தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.
கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.
மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.
கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.
உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!
முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.
இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.
பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.
நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.
எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.
அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.
அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.
த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.
பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை
கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?
10 comments Filed Under: அரசியல், அனுபவம், நகைச்சுவை
இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!
17 comments Filed Under: அரசியல், நகைச்சுவை, பாராளுமன்றத்தேர்தல்
கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!
31 comments Filed Under: அரசியல், கலைஞர், நகைச்சுவை, பாராளுமன்றத்தேர்தல்
உயிர் கொடுப்பேன்,உண்ணாவிரதம் இருப்பேன் திகில் திரை விமர்சனங்கள்
சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்கள் நம் எல்லோருடைய நெஞ்சைக் கண்ணீரால் நனைய வைத்தன.இப்படியும் நடக்குமா என்று திகிலால் உறைய வைத்தன .
37 comments Filed Under: அரசியல், இராமதாஸ், ஈழத்தமிழர், கலைஞர், திருமாவளவன், நகைச்சுவை
இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”
10 comments Filed Under: அரசியல், கலைஞர், நகைச்சுவை
பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!

அங்குள்ள ஏரியில், கிராம புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, கிராம மக்கள், மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். உடனே ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பணியை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளையும் கேட்டார்.
பின்னர் அவர், ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளி போல சிறிது நேரம் மண் சுமந்தார். அவருடன் சேர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் 40 பேரும் மண் சுமந்தார்கள். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ஏழை ஒருவரின் வீட்டுக்கு, இரவில் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டார். கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இரவில் கயிற்று கட்டிலில் தூங்கினார்.
பின்னர் அவர் காலையில் எழுந்து தன்னுடைய காரில் ஏறி, கோடா நகருக்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
50 comments Filed Under: அரசியல், நகைச்சுவை, ராகுல்காந்தி
"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!
33 comments Filed Under: அனுபவம், நகைச்சுவை, மொக்கை
அஞ்சரைக்குள்ள வண்டி!
அஞ்சரைக்குள்ள வண்டி!
5 comments Filed Under: நகைச்சுவை, மொக்கை
"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.
ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.
மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.
விலைப்பட்டியல்:
180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)
தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)
பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)
சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)
சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)
ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)
கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)
விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.
இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.
கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.
கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)
." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?
கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.
கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.
மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.
மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.
எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.
மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.
கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.
பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.
அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"
பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)
இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!
மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)
56 comments Filed Under: அரசியல், கலைஞர், நகைச்சுவை, மொக்கை
இதா இவிட வரு!
^
^^^
^
^
^
^
^^^^^^^
^^^
^^^^
^^
^^^
^^^^
^^^^^^
^
^
^^^
^^
^^
^^ பிளீச்சிங் பெளடருக்கு வேண்டியாணு ஈ போட்டோ ஞான் இவிட காணிச்சது!
^^

9 comments Filed Under: நகைச்சுவை, படிக்கக் கூடாதவை, மொக்கை
பச்சப் புள்ளைங்கப் படிக்கக் கூடாத ஜோக்குகள்!
12 comments Filed Under: நகைச்சுவை, படிக்கக் கூடாதவை, மொக்கை
அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!
14 comments Filed Under: கலைஞர், தமிழ், நகைச்சுவை, மொக்கை
மன்னிப்பு கேட்டவிவகாரம்-ரஜினி உண்மையாக பேசியது என்ன?
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
''தப்பாகிருவுது ஸஹஜ, முந்தெ தப்பாகதந்தெ நோடிகொள்ளுத்தேனெ. முந்தெ தப்பு மாடுவுதில்ல. கன்னடிகர பக்கெ நனகெ அபார கௌரவ இதெ. தயவிட்டு குஸேலன் பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு'' எந்து நட ரஜனிகாந்த் பரோக்ஷவாகி டிவி 9 ஸுத்தி வாஹினி மூலக க்ஷமெ கோரித்தாரெ.
ஹைதராபாத்னல்லி மாதனாடுத்தித்த அவரு, 'கன்னடத மக்களிந்த தொட்ட பாட கலிதித்தேனெ. நானு ஒதெயிரி எந்து ஹேளித்து புண்டு போகரிகளிகெ, ஸார்வஜனிக ஆஸ்தி பாஸ்தியன்னு நாஷ மாடுவவரிகெ ஹொரது கன்னட ஹோராடகாரரன்னு உத்தேஷிஸி அல்ல. ஒள்ளெயவரிகெ தலெபாகுத்தேனெ. புண்டுபோகரிகளிகெ யாகெ தலெபாகபேகு எந்து ப்ரஷ்னிஸிதரு.
நானு ராஜகாரணி கண்டித அல்ல. ஹீகாகி மாதாடுவாக தப்பாகிதெ. முந்தெ மாதாடுவாக விசாரமாடி மாதனாடுத்தேனெ. கன்னட ஹோராடகாரரிகெ ஏனு ஸஹாய பேகோ எல்ல மாடுத்தேனெ. இந்து நானு ஸந்தோஷவாகித்தேனெ. ஹண, ஹெஸரு எல்ல தொரெதிதெ ஆதரெ நானு கண்டக்டர் ஆகித்தெ எம்புதன்னு இன்னூ மரெதில்ல. ஸுமாரு ஜன நன்னன்னு அஹங்காரி என்னுத்தாரெ. நானு துரம்ஹங்காரி கண்டித அல்ல எந்து நுடிதரு.
அவரு தம்ம மாதின மத்யெ கன்னட ரக்ஷணா வேதிகெய ராஜ்யாத்யக்ஷ டி.எ.னாராயனகௌட, ப்ரவீண் குமார் ஷெட்டி, வாடாள் நாகராஜ் ஹெஸருகளன்னு ப்ரஸ்தாபிஸி கன்னட ஹோராடகாரரெல்லரு சித்ர பிடுகடெகெ அவகாஷ மாடிகொடபேகு எந்து வினந்திஸிகொண்டரு.
12 comments Filed Under: சினிமா, நகைச்சுவை, மொக்கை
தசாவதாரம் இரண்டு -- கமலின் மேக்கப் டெஸ்ட்!
13 comments Filed Under: நகைச்சுவை, மொக்கை
மீனவர் பிரச்சனை- - -நொடியில் தீர்வு கண்ட தமிழகமுதல்வர் கலைஞர்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கப்பற்படையினரால் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.இதனால் தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினார்கள்.விஜயகாந்தும் கலந்து கொண்டு தமிழக அரசின் கையலாகாதனத்தை சாடினார்.இதனால் அதிருப்தி அடைந்த தமிழக முதல்வர் மீனவர்களை அழைத்து வரும் 19ம் தேதி மீனவர் பிரச்சனையை தீர்த்துவைக்கப் போவதாக உறுதி கூறி பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்தார்!. அவர் எடுத்த உடனடி நடவடிக்கை பின் வருமாறு!.
தமிழக மீனவர்கள் பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்கு" கொண்டு வர, தி.மு.க., சார்பில், தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கண்மூடித்தனமாக கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாக தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்களுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்க்கு" முதல்வர் கருணாநிதி பல முறை எடுத்துச் சென்றுள்ளார்.அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் தலைமையிலான குழு கடந்தாண்டு இலங்கை துணைத் தூதரை சந்தித்து இச்செயல்களை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்திய அரசு உடனே இலங்கை தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டிப்பான முறையில் குறிப்பிட்டு, கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய கடற்படையும் கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து பன்னாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உடைமை சேதங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். "சார்க்' மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும் போது இந்தியாவின் கவலையை இலங்கை அதிபரிடம் தெரிவித்து இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் தி.மு.க., சார்பில் வரும் 19ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் கடலோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்ட தலைமையிடங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்படுகிறது.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிவராத செய்திகள்: -
பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கலைஞரை,நிருபர்கள் விஜயகாந்தின் ஆவேசப்பேச்சைப்பற்றி,கேட்டபோது,காந்தி,இராஜாஜி போன்ற தலைவர்களுடன் அரசியல் நடத்திய நான் இப்போது இம்மாதிரியான விலாசம் தெரியாதவர்களோடு அரசியல் நடத்த நேரிட்டதே என்றென்னும் போது நெஞ்சமே வெடித்து விடும் போல் உள்ளது என்றார்.காந்தி,இராஜாஜி போன்றவர்களோடு நீங்கள் அரசியல் நடத்திய போது அவர்களும் இதே போல வருத்தப்பட்டார்களா?.என்று விபரம் புரியாத ஒரு நிருபர் கேட்டபோது ஆவேசம் அடைந்த கலைஞர், நீ யாருன்னு எனக்குத்தெரியும் வர்ரியா!.இராமேஸ்வரத்திலிருந்து "போட்"ல இரண்டு பேரும் மீன் பிடிக்க சிலோன் வரைக்கும் போகலாமா? என்றார்.அருகில் இருந்த அமைச்சர் வீராசாமி அந்த நிருபரை அன்போடு கழுத்தில் மன்னிக்க தோளில் கை போட்டு அறையை விட்டு அழைத்துச் சென்றார்.
தான் மீனவர்களுக்காக இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய கலைஞர்,தான் தற்போது தமிழகமுதல்வராக ஆனபிறகு மட்டும் இருநூறு கடிதம் எழுதியாக விபரம் தந்தார்.இப்படி மீனவர்களுக்காக, கூட்ட்ணிக்கட்சி பிரதமர் என்றும் பாராமல் கடிதம் எழுதி தான் பிரதமரைத் துன்புறுத்தியதை சுட்டிக்காட்டினார்.சென்ற முறை தான் கடிதம் எழுதிய போது இலாகா அமைச்சராக இருந்த தாயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி,பிரதமரிடம் கடிதத்தை 10 நாட்கள் தாமதமாகத்தர தபால் ஊழியர்களை மிரட்டிய செய்தி, தனக்கு, அழகிரிக்கும் தயாநிதி மாறனுக்கும் பிரச்சனை எற்பட்ட பிறகுதான் தெரிந்ததென்றும்,அதனால் இம்முறை தாமதத்தை தவிர்க்க கடிதம் இ-மெயில் மூலமாகவே அனுப்பப்படும் என்றார்.மேலும் பிரதமர் இ-மெயிலைத் திறந்து பார்க்காவிட்டால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க அமைச்சர் வீராசாமி மடிக்கணினி எடுத்துக் கொண்டு இப்போதே டெல்லி விரைவார் என்றும் அவர் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை காட்டிவிட்டுத்தான் சென்னை திரும்புவார்.என்றார்.
நீங்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு,தொண்டனை மட்டும் போர்களத்திற்க்கு அனுப்பிவிட்டு கோடைவாசஸ்தலத்தில் உல்லாசமாக இருக்கும் தலைமை ,அண்ணா வழியில் வந்த எனக்குத் தெரியாது,அண்ணா எங்களை அப்படி வளர்க்க வில்லை!.என்றார்.
சமீபத்தில் கடலூரில் மகளிர் மாநாடு அணிவகுப்பை ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக பார்வையிட்டு பரவசத்துடன்,மக்களுக்காக உழைத்ததை ஆற்க்காட்டாரே பாரட்டியுள்ளார்.தமிழர்களுக்காக பாடுபடும் பத்திரிக்கைகளும் பாரட்டியுள்ளன.ஐந்து மணிநேரம் உழைத்த எனக்கு ஒன்பது மணிநேரம் உழைக்கத்தெரியாதா? என்றார்.
அடுத்த முறை இலங்கை கப்பற்படையினர் தமிழகமீனவர்களைத் தாக்கினால் மீண்டும் பிரதமருக்கு அன்றைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து ஆவேசமாகவோ, அன்பாகவோ கடிதம் எழுதப்படும் என்று கலைஞர் எச்சரித்துள்ளார்.மேலும் அடுத்த முறை உண்ணாவிரதப்போராட்டம் காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை எனபது 6 மணியிலிருந்து 5 மணி வரை என்று கடுமையாக்கப்படும் என்றும் ஆவேசப்பட்டார்.
சென்ற முறை நடந்த சேது சமுத்திர பந்த்(?!?) உண்ணாவிரதப் போராட்டம் போல் பாதியில் முடியாது என்பதால் தொண்டர்கள் வயிறார சாப்பிட்டு விட்டே உண்ணாவிரதப் பந்தலை அடையுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
29 comments Filed Under: அரசியல், நகைச்சுவை








.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)