Showing posts with label குற்றம். Show all posts
Showing posts with label குற்றம். Show all posts

இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?

Posted on Thursday, April 9, 2009 by நல்லதந்தி


பிரியங்காவின் மாமனார் இராஜேந்திர வதேரா நேற்று தீடீரென்று மரணம் அடைந்தார். அவரது உடல் தூக்கில் பிணமாகத் தொங்கியது. இவ்வளவு தான் செய்தி மேலதிக விவரம் பெரிதாக ஒன்றுமில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு செய்தி சஞ்சைகாந்தியின் மாமனாரும், மேனகா காந்தியின் தந்தையுமான திரு. ஆனந்த் மரணம். இது எப்படி நடந்ததென்றால் அவர் வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு நெடுஞ்சாலையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் காணாமல் தேடி இரண்டு நாட்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் பிணமாகக் கண்டு எடுக்கப் பட்டார். துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாகச் சொல்லப் பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார். எப்படி பல் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தள்ளி அந்த நெடுஞ்சாலைக்கு வந்தார். என்பதெல்லாம் அப்போது மர்மமாகப் பேசப்பட்டது. 

அன்று சஞ்சைக்கும் அவரது மாமனாருக்கும் சுமுக உறவு இல்லை அதே போல் இப்போதும் பிரியங்கா தம்பதியினருக்கும் செத்தவருக்கும் உறவு சரியில்லை போலிருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு, களம் இறங்குவது வாடிக்கை. ஆனால் ஒரு பெரிய குடும்பத்து சம்பந்தி ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இருந்தும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு சாதாரண செய்தியாய் வெளியானது ஆச்சரியாக இருக்கிறது.

நமக்கேன் வம்பு!. இந்தத் தற்கொலை செய்தியை கண்டதும், அந்தத் தற்கொலை சம்பவம் நினைவுக்கு வந்தது!. அவ்வளவுதான்!.


இவனை என்ன செய்தால் தகும்?

Posted on Thursday, December 11, 2008 by நல்லதந்தி



திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர். செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் மாடி வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.

சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி செய்தி!

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2

Posted on Thursday, December 4, 2008 by நல்லதந்தி

இது ஏற்கனவே போட்ட பதிவுதான்.ஆனால் மீள் பதிவல்ல.வழக்கம் போல் காப்பி பதிவு.இப்போ மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இதைப் போடணும்னு தோணிச்சு.செப்டம்பரில் எழுதியது 
இந்த கட்டுரையின் முடிவில் ”அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம் அப்படின்னு எழுதியிருந்தேன்.யாரும் தேடிப் படிக்கப் போறதில்லை.அதனால் நமக்கு நாமே திட்டத்தின் படி நானே திரும்பவும் போட்டு விட்டேன்.

றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.

அகர்தலாவில் அன்புவாதிகளின் அன்புப் பரிசு

Posted on Thursday, October 2, 2008 by நல்லதந்தி




திங்கட்கிழமைக்கு அடுத்து செவ்வாய் கிழமை என்பது போல் வழக்கம் போல மீண்டும் குண்டு வெடிப்பு.
திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் குண்டு வெடித்தது.இது அன்புவாதிகளின் வழக்கத்துக்குரிய செயல் என்றாலும் இப்போது புதிதாக ஏன் திரிபுராவில் வெடித்தது என்று விசாரித்தோம்.

ஒரு பத்திரிக்கை நிருபரிடம் கேட்டபோது,இதில் என்ன இருக்கிறது,அன்புவாதிகளிடம் அகர்தலாவில் உள்ள சிலர் தாங்கள் சாக வேண்டும் என்றும் ஆனால் பூச்சி மருந்து வாங்கக் கூட கையில் காசு இல்லை என்று கதறி அழுததாகத்தெரிகிறது.எப்போதுமே இரக்க மனம் கொண்ட நமது அன்புவாதிகள் சிலர் தம் கைக் காசைச் செலவு செய்து அன்பு வெடிகுண்டைத் தயார் செய்து,எங்கிருந்து மேல் ஊர் போக வேண்டும் என்று அகர்தலாவாசிகளிடம் அன்புடன் வினவியதாகத் தெரிகிறது.

அந்த அகர்தலாவாசிகளும் ,அவர்களது வீடு இருக்கும் பகுதியில் இருந்தே போய்ச் சேர வேண்டும்,அப்பதான் பாடியை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகும் செலவு குறையும் என்று கூறியதாகத் தெரிகிறது.உடனே அன்புவாதிகளும் தம் கைக் காசு செலவு செய்து ஆட்டோ பிடித்து அகர்தலாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குண்டு வைத்ததாகத் தெரிகிறது.

இதில் நெஞ்சை நெகிழவைக்கும் விசயம் என்னவென்றால் குண்டு வைத்தவுடன் அகர்தலாவாசிகளைப் பார்த்து நீங்கள் மேல்லோகம் போவதை எங்களால் கண்கொண்டு பார்க்கமுடியாது,எங்கள் மனம் தாங்காது என்று கூறி அழுதவாறே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிச் சென்றார்களாம். என்று அந்த அன்புவாதிகளின் கைக் காசு செலவு செய்து அகர்தலாவாசி மீது அவர்கள் காட்டிய கருணை ஈடு இணையில்லாதது என்றார்.

போலீசாரிடம் விசாரித்த போது அதெல்லாம் இல்லீங்க!.இந்த திரிபுராவில் எல்லோரும் ஏழையாகவும் கல்வியறிவு இல்லாமலும் முன்னே இருந்தாங்க,கிருஸ்துமத பாதிரிகளின் கருணையாலும்,வெளிநாட்டுக்கார புண்ணியவானுங்க நிறைய பணம் அனுப்பி படிக்க வைச்சதாலும்,கிருஸ்துவ மதம் மாறினாத்தான் படிப்பு வரும் அப்படிங்கறதாலே முக்கால்வாசிப் பேர் கிருஸ்வராக மாறிட்டாங்க.அதனால திரிபுரா இந்தியாவிலேயே பணக்கார மாநிலமா ஆயிடுச்சி!.

இப்போ உள்ளுரில் இருக்கிற கொஞ்ச நஞ்ச இந்துக்களுக்கு இந்து மத பண்டிகையெல்லாம் எப்படி கொண்டாடரதுன்னு மறந்து போச்சி!.இப்போ தீபாவளி கிட்ட வர்றதாலே பட்டாசு எப்படி வெடிக்கிறதுன்னு கத்துக் கொடுக்க அன்புவாதிகளிடன் கேட்டு இருக்காங்க போலிருக்கு.அவங்களும் வந்து பட்டாசு வெடிச்சி காமிச்சி இருக்காங்க! அவ்வளவுதான்!.என்றார்.

பின்குறிப்பு: இணையத்தில் தீவிரவாதிகளை தீவிரவாதிகன்னு எழுதறத்துக்கு இப்போ ரொம்பப்பேர் எதிர்க்கிறாங்க.இவங்களுக்கு அவ்வளவு அன்பு அவங்க மேலே.நானும் எதுக்கு வம்புன்னுட்டு அவங்க பேர மாத்திட்டேன். என்ன கொடுமை சார் இது!


வந்த செய்தி!

திரிபுராவில் 7 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில், தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.


வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிலும் நேற்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

மகாராஜாகஞ்ச் பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட், ராதாநகர் பஸ் நிலையம், ஜி.பி.பஜார், கிரிஷ்நகர், மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான அபயநகர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இரவு 10 மணிக்கு மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு இடத்தில் வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


முதல் குண்டு ராதாநகர் பஸ் நிலையத்தில் வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். மற்றொருவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தார். 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ராதாநகர் பஸ் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு மர்ம மனிதர்கள் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டு இருந்ததாகவும் அவர்கள் அங்கிருந்து சென்ற இரண்டு மூன்று நிமிடங்களில் குண்டு வெடித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த சக்தி கொண்ட வெடிபொருட்கள் இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தகவல் அறிந்ததும் போலீசார் குண்டு வெடிப்பு பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக இந்திராகாந்தி நினைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மார்க்கெட் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் 5 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி மத்திய புலனாய்வு துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது யார் என்று இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதற்கிடையில் அகர்தலாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் டி.ஐ.ஜி. நேபாள்தாஸ், `ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி (ஹுஜி) இயக்க தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார். சதிகாரர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வெடிகுண்டு புரளி!-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இன்னுமொரு கொலைக்கருவி!

Posted on Wednesday, October 1, 2008 by நல்லதந்தி




யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இப்போது கோவில்களில், கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கான பேர்கள்,நெரிசல்களில் சிக்கிக்கொண்டு இறப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன.எப்போதும் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இவைநிகழ்கின்றன என்றுப் பார்த்தால் அதன் பின்னால் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரப்பல் இளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

முதலில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு நெரிசல் ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்தனர்,அதன் பின்னர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனோ தேவி மலைக்கோவிலில் கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி அன்று நெரிசல் ஏற்பட்டு 162 பக்தர்கள் பலியாகினர்.

இந்த இரு சம்பவங்களின் போதே இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாகக் கருதப் பட்டது.இரண்டு சம்பவங்களிலும் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மூன்றாவதாக இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலையில் நடந்த சம்பவம்.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலை நவராத்திரி விழா நடந்தபோது வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பக்தர்கள் சிதறி ஓடினார்கள். அப்போது நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் உயிர் இழந்தனர்.

பொதுவாக வெடிகுண்டு சம்பவங்களை இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் நிகழ்த்துவதன் நோக்கம் சம்பவ இடங்களில் இறக்கும் மனித உயிர்கள மட்டுமல்ல நாட்டில் இந்து-முஸ்லீம், கலவரங்களைத் துண்டுவதும்,நாட்டில் எப்போதும் ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை மக்களிடையே நிலவவேண்டும் என்பதும்,நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதும் தான்.

எத்தனை வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தினாலும் இந்துக்கள் பொறுமையாக இருப்பது அவர்களுக்கு (பாகிஸ்த்தான் அரசுக்கு!) வெறுப்பைத் தோன்று வித்திருக்கக்கூடும்.கோவிலில் இம்மாதிரியான துர்சம்பவங்களை நிகழ்த்தும் போது குண்டு வைப்பதற்க்கான தொந்திரவும் இல்லை,அதற்கான பழியையும் ஏற்கவேண்டியிராது.மற்ற நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாகவேண்டியிராது. எல்லாவற்றை விட முக்கியமாக இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும் இதனால் சிதைந்து போய்விடும்.எனவே இந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இந்தியத் திருநாட்டில் மதக் கலவரத்தை நிகழ்த்தி அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முடக்கி விடலாம் என்று பாகிஸ்த்தான் அரசு நினைக்கிறது.அதனால்தான் இம்மாதிரியான சம்பவங்கள் இப்போது அடிக்கடி நிகழத்துவங்கியுள்ளன.

மேலும் இணையத்தில் உள்ள சில வலைப் பக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் சிலர் எழுதிவரும் கட்டுரைகள்,மத நெறியைச் சீர்குலைக்கும் நோக்கிலும்,முஸ்லீம்கள் இடையே இந்துத் துவேசத்தை பரப்ப நினக்கும் நோக்கிலும் இருப்பது, வெளிநாட்டுச் சதி, பெரும் அளவில் நம் மக்களைப் பின்னியுள்ளது,என்பதையே உணர்த்துகிறது.

நாட்டு மக்கள்,இந்துக்களானாலும்,சரி முஸ்லீம்களானாலும் சரி தங்களைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது.மதத்தின் பேரால் அன்னிய சக்திகளிடம் அடிமையாகாமல் முஸ்லீம் அன்பர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது!.


வந்த செய்தி!


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மெக்ரன்கார் என்ற பழங்கால கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும்.

15-ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட ராவ் ஜோதா என்ற மன்னர், இந்த கோட்டையில் சாமுண்டா தேவி சிலையை நிர்மாணித்து ஒரு அம்மன் கோவிலை அமைத்தார். பழமை வாய்ந்த அந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதுவதால் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. எனவே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சாமுண்டா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நவராத்திரி முதல்நாள் பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.


நவராத்திரி பூஜையில் பங்கேற்று தேவியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் கூடி இருந்தனர். ஆண்களுக்காக தனி வரிசையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி கும்பிடும் ஆர்வத்தில் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், கோவிலின் முகப்பு பகுதியில் நின்ற ஆண்கள் வரிசையில் இருந்து கீழே சரிவான பகுதியை நோக்கி சில பக்தர்கள் சறுக்கி விழுந்தனர். அந்த சரிவு பகுதி, 75 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இதனால், அந்த சரிவில் நின்ற பக்தர்களும் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.


சுவர் இடிந்து விழுந்து விட்டதாக ஒரு வதந்தியும், கோவிலில் குண்டு வெடித்ததாக ஒரு புரளியும் கிளம்பின. எனவே, ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு குறுகலான பாதையாக இருந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் நடந்தபோது, சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடியதால், காலில் மிதி பட்டு உயிரிழந்தனர். இதனால் ஒரே கூச்சலும், குழப்பமுமாக கேட்டது.

சுமார் 15 நிமிடங்கள் இந்த நெரிசல் நீடித்தது. அதற்குள் 20 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். தனது தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை ஒன்று, அவர் இறந்தது அறியாமல், `அப்பா, எழுந்திருங்கள்' என்று கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. உயிர் பிழைத்த பக்தர்களும் போலீசாருக்கு உதவினர். நெரிசலில் சிக்கி காயங்களுடனும் மூச்சுத் திணறியபடியும் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். மகாத்மா காந்தி மருத்துவமனை, மதுரா தாஸ் மருத்துவமனை, சன் சிட்டி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 180 பேர் பலியாகி விட்டனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் வரும் பட்டியலை சரிபார்த்த பிறகே பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியும். இந்த தகவலை, ஜோத்பூர் மண்டல ஆணையர் கிரண் சோனி தெரிவித்தார்.


சாமுண்டா தேவி கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் நிர்வாக துறை மந்திரி லட்சுமி நாராயண், மாநில உள்துறை செயலாளர் தன்வி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்த தனி வரிசையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவிலுக்கு செல்லவும், திரும்பி வரவும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், முன் ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர்.

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?

Posted on Monday, September 15, 2008 by நல்லதந்தி



றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.


கருணாவுடன் கொட்டமடித்த பானு!.பள்ளியறை முதல் படுகொலை வரை!

Posted on Friday, September 12, 2008 by நல்லதந்தி


இணைந்த கைகள்! (பள்ளியறை முதல் படுகொலை வரை!)

இப்படியும் நடக்குமா?? என்று சொல்வதே.அபத்தம் இப்படி நடக்காமல் இருந்து இருந்தால்தான் ஆச்சரியம் என்கிற அளவிற்க்கு சமூகத்தில் புரையோடிவிட்ட செயல் இது!பிரபலமானவரின் உறவினர்களால் நடந்து இருப்பதால் அதிக வெளிச்சம் பெறுகிறது.பணவெறி ஒரு குடும்பப் பெண்ணைக் கூட படுக்கை அறைக்கும் படுகொலை வரைக்கும் தள்ள முடியும் என்பதற்கு உதாரணம் இது!


விஜயனைக் கொலை செய்ய கருணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் பானுமதி போயுள்ளார். அவருடன் சேர்ந்து இரவு விருந்து, கிளப்களுக்குப் போவது, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது என தடம் புரண்டு போயுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அவரது மனைவி சுதாவின் கூடப் பிறந்த தங்கையான பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நியமித்த கூலிப் படையின் தலைவனான கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்ட பலரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பானுமதியின் மறுபக்கம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆரி.ன் புகழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக, அவற்றைக் குலைக்கும் வகையில் இருப்பது போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.புவனா மூலம் கருணாவின் அறிமுகம் பானுமதிக்கு கிடைத்ததும், அவரை வைத்து விஜயனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார். ஆனால் ஆரம்பத்தில் கருணா ஒத்து வராதது போல நடித்துள்ளார். பானுமதியின் நிலையைப் பார்த்த அவர், அவர் மூலம் விஜயனை தீர்த்துக் கட்டி விட்டு, பானுமதியின் வசம் இருந்த பள்ளியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான்.இதனால் ஆரம்பத்தில் ஒத்து வராதது போல பிகு செய்துள்ளார் கருணா. இதையடுத்து அவரிடம் நைச்சியமாக நடந்து கொண்டால்தான் கருணா ஒத்து வருவார் என புவனா கூறியுள்ளார். இதையடுத்து கருணாவின் விருப்பம் போல நடக்க ஆரம்பித்துள்ளார் பானுமதி.அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துள்ளார். கருணாவுடன் தினசரி இரவு ஷோ படம் பார்க்கப் போவது, கிளப்களுக்குப் போவது, விருந்துகளில் பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டல்களில் போய் தங்குவது என அத்தனையையும் செய்துள்ளார். கருணா கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார் பானு.சாதாரண அக்கா - தங்கை சண்டை, கூலிப்படை, கொலை என போயுள்ளது எம்.ஜி.ஆர். பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி...thatstamil