மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகளும் அது மிச்சமாவதால் ஏற்படும் நன்மைகளும்! படங்களுடன்!

Posted on Saturday, September 13, 2008 by நல்லதந்தி

மின்சாரத்தை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடியுங்கள் என்று பொதுமக்களுக்கு மின்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து மின் நுகர்வோர்களும் மின் உபயோகத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் சில வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.




மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 1


அதன் விவரம் வருமாறு:-ஏ.சி.யை தவிர்க்க...*அத்தியாவசிய தேவைக்கு மேல் உபயோகிக்கும் மின் விளக்குகள், சாதனங்களை நிறுத்திவைக்கவும். *அலங்கார, ஆடம்பர மின் விளக்குகள் உபயோகத்தை தவிர்க்கவும். *குளிர்சாதன உபகரணம் உபயோகத்தை (ஏ.சி.) குறைத்துக்கொள்ளவும். குறிப்பாக மாலை 6மணிமுதல் இரவு 10மணிவரை குளிர்சாதனப்பெட்டி உபயோகத்தை அவசியம் தவிர்க்கவும்.

*தொழிற்சாலைகளில் மாலை 6மணிமுதல் இரவு 10மணிவரை மின் உபயோகத்தை தவிர்க்கவும்.இயற்கை சக்தி*பழுதற்ற மின்சாதனங்களையும் கையடக்க குழல் விளக்குகளையும் உபயோகித்து மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும்.*இயற்கை சக்திகளை பயன்படுத்தி மின் உபயோகத்தை குறைக்கவும்.

இது தொழிற்சாலைக்கும் விவசாயிகளுக்கும்..
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.



மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 2

அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் படிப்பதற்கும், வீடுகளில் மாலை நேர தேவைக்கும் மின்சாரம் வழங்குவது அரசின் முக்கிய நோக்கம்.

எனவே, வர்த்தக மையம் மற்றும் விழாக்களில் தேவையற்ற ஆடம்பர விளக்குகளை அமைக்க வேண்டாம் என்றும், விவசாயத்துக்கும், தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது அரசு அலுவலகங்களுக்கு...

மின்சாரத்தை சிக்கனமாக கடைபிடிப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் உள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.


மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 3

தேவையற்று எரியும் லைட் மற்றும் ஃபேன்களை நிறுத்தி வைக்க வேண்டும். அலுவலக மேஜைக்கு தேவையான லைட் மற்றும் ஃபேன் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பகலில் அலுவலக அறைக்கு போதுமான அளவு வெளிச்சம் இருக்கும் பட்சத்தில், தாழ்வாரம் மற்றும் நடைபாதையில் இருக்கும் லைட்களை நிறுத்தி வைக்கவும்.

இரண்டு ஏ.ஸி., இருக்கும் அறைகளில் ஒன்றை மட்டுமே இயக்கவும். அலுவலர்கள் இல்லாத சமயங்களில் அதையும் நிறுத்தி வைக்கவும். ஏ.ஸி., அறையில் 22 டிகிரி செல்சியஸ் நிலைக்கு அதிகமான நிலையில் பராமரிக்கும்போது, ஐந்து முதல் ஏழு சதவிகிதம் மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது. எனவே, அறையின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு மேல் பராமரிக்கவும். ஏ.ஸி., செய்யப்பட்ட அறையில் ஃபேன் பயன்படுத்தும்போது, குளிர்ந்த காற்றோட்டம் அறை முழுவதும் பரவுகிறது. அதனால் ஏ.ஸி., குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது.



மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 4

கம்ப்யூட்டர் மற்றும் அலுவலக பயன்பாட்டு கருவிகளை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கவும். கம்ப்யூட்டர் ஸ்கீரின் சேவர் திரைகளை பாதுகாக்க மட்டுமே உதவுகிறது. அவற்றால் மின்சக்தி சேமிக்கப்படுவதில்லை. அதனால் தேவைக்கேற்ப இயக்கியும், நிறுத்தியும் பயன்படுத்தினால், மின்சாரம் சிக்கனமாவதுடன், கம்ப்யூட்டருக்கும் ஆயுளை தரும். கம்ப்யூட்டர், மானிட்டர், நகலெடுக்கும் கருவி ஆகியவற்றை "ஸ்லீப் மோடு' நிலையில் வைப்பதால் 40 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும். நகலெடுக்கும் இயந்திரங்களை தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தவும்.

அனைத்து தேவைகளையும் ஒருங்கிணைத்து செய்யவும். ஏனெனில் அடிக்கடி இயக்குவதும், நிறுத்துவதும் அல்லது மின் இணைப்பிலேயே வைத்திருப்பதும் மின் தேவையை அதிகரிக்கும். லேப்டாப் மற்றும் மொபைல்ஃபோன்களுக்கு சார்ஜ் ஏறிய பின்பும் மின் இணைப்பிலேயே வைத்திருப்பதை தவிர்க்கவும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பிடித்துள்ளன.


எல்லாதரப்பினருக்கும் அறிவுரை சொன்ன மின் துறை, அரசியல் கட்சிகளுக்கு ஏன் அறிவுரை சொல்லவில்லை என கேட்கும் அப்பாவியா நீங்கள்!! அவர்களுக்காகத்தானே இந்த மின்சிக்கனமே!.மேலே உள்ளப் படங்களைப் பாருங்கையா!



(படங்கள்:சம்மந்தப் பட்டவர்களுக்கு நன்றி!)

11 Responses to "மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகளும் அது மிச்சமாவதால் ஏற்படும் நன்மைகளும்! படங்களுடன்!":

Anonymous says:

enna aachi?

Anonymous says:

:)):));));)

Krish says:

if the political parties stop abusing, then no electricity problem in TN.

Anonymous says:

/Krish

if the political parties stop abusing, then no electricity problem in TN./
:D
சாத்தியமா?

Anonymous says:

//if the political parties stop abusing, then no electricity problem in TN.//
:D:));))

Anonymous says:

:):));));)

Anonymous says:

if the political parties stop abusing, then no electricity problem in TN./

சாத்தியமா?

Anonymous says:

பாலபாரதி இன்று எழுதியிருக்கும் பதிவைப் போய்ப்பாருங்கள்.
மின்சிக்கனத்தைப் பற்றி மின்சார வாரியம் பொதுமக்களுக்கு சொன்ன அறிவுரையை கருணாநிதியின் கட்சியினருக்கு எப்போது சொல்லும்

Anonymous says:

செருப்படி!

Subash says:

நல்ல பதிவு
நன்றிங்க

நல்லதந்தி says:

வாங்க சுபாசு பாராட்டுக்கு நன்றி!