Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

ஜெயமோகனும், சாருவின் அல்லகையும்!

Posted on Sunday, March 21, 2010 by நல்லதந்தி

ரொம்ப நாள் கழித்து வர்றதால் அறிமுகப் படுத்திக் கொள்வேனேன எதிர்பார்க்க வேண்டாம்.


விஷயம் இதுதான்!.

நான் சமீப காலமாய் இரும்புத்திரையைப் படிக்கிறேன். அவர் நல்ல மாதிரியாய் எழுதுவதில் சிறந்தவர்களில் ஒருவர். இன்று காலையில் அவருடைய வலைப்பூவிற்கு போனபோதுதான், யுவகிருஷ்ணா என்கின்ற லக்கி லூக் என்ற நபர் ஜெயமோகனைப் பற்றி எழுதியுள்ள விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு அவருடைய வலைப் பக்கம் போய்ப் பார்த்தேன்.

சகட்டு மேனிக்கு அவர் குருநாதர் கு.நக்கியின், கு. நக்கி பாணியிலேயே விளாசுவதைப் பார்த்தால் அவருக்கு எந்த அறிவிமில்லை! என்பது தெரிகிறது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், என்னைப் போன்ற் சிலர் அவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்! :).

அதற்கு அவசியமே இல்லை!.

அவருக்கு எந்தவித அறிவும் இல்லை என அவர் சார்ந்த கட்சியை வைத்தே அவரை அளவு கோலிடுவது எல்லோர்க்கும் இயல்பான ஒன்றுதான் என்றாலும், நான் அப்படி வேகமாக முடிவு செய்யவில்லை. ஆனாலும் எனக்கு நடந்தது என்னவென்றால்!

சில அல்லது பல மாதங்களுக்கு முன் அவரது வலையில் அண்ணா இறந்து அடக்கம் நடக்கும் போது ஒரு கோடிப் பேர் கலந்து கொண்டனர் என்று எழுதினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அய்யா! அண்ணா இறந்த போது தமிழ் நாட்டு ஜனத்தொகை நான்கு கோடிக்குள்ளாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, ஆண்கள் ஒன்றரைக் கோடி, பெண்கள் ஒன்றரைக்கோடி, குழந்தைகள் ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு கோடி ஜனம் ஒரே இடத்தில் சென்னையில் திரள்வதெப்படி ? அப்படித் திரண்டால் சென்னைதான் தாங்குமா?. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிற்பாடு தன் மேல் புகழுரைத்து எழுதுமாறு பணித்து பிறர் அவர் மேல் புகழ்ந்து எழுதிய பாடல்களில் கூட ”நான்கு கோடி மக்களுக்குத் தலைவர் அண்ணா நல்லதம்பி என்றழைத்த கலைஞர்” என்று தான் எழுதினார்கள். நீங்கள் சொன்ன ஒரு கோடி மக்கள் என்ற தகவல் பிழை என்று என்று எழுதினேன். அவர் வழக்கம் போல கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொருட்டு அதை வெளியிடவில்லை. ( உங்களுக்காக ..., அன்று இறுதி மரியாதையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர். அன்று அதே பெரியவிஷயம், இன்றும் அது பெரிய விஷயம் தான்)

இந்த இலட்சணம்தான் அவரது சரித்திர அறிவின் எல்லை. எப்படி அய்யா இதைச் சொல்கிறாய் என்றால் பதில் இல்லை!. பிற்பாடு அதை கின்னஸ் புத்தகத்தில் படித்ததாக எழுதினார். மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என்னவோ அப்படி ஒரு படிப்பு!.
சரி புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்கின்ற அளவிற்குத்தானா உமது அறிவு( நான் கின்னஸை மட்டும் வைத்துச் சொல்ல வில்லை)., சுய சிந்தனை ஏதும் கிடையாதா?.. அப்புறம் என்ன அறிவு..ஒரு வேளை இதுதான் பகுத்தறிவோ என்னவோ!. எத்தனைப் புத்தகங்களில் பிழையான தகவல்களைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் சரியானது என கருதப் பட்ட எத்தனை விஷயங்கள் பிழையானது என்று மீண்டும் அதே புத்தகத்திலேயே கூட அடுத்த பதிப்பின் போது திருத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.

இந்த அறிவை வைத்துக் கொண்டே அவர் ஜெயமோகனின் கட்டுரையை விமர்சனம் செய்ய முடிகிறதென்றால் அவரது கட்சிக்கான அடிப்படைத் தகுதி மட்டும் சரியான முறையில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதைத் தவிர அவருக்கு எந்தத் தகுதியும் சரி.., அறிவும் இல்லை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கும்.

எல்லாருக்கும் தெரிந்த, இன்னும் அதை நேரில் பார்த்த பலர் இருக்கும், 40 வருட சரித்திரமே அவருக்கு இந்த அளவுதான் என்ற போது, வரலாற்றைப் பற்றிப் பேச இம்மியளவு கூட தகுதி இல்லாத இப்படிப் பட்ட நபர்கள் எல்லாம் இணையம் இலவசமாகக் கிடைகிறதே என்று, கண்டபடி எழுதி கூத்தடிப்பதைப் பார்த்தால், இணையத்தைக் கண்டுபிடித்தவர் நாண்டு கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை!. அவர் செத்திருந்தாலும் , அது இவரைப் போன்று எழுதுபவர்களால்தான் இருக்கும்.

இந்த அல்லகை அ,ஆ,இ,ஈ தெரிந்த ஒரே காரணத்துக்காக புத்திசாலி என்று நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா?.

சாக்கடை ஒரத்தில் இது நீச்சல் குளம் என்று எழுதியிருந்தால் அதில் யோசிக்காமல் குதித்து விடும் இந்த அல்லகை தற்குறி.,, படித்திருப்பதில் பிரயோசனம் உண்டா? ( பி.கு ஒரு வேளை படித்திருந்தால்! :) )

நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!

Posted on Tuesday, September 2, 2008 by நல்லதந்தி



ஊரில் உள்ள தொலைக்காட்சிகளெல்லாம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புத்திரைப் படம்,சிறப்பு குத்தாட்ட நிகழ்சிகள் என்று பணம் அள்ளும் வேலையை ஜருராக செய்து கொண்டிருக்கும் போது பகுத்தறிவு தொல்லைக்காட்சியான கலைஞர் டிவி மட்டும் சும்மா உக்காந்து பேன் பார்த்துக் கொண்டிருக்குமா?.ஆரம்பித்து விட்டது தன் சிறப்புக் கொடுமைகளை!.


ஆனால் தம்முடைய பகுத்தறிவிற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா?.பகுத்தறிவு படபடவென்று வேலை செய்ய,பணம் சம்பாதிக்கும் குறுக்கறிவு குத்தாட்டம் போட,தான் ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டுக்கு கண்டுபிடித்து வைத்திருந்த அதே ஃபார்முலாவை கையில் எடுத்து விட்டது.


மற்ற டிவிக்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாடும் போது பகுத்தறிவு டிவி மட்டும் சித்திரை நன்னாள் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடியது.அது என்னங்க சித்திரை நன்னாள்ன்னு நமக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதை வரவேற்ற பகுத்தறிவு மாமணிகள் யாரும் அது என்ன சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று கேட்கவில்லை.வேறு யாராவது கேட்டிருந்தால் கூட இவர்களே முன் நின்று அதற்கு சப்பைகட்டு கட்டியிருப்பார்கள்!.


இப்போது பகுத்தறிவு கலைஞர் டிவிக்கு நாளை விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளாம்!.இந்தியாவிலேயே நாளைக்குத்தான் முதன்முறையாக விடுமுறை விடுகிறார்களா?அல்லது வருடத்திற்கு ஒரு முறைதான் விடுமுறை விடுகிறார்களா?.இதற்குமுன் விட்டதில்லையா?.என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்.எனென்றால் பதில் கிடைக்காத கேள்விகளை கலைஞரிடம் கேட்க கூடாது என்பதுதான் பகுத்தறிவு என்று அவர்களுக்குத் தெரியும்!.


கலைஞர் டிவியிடம் பகுத்தறிவை விட பட்டறிவு அதிகம் இருக்கிறது.இல்லையென்றால் விநாயகர் சதுர்த்தியை,விநாயகரைத் தவிர்த்து விட்டு விடுமுறை நன்னாளாக அறிவித்து விளம்பரத்தில்..............ஸ்..ஸ்ஸ்ஸ்... அப்பா....எத்தனை "வி"...... ..காசு அள்ளும் கலையில் தேறியிருப்பார்களா?