இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி

காமெடிக்கலைஞர் கருணாநிதி தமிழக மக்களுக்கு எப்பவுமே தன்னால முடிஞ்ச வஞ்சனையில்லாம பல கூத்துக்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறார்.என்றாலும் இந்த மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல் அறிக்கை தமாஷ் நிறைய வித்தியாசமானது.கலைஞர் செய்கிற நகைச்சுவைகள் பொதுவாக மற்றவரைத் துன்புறித்தியே தீரும்.

ஒருவன் அருகே வாழைப்பழத்தோலை போட்டு விட்டு ,அதனால் அவன் வழுக்கி விழும்போது சிரிக்கிற தமாஷ் இரகங்கள்.அதாவது மற்றவன் துன்பத்தில் இன்பம் காண்கின்ற வகைத் தமாஷூக்கள்.ஆனால்,இந்த இடைத்தேர்தலுக்காக அவர் விட்ட அறிக்கைத் தமாஷ் இந்த வகையைச் சேர்ந்ததல்ல.அது ஒரு தமிழக மக்கள் துன்பம் இல்லாமல் இரசிக்கக் கூடிய நகைச்சுவை வகையறாக்களைச் சேர்ந்தது.

அதாவது,எம்ஜிஆர் இருந்த காலத்தில் தமிழா!.என்னை வெட்டிப் போட்டாலும் முட்டி போட்டுக் கெஞ்சுவேன் .கட்டிப் போட்டாலும் கட்டு மரமாவேன் என்று கதறிப் பினாத்திய இரகம்.
அதிலும் தேர்தலை நினைத்துக் கதறி அழும் கட்டத்தில் பினாத்தும் பினாத்தல்கள் ஏ ஒன் இரகம்.சிவாஜி அழுகையையும் அந்த அழுகைப் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாதே என்று அழுகையை மென்று விழுங்கி விட்டு சிரிப்பது போல நடிக்கும் காட்சிக்கு இணையானது ஏன் அதை விட மேலானது. தேர்தல் ஏன் வந்தது(ஏன் வந்துத் தொலைந்தது!) என்று அவர் தலையில் அடித்துக் கொண்டே, கொடுக்கும் விளக்கங்கள் திமுக தொண்டர்களை இப்போதே உதறவைக்கும்.

இந்த அறிக்கையில் அவர் திருப்பத்தூர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் காங்கிரஸிற்க்கு ஆதரவு தந்த விஷயத்தில் அதிகம் புலம்பியதால் இந்தக் கட்டுரை.மற்ற தமாஷ்களுக்கு உள்ளே நான் போகவில்லை.




திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.


ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

அடடா மதிமுகாவின் மேல் கலைஞருக்கு என்ன ஒரு கரிசனம்.அய்யய்யோ மதிமுகாவின் தொகுதியை ஜெயலலிதா அநியாயமாகப் பிடிங்கிக் கொள்கிறாரே என்று கலைஞர் கதறும் பாணியே தனி.

திருப்பத்தூர் தேர்தலின் போது என்ன நடந்தது.காலியாகும் உறுப்பினர் தொகுதிக்கு ஏற்கனவே போட்டியிட்ட கட்சியே போட்டியிட வேண்டுமாம் ,இந்தக் கொள்கையை எம்.ஜி.ஆர் வகுத்தாராம்.உண்மையில் இந்த மரபு கூட்டணிக்கட்சிகளிடையே எம்.ஜி.ஆருக்கு முன்பே ஒரு மரபாகவே இருந்தது.ஆனால் அப்போது அதிமுக.காங்கிரஸ் கூட்டணி இல்லாத காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த சமயத்தில் எதிர் கட்சியான காங்கிரஸிற்க்கு எம்.ஜி.ஆர் ஆதரவு தந்ததற்கான காரணம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு ,ஏற்கனவே கலைஞரின் மேல் கடுப்பாக இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்ரமணியம் சட்டசபைத் தேர்தலோடு திமுக -காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டது என்று பேச அந்த இடைத்தேர்தலிலும்,இன்றைய திருமங்கலம் இடைத்தேர்தலில் கலைஞர் தடுமாறுவதைப் போல அன்றும் தடுமாறினார்.

தேர்தலில் காங்கிரஸிற்க்கு ஆதரவு ஆனால் கலைஞர் பிரச்சாரத்திற்க்குப் போகவில்லை.ஆனால் காங்கிரஸிற்குத் தீடீர் ஆதரவு தந்த எம்.ஜி.ஆர் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்க்கு வேலை செய்யாமல் ஜனதாவிற்கு வேலை செய்து தங்களுக்கு மிகவும் பழக்கமான, கூட இருந்தே கழுத்தறுக்கும்  உள்ளடி வேலைகள் செய்தனர்.( பா.ம.க கவனிக்க ).அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட திரு.அருணகிரி வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தலைவர்களைக் கூடப் பார்க்காமல் முதலில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத்தான் ஆசி பெற்றார்.திமுக தலைவர்களைப் பார்க்கமாட்டேன் என்று அறிக்கையே விட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி பணால் ஆனது.எம்.ஜி.ஆரின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

எனவே திருப்பத்தூர் தேர்தலில்,எம்.ஜி.ஆர் காங்கிரஸை ஆதரித்ததன் காரணம் முழுக்க முழுக்க திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கத்தான்.


கலைஞரின் அறிக்கையை முழுமையாகப் படித்து சிரிக்க விரும்புகிறவர்களுக்கு.கீழே அவரது கட்டுரை.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.


இப்போது தேர்தல் எதற்கு?:



மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.


நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.


அதற்காக இப்படி `விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.



ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:



இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.


உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.


நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.



உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.


ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.



ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.



மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட `எஸ்மா', `டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;


அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.


அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

10 Responses to "இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”":

Rajaraman says:

Me the First

Anonymous says:

me 2nd

Rajaraman says:

நாடாளுமன்ற தேர்தல் முடிவதற்குள் இன்னும் ஏகப்பட்ட காமெடி கூத்துக்களை அவரிடமிருந்து பார்க்கத்தானே போகிறோம். நவரசங்களும் சொட்டும்.

அவர் இப்போது Ragul Dravid போல் ஆகி விட்டார். பேசாமல் ஒய்வு பெற்றுவிடலாம்.

Anonymous says:

:))super

வால்பையன் says:

அரசியலில் உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

வரலாற்று முக்கிய சம்பவங்களை உங்களின் நகைச்சுவை நடையில் தெரிந்து கொள்ள ஆசை

நல்லதந்தி says:

// Rajaraman said...
நாடாளுமன்ற தேர்தல் முடிவதற்குள் இன்னும் ஏகப்பட்ட காமெடி கூத்துக்களை அவரிடமிருந்து பார்க்கத்தானே போகிறோம். நவரசங்களும் சொட்டும். //

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புலம்பல்களும் அதிகமாகவே இருக்கும்.கலைஞரிடம் தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்ற பட்டமும் வாங்கக் கூடும்.

நல்லதந்தி says:

//வால்பையன் said...
அரசியலில் உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது.//

வால் என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே! :))

Anonymous says:

ஏன் ஐயா கலைஞரைச் சாடுகிறீர்.அவரால் வேறு என்ன செய்ய முடியும்?

நல்லதந்தி says:

//ANONYMOUS
December 19, 2008 9:06 PM
ஏன் ஐயா கலைஞரைச் சாடுகிறீர்.அவரால் வேறு என்ன செய்ய முடியும்?//

ரொம்ப சரி! பினாத்துவதைத் தவிர!

நல்லதந்தி says:

test