இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?
15 comments Filed Under: குற்றம், பிரியங்கா
இவனை என்ன செய்தால் தகும்?
சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி செய்தி!
8 comments Filed Under: அனுபவம், குற்றம்
குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2
5 comments Filed Under: அரசியல், அனுபவம், குற்றம், பயங்கரவாதம்
அகர்தலாவில் அன்புவாதிகளின் அன்புப் பரிசு
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில், தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிலும் நேற்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
மகாராஜாகஞ்ச் பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட், ராதாநகர் பஸ் நிலையம், ஜி.பி.பஜார், கிரிஷ்நகர், மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான அபயநகர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இரவு 10 மணிக்கு மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு இடத்தில் வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
முதல் குண்டு ராதாநகர் பஸ் நிலையத்தில் வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். மற்றொருவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தார். 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ராதாநகர் பஸ் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு மர்ம மனிதர்கள் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டு இருந்ததாகவும் அவர்கள் அங்கிருந்து சென்ற இரண்டு மூன்று நிமிடங்களில் குண்டு வெடித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறைந்த சக்தி கொண்ட வெடிபொருட்கள் இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்ததும் போலீசார் குண்டு வெடிப்பு பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக இந்திராகாந்தி நினைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மார்க்கெட் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் 5 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி மத்திய புலனாய்வு துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது யார் என்று இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதற்கிடையில் அகர்தலாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் டி.ஐ.ஜி. நேபாள்தாஸ், `ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி (ஹுஜி) இயக்க தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார். சதிகாரர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
13 comments Filed Under: குற்றம், பயங்கரவாதம்
வெடிகுண்டு புரளி!-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இன்னுமொரு கொலைக்கருவி!
வந்த செய்தி!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மெக்ரன்கார் என்ற பழங்கால கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும்.
15-ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட ராவ் ஜோதா என்ற மன்னர், இந்த கோட்டையில் சாமுண்டா தேவி சிலையை நிர்மாணித்து ஒரு அம்மன் கோவிலை அமைத்தார். பழமை வாய்ந்த அந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதுவதால் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. எனவே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சாமுண்டா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நவராத்திரி முதல்நாள் பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.
நவராத்திரி பூஜையில் பங்கேற்று தேவியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் கூடி இருந்தனர். ஆண்களுக்காக தனி வரிசையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி கும்பிடும் ஆர்வத்தில் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், கோவிலின் முகப்பு பகுதியில் நின்ற ஆண்கள் வரிசையில் இருந்து கீழே சரிவான பகுதியை நோக்கி சில பக்தர்கள் சறுக்கி விழுந்தனர். அந்த சரிவு பகுதி, 75 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இதனால், அந்த சரிவில் நின்ற பக்தர்களும் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.
சுவர் இடிந்து விழுந்து விட்டதாக ஒரு வதந்தியும், கோவிலில் குண்டு வெடித்ததாக ஒரு புரளியும் கிளம்பின. எனவே, ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு குறுகலான பாதையாக இருந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
சம்பவம் நடந்தபோது, சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடியதால், காலில் மிதி பட்டு உயிரிழந்தனர். இதனால் ஒரே கூச்சலும், குழப்பமுமாக கேட்டது.
சுமார் 15 நிமிடங்கள் இந்த நெரிசல் நீடித்தது. அதற்குள் 20 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். தனது தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை ஒன்று, அவர் இறந்தது அறியாமல், `அப்பா, எழுந்திருங்கள்' என்று கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. உயிர் பிழைத்த பக்தர்களும் போலீசாருக்கு உதவினர். நெரிசலில் சிக்கி காயங்களுடனும் மூச்சுத் திணறியபடியும் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். மகாத்மா காந்தி மருத்துவமனை, மதுரா தாஸ் மருத்துவமனை, சன் சிட்டி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 180 பேர் பலியாகி விட்டனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் வரும் பட்டியலை சரிபார்த்த பிறகே பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியும். இந்த தகவலை, ஜோத்பூர் மண்டல ஆணையர் கிரண் சோனி தெரிவித்தார்.
சாமுண்டா தேவி கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் நிர்வாக துறை மந்திரி லட்சுமி நாராயண், மாநில உள்துறை செயலாளர் தன்வி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்த தனி வரிசையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவிலுக்கு செல்லவும், திரும்பி வரவும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், முன் ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர்.
128 comments Filed Under: குற்றம், கோவில், பயங்கரவாதம்
குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?
19 comments Filed Under: அரசியல், அனுபவம், குற்றம், பயங்கரவாதம்
கருணாவுடன் கொட்டமடித்த பானு!.பள்ளியறை முதல் படுகொலை வரை!


இணைந்த கைகள்! (பள்ளியறை முதல் படுகொலை வரை!)
12 comments Filed Under: குற்றம், செய்தி