ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கலைஞரிடம்,செல்வப் பெருந்தகை ஸ்கூலுக்கு வரமாட்டான் அவனுக்கு டி.ஸி கொடுத்து விடுங்கள் என திருமாவள்வன் கேட்கும் போது “வெயிட் அண்ட் ஸீ” என கலைஞர் புன்னகைக்கும் மர்மம் நமக்குப் புரிவதால் அவருடைய சிரிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

தயாரிப்பாளர் திருமாவளவனுக்கு தன்னுடைய தயாரிப்பு கடலூர் ஏரியாவைத் தவிர வேறங்கும் ஓடாமல் இருப்பது பெருங்கவலையாக இருக்கும் போலிருக்கிறது.அதனால் தெற்குப் பக்கமும் ஓடுவதற்காக சில சண்டைக் காட்சிகளை மதுரையில் எடுத்து இருக்கிறார்.ப்ஸ் எரிக்கிறவரைக்கும் பல்லுக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்த்து விட்டு “ஆச்சா! சரி ஓடுங்கப்பா” என்று எரித்தவர்களைக் கேட்டுக் கொண்டு “பஸ் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுப் பிடிப்பேன்” என்று வானத்தை நோக்கி சுடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.போலீஸ் கலைஞர்களைக் காமெடியனாக மட்டும் காட்டுவது கலைஞரின் பாணி என்றாலும்,கலைஞரிடம் சிஷ்யனாக இருந்தவர் என்று நிருபிக்கிறார் இயக்குனர் திருமாவளவன்.

க்ளைமாக்ஸ்தான் சப்பென்று போய்விட்டது.இலங்கை பிரச்சனை கட்டுரையை பேச்சுப் போட்டிக்காக படித்துக் கொண்டு வந்த திருமாவளவனை பேசக் கூடாது நீ பேசினால் அந்தச் சத்தத்தில் கூரை இடிந்து விடும், எனக்கு ஆபத்து என்கிறார் கலைஞர்.பேச முடியாததால் தொண்டைக் கட்டிப் போன திருமாவளவன் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.தம்பி ஓடிப்போக,ஸ்கூல் எல்லாம் கிண்டல் செய்யகிறது வேறு வழியில்லாமல் உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார்.மாணவர்கள் கிண்டலை நிறுத்தியவுடன் உண்ணாவிரதம் க்ளோஸ்.பத்து நாளைக்காவது ஓடும் என்று கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு படம் பார்க்க வந்தவர்கள் கதி பரிதாபம்.மம்தா பானர்ஜி நடித்த உண்ணாவிரதப் படம் போல 30 நாளைக்கு மேல் ஓடும் என எதிர்பார்த்தால் நீங்கள் இந்த ஊரில் இருப்பதற்கு இலயக்கில்லை என்று அர்த்தம்.

திரை முன்னோட்டம்

இராமதாஸ் அளிக்கும் “பத்துக்கு பத்து” குடும்பச்சித்திரத்தின் ஒரு காட்சி மறைமலை நகரில் படமாக்கப்பட்டது.கலைஞர்,இராமதாஸ் நடிக்கும் இப்படத்தில் காமெடிக்குப் பஞ்சமில்லை.மத்திய அரசின் ”பத்துக்குப் பத்து” வீட்டை சோனியா பெரியம்மா,மன்மோகன் சிங் மாமாவுடன் சேர்ந்து பங்காளிகளான கலைஞரும்,இராமதாஸும் கட்டுகிறார்கள்.இந்த வீட்டினால் அந்தத் தெருவே நாறுகிறது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கொண்டு போயிருக்கிறாராம் டைரக்டர்.

தெருவில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வசிப்பவர்களை, இலங்கையில் குப்பை போட்டதற்கு திட்டும் போது தங்களுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லாததைப் போல கலைஞரும்,இராமதாஸும் நிற்க்கும் காட்சி சூப்பர்.சில சமயங்களில் நல்லாயிருப்பார்களா இந்த வீட்டுக்காரர்கள்,நாசமாகப் போகட்டும்,கட்டையில போகட்டும் இந்த வீட்டில் உள்ள தங்களையே தாங்களே திட்டிக் கொள்ளும் ஸ்பிலிட்டிங் மல்டி பர்சனாலிட்டிக் காட்சிகளில் முதலிடம் தருவது கலைஞருக்கா இராமதாஸுக்கா என்று தமக்கு நிலைதடுமாறுகிறது,என்கிறார் நமது திரை நிருபர்.ஹாட்ஸ் ஹாஃப்.

தீபாவளிக்கு இரயில் பட்டாசு விடும் போதும்,மணலில் மல்டி ஸ்பெஸாலிட்டி ஆஸ்பத்திரி கட்டும் சீன்களிலும் வேடிக்கைப் பார்க்க தெருவே கூடும் போது, தான் வீட்டைச் சேர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள இராமதாஸ் முண்டியடித்துக் கொண்டு தலையைக் காட்டும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றனவாம்.தமிழன் என்றால் இந்த மத்திய அரசு வீட்டுக்காரர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது என்ற வசனத்தை இராமதாஸ்,கண்ணாடியின் முன் நின்று தனக்குத்தானே ஆவேசமாகப் பேசும் காட்சி நேற்று படமாக்கும் போது படப்பிடிப்புக் குழுவினரே துக்கம் தாங்காமல் அழுதார்களாம்.

மொத்தத்தில் வீட்டில் இருக்கும் இராமதாஸ் வெளியேறும் காட்சி இன்னும் படமாக்க வில்லை என்பதால் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மூன்று மாதம் ஆகலாம்.

இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி

காமெடிக்கலைஞர் கருணாநிதி தமிழக மக்களுக்கு எப்பவுமே தன்னால முடிஞ்ச வஞ்சனையில்லாம பல கூத்துக்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறார்.என்றாலும் இந்த மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல் அறிக்கை தமாஷ் நிறைய வித்தியாசமானது.கலைஞர் செய்கிற நகைச்சுவைகள் பொதுவாக மற்றவரைத் துன்புறித்தியே தீரும்.

ஒருவன் அருகே வாழைப்பழத்தோலை போட்டு விட்டு ,அதனால் அவன் வழுக்கி விழும்போது சிரிக்கிற தமாஷ் இரகங்கள்.அதாவது மற்றவன் துன்பத்தில் இன்பம் காண்கின்ற வகைத் தமாஷூக்கள்.ஆனால்,இந்த இடைத்தேர்தலுக்காக அவர் விட்ட அறிக்கைத் தமாஷ் இந்த வகையைச் சேர்ந்ததல்ல.அது ஒரு தமிழக மக்கள் துன்பம் இல்லாமல் இரசிக்கக் கூடிய நகைச்சுவை வகையறாக்களைச் சேர்ந்தது.

அதாவது,எம்ஜிஆர் இருந்த காலத்தில் தமிழா!.என்னை வெட்டிப் போட்டாலும் முட்டி போட்டுக் கெஞ்சுவேன் .கட்டிப் போட்டாலும் கட்டு மரமாவேன் என்று கதறிப் பினாத்திய இரகம்.
அதிலும் தேர்தலை நினைத்துக் கதறி அழும் கட்டத்தில் பினாத்தும் பினாத்தல்கள் ஏ ஒன் இரகம்.சிவாஜி அழுகையையும் அந்த அழுகைப் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாதே என்று அழுகையை மென்று விழுங்கி விட்டு சிரிப்பது போல நடிக்கும் காட்சிக்கு இணையானது ஏன் அதை விட மேலானது. தேர்தல் ஏன் வந்தது(ஏன் வந்துத் தொலைந்தது!) என்று அவர் தலையில் அடித்துக் கொண்டே, கொடுக்கும் விளக்கங்கள் திமுக தொண்டர்களை இப்போதே உதறவைக்கும்.

இந்த அறிக்கையில் அவர் திருப்பத்தூர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் காங்கிரஸிற்க்கு ஆதரவு தந்த விஷயத்தில் அதிகம் புலம்பியதால் இந்தக் கட்டுரை.மற்ற தமாஷ்களுக்கு உள்ளே நான் போகவில்லை.




திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.


ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

அடடா மதிமுகாவின் மேல் கலைஞருக்கு என்ன ஒரு கரிசனம்.அய்யய்யோ மதிமுகாவின் தொகுதியை ஜெயலலிதா அநியாயமாகப் பிடிங்கிக் கொள்கிறாரே என்று கலைஞர் கதறும் பாணியே தனி.

திருப்பத்தூர் தேர்தலின் போது என்ன நடந்தது.காலியாகும் உறுப்பினர் தொகுதிக்கு ஏற்கனவே போட்டியிட்ட கட்சியே போட்டியிட வேண்டுமாம் ,இந்தக் கொள்கையை எம்.ஜி.ஆர் வகுத்தாராம்.உண்மையில் இந்த மரபு கூட்டணிக்கட்சிகளிடையே எம்.ஜி.ஆருக்கு முன்பே ஒரு மரபாகவே இருந்தது.ஆனால் அப்போது அதிமுக.காங்கிரஸ் கூட்டணி இல்லாத காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த சமயத்தில் எதிர் கட்சியான காங்கிரஸிற்க்கு எம்.ஜி.ஆர் ஆதரவு தந்ததற்கான காரணம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு ,ஏற்கனவே கலைஞரின் மேல் கடுப்பாக இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்ரமணியம் சட்டசபைத் தேர்தலோடு திமுக -காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டது என்று பேச அந்த இடைத்தேர்தலிலும்,இன்றைய திருமங்கலம் இடைத்தேர்தலில் கலைஞர் தடுமாறுவதைப் போல அன்றும் தடுமாறினார்.

தேர்தலில் காங்கிரஸிற்க்கு ஆதரவு ஆனால் கலைஞர் பிரச்சாரத்திற்க்குப் போகவில்லை.ஆனால் காங்கிரஸிற்குத் தீடீர் ஆதரவு தந்த எம்.ஜி.ஆர் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்க்கு வேலை செய்யாமல் ஜனதாவிற்கு வேலை செய்து தங்களுக்கு மிகவும் பழக்கமான, கூட இருந்தே கழுத்தறுக்கும்  உள்ளடி வேலைகள் செய்தனர்.( பா.ம.க கவனிக்க ).அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட திரு.அருணகிரி வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தலைவர்களைக் கூடப் பார்க்காமல் முதலில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத்தான் ஆசி பெற்றார்.திமுக தலைவர்களைப் பார்க்கமாட்டேன் என்று அறிக்கையே விட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி பணால் ஆனது.எம்.ஜி.ஆரின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

எனவே திருப்பத்தூர் தேர்தலில்,எம்.ஜி.ஆர் காங்கிரஸை ஆதரித்ததன் காரணம் முழுக்க முழுக்க திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கத்தான்.


கலைஞரின் அறிக்கையை முழுமையாகப் படித்து சிரிக்க விரும்புகிறவர்களுக்கு.கீழே அவரது கட்டுரை.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.


இப்போது தேர்தல் எதற்கு?:



மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.


நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.


அதற்காக இப்படி `விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.



ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:



இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.


உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.


நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.



உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.


ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.



ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.



மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட `எஸ்மா', `டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;


அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.


அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!

Posted on Friday, October 3, 2008 by நல்லதந்தி



ரசியல் செய்வதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஜனங்களைக் கவர நிஜமாகவே அவர்களுக்கு நன்மை செய்து, அவர்களைக் கவர்வது மற்றொன்று வெறும் ஸ்டண்ட் அடித்து அவர்களைக் கவர்வது.

இதில் இரண்டாவது வகை அரசியல் செய்கிறார். நேரு பரம்பரையின் அடுத்த இளவரசர் ராகுல் காந்தி. இந்த ஸ்டைல் நேரு குடும்பத்தின் காப்பிரைட் ஸ்டைல் என்றாலும், நேரு,இந்திராவிற்க்குப் பின் வந்த ராஜீவ் காந்தி இந்த ஸ்டைலை ஜனங்களைக் கவர பயன் படுத்தி தோல்வியே கண்டார்.

தந்தையைப் போலவே தனயனும் தங்களது இந்த குடும்ப காப்பிரைட் ஸ்டைலைப் பயன் படுத்தினாலும்,தந்தையை விட மிக மட்டமான தோல்வியே இவருக்கு இது வரை மிஞ்சியிருக்கிறது.

பீகாரில் முயற்சி செய்தார் தோல்வி.பிறகு உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நேரத்தில் இதைப் பிரமாதமாகப் பயன் படுத்தினார்.அதில் படு தோல்வி!.போதாக் குறைக்கு மாயாவதி வேறு, ராகுல்காந்தி, தலித் மற்றும் ஏழைகளைத் தொட்ட கைகளின் அழுக்கு நீங்க அவர் ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிக்கிறார் என்று குண்டைத் தூக்கிப் போட்டு ராகுல் காந்தியின் மொத்த விளையாட்டுக்கும் ஆப்பு வைத்தார்.

அடுத்து கர்நாடகத் தேர்தலின் போதும் இதே ஸ்டண்ட் செய்தார் மக்கள் அவருக்குப் போட்டது பட்டை நாமம்.இப்போது இராஜஸ்தானில் தேர்தல் நெருங்குவதால் இந்த ஸ்டண்டைக் கையில எடுத்துள்ளார்.மக்கள் மீண்டும் பட்டை நாமம் போடுவது உறுதி என்று நம் எல்லோருக்கும் தெரியும்.அது நெத்தியில் மட்டும்தானா? அல்லது உடல் முழுக்கப் போட்டு டெல்லிக்கு அனுப்புவார்களா?. என்பதை கவனித்து இருந்துப் பார்ப்போம். ராகுல் காந்தியின் ராசி அப்படி!

வந்த செய்தி!

அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பாரன் மாவட்டம் அம்ரோலி கிராமத்துக்கு சென்றார். அந்த கிராமம் மலைப்பகுதியில் இருக்கிறது. அங்கு ஏழை மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்குள்ள ஏரியில், கிராம புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, கிராம மக்கள், மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். உடனே ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பணியை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளையும் கேட்டார்.

பின்னர் அவர், ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளி போல சிறிது நேரம் மண் சுமந்தார். அவருடன் சேர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் 40 பேரும் மண் சுமந்தார்கள். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ஏழை ஒருவரின் வீட்டுக்கு, இரவில் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டார். கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இரவில் கயிற்று கட்டிலில் தூங்கினார்.

பின்னர் அவர் காலையில் எழுந்து தன்னுடைய காரில் ஏறி, கோடா நகருக்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நல்லதந்திக்கு உதவியது தினத்தந்தி!

"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!

Posted on Monday, September 29, 2008 by நல்லதந்தி




தெள கீர்த்தனாம்பரத்திலே ,இப்போ ’மும்பை’யன்னு அழைக்கப் படற ஷேத்ரம் அப்போ ’பாம்பே’ன்னு அழைக்கப்பட்டு இருந்த காலம்.ஒரு 100 வருடங்களுக்கு முன்னே கம்ப்யூட்டரன்னு சொல்லப் படற வஸ்து அப்போ ’பாம்பே’லதான் கண்டு பிடிக்கப் பட்டதுன்னு நோக்குத்தெரியுமோ?.அதைக் கண்டுபிடிக்கிறப்போ கடைசியாய் கூட மாட ஒத்தாசை செஞ்சது நம்ப கொமாருன்னாவது தெரியுமோ?. கொமாரு யாருன்னு கேக்கறேளா?.இப்பச் சொல்றேன்!.

நம்ம கொமாருக்கு பொறக்கறச்சே வெச்ச பேரு வேறயாக்கும்.அதத்தான் இப்ப நா சொல்லப் போறேன்.அந்த அம்பி பொறக்கறச்சே பெரும் பிரளயம் வந்தாப்புல ஒரு பெருத்த ஷப்தம் கேட்டது.அதக் கேட்ட அவரோட சொந்தக்காரா ...இது சிவனுடைய லீலைதான்,இதெல்லாம் சிவ கணங்கள் எழுப்புற சப்தமான்னோ!. இவ்ன் பொறந்த நேரத்தில மணியொலிங்க கேட்டதால் மணி குமாருன்னு பேர வச்சிப்பிடுங்க்கோ!ன்னுட்டாள்.

இதைக் கேட்ட உடையவா அந்த அம்பிக்கு அந்தப் பேரயே வச்சிட்டா!.செத்த நேரம் கழிச்சி வெளியே வந்து எட்டிப் பாக்கறச்சேதான் தெரிஞ்சது ஒரு பிரம்மஹத்தி TVS ஃபிஃப்டிக்கார படுவா ஆயிலும் போடாம சைலன்சர கழட்டி வீட்டில வெச்சிண்டுட்டு தலதெறிக்க ஓட்டிண்டு போறது!.ஆனா அப்பவே நம்ப அம்பி ராசி சனி ராசின்னு தெரிஞ்சிடுத்து.

கட்டேலே போற அந்த கம்மினாட்டி கடங்காரனோட வண்டியோட டயர் பஞ்சர் ஆகி டமாருன்னு வெடிச்சிடுத்து.அவன் கீழே வுழுந்து கடலைப் பொறி பொறிக்கினான். அப்போ அம்பியோட ராசியப் பாத்து பயந்து.. க்‌ஷமிக்கணும்.. வியந்து அம்பிக்கு வெச்சச் செல்லப் பேருதான் டமாரு கொமாருன்னு.

இப்படிப்பட்ட ராசியான பையனான டமாரு கொமாரு வளர்ந்து வரச்சே!.............................

இந்த இடத்தில தமிழ் படடைரக்க்டருங்க இறந்த காலத்தைக் குறிக்க ஹீரோவோ அல்லது ஹீரோயின் கண்ணுக்கு மின்னாடி கருப்புக்கலர் ரிப்பனை சுத்திக்காட்டு வாங்க.இல்லேன்னா வருங்காலமா இருக்கறச்சே மாட்டு வண்டியோட சலங்கைச் சத்தத்தோட மாட்டோட கால்ல இருந்து அப்படியே மெல்லப் போயி வண்டியோட சக்கரத்தில கேமராவ நிறுத்தி டில்ட் அப் பண்ணுவாங்க.மாட்டு வண்டி கிடைக்காட்டி காரோட சக்கரம்,அதுவுமில்லேன்னா தையல் மிஷினோட வீல் இதில எதினாச்சிம் ஒண்ண காட்டினாப் போதும் அறிவாளித் தமிழ் ஜனங்க புரிஞ்சிக்கு வாங்க....

இப்படியே காலச்சக்க்ரத்தில ஏறி நீங்களும் நசுங்கிடாம வந்துருங்க.

ஸ்ஸப்பா!.இதுக்கு மேலயும் பிராமணாத்து பாஷை தேவையா?.முயற்ச்சி பண்றேன்!.

நம்ப ஹீரோ ஹீரோயிசப்படி ஏழையா இருக்கணும்ங்கறதாலே..இப்போ ஹீரோ டீக்கடையில டெலிவரி அம்பியா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காரு!. அப்படி இருக்கறச்சே,கடைக்கு எதித்தாப்புல கம்ப்ப்யூடர் கண்டு பிடிக்கப் போற கம்பனி அவுங்க கச்சேரி நடத்த ஒரு குடிசை போட்டாங்க.அதில வேலை செய்யுற வேலைக்காரவா கூட அம்பிக்கு நல்ல பரிச்சியமாயிடுத்து. எந்த நேரமும் அம்பியை அழைச்சிண்டும் ,கூப்பிட்டுண்டும் டீ கொண்டு வரச்சொல்லிண்டும் இருப்பா!

இப்படி இருக்கையில ஒரு நாள் ஒரு பெரிய உத்யோகஸ்த்தர் நம்ப அம்பியைப் பாத்து ,”டே ! அம்பி நேக்கு ஒரு டீயும் ஒரு வடையும் கொண்டு வாடா .”ன்னு சொல்லவே பதறியடிச்சுண்டு ,ஒரு டீயையும் முந்தினநாள் போட்ட வடையும் தூக்கிண்டு கம்ப்யூட்டர் கம்பனிக்கு அம்பி ஓடினான்.


அந்த பெரிய உத்யோகஸ்தர் சரியான பசி மயக்கத்தில இருந்ததால ஒரு கையில் செங்கல் பொடி கலரில் இருந்த டீயையும் மறு கையில வடையையும் எடுத்துக் கொண்டு பறக்கா வெட்டித்தனமா சாப்பிடத் தொடங்கினார்.

அந்த நேரம் பாத்தா அந்தப் பாழப்போனவரும் இவருக்கு மேலதிகாரியுமான இன்னொரு பறக்கா வெட்டி “ஸ்வாமி உங்க டேபிள் மேலிருக்கிற வால்வைச் சீக்கிரம் எடுத்துண்டு வாரும்”மென்னு அதி அவசரமாய் கூப்பிட்டுத்தொலைக்க முதல் பறக்காவெட்டி ஒரு கையில் டீயும் மறு கையில் வடையும்,இருந்த காரணத்தால்,வாயில் வேறு பாதி வடையை முழுங்கிக் கொண்டிருந்தாலும், பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததால் ,கமறும் கண்ணீர் நிரம்பிய கண்ணில் நம்ப அம்பியைப் பார்த்து அந்த வால்வை எடுத்து அங்கே கொடுக்குமாறு ஜாடை செஞ்சாரு.

உலகத்தில் பாஸ்பரஸுக்கு அடுத்து தானாகவே தீப்பற்றக் கூடிய கழக புத்திக்காரனாகிய நம்ப அம்பி,அந்த மேலதிகாரியின் டேபிள் மேல் தனியாகவிருந்த வால்வை தேர்ச்சி பெற்ற நாய் வாயில் கவ்வறப்புல கையில எடுத்துக் கொண்டு சடுதியில் அந்த பெரிய ஆபீஸரண்டை கொண்டு கொடுத்தான்.

அதை கம்ப்யூட்டர் முற்றத்தில் ஒரு ஒரமாய் சொருவிய அவர்,ராகு காலம் முடிஞ்சவுடனே சுவிடசைப் போட்டார்.அடடா...என்னவொரு அற்புதம்,அந்த மூவாயிரம் அடி விஸ்தீரணமாய் இருந்த அந்த கம்ப்யூட்டர் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சிடுத்து!.நம்ப அம்பியோட கை பட்டதாலத்தான் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நம்பிய அந்த எமகண்டத்தில பொறந்த அபீஸர்,கொமாருக்கு ”வால்வு தந்த வால் பையன்” அப்படிங்கிற பட்டத்தையும் கொடுத்தாரு!.

அவரு தமாஷாக் குடுத்தப் பட்டத்தை சீரியஸா நினைச்சு அம்பிக்கு பல நாள் தூக்கம் போனது தனிக்கதை!.

மீண்டும் கொஞ்சம் மின்ன போயிரலாமா!.சொல்லும் காட்சி மாதிரி இப்போ செல்லும் காட்சி!

கொஞ்சம் நாளாகி முடியும் போது அதாவது நம்ப அம்பிக்கு வாலிப வயசு .அப்போ தானும் புதுசா எதாவது கண்டு பிடிக்கணூங்கற அதீத வெறி அம்பிக்கு வந்துடுத்து.தன்னை ரொம்பப் புத்திசாலின்னு அந்த டமாரு தெரியாத்தனமா நினைச்சிக் கிட்டாரு! (வாலிபரு ஆய்ட்டதால இந்த மரியாதை.இல்லேன்னா நம்ப அம்பிக்கு எதுக்கு மரியாதை)

அந்த ஆர்வத்தில பாம்பே சரோஜாதேவி மார்கெட்டுக்குப் போயி,எதாவது உருப்படியான புஸ்தகங்கள் இருக்கான்னு பாக்கும் போது அங்க பலான புஸ்தகங்கள் மட்டும் இருக்கவே(அதாகப்பட்டது கொக்கேக சாஸ்திர புஸ்தகங்ககள்)அதில நாலஞ்சி அள்ளிகிட்டு வந்து வீட்டு மேக்கூறையில பதிக்கி வெச்சிக் கிட்டது நமக்கு வேண்டப் படாத விஷயம்.

அப்புறம் வானொலியில் நாம பேசறது எப்படி ஒரு புஸ்தகம் கடைவீதியில வந்து இருக்கிறதா யாரோ சொல்ல அதையும் தேடி அலைஞ்சாரு.அப்புறம் ”நமக்கு நாமே” அப்படிங்கிற திட்டத்தின் பிரகாரம்,ரேடியோவுக்கு சிக்னலோ என்னோமோ ன்னு சொல்லுவாங்களே, அதுக்கு ஒரு வலைமாதிரி ஒண்ணு வீட்டுக்கு வீடு கட்டி வெச்சிண்டு இருப்பாங்க,ஆண்டெனாவோ அண்டோனியோ மொய்னோவோ.அதெ செத்த சுரண்டிணா கொரு கொருண்ணு ஒரு ஷப்தம் வரும் அத தானே பேசற மாதிரி நினச்சி பேசிகிட்டே ஒரு ரெண்டு இழுப்பு இழுப்பாரு,அல்லோன்னு சொல்லறச்சே அல்லு க்கு ஒரு இழுப்பு லோவுக்கு ஒரு இழுப்பு உடனே ரேடியோ பொட்டியில அல்லுக்கு ஒரு டர்ரும் லோவுக்கு இன்னொரு டர்ரும்,மொத்தத்தில ட்ர்ர்டர்ர்ர்ன்னு ஒரு ஷப்தம் வரும்.உடனே தாம் பேசருது ஊருக்கே தெரியுதுன்னு நினைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாரு நம்ப டமாரு கொமாரு!.

அந்த ஷப்தமே தன்னோட வீட்டில இருக்கிற ரேடியோவில மட்டும்தான் கேக்குமின்னு தெரியாத அப்பாவி கொமாரு,அந்த வலையே இரெண்டு இழுப்பு இழுத்து ரேடியோவில் ஷப்தம் கேட்ட தன்னோட கண்டு பிடிப்பை மெச்சி தனக்கே ”வலை கொண்டான்”ன்னு ஒரு கருமாந்திரப் பட்டத்தையும் குடுத்துக்கிட்டாரு,நம்ப அம்பி!

இப்படியாகத்தானே நம்ப அம்பி டமாரு கொமாருவுக்கு வலைகொண்டான் அப்படீங்கிற பேரு வந்திச்சி!.பேரு வந்திச்சி,புகழு வந்திச்சா?.(பின்னாடி வரப்போற சூப்பர்ஸ்டாருன்னு சொல்லப் படப்போற அம்பி ரஜினி நடிச்ச 16 வயதினிலே!ங்கிற படத்தில வர்ற சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளோங்க்கிற ஸ்லோகம் மாதிரி சொல்லிப்பாருங்க!) ஹிஹிஹிஹி

இது 100 வருடத்திற்க்கு முந்தின கதை என்பதை நினைவில் கொள்ளவும்!


பின்குறிப்பு: இது எந்த நபரையும்,குறிப்பிடும் பதிவல்ல!.அப்படி யாராவது நினைத்துக் கொண்டால், வட அமெரிக்காவில் உள்ள பகுத்தறிவு புராணீகரின் மஞ்சள் துண்டை இரவல் வாங்கிப் போட்டுத் தாண்டத் தாயார்!. :)

அஞ்சரைக்குள்ள வண்டி!

Posted on Thursday, September 25, 2008 by நல்லதந்தி

அஞ்சரைக்குள்ள வண்டி!

ஆறு மணிக்கும் கவலைப் படாமல் நான்,
ஆறரை மணிக்குத்தானே படம்!.



இந்த கவிதையை நான் நட்டுக் கொண்டு நடு இரவில் எழுதியது.
இதனுடைய உரிமை,காப்பிரைட் என்னிடம் மட்டும் உள்ளது.காப்பியடித்து இணையத்தில் புகழ் பெற நினைப்பவர்கள்,காப்பிரைட் சட்டத்தின் படி தண்டணைக்குள்ளாவார்கள்.

இப்படிக்கு

நல்லதந்தி!.
 இணையத்தில் மக்களால் தினம் ஒன்றரை லட்சம் உதை வாங்குபவன்!.

"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!

Posted on Thursday, September 18, 2008 by நல்லதந்தி



டாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.

ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.

மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

விலைப்பட்டியல்:

180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)

தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)

ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)

கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)


விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.


இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.

கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)

." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?

கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.

மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.

மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.

எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.

மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.

கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.

பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.

அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"


பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)

இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!

மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)

இதா இவிட வரு!

Posted on Saturday, September 6, 2008 by நல்லதந்தி







தாழ நோக்குக!


^^
^
^^^
^
^
^
^
^^^^^^^
^^^
^^^^
^^
^^^
^^^^
^^^^^^
^
^
^^^
^^
^^
^^ பிளீச்சிங் பெளடருக்கு வேண்டியாணு ஈ போட்டோ ஞான் இவிட காணிச்சது!
^^




இவிட வருன்னு ஞான் விளிச்சது கண்டு இவிட வந்ந(ஜொள்ளு விட்டுக் கொண்டு!) அத்தர சோதரன்மாருக்கும்.எண்ட வல்லிய நன்னிகளானு!.

நாங்களும் இந்த மாதிரி செய்வமில்ல!!

பச்சப் புள்ளைங்கப் படிக்கக் கூடாத ஜோக்குகள்!

Posted on Tuesday, August 26, 2008 by நல்லதந்தி






இரண்டு கோலிவுட் பையன்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உன் அப்பாவைக் காட்டிலும் என் அப்பா உசத்தி!"

"இல்லை"

"உன் அம்மாவை விட என் அம்மா உசத்தி."

மற்றவன் தயங்கினான்:


"இருக்கலாம்......ஏன்னா என் அப்பா கூட அதேதான் சொல்கிறார்."








ஜேம்ஸ் புதிதாய் ஒரு அலுவலகம் ஆரம்பித்தான்.மூன்று அழகான இளம் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.

வந்து பார்த்த ஒரு நண்பன்,"மூன்று பெண்களா!. எப்படி வேலை நடக்கும்?". என்று ஆச்சரியப் பட்டான்.

"ஏன், என்ன கஷ்டம்?. இரண்டு பேருக்கு லீவு கொடுத்து அனுப்பிவிடுவேன்"










அடுத்த வீட்டில் இருந்த பெண் நல்ல அழகி.லில்லியின் கணவன் ஏதாவது ஒரு சாக்கில் அங்கே போவான்.திரும்பி வர ரொம்ப நேரமாகும்.

ஒரு முறை அங்கே சென்றவன் லேசில் திரும்பவில்லை.லில்லி அங்கே போய்க் கதவைத் தட்டினாள்."ஜான்! எத்தனை நேரம் நீ வர!"

உள்ளே இருந்து பெண்ணின் பதில் வந்தது. "இதோ பார்,இப்படி அடிக்கடி குறுக்கிட்டிருந்தேயானால் இன்னும் நேரமாகும்".









அது ஒரு தினுசான இடம்.

அவனருகே ஓர் அழகி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சினாள்.

"உன் வயசு என்ன?"

"பதிமூன்று," என்றாள்.

"ஆ!" என்று துள்ளியெழுந்தான் அவன்."மடியை விட்டு கீழே இறங்கு!"

"சே!... மூட நம்பிக்கை!" என்று அவள் சிணுங்கினாள்.









மேனேஜரின் மேஜை மீதிருந்த டம்ளரைக் கைத் தவறுதலாய்த் தள்ளிவிட்டாள் அந்த அழகிய ஸ்டெனோ.

கண்ணில் நீர் தளும்ப, " இன்று காலையில் இருந்து நான் எது செய்தாலும் தப்பாகவே போகிறது," என்றாள்.

மேனேஜர் ஆர்வத்துடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"அப்படியா! ராத்திரிக்கு நாம் சினிமாவுக்குப் போகலாமா?"







லிஸ்ஸி மரணப் படுக்கையில் இருந்தாள்.கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு,"என்னை மன்னியுங்கள்.உங்களுக்கு நான் பல முறை துரோகம் செய்திருக்கிறேன்.எனக்கு மன்னிப்பே கிடையாது," என்று விம்மினாள்.




"அலட்டிக்காதே லிஸ்ஸி,உனக்கு விஷம் வைத்தது நான் தான் " என்றான் அவன்.





அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!

Posted on Wednesday, August 20, 2008 by நல்லதந்தி


அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!


ஒவ்வொரு வரியாக பத்தி பிரித்துப் எழுதியிருப்பதால் கவிதை என்றே கண்டுணர்க!......


அவர் கவிதை எழுதி சம்பந்தப் பட்டவர்களுக்கு துன்பம் கொடுக்கிறாரோ இல்லையோ,அந்த கவிதையை பிரசுரிக்கும் பத்திரிக்கைகளின் அச்சகங்களில் அச்சு கோர்ப்பவரில் இருந்து,வாங்கிப் படிப்பவர்கள்,அனைவருக்கும் ஜன்னி,பேதி வருவது சர்வ நிச்சயம்!.


இந்த கவிதையில் அவர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கட்டி கலைஞர் தொலைக்காட்சியைப் பார்கின்ற பரவசத்தையும் அளிக்கிறார்!.


அய்யர்களைத் திட்டுவது மாதிரி இருந்தாலும் திட்டு வாங்குபவர்கள் மாறன் மகன்கள் என்பது போலத் தெரிகிறது.அவர்கள் பிராமணர்களா?(தாய் வழியில்).அதனால்தான், தாசில்தார் கலைஞர், அவர்களுக்கு புது சாதிச் சான்றிதழ்(வழக்கம் போல் பிடிக்காத மற்றவர்களுக்கு கொடுப்பது போல) கொடுக்கிறாரா தெரியவில்லை!


கவிதைக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்கள் தயவு கூர்ந்து கீழ் கண்ட முகவரிக்கு ஒரு வரி எழுதிப் போட்டு விடவும்!.


திரு.அச்சுக் கோர்ப்பவர்

முரசொலி அச்சகம்

கோடம்பாக்கம்

சென்னை.


பி.கு: கவிஞர் கனிமொழியின் கவிதைகளைக் கண்டு(!) பிடித்து படித்தவர்கள்

படிக்கும் போதே கண்களில் சொர்கம் தெரிவதாகத் பரவசத்துடன் கூறியதாக, கேள்வி!.


பின்னே என்னத்துக்காக கவிதையைப் போட்டாய்? என்பவர்களுக்கு... யான் பெற்ற இ(து)ன்பம்! பெறுக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மைதான்! :)


உஷார். .....இனி கவிதை அரங்கேறும் நேரம்!...


அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;


அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!
(ஸ்ஸ்.....பெரியவங்க பேசும் போது சிரிக்கக்கூடாது!)

அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....


அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?
(ரொம்ப நொந்துட்டார் போலிருக்கே...)

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும் "ஆத்துக்காராள்'' காட்டிய
(இது முரசொலி மாறனின் மனைவிக்கு!)

அன்பும் நன்றியும் கூட ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.


ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி,


அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; "அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;
(இது முரசொலி மாறனின் மகன்களுக்கு)

அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப்பார்த்தேன்


அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!


அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்


படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து


படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
(அய்யய்யோ அவ்வளவு சிரமம் குடுத்திட்டீங்களா? பிரதர்ஸ்!)

உணர்ந்து கொண்டேன்; "அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!
(அடடடா!. இப்பதான் அவர்கள்(அம்மா வழியில்) அய்யர்கள்ன்னு கண்டுபிடித்தாராம்)

உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-


கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்


நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
(யோவ்...வாங்கையா!...நாமும் சிரிச்சிடுவோம், இல்லையன்னா அடுத்த கவிதை ரெடியாயிரும்!........)

மன்னிப்பு கேட்டவிவகாரம்-ரஜினி உண்மையாக பேசியது என்ன?

Posted on Saturday, August 2, 2008 by நல்லதந்தி


மன்னிப்புக் கேட்ட விவகாரத்தில் உண்மையாக ரஜினிகாந்த் பேசியது என்ன? என்பதைப் படிக்க கீழே போகவும்.

^

^
^
^
^
^
^
^
^

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

ரஜினி பேசியது!


'ತಪ್ಪಾಗಿರುವುದು ಸಹಜ, ಮುಂದೆ ತಪ್ಪಾಗದಂತೆ ನೋಡಿಕೊಳ್ಳುತ್ತೇನೆ. ಮುಂದೆ ತಪ್ಪು ಮಾಡುವುದಿಲ್ಲ. ಕನ್ನಡಿಗರ ಬಗ್ಗೆ ನನಗೆ ಅಪಾರ ಗೌರವ ಇದೆ. ದಯವಿಟ್ಟು ಕುಸೇಲನ್ ಬಿಡುಗಡೆಗೆ ಅವಕಾಶ ಮಾಡಿಕೊಡಬೇಕು'' ಎಂದು ನಟ ರಜನಿಕಾಂತ್ ಪರೋಕ್ಷವಾಗಿ ಟಿವಿ 9 ಸುದ್ದಿ ವಾಹಿನಿ ಮೂಲಕ ಕ್ಷಮೆ ಕೋರಿದ್ದಾರೆ. ಹೈದರಾಬಾದ್‌ನಲ್ಲಿ ಮಾತನಾಡುತ್ತಿದ್ದ ಅವರು, 'ಕನ್ನಡದ ಮಕ್ಕಳಿಂದ ದೊಡ್ಡ ಪಾಠ ಕಲಿತಿದ್ದೇನೆ. ನಾನು ಒದೆಯಿರಿ ಎಂದು ಹೇಳಿದ್ದು ಪುಂಡು ಪೋಕರಿಗಳಿಗೆ, ಸಾರ್ವಜನಿಕ ಆಸ್ತಿ ಪಾಸ್ತಿಯನ್ನು ನಾಶ ಮಾಡುವವರಿಗೆ ಹೊರತು ಕನ್ನಡ ಹೋರಾಟಗಾರರನ್ನು ಉದ್ದೇಶಿಸಿ ಅಲ್ಲ. ಒಳ್ಳೆಯವರಿಗೆ ತಲೆಬಾಗುತ್ತೇನೆ. ಪುಂಡುಪೋಕರಿಗಳಿಗೆ ಯಾಕೆ ತಲೆಬಾಗಬೇಕು ಎಂದು ಪ್ರಶ್ನಿಸಿದರು.ನಾನು ರಾಜಕಾರಣಿ ಖಂಡಿತ ಅಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಮಾತಾಡುವಾಗ ತಪ್ಪಾಗಿದೆ. ಮುಂದೆ ಮಾತಾಡುವಾಗ ವಿಚಾರಮಾಡಿ ಮಾತನಾಡುತ್ತೇನೆ. ಕನ್ನಡ ಹೋರಾಟಗಾರರಿಗೆ ಏನು ಸಹಾಯ ಬೇಕೋ ಎಲ್ಲ ಮಾಡುತ್ತೇನೆ. ಇಂದು ನಾನು ಸಂತೋಷವಾಗಿದ್ದೇನೆ. ಹಣ, ಹೆಸರು ಎಲ್ಲ ದೊರೆತಿದೆ ಆದರೆ ನಾನು ಕಂಡಕ್ಟರ್ ಆಗಿದ್ದೆ ಎಂಬುದನ್ನು ಇನ್ನೂ ಮರೆತಿಲ್ಲ. ಸುಮಾರು ಜನ ನನ್ನನ್ನು ಅಹಂಕಾರಿ ಎನ್ನುತ್ತಾರೆ. ನಾನು ದುರಂಹಂಕಾರಿ ಖಂಡಿತ ಅಲ್ಲ ಎಂದು ನುಡಿದರು.ಅವರು ತಮ್ಮ ಮಾತಿನ ಮಧ್ಯೆ ಕನ್ನಡ ರಕ್ಷಣಾ ವೇದಿಕೆಯ ರಾಜ್ಯಾಧ್ಯಕ್ಷ ಟಿ.ಎ.ನಾರಾಯನಗೌಡ, ಪ್ರವೀಣ್ ಕುಮಾರ್ ಶೆಟ್ಟಿ, ವಾಟಾಳ್ ನಾಗರಾಜ್ ಹೆಸರುಗಳನ್ನು ಪ್ರಸ್ತಾಪಿಸಿ ಕನ್ನಡ ಹೋರಾಟಗಾರರೆಲ್ಲರು ಚಿತ್ರ ಬಿಡುಗಡೆಗೆ ಅವಕಾಶ ಮಾಡಿಕೊಡಬೇಕು ಎಂದು ವಿನಂತಿಸಿಕೊಂಡರು.


அடடா! புரியவில்லையா?.தமிழில் படிக்க இன்னும் கீழே போகவும்!

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
''தப்பாகிருவுது ஸஹஜ, முந்தெ தப்பாகதந்தெ நோடிகொள்ளுத்தேனெ. முந்தெ தப்பு மாடுவுதில்ல. கன்னடிகர பக்கெ நனகெ அபார கௌரவ இதெ. தயவிட்டு குஸேலன் பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு'' எந்து நட ரஜனிகாந்த் பரோக்ஷவாகி டிவி 9 ஸுத்தி வாஹினி மூலக க்ஷமெ கோரித்தாரெ.
ஹைதராபாத்னல்லி மாதனாடுத்தித்த அவரு, 'கன்னடத மக்களிந்த தொட்ட பாட கலிதித்தேனெ. நானு ஒதெயிரி எந்து ஹேளித்து புண்டு போகரிகளிகெ, ஸார்வஜனிக ஆஸ்தி பாஸ்தியன்னு நாஷ மாடுவவரிகெ ஹொரது கன்னட ஹோராடகாரரன்னு உத்தேஷிஸி அல்ல. ஒள்ளெயவரிகெ தலெபாகுத்தேனெ. புண்டுபோகரிகளிகெ யாகெ தலெபாகபேகு எந்து ப்ரஷ்னிஸிதரு.
நானு ராஜகாரணி கண்டித அல்ல. ஹீகாகி மாதாடுவாக தப்பாகிதெ. முந்தெ மாதாடுவாக விசாரமாடி மாதனாடுத்தேனெ. கன்னட ஹோராடகாரரிகெ ஏனு ஸஹாய பேகோ எல்ல மாடுத்தேனெ. இந்து நானு ஸந்தோஷவாகித்தேனெ. ஹண, ஹெஸரு எல்ல தொரெதிதெ ஆதரெ நானு கண்டக்டர் ஆகித்தெ எம்புதன்னு இன்னூ மரெதில்ல. ஸுமாரு ஜன நன்னன்னு அஹங்காரி என்னுத்தாரெ. நானு துரம்ஹங்காரி கண்டித அல்ல எந்து நுடிதரு.
அவரு தம்ம மாதின மத்யெ கன்னட ரக்ஷணா வேதிகெய ராஜ்யாத்யக்ஷ டி.எ.னாராயனகௌட, ப்ரவீண் குமார் ஷெட்டி, வாடாள் நாகராஜ் ஹெஸருகளன்னு ப்ரஸ்தாபிஸி கன்னட ஹோராடகாரரெல்லரு சித்ர பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு எந்து வினந்திஸிகொண்டரு.


இது எப்படி இருக்கு!
நன்றி:thatskannada

தசாவதாரம் இரண்டு -- கமலின் மேக்கப் டெஸ்ட்!

Posted on Monday, July 28, 2008 by நல்லதந்தி

கமல் ரசிகர்கள் மன்னிக்கவும்!






தசாவதாரத்திற்கு மேக்கப் டெஸ்ட் செய்யவே சில கோடிகள் செலவு ஆனதாம். எனவே கமலுக்கு அடுத்தப் படத்திற்கான மேக்கப் செலவைக் குறைக்கும் வண்ணம் ,மேக்கப் டெஸ்ட் செய்யப் பட்டுள்ளது. கமல் இதை தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம்!.இரண்டு தசாவதாரம் எடுக்கும் அளவிற்கு மட்டுமே டெஸ்ட் செய்யப் பட்டுள்ளது.தயாரிப்பாளர்கள் சற்று,நிம்மதியாக,ஆசுவாச படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.













































































































மீனவர் பிரச்சனை- - -நொடியில் தீர்வு கண்ட தமிழகமுதல்வர் கலைஞர்!

Posted on Friday, July 18, 2008 by நல்லதந்தி

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கப்பற்படையினரால் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.இதனால் தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினார்கள்.விஜயகாந்தும் கலந்து கொண்டு தமிழக அரசின் கையலாகாதனத்தை சாடினார்.இதனால் அதிருப்தி அடைந்த தமிழக முதல்வர் மீனவர்களை அழைத்து வரும் 19ம் தேதி மீனவர் பிரச்சனையை தீர்த்துவைக்கப் போவதாக உறுதி கூறி பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்தார்!. அவர் எடுத்த உடனடி நடவடிக்கை பின் வருமாறு!.


தமிழக மீனவர்கள் பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்கு" கொண்டு வர, தி.மு.க., சார்பில், தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கண்மூடித்தனமாக கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாக தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்களுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்க்கு" முதல்வர் கருணாநிதி பல முறை எடுத்துச் சென்றுள்ளார்.அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் தலைமையிலான குழு கடந்தாண்டு இலங்கை துணைத் தூதரை சந்தித்து இச்செயல்களை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்திய அரசு உடனே இலங்கை தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டிப்பான முறையில் குறிப்பிட்டு, கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய கடற்படையும் கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து பன்னாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உடைமை சேதங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். "சார்க்' மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும் போது இந்தியாவின் கவலையை இலங்கை அதிபரிடம் தெரிவித்து இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் தி.மு.க., சார்பில் வரும் 19ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் கடலோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்ட தலைமையிடங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்படுகிறது.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வெளிவராத செய்திகள்: -

பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கலைஞரை,நிருபர்கள் விஜயகாந்தின் ஆவேசப்பேச்சைப்பற்றி,கேட்டபோது,காந்தி,இராஜாஜி போன்ற தலைவர்களுடன் அரசியல் நடத்திய நான் இப்போது இம்மாதிரியான விலாசம் தெரியாதவர்களோடு அரசியல் நடத்த நேரிட்டதே என்றென்னும் போது நெஞ்சமே வெடித்து விடும் போல் உள்ளது என்றார்.காந்தி,இராஜாஜி போன்றவர்களோடு நீங்கள் அரசியல் நடத்திய போது அவர்களும் இதே போல வருத்தப்பட்டார்களா?.என்று விபரம் புரியாத ஒரு நிருபர் கேட்டபோது ஆவேசம் அடைந்த கலைஞர், நீ யாருன்னு எனக்குத்தெரியும் வர்ரியா!.இராமேஸ்வரத்திலிருந்து "போட்"ல இரண்டு பேரும் மீன் பிடிக்க சிலோன் வரைக்கும் போகலாமா? என்றார்.அருகில் இருந்த அமைச்சர் வீராசாமி அந்த நிருபரை அன்போடு கழுத்தில் மன்னிக்க தோளில் கை போட்டு அறையை விட்டு அழைத்துச் சென்றார்.

தான் மீனவர்களுக்காக இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய கலைஞர்,தான் தற்போது தமிழகமுதல்வராக ஆனபிறகு மட்டும் இருநூறு கடிதம் எழுதியாக விபரம் தந்தார்.இப்படி மீனவர்களுக்காக, கூட்ட்ணிக்கட்சி பிரதமர் என்றும் பாராமல் கடிதம் எழுதி தான் பிரதமரைத் துன்புறுத்தியதை சுட்டிக்காட்டினார்.சென்ற முறை தான் கடிதம் எழுதிய போது இலாகா அமைச்சராக இருந்த தாயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி,பிரதமரிடம் கடிதத்தை 10 நாட்கள் தாமதமாகத்தர தபால் ஊழியர்களை மிரட்டிய செய்தி, தனக்கு, அழகிரிக்கும் தயாநிதி மாறனுக்கும் பிரச்சனை எற்பட்ட பிறகுதான் தெரிந்ததென்றும்,அதனால் இம்முறை தாமதத்தை தவிர்க்க கடிதம் இ-மெயில் மூலமாகவே அனுப்பப்படும் என்றார்.மேலும் பிரதமர் இ-மெயிலைத் திறந்து பார்க்காவிட்டால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க அமைச்சர் வீராசாமி மடிக்கணினி எடுத்துக் கொண்டு இப்போதே டெல்லி விரைவார் என்றும் அவர் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை காட்டிவிட்டுத்தான் சென்னை திரும்புவார்.என்றார்.

நீங்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு,தொண்டனை மட்டும் போர்களத்திற்க்கு அனுப்பிவிட்டு கோடைவாசஸ்தலத்தில் உல்லாசமாக இருக்கும் தலைமை ,அண்ணா வழியில் வந்த எனக்குத் தெரியாது,அண்ணா எங்களை அப்படி வளர்க்க வில்லை!.என்றார்.

சமீபத்தில் கடலூரில் மகளிர் மாநாடு அணிவகுப்பை ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக பார்வையிட்டு பரவசத்துடன்,மக்களுக்காக உழைத்ததை ஆற்க்காட்டாரே பாரட்டியுள்ளார்.தமிழர்களுக்காக பாடுபடும் பத்திரிக்கைகளும் பாரட்டியுள்ளன.ஐந்து மணிநேரம் உழைத்த எனக்கு ஒன்பது மணிநேரம் உழைக்கத்தெரியாதா? என்றார்.

அடுத்த முறை இலங்கை கப்பற்படையினர் தமிழகமீனவர்களைத் தாக்கினால் மீண்டும் பிரதமருக்கு அன்றைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து ஆவேசமாகவோ, அன்பாகவோ கடிதம் எழுதப்படும் என்று கலைஞர் எச்சரித்துள்ளார்.மேலும் அடுத்த முறை உண்ணாவிரதப்போராட்டம் காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை எனபது 6 மணியிலிருந்து 5 மணி வரை என்று கடுமையாக்கப்படும் என்றும் ஆவேசப்பட்டார்.



சென்ற முறை நடந்த சேது சமுத்திர பந்த்(?!?) உண்ணாவிரதப் போராட்டம் போல் பாதியில் முடியாது என்பதால் தொண்டர்கள் வயிறார சாப்பிட்டு விட்டே உண்ணாவிரதப் பந்தலை அடையுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.